Sunday, February 21, 2016

Budget 2016 - My forecast

Its time for Budget again.
This budget is so important to India ahead of GST implementation. Already last year budget has subsumed CESS from Service Tax and Central Excise and increased the tax rate to 14% & 12.5% to be in line with GST tax rate.
Since the GST tax rate is expected to be 17-19% I hope this Budget will further raise the tax rate this year, may be around 16% for both the taxes.


I also expect some subsidies, exemptions may be called off to experience the real GST regime. However these changes if implemented, will certainly dent our economy unless GST is rolled out. This is because of CST credit disallowable now but Tax rates are increased which directly impact the end user with increased cost.
The reduced rate for necessities will be around 12% as against the present 2% against C Form. If this hike is implemented this year, then the manufacturing sector will suffer a lot. But If the GST is rolled out, then the tax rate will not be a problem as the eligible purchase can have the facility of set off by the way of Input tax credit.


So, according to me, the major impact will be, if the tax rates are increased ahead of GST and the GST was not implemented this year, then the Industries will get a great dent in their growth, or even suffer a lot and shut down business.


As a tentative I assume, GST roll out may be either by Oct 2016 or April 2017, as the possibility of roll out by April 2016 is ruled out.


Service tax will get fee few more services in to its fold to expand the taxation area, and probability of C Forms discontinue is also expected.


Many incentive schemes, exemptions, discounts may be revised or called off in this budget for the smooth sailing into the GST regime.


As for as Income tax is concerned, MAT will have a major role in this year's budget. Individuals exemption limit may be increased little, say 2.25 lacs.


As a part of curbing unaccounted transactions, the charges towards Debit/Credit cards may be withdrawn.


Lets discuss these dreams with the actual facts post-budget once again.


Tuesday, February 16, 2016

அத்திக்கடவு அவிநாசி குடிநீர் திட்டம் – வரலாறு

மீபகாலமாக மீடியாவில் வந்துகொண்டிருக்கும் செய்தி திருப்பூரில் அத்திக்கடவு அவிநாசி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி நடைபெற்று வரும் உண்ணாவிரதம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை போன்றவை தான்.

பல்வேறு கட்சிகளும் இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என கோரிக்கை விடுப்பதும், தமிழக அரசு இன்றைய இடைக்கால நிதி நிலை அறிக்கையில் கூட இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்து இருப்பதும், இந்த திட்டத்தின் தேர்தல் கால முக்கியத்துவத்தை நமக்கு சொல்கின்றன. 

அது என்ன திட்டம்?

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி நதி மேட்டுப்பாளையம் அன்னூர் வழியாக பவானியை அடைந்து காவிரியில் கலக்கிறது. நீலகிரி மலைவாசஸ்தலம் ஆகையால் நல்ல நீர் வளம். ஆண்டில் பல மாதங்கள் பவானியில் நீர் இருக்கும்.

மேல் பவானி அணையிலிருந்து இறங்கி வரும் பவானி நதி அத்திக்கடவு கடந்து பில்லூர் டேமுக்கு வருகிறது. அங்கிருந்து மேட்டுப்பாளையம் சிறுமுகை வழியாக பயணித்து சத்தியமங்கலம் அருகில் உள்ள பவானி சாகர் அணைக்கு வருகிறது. அங்கிருந்து கோபிச்செட்டிபாளயம் வழியாக பவானி நகரில் காவிரியுடன் கலக்கிறது. இது தான் பவானியின் பயண குறிப்பு.

இன்னொரு புறம், கோவை கிழக்கு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் வறண்ட பகுதிகளாக இருக்கின்றன. கோவை நகருக்கு கேரளாவிலிருந்து சிறுவாணி நதி மூலம் குடிநீர் சப்ளை இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. எனவே கோவைக்கு கூடுதலாக ஒரு குடிநீர் திட்டம் தேவையாக இருந்தது.

திருப்பூரை பொறுத்தவரை நொய்யல் நதி இருந்தாலும் அது நம்ம கூவம் போல பாழ்பட்டு கிடக்கிறது (உபயம் சாய பட்டறைகளின் கழிவுகள்). இது இப்போதைய நிலை. ஆனாலும் நொய்யல் முன்பிருந்தே குடிநீர் ஆதாரத்துக்கான நதியாக இருக்கவில்லை. ஆக, திருப்பூர் பகுதிக்கும் நீர் ஆதாரத்தை அதிகரிப்பதற்காக ஒரு நீர் திட்டம் தேவையாக இருந்தது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு அப்போதைய காங்கிரஸ் ரசு 1957 ஆம் ஆண்டில் ஒரு திட்டத்தை உருவாக்கியது. அதாவது நான் முன்பே சொன்ன பவானி நதியில் இருந்து ஒரு கால்வாய் வெட்டி அதை திருப்பூர் நோக்கி கொண்டு வருவது.

தெளிவாக சொல்வதானால், பில்லூர் அணையில் இருந்து பவானி சாகர் செல்லும் வழியில் தனியாக ஒரு கால்வாயை வெட்டி நீரை திருப்பி விட்டு நேராக அன்னூர் கொண்டு வருவது. அங்கிருந்து அந்த கால்வாயை ரெண்டாக பிரித்து ஒன்றை கருமத்தம்பட்டி, அவிநாசி வழியாக  திருப்பூருக்கும் இன்னொன்றை புளியம்பட்டி, நம்பியூர் வழியாக பெருந்துறைக்கும் கொண்டு போவது.

Thanks: The HINDU


இதன் பலன்கள்??

133.4 கி.மீ பயணிக்கும் இந்த கால்வாய் நீரால் அந்த பகுதியிலுள்ள நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

48 ஏரிகள், 213 குளங்களை இந்த கால்வாய் வழியாக வரும் பவானி நீர் நிறைக்கும்.

இதன் மூலம் 25000 ஏக்கர் பாசன நிலம் பயன்பெறும்.

நன்றாக கவனிக்கவும்..

இந்த நீரை அப்படியே குடிநீருக்காக அனுப்ப போவது இல்லை. திட்டப்படி 20 நாட்களுக்கு தினசரி 750 கன அடி நீர் இந்த வழியாக அனுப்பப்படும். மொத்தம் 12 டி.எம்.சி தண்ணீர். இந்த நீர் அந்த வழியே பயணிப்பதாலும் சிறு குளங்களை நிரப்புவதாலும் அந்த பகுதியிலுள்ள நிலத்தடி நீர் மட்டம் உயரச்செய்து அதன் மூலம் கிணற்று நீர் பாசனத்தை அதிகாரிக்கும். அதனால் தான் இந்த திட்டத்தை Athikadavu-Avinashi Ground Water Recharging Scheme என பெயரிட்டனர்.

1957 முதல் 1967 வரை அவினாசி சட்டமன்ற உறுபினராக இருந்த திரு.மாரப்பகவுண்டர் அவர்கள் தான், அன்றைய முதல்வர் திரு. காமராஜரிடம் அவினாசி திட்டத்தை வலியுறுத்தி எற்றுக்கொள்ள வைத்தவர். 1957 இல் வந்த ஐடியா மெல்ல மெல்ல விரிவாகி அதன் முதற்கட்ட பணிகள் எல்லாம் முடிவடைந்ததும் 1972 இல் அப்போதைய திமுக அரசால் கொள்கை ரீதியாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் பின் எமெர்ஜென்சி அது இது என முன்னெடுக்க முடியாமல் முடங்கியது. பின்னர் 1977 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஒன்றும் நகரவேயில்லை.

1989 இல் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் விட்ட இடத்திலிருந்து தொடங்க முயற்சித்தனர். ஆனால் 1991 இல் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் அதிமுக ஆட்சி ஜெ. தலைமையில் வந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் முடங்கியது.

பின்னர், 1996-2001 திமுக ஆட்சியில் இந்த திட்டத்தின் முதல் காரணியான கோவைக்கு குடிநீர் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக செயல்பாட்டுக்கு வந்தது. பவானி அத்திக்கடவு திட்டம் என்கிற அந்த திட்டம் தான் இன்றும் கோவைக்கான குடிநீர் ஆதாரம். மூன்று வாரங்களுக்கு ஒருமுறை என்றிருந்த கோவை குடிநீர் சப்ளை இப்போது வாரா வாரம் என ஆனதற்கு இந்த அத்திக்கடவு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததே காரணம்.

2001-2006 அதிமுக ஆட்சியில் மீண்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.

திரும்ப 2006-2011 திமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கான அனுமதி கோரி மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய சுற்று சூழல் துறையின் அனுமதியும், நீர் வள ஆதார அமைச்சகத்தின் அனுமதியும் கேட்கப்பட்டது. திட்டத்தின் அனைத்து நடவடிக்கையும் அந்த அனுமதிக்காக காத்திருக்க தொடங்கியது.

அதே வேளையில் இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக கோவையின் கூடுதல் குடிநீர் தேவையை ஈடுகட்டும் திட்டத்துக்கு என அத்திக்கடவு பேஸ் II திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பணி முழுமையாக முடிவடைந்து சரவணம்பட்டி அருகில் பிரதான சென்டிரல் வாட்டர் டேங்க்  கட்டப்பட்டு, கோவை நகர் முழுமையும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு திட்டம் முழு செயல்பாட்டுக்கு வரும் வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2011 இல் அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது.

கோவை மக்களுக்கு குடிநீருக்கு இருந்த கஷ்டத்தை உணர்ந்த கோவைக்காரரான அப்போதைய அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணி “ஏற்கனவே அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாம் கட்டம் முடிவடைந்துவிட்டதால் விரைவில் திறக்கப்படும்” என கேஷுவலாக பேட்டி கொடுத்து வைக்க, என்ன காரணத்தாலோ இரண்டொரு நாளில் அவரது பதவி பறி போனது. 


மேலும், கோவை நகரின் பல பகுதிகளுக்கு ஏற்கனவே இருந்த அத்திக்கடவு குடிநீர் விநியோகம் முடக்கி வைக்கப்பட்டது. அதை எதிர்த்து ஆங்காங்கே பொதுமக்கள் ரோட்டில் இறங்கி அதிமுக அரசுக்கு எதிராக போராட தொடங்கினார்கள். 

அதோடு இந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. 

இனி வரும் தேர்தலில் திமுக வென்றால் தான் அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல்பாட்டுக்கு வந்து கோவைக்கு தினசரி குடிநீர் விநியோகம் கிடைக்கும் என்கிற நிலை தான் இப்போது. கடந்த ஐந்து ஆண்டுகாலமாக மக்கள் பணத்தில் கட்டப்பட்ட அந்த திட்டம் மொத்தமாக முடங்கி வீணாக கிடக்கிறது.

இதற்கிடையில், மத்திய அரசுக்கு அனுப்பப்பட கருத்துருவில் சில திருத்தங்கள் விளக்கங்கள் கேட்டு 2012 இல் தமிழக அரசுக்கு கடிதம் வந்திருந்தது. அதற்கான திருத்திய கருத்துருவை இன்று வரை மாண்புமிகு அம்மா தலைமையிலான தமிழக அரசு அனுப்பாததால் திட்டம் கிடப்பில் கிடக்கிறது.

உலக வங்கி, நபார்டு, ஜப்பான் வங்கி ஆகியவை இந்த திட்டத்துக்காக நிதி உதவி அளிக்க தயாராக இருப்பதாக 2006-2011 திமுக ஆட்சியிலேயே அறிவித்திருப்பதால், ரூ. 1862 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதில் எந்த சிக்கலும் இல்லை.

சுமார் 1400 ஏக்கர் நிலமும், 20 ஏக்கர் வனப்பகுதியும் கையகப்படுத்தவேண்டி இருந்தாலும், அதற்கான எந்த முயற்சியையும் இப்போதைய தமிழக அரசு மேற்கொண்டதாக தெரியவில்லை.

கடந்த 2015 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்த திரு. ஆர். ஒத்திசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு போட்டு, திருத்திய கருத்துருவை தமிழக அரசு அனுப்ப வேண்டும் எனவும், திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கில், நீதிபதிகள் திரு எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோரை கொண்ட பெஞ்ச், தமிழக பொதுப்பணி துறைக்கு கடந்த மார்ச் 22 ஆம் தேதி போட்ட உத்தரவில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் கேட்டு இருந்தார்கள். அதிலும் எந்த முன்னேற்றமும் இன்று வரை இல்லை.

இந்த நிலையில் தான் திட்டத்தின் மூல கருவான அவிநாசிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை தொடங்க வேண்டும் என திருப்பூரில் போராட்டம் தொடங்கி இருக்கிறது. (எப்படியும் திமுக வந்து கோவைக்கு குடிநீர் தர திட்டத்தை தொடங்குவார்கள், அதோடு இதையும் கேட்டு பெறலாம் என நினைத்தார்களோ என்னவோ, தேர்தல் சமயமாக பார்த்து போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்)

போராட்டத்தின் தீவிரத்தை அறிந்த தமிழக அரசு, இன்றைய தினம், திட்டம் தொடங்க ஆவன செய்யப்படும் என்றொரு ஒற்றை வரி வாக்குறுதியை தந்ததுமே, அவர்கள் இந்த திட்டத்தை முடக்கியதை எல்லாம் மறந்து, அம்மா புகழ் பாடி பாராட்டி கொண்டாடும் இணைய மனிதர்கள் தான் ஆச்சரிய படுத்துகிறார்கள்’.

இது வழக்கமானது தானே?

Reference:




Thursday, February 11, 2016

ஸ்டாலின் குறித்த ஜெ. பேச்சு – அருஞ்சொற்பொருள்

நேத்து சென்னையில் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமண விழாவை ஜெ. நடத்தி வெச்சு பேசிருக்கார்.. (அட நேர்ல தாங்க.. இதையெல்லாமா வீடியோ கான்பரன்ஸ்ல செய்வாங்க?)

அந்த பேச்சு தான் பல டிவிஸ்டுகளை சுமந்துட்டு இருக்கு.

ஒரு PhD ஆய்வு கட்டுரை எழுதுற அளவுக்கு அந்த பேச்சு இருக்கு. பேச்சை எழுதி கொடுத்த பிரகஸ்பதி நிறைய மறைமுக குத்துக்களை வெச்சு எழுதிருக்கார். (அவருக்கு யார் மேல என்ன கோபமோ?) அந்த பேச்சில் ரெண்டு குட்டி கதைகள் இருக்கு. அதில் ஒன்று தான் அப்பா மகன் பத்தின கதை. அது தமிழக அரசியலை லைட்டா ஷேக் பண்ற அளவுக்கு சக்தி வாய்ந்ததுன்னு நினைக்கிறேன்.

கதை இங்கே இந்த லிங்க்கில் இருக்கு.. படிச்சிட்டு வாங்க... தொடர்ந்து பேசுவோம்.



"நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல" என ஜெ. கடைசியில் சொல்லி இருந்தாலும், இந்த கதை டைரக்டா திமுகவையும் கலைஞர், ஸ்டாலின், நெஞ்சுக்கு நீதி புத்தகத்தையும் தான் குறிக்குதுன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்குமே.

இப்போ அந்த கதையில் உள்ள சில முக்கியமான விஷயங்களை கவனிக்கலாமா?

1.   இந்த கதையின் மிக முக்கிய வரியாக நான் நினைப்பது “அரசியல் பணி என்பது ஆபத்தானது. இதில் தந்தை, தனையன் என்றெல்லாம் உறவுகளுக்கு இடமில்லை. வலிமை உள்ளவரே வெல்ல முடியும். எனவே உனது அரசியல் பாடத்தை நீயேதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்” தான்.

சொந்த மகனே ஆனாலும் தன் முயற்சியில் தானே தான் வளரணும்னு தான் அந்த அப்பா நினைச்சிருக்கார். தன்னுடைய மகன்றதுக்காக எந்த சலுகையும் காட்டலை, உதவியும் செயலை என்பதை தெள்ள தெளிவா புரிய வெச்சிருக்காங்க ஜெ.

இதன் மூலம் திமுகவில் குடும்ப அரசியல்னு பேசிட்டு இருக்கிறவங்க மூக்கையெல்லாம் பலமா உடைச்சதொட, திமுக ஒரு சிறந்த ஜனநாயக கட்சி என்பதையும் எல்லோருக்கும் உறைக்கிற மாதிரி உணர்த்தி இருக்கார் ஜெ.

2.   ஸ்டாலின் போதிய அளவுக்கு பதவி உயர்வு அடையலையே என்கிற ஆதங்கம் ஜெ.வுக்கு இவ்வளவு ஆழமா இருந்திருக்கும்னு ஸ்டாலினே கூட நினைச்சு பார்த்திருக்கமாட்டார்னு  தோணுது.

3.   அதிமுகவில் அடுத்த தலைமைக்கு டி.டி.வி தினகரனை முன்னிலைப்படுத்த முயற்சி நடப்பதா செய்தி வரும்போது ஜெ.வின் இந்த பேச்சு இன்னும் முக்கியத்துவம் அடையுது. அந்த கட்சியை பார்.. சொந்த மகனுக்கே சலுகை காட்டலை.. புரிஞ்சு நடந்துக்கிடுங்கன்னு இண்டைரக்டா சுட்டி காட்டி இருப்பதா நாம நினைக்கலாம்.

4.   நெஞ்சை திறந்து எழுதிய புத்தகமான நெஞ்சுக்கு நீதியை எல்லோரும் படிச்சு புரிஞ்சுக்கணும்னு ஜெ. சொல்வது புரிகிறது. ஆனால் அப்படி எல்லோரும் அதை படிச்சால் அதிமுகவுக்கு தான் சிக்கல். அந்த புத்தகத்தின் ஐந்து பாகங்களையும் முழுசா படிச்ச எந்த தமிழனும் தான் இருக்கிற கட்சியில் இருந்து விலகி திமுகவில இணைஞ்சிரலாமான்னு தான் முதலில் யோசிப்பான். அந்த அளவுக்கு தமிழகத்தின் வரலாறு, அரசியல், சமூக அமைப்பு, அந்த தளைகளில் இருந்து மக்களை எப்படி மீட்டெடுத்தோம், என்னென்ன திட்டங்கள் என்னென்ன காரணங்கங்களுக்காக தொடங்கப்பட்டன, அப்போதைய தமிழக மக்களின் நிலை என்ன, அதை இப்போதிருக்கும் நிலைக்கு எப்படி படிப்படியாக முன்னேற்றினோம் என்பதை எல்லாம் விரிவாக எழுதி இருக்கிறார். அந்த சமையத்தில் ஏற்பட்ட பல அரசியல் சதுரங்க நிகழ்வுகளையும் அதன் பின்னணிகளையும் சுவையாகவும் சுவாரசியமாகவும் சொல்லி இருக்கிறார்.

புத்தகத்தில் ஜெ. சொன்ன மாதிரி கலைஞரின் தில்லுமுல்லுக்களை தேடினா ஏமாற்றம் தான் மிஞ்சும். (தன் தவறுகளை தானே எப்படி எழுதுவார்?)

எப்படியோ நெஞ்சுக்கு நீதி இன்னொரு ரெண்டு எடிசன் பதிப்பிக்கப்பட்டு இந்த வருஷம் சென்னை புத்தக கண்காட்சியிலேயே சக்க போடு போடும் என்பதும் அதை வாங்கும் பெரும்பாலானோர் அதிமுகவினர் என்பதும், அவர்கள் முகவின் தில்லுமுல்லுகளை தேடி தேடி கடைசியில் முகவின் அபிமானியாகவே மாற வாய்ப்பு இருக்கிறது என்பதும் எனது இதர அவதானிப்புக்கள்.

5.   மக்கள் நல கூட்டணி, தேமுதிக, பாமக என பலரும் அதிமுகவை கடுமையாக எதிர்ப்பதாக காட்டிக்கொண்டாலும், ஜெ. அவர்களை எல்லாம் சீரியஸா எடுத்துக்கவில்லை என்பது புரிகிறது.  தமிழக மக்களால் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு ஒதுங்கி கிடக்கும் ஒரு கட்சியான, அதிலும் அதிகார பூர்வ எதிர்கட்சி கூட அல்லாமல் ஜஸ்ட் ஒரு மூன்றாம் இடத்தில் இருக்கும் ஒரு சாதாரண அரசியல் கட்சியான திமுகவை கண்டு தான் அவர் ஆடி போயிருக்கிறார் என்பது பட்டவர்த்தனமாக புரிகிறது.

“எனக்கு நண்பனா இருக்க எந்த தகுதியும் தேவை இல்லை. ஆனா எதிரியா இருக்க தகுதி வேணும்” என்கிற சினிமா வசனத்தை தான் ஜெ. இதர கட்சிகளுக்கு மறைமுக செய்தியா சொல்லி இருக்கிறார்னு நான் நினைக்கிறேன்.

6.   தமிழகம் முழுவதும் நடந்த “நமக்கு நாமே” பயணம் திமுகவில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கோ இல்லையோ, தமிழக மக்கள் மனநிலையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கு என்பதை ஜெ. நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்கார். அதனால் தான் “ஐயோ பாவம் அந்த ஆடு இப்படி நனையுதே”ன்னு பரிதாபப்பட்டு பேசி இருக்கார். இப்போதைக்கு மகன் தந்தைக்காற்றும் உதவி என்பது, ஜெ. விரித்த வலையில் வீழாமல் கட்சியின் கட்டுப்பாட்டை காப்பது மட்டும் தான் என்பது ஸ்டாலினுக்கு தெரியாததா என்ன?

இனி இதை திமுக எப்படி கையாள போகுது என்பதில் இருக்கிறது, தமிழக அரசியலின் அடுத்த கட்டம்.

இந்த தேர்தல் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே என்பதை நேற்றைய பேச்சின் மூலம் தெளிவாக சொல்லி விட்டார். அதிலும், கலைஞர் அல்லாமல் ஸ்டாலின் தலைமையில் இந்த தேர்தல் இருக்கவேண்டும் என்பதையும் மறைமுகமாக சொல்லி விட்டார். அவர் அவருக்கு வசதியான வியூகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதை புரிந்து கொள்ளும் திறன் திமுகவுக்கு உள்ளது. தக்கன தக்கபடி தக்கசமையத்தில் திமுக கைக்கொள்ளும் என்பது புரிந்தாலும், அது என்ன மாதிரியான நடவடிக்கை என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்குது.



Printfriendly