Thursday, September 13, 2018

விநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்


ட்விட்டரில் பலரும் 'வீதிக்கு வீதி விநாயகர் வழிபாடு நடந்து கொண்டிருக்கிறதே. இது திராவிட இயக்கத்தின் பெரியாரியலின் தோல்வி அல்லவா?' என ஏளன பதிவுகள் இட்டிருப்பதை பார்க்க நேர்ந்தது.

எனக்கு ஏனோ சிரிப்பு சிரிப்பாக வந்தது.

உண்மையில் இது பெரியாரியலின் வெற்றி. எந்த வகையிலும் தோல்வியே அல்ல.

ஆலையங்களுக்குள் சென்று இறைவனை வழிபடவேண்டும் என்கிற விருப்பம் இருந்தும் ஆலையத்தினுள் நுழையமுடியாமல் தடுக்கப்பட்டு இருக்கும் சமூகம், ஆலையத்தினுள் நுழைந்து இறைவனை வழிபடுவதற்கான உரிமையை மீட்டெடுக்க போராடிய இயக்கம் திராவிட இயக்கம்.

இறை நம்பிக்கை நமக்கு இல்லை எனினும், இறை நம்பிக்கை உள்ளவர்களின் உரிமைக்காக போராடுவதே சமத்துவம். இதை தான் வைக்கம் போராட்டத்தின் மூலம் பெரியார் புரியவைத்தார்

அத்தகைய நிலையில் இருந்து, இன்று ஆலையத்துள் அடைந்து கிடந்த இறைவனை வீதிதோறும் கொண்டு வந்து இருத்தி எல்லோரையும் வழிபட வைத்திருப்பது உண்மையில் பெரியாரியலின் திராவிட பேரியக்கத்தின் மகத்தான வெற்றி அல்லவா?

இந்து சமய ஆலைய ஆகம விதிகளின் படி பிரதிஷ்டை செய்யப்பட்ட இறை சிலைகள் தான் வழிபாட்டுக்குரியவை என்கிற தாத்பர்யங்களை எல்லாம் தூக்கி தூரப்போட்டு எந்த நிலையிலும், எந்த பொருளிலும், எந்த உருவிலும் சிலையாய் செய்து அதையும் தெய்வம் தான் எனச்சொல்லி வழிபட வைத்தது கூட இந்து சமய ஆகம விதிகளின் தளைகளை உடைத்துப்போட்ட ஒரு பகுத்தறிவு புரட்சி அல்லவா?

இந்து சமய கட்டுப்பாடுகளை அவர்களே உடைத்து எல்லோருக்கும் எல்லாமுமாய் இறைவனையும் இறங்கி வரவைத்தது பெரியாரியலின் திராவிட இயக்கங்களின் பெரு வெற்றியே!

இதில் மகிழ்ச்சி தான் எனக்கு!

1 comment:

Printfriendly