tag:blogger.com,1999:blog-62193298594492868022024-02-19T09:47:46.000+05:30சதீஷ் - மனவுரை!சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.comBlogger278125tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-85361590622833977372023-04-22T16:06:00.002+05:302023-04-22T16:06:16.858+05:30வேலை நேர சட்ட திருத்தம்<p>தமிழ்நாடு அரசு நேற்று சட்டமன்றத்தில் விவாதம் எதுவும் இல்லால் 17 சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்தது.</p><p>அதில் ஒன்றாகதொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான பணி நேரத்தை உயர்த்தி ஒரு சட்ட திருத்தம் Factories Act இல் கொண்டு வந்து உள்ளது. </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4bkKZSZe_pm_mW9raz4uIUXFcwW6wMj8rifl0tMFzlF2yoECUuLEf_Axtb0vjdyxAy6nZlu27Jd2uBZxzcmysL-XxmDtF7z84P2reK_YHUtuumjlE4ezgiKwpGovZwZ8WARPVVJfrHWmnosf7qftOZ-FtPcZVdw04XRal3o4lb3Yi1QRcWoK-gVbZIQ/s739/images%20-%202023-04-22T160542.149.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="415" data-original-width="739" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4bkKZSZe_pm_mW9raz4uIUXFcwW6wMj8rifl0tMFzlF2yoECUuLEf_Axtb0vjdyxAy6nZlu27Jd2uBZxzcmysL-XxmDtF7z84P2reK_YHUtuumjlE4ezgiKwpGovZwZ8WARPVVJfrHWmnosf7qftOZ-FtPcZVdw04XRal3o4lb3Yi1QRcWoK-gVbZIQ/s320/images%20-%202023-04-22T160542.149.jpeg" width="320" /></a></div><br /><p><br /></p><p>இந்த சட்டத்திருத்தம், ஒரு நாளுக்கு இப்போது இருக்கும் 8 மணி நேர வேலை என்பதில் இருந்து 12 மணி நேரம் ஆக இயல்பான வேலை நேரத்தை உயர்த்திக் கொள்ள வழி வகை செய்கிறது.</p><p>இது எதற்காக கொண்டு வரப்பட்டது யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பது எல்லாம் தெரியவில்லை. ஆனால் காரணம் என்னவாக இருந்தாலும் இது சரியானது அல்ல.</p><p>இளைஞர்களின் வேலை வாய்ப்பை குறைக்கும், வேலை செய்வோரை மேலும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் இந்த சட்டம், இன்னும் ஒரு வாரத்தில் மேதினம் கொண்டாட இருக்கும் நேரத்தில் வந்து இருப்பது ஆச்சர்யம் தான். </p><p>அதற்காக மே தினம் முடிந்த பிறகு கொண்டு வந்தால் ஓகேவா என சிலர் கிண்டல் செய்ய கூடும்.</p><p>மே தினம் எதற்காக கொண்டாடப் படுகிறது என்கிற அடிப்படை விஷயம் தெரிந்த யாரும் இந்த சட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒரு மனிதனுக்கு இயல்பாக தேவைப்படும் ஓய்வை கொடுக்க வேண்டும் என்பதற்காக 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பதனை உறுதி செய்வதற்காக போராடி பெற்ற உரிமை தான் இந்த மே தின கொண்டாட்டத்தின் அடிப்படை. </p><p>நேற்று சட்டமன்றத்தில் இந்த சட்டம் அறிமுகம் ஆனபோது எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சியினருக்கு வாழ்த்துக்கள்.</p><p>இந்த சட்ட திருத்தம் முழுக்க முழுக்க உற்பத்தி துறை சார்ந்த Factories Act உட்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது 50 பேருக்கு மேல் பணி செய்யும் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.</p><p>அப்படியான தொழிற்சாலைகளில் இயல்பான வேலை நேரம் 8 மணி நேரம் என்றாலும் கூட, விதிவிலக்காக வேலை அவசரம், அல்லது வேலை எதிர்பார்த்த நேரத்தில் முடியவில்லை போன்ற தருணங்களில் கூடுதல் நேரம் (Over Time) வேலை செய்ய வைக்கலாம் என Factories Act ஏற்கனவே வழி வகை செய்து உள்ளது.</p><p>அப்படியான Over Time நேரத்தில் இயல்பான நேரத்துக்கு கொடுக்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிற சட்டம் ஏற்கனவே உள்ளது.</p><p>இப்போது, இயல்பான வேலை நேரமே 12 மணி நேரம் வரை வைத்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு சட்ட திருத்தம் சொல்வதால், Over Time என்று தனியாக கூடுதல் சம்பளம் கொடுத்து வேலை செய்ய வைக்க வெண்டியது இல்லை. இயல்பான சம்பளத்தில் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வைக்கலாம்.</p><p>எப்போதேனும் Over Time என்று அல்லாமல் தினசரி கூட இனி 12 மணி நேரம் வேலை வைக்க முடியும்.</p><p>நிச்சயமாக இது உற்பத்தியை அதிகரிக்க செய்யும் தான். ஆனால் அதே அளவு நிச்சயம் தொழிலாளர்களின் உடல்நிலை மன நிலையையும் பாதிக்கும் என்பதும்.</p><p>ஒரே நாளில் 17 சட்ட மசோதாக்கள் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டு உள்ளதன் பின்னணி எதுவாக இருந்தாலும் ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அதை ஆதரிக்க மாட்டார்கள். போலவே அதில் ஒன்றான இந்த வேலை நேர சட்ட திருத்தத்தை தொழிலாளர் நலன் மீது அக்கறை கொண்ட யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.</p><p>இரண்டு வருஷம் முன்பு இதே போன்ற சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வர முனைந்த போது அதை கடுமையாக எதிர்த்த கழகம் இப்போது அதே சட்டத்தை கொண்டு வந்து இருப்பது வருத்தமானது.</p><p>அப்போது இந்த சட்டத்தை எதிர்த்து திமுக சொன்ன விஷயங்கள் எதுவும் இப்போது மாறிவிடவில்லை தானே?</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYdpYb1wQgRW9mnfb7OHQvToodSIis3ETCqfKfXTWe4GzXjwmGh-TrYDQhHlToW6GnjTYNYmPoB9cOzPPfCgMELx7a5RoXJg3g7SQ6vsxO98Zhdo8oUoUX8vPX8IPRaRj_UFdPK6mZkp4p1WKON8OgZ0brZAzkPIGLJlwld5AekQwvwDktlEeHwzdrOg/s1080/IMG_20230421_153619.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1080" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYdpYb1wQgRW9mnfb7OHQvToodSIis3ETCqfKfXTWe4GzXjwmGh-TrYDQhHlToW6GnjTYNYmPoB9cOzPPfCgMELx7a5RoXJg3g7SQ6vsxO98Zhdo8oUoUX8vPX8IPRaRj_UFdPK6mZkp4p1WKON8OgZ0brZAzkPIGLJlwld5AekQwvwDktlEeHwzdrOg/s320/IMG_20230421_153619.jpg" width="320" /></a></div><br /><p><br /></p><p>தொழிலாளர் விருப்பப்பட்டால் மட்டுமே இந்த பணி நேரத்தை தொழிற்சாலைகள் அமல் செய்ய முடியும் என அமைச்சர் சொல்லி இருக்கிறார். தினசரி எல்லா தொழிற்சாலைகளும் என்ன செய்கின்றன என அரசு கண்காணிப்பது சாத்தியம் இல்லை.</p><p>Inspector of Factories (தொழிற்சாலை ஆய்வாளர்) இதை தினசரி செய்யவும் முடியாது. தொழிற்சாலை அவரை "ஒப்புக்கொள்ள வைக்க" எதையும் செய்யும். ஊழலுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கும் சட்ட திருத்தம் இது.</p><p>மேலும், தொழிலாளர் விருப்பம் என்று ஒன்று ஒருபோதும் இருந்தது இல்லை. தொழிற்சாலை பணித்தால் தொழிலாளர்கள் அதை செய்து தான் ஆக வேண்டி இருக்கும். அப்படி செய்யாத தொழிலாளர்களுக்கு பதில் மாற்று தொழிலாளர்களை வைக்க தொழிற்சாலைகள் தயஙகாது. எப்படி பார்த்தாலும் பாதிக்கப்பட போவது தொழிலாளர்கள் தான்.</p><p>இந்த சட்ட திருத்தத்தின் சாதக பாதகஙகளை பற்றி ஆராய உயர் மட்ட குழு அமைக்கப் போவதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiziZu3lv-9XmVAcLBvk89QK5nHl8iZgRDRGniE4J-rU9sjkfUUC9VF2C0He6JZ6fX2FZS64uMMNJTvx4QjWOjKFkmTXIn68YztCz6vvY086--b6jw3hizFqfW_1BmWKj3ag7mzTXuKFgrzNmY52O3LNPGc_SEn800OxuY1KqUTHFvrnuq0gMMMaC0ixA/s1600/IMG_20230421_154240.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1557" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiziZu3lv-9XmVAcLBvk89QK5nHl8iZgRDRGniE4J-rU9sjkfUUC9VF2C0He6JZ6fX2FZS64uMMNJTvx4QjWOjKFkmTXIn68YztCz6vvY086--b6jw3hizFqfW_1BmWKj3ag7mzTXuKFgrzNmY52O3LNPGc_SEn800OxuY1KqUTHFvrnuq0gMMMaC0ixA/s320/IMG_20230421_154240.jpg" width="311" /></a></div><p>எதிர்ப்பு வந்தால் மறு பரிசீலனை என்பதை விட சட்டம் கொண்டு வரும் முன்பு தொழிற் சங்கங்களை ஆலோசித்து கொண்டு வருவது தான் இது வரை ஜனநாயகமாக இருந்தது.</p><p>உயர்மட்ட குழு எல்லாம் சட்ட முன்வரைவு நேரத்திலேயே இருந்து இருக்க வேண்டும். அதை மசோதாவாக தாக்கல் செய்த பிறகு உயர்மட்ட குழு அமைப்பது சரியல்ல.</p><p>அரசு இது தொடர்பாக தொழிற்சங்கங்களை அழைத்து பேசி அவர்கள் கருத்தையும் கேட்டு முடிவு செய்து இருக்கலாம். குறைந்த பட்சம் திமுகவின் தொழிற்சங்கம் LPF கருத்தையாவது கேட்டு இருக்கலாம். LPF எல்லா சூழலிலும் தொழிலாளர் பக்கமே நின்ற வரலாறு உண்டு. தவறை தவறு என தயஙகாமல் சொல்லும் துணிவும் உண்டு.</p><p>டிரைவர்கள், டீச்சர், மருத்துவர், கட்டிட வேலை செய்வோர், டெக்ஸ்டைல், கணினி துறை, கடைகள், சூப்பர் மார்க்கெட், ஹோட்டல் போன்ற பல துறைகளில் ஏற்கனவே தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்கிறார்களே என்பது போன்ற பொருந்தாத ஒப்பீடுகள் கொண்டு வந்து இந்த சட்ட திருத்தத்தை ஆதரித்து பேசுவோர் எவரும் இந்த துறைகள் எல்லாம் Factories Act இல் வராத துறைகள் என புறியாதவற்களாக தான் இருக்க கூடும். அவர்களின பிரச்சாரத்தை எல்லாம் புறக்கணித்து விட்டு அரசு இந்த சட்ட திருத்தத்தின் உண்மையான பாதிப்பை அனுபவிக்க போகும் தொழிற்சாலை தொழிலாளர்களின் கருத்துக்களை கேட்டு நல்ல முடிவினை எடுத்தால் நல்லது.</p><p><br /></p><p><br /></p><p><br /></p>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-59060770513170216462023-03-07T23:12:00.002+05:302023-03-08T22:33:00.682+05:30தனியார் மயம் ஆகிறதா MTC?<p><b><span style="font-size: large;">செ</span></b>ன்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏதுவாக தனியார் பங்களிப்புடன் 1,000 பேருந்துகள் வாங்க திட்டம் இருப்பதாக ஒரு <a href="https://www.hindutamil.in/news/tamilnadu/955194-mtc-will-implement-a-new-initiative-to-run-buses-privately.html" target="_blank"><b>செய்தி</b></a> வந்தது.</p><p>இது தொடர்பான <a href="https://t.co/8r2Me6XeMU" target="_blank"><b>டெண்டர்</b></a> விவரஙகளில், Gross Cost Contract (GCC) முறையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதற்கான நிறுவனஙகளை தேர்ந்தெடுப்பது, ஆய்வு செய்வது ஆகியவற்றக்காக ஒரு consultancy நிறுவனத்தை தெரிவு செய்வதற்கான டெண்டர் ஆக அது வெளியாகி இருக்கிறது.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl-GKKqnG_8suMnlS7XoVFOIm333cdhf75oRFDvypZwl7ekouRkvR1CRhsVx-C7eGiWHkIPipklyHqDdaEjbjzpToXDFj0U8Hq-to6H26Vi82jU23O-2WJXeaGpto8PSEuaf1YfYWxcgotZDEfdDI-FHNr1Oy0F1bALA3pXffPoMf-qWl98En3apsAxA/s400/images%20-%202023-03-07T231255.153.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="300" data-original-width="400" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl-GKKqnG_8suMnlS7XoVFOIm333cdhf75oRFDvypZwl7ekouRkvR1CRhsVx-C7eGiWHkIPipklyHqDdaEjbjzpToXDFj0U8Hq-to6H26Vi82jU23O-2WJXeaGpto8PSEuaf1YfYWxcgotZDEfdDI-FHNr1Oy0F1bALA3pXffPoMf-qWl98En3apsAxA/s320/images%20-%202023-03-07T231255.153.jpeg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><p>இந்த செய்தி வெளியானதும், இது மாநில அரசு இதுவரை பின்பற்றி வந்த போக்குவரத்து கொள்கைக்கு எதிரானது என்றும், போக்குவரத்து தொழிலாளர் நலன் பாதிக்கப்படும் என்றும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.</p><p>இது பற்றி பார்ப்போம்.</p><p>தமிழ்நாட்டை பொறுத்த வரை போக்குவரத்து கழகம் என்பது தொழிலாக அல்ல சேவையாகவே நடத்தப்பட்டு வருகிறது.</p><p>தனியார் பேருந்துகளை நடத்தி வந்த காலஙகளில், வருவாய் அதிகம் உள்ள வழித்தடங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு தூர கிராமஙகள், மலை பகுதி குடியிருப்புகள் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து சேவை இல்லாமல் இருந்தது. அதனால் அங்கிருந்த மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாமல், கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றில் பின் தங்கி இருந்தனர். மேலும் மருத்துவம் அரசு சேவைகள் ஆகியவை பெற அதிக தூரம் நடந்தோ மாட்டு வண்டி சைக்கிள் போன்றவற்றில் பயணித்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.</p><p>தமிழ்நாடு அரசு 1969 ஆம் ஆண்டு பேருந்துகளை தேசியமயமாக்கி, அரசு போக்குவரத்து கழகத்தை தொடங்கி, அனைத்து ஊர்களுக்கும் பேருந்து வசதி செய்து கொடுத்து, "<i>ஒரே ஒரு பயணியாக இருந்தாலும் அவருக்காக பேருந்து இயக்கப்படும்</i>" என அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களின் வாக்குறுதி படி இன்று வரை லாப நஷ்டம் பார்க்காமல் முழுக்க முழுக்க மக்கள் நல சேவையாக நடைபெற்று வருகிறது.</p><p>சென்னை & கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர பிற மாவட்டஙகளில் பிற்பாடு தனியார் நிறுவனஙகளும் பேருந்துகளை இயக்க அனுமதி பெற்று இயக்கி வருகிறார்கள்.</p><p>மற்ற மாநிலங்களுக்கு குறிப்பாக வட இந்திய மாநிலங்களுக்கு பயணித்தவர்கள் அங்கே இப்போதும் போக்குவரத்து வசதிகள் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை நன்கு அறிவார்கள்.</p><p>சென்னையை பொறுத்த வரை நகர பேருந்துகள் முழுமையும் அரசு மாநகர போக்குவரத்து கழகம் (MTC) சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. (ஒரே ஒரு தனியார் பேருந்து 54T மட்டும் கோர்ட் அனுமதியுடன் இயங்குகிறது).</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDIwJM2TIf8YB7eUTBuaYemDGgd4yJtFRdFLn2iDpXjWzrG27xnp9xUt7JNSaJOBt7kpYPAK8pAKQv5WR9l6-xa5nUI3wweQGd6K4PqzDgYo8Z_clkUVxXGEloHNGir57oJN3wUT7YhQwxnk2Cqo_ALscKThG7e1j-V6ENMwvds86kLRNvIqrJr5RkHA/s1076/IMG_20230308_153830.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="296" data-original-width="1076" height="88" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDIwJM2TIf8YB7eUTBuaYemDGgd4yJtFRdFLn2iDpXjWzrG27xnp9xUt7JNSaJOBt7kpYPAK8pAKQv5WR9l6-xa5nUI3wweQGd6K4PqzDgYo8Z_clkUVxXGEloHNGir57oJN3wUT7YhQwxnk2Cqo_ALscKThG7e1j-V6ENMwvds86kLRNvIqrJr5RkHA/s320/IMG_20230308_153830.jpg" width="320" /></a></div><p><br /></p><p>இப்போது உலக வங்கி கடன் நிபந்தனை அடிப்படையில் தனியார் பங்களிப்புடன் இந்த ஆண்டு 500 பேருந்துகளும், 2025 ஆம் ஆண்டு மேலும் 500 பேருந்துகளும் ஆக மொத்தம் 1,000 பேருந்துகள் தனியார் மூலம் இயக்க திட்டம் இட்டு, அதற்காக டெண்டர் விடப்பட்டு இருக்கிறது.</p><p><b><u>இது தனியார் மயமா? தனியார் பங்களிப்பா?</u></b></p><p>தனியாருடன் அரசு இணைந்து செயலாற்ற பல முறைகள் உண்டு.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL8Ls4T3aXtrK-uPzeVtRQzjymV2vTuEVgp4grwqg4FBn5WyTEZTdZTWLNDihgdml0_LPwP9fsZlCs7ThgPYAPue1_Ycf3_5yq2kFlr5bfhH6UiT3FWubGk-Yh21QuERmLhaVVsq-vlIx4N5X1groPFrKaw2YMFfyPw1omhdKgd-fiQyDZzDVXJFtdPA/s468/images%20-%202023-03-07T225912.302.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="280" data-original-width="468" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL8Ls4T3aXtrK-uPzeVtRQzjymV2vTuEVgp4grwqg4FBn5WyTEZTdZTWLNDihgdml0_LPwP9fsZlCs7ThgPYAPue1_Ycf3_5yq2kFlr5bfhH6UiT3FWubGk-Yh21QuERmLhaVVsq-vlIx4N5X1groPFrKaw2YMFfyPw1omhdKgd-fiQyDZzDVXJFtdPA/s320/images%20-%202023-03-07T225912.302.jpeg" width="320" /></a></div><p>1. Dry Lease/Wet Lease முறையில் தனியாரின் பேருந்துகளை அரசு பயன்படுத்தி அரசின் பெயரில் போக்குவரத்து சேவை அளிப்பது. அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா மாநிலங்களில் வோல்வோ, ஸ்கேனியா பேருந்துகளை இந்த முறையில் தான் இயக்குகிறார்கள். பேருந்து வாங்கும் செலவு அரசுக்கு இல்லை. குத்தகைக்கு எடுத்தால் போதும். அரசு விரும்பும் வழித்தடத்தில் அரசு இயக்கி கொள்ளும். </p><p>2. தனியார் நிறுவன பேருந்துகளுக்கு என தனியாக permit கொடுத்து அவர்கள் விரும்பும் வழித்தடத்தில் இயக்கிக் கொள்ள அனுமதி கொடுப்பது. பல மாவட்டஙகளில் நகர, புறநகர் பேருந்துகள் இப்படி தான் இப்போது இயங்கிக் கொண்டு இருக்கின்றன.</p><p>3. Special Purpose Vehicle - அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தில் தனியாரை ஆலோசகராக நியமித்து நிர்வாகம் செய்வது. பேருந்துகள் எல்லாம் அரசின் சொத்து.. ஆனால் நிர்வாகம் செய்வதில் தனியார் மேலாண்மை நிறுவனம் துணை நிற்கும். கேரளாவில் KSRTC - SWIFT நிறுவனம் இப்படி இயங்குகிறது.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiurEEsgDQupSBLTSpA7YEnA0u8uh78vLi12aM3nYXNmXA4-Ans8AXnFaPRW7rYnuRGy5WRmhB1qoKZ1_5gYUwC5cXLad5IVctMVS9HPiRDud1ukqqCvFkSV5CF89k59dYwO1fHnhnBV3Rr_up44iPgiORwKOjw5uAUNjy-87xhHP3myKVqTu1FPs1yDg/s1024/1024px-Electric_bus_KSRTC.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="768" data-original-width="1024" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiurEEsgDQupSBLTSpA7YEnA0u8uh78vLi12aM3nYXNmXA4-Ans8AXnFaPRW7rYnuRGy5WRmhB1qoKZ1_5gYUwC5cXLad5IVctMVS9HPiRDud1ukqqCvFkSV5CF89k59dYwO1fHnhnBV3Rr_up44iPgiORwKOjw5uAUNjy-87xhHP3myKVqTu1FPs1yDg/s320/1024px-Electric_bus_KSRTC.jpg" width="320" /></a></div><p>4. Joint Venture - தனியார் நிறுவன பஸ் அரசின் சார்பாக இயக்கப்படுவது. இதில் இருவரின் பெயரும் (போக்குவரத்து கழகம் & தனியார் நிறுவனம்) இருக்கும். பெங்களூர் நகரில் இப்படியான சேவை இருக்கிறது.</p><p>5. இவை போக இந்த GCC முறையும் ஒன்று. அதாவது Gross Cost Contract. பேருந்துகள் தனியாருடையது. ஓட்டுநர் தனியார் சார்பில். நடததுனர் அரசின் சார்பில். ரூட் அரசின் பெர்மிட். அந்த ரூட்டை டெண்டரில் வாங்கும் நிறுவனம், அந்த ரூட்டுக்கு என்று வருவாய் நிர்ணயித்து அரசுக்கு கொடுக்கும். அது தான் Gross Cost (for that route). அதன் அடிப்படையில் அந்த ரூட்டில் தனியார் பேருந்தை இயக்குவார்கள்.</p><p>நிர்ணயித்த தொகையை விட அதிக வருவாய் வந்தால் அது அந்த தனியாருக்கு கிடைக்கும் லாபம். ஒருவேளை நிர்ணயித்த தொகையை விட குறைவாக வந்தால் எவ்வளவு குறைந்தது என பார்த்து அந்த இழப்பை அரசு ஈடு செய்யும்.</p><p>எப்படி பார்த்தாலும் தனியாருக்கு நஷ்டம் இல்லை.</p><p><b><u>சரி இதனால் என்ன பாதிப்பு வரும்?</u></b></p><p>அரசு தனக்கு என்று பேருந்துகளை சொந்தமாக வாங்க தேவை இல்லை. தனியாரின் பேருந்துகள் இயங்க அனுமதி கொடுத்தால் போதும். ஓட்டுநர் கூட அவர்களே பார்த்து கொள்வார்கள். காலப் போக்கில் அரசு பேருந்துகள் அரசு ஓட்டுனர்கள் வாய்ப்பு இழப்பார்கள். அல்லது தனியார் நிறுவனம் நோக்கி செல்ல வேண்டி இருக்கும். இது பணி பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்படுத்தும்.</p><p>நிர்ணயம் செய்யப்படும் Gross Cost எப்படி அளவிடப் போகிறார்கள் என்பது அடுத்த கவலை. புறநகர் பேருந்துகள் போல அல்லாமல் நகர பேருந்துகளின் பயண பயன்பாடு வேறுபாடானது. அதிலும் சென்னை நகர பேருந்துகளை வருவாய் அடிப்படையில் வகைப்படுத்துவது சிரமம். ஒவ்வொரு ரூட்டும் ஒவ்வொரு வகையான வருவாய் கொண்டவை.</p><p>எனவே தனியார் நிறுவனம் கூடுமான வரை குறைவான தொகைக்கே நிர்ணயம் செய்ய எத்தனிக்கும். அப்படி நிர்ணயம் செய்யும் தொகையை விட அதிக வருவாய் வருவது அவர்களுக்கு லாபம். குறைந்தாலும் அரசு கொடுத்து விடும். இழப்பும் நஷ்டமும் அரசுக்கு தான். அதாவது மக்களின் வரி பணத்துக்கு.</p><p>Gross Cost சரியாக நிர்ணயம் செய்யப்பட்டாலும், தினசரி வருவாயை எப்படி கணக்கிடுவார்கள் என்பது அடுத்த கவலை. மாணவர், மகளிர், முதியோர் சலுகைகள் எல்லாம் அரசு திருப்பி கொடுக்கும் என்பதால் அதன் கணக்கும், நார்மல் பயணிகள் வருவாய் கணக்கும் எப்படி கண்காணிக்க போகிறார்கள் என்பது பெரிய சவால் தான்.</p><p>சுருக்கமாக சொல்வதானால், அரசின் வழித்தடத்தில் அரசின் பெர்மிட்டில், தனியாரை பேருந்து இயக்க வைத்து அவர்கள் சொல்லும் தொகையை அரசு கொடுக்கும். அதை விட கூடுதல் வந்தால் தனியாருக்கு.</p><p>இது கிட்டத்தட்ட அரசின் விமான நிலையங்களை பராமரிக்கும் பணி என ஒரு குறிப்பிட்ட தனியாருக்கு கொடுத்து, அதற்காக நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் சில காலத்துக்கு பிறகு அந்த தனியாரால் உயர்த்தப்பட்டு முழு விமான நிலையமும் அவர்கள் கட்டுப்பாட்டுக்கு போன கதை போல ஆகக்கூடும் என்பதே பலரது அச்சம்.</p><p>வருவாய் குறைவான வழித்தடத்தில் அரசு இயக்கும். தனியார் இயக்குவார்களா என்பது சந்தேகமே. மக்களின் போக்குவரத்து வசதி அதனால் பாதிக்கப்படும். தமிழ்நாடு போராடி அரசூடைமை ஆக்கிய போக்குவரத்து சேவை அர்த்தம் இல்லாதது ஆகிவிடும் என்பதே பலரது கவலை.</p><p>நாளடைவில், அரசு சார்பில் புதிய பேருந்துகள் வாங்காமல் தனியார் மூலம் இயக்கப்பட்டு வருகையில் காலாவதி ஆகும் (FC expired) அரசு பேருந்துகளுக்கு கூட தனியார் பேருந்துகளை ஈடு செய்து வந்தால் (Substitute) அரசு போக்குவரத்து கழகம் மெல்ல மெல்ல கரைந்து போய்விடக் கூடும்.</p><p>இதை விட அரசே பேருந்துகளை வாங்கி அரசே இயக்குவது நல்லது. </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaz33Jo5MM8R63zP5FIsw4B5DhE-HZYXCUggJp0ES3RRmAI-kFewAvVEJE5ZYHacAJ7UBBu0cj6slLHdMladJJU3AiGMzSY6e9n1Y69KB0g6930DmIVN2AqKQn0VAOucwWeN223VwlcCjMRQWukA43BqrYgYdmO2hlsyuZBLmh5Ur8fZ5BHQaNrXW9hg/s738/images%20-%202023-03-07T230450.703.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="415" data-original-width="738" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaz33Jo5MM8R63zP5FIsw4B5DhE-HZYXCUggJp0ES3RRmAI-kFewAvVEJE5ZYHacAJ7UBBu0cj6slLHdMladJJU3AiGMzSY6e9n1Y69KB0g6930DmIVN2AqKQn0VAOucwWeN223VwlcCjMRQWukA43BqrYgYdmO2hlsyuZBLmh5Ur8fZ5BHQaNrXW9hg/s320/images%20-%202023-03-07T230450.703.jpeg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><p>கலைஞர் மினி பஸ் திட்டத்தை கொண்டு வந்தபோது கூட அவர்களுக்கு என்று தனி பெர்மிட் தான் கொடுத்தார். தனியார் பேருந்துகள் மாநிலம் முழுவதும் இயக்க அனுமதி கொடுத்தாலும் சென்னையில் மட்டும் மினி பஸ் சேவையை அரசே நடததியது.</p><p>எந்த சூழலிலும் அரசின் பெர்மிட்டை தனியார் பயன்படுத்த தமிழ்நாடு இதுவரை அனுமதித்தது இல்லை. தனியாருக்கு தனி பெர்மிட் அரசுக்கு தனி பெர்மிட். அவரவர் பெர்மிட்டில் அவரவர் இயக்கி கொள்வது தான் நல்லது.</p><p>சென்னை போன்ற நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. காரணம் MRTS, EMU போன்ற ரயில் சேவைகளும், Metro சேவையும், சொந்த கார் பைக் எண்ணிக்கை அதிகரிப்பும், நிறுவனஙகள் பள்ளி கல்லூரி போன்றவை தங்களுக்கு என்று பேருந்துகளை இயக்குவதும் என பல காரணங்கள்.</p><p>இந்நிலையில் தனியாருக்கு 1,000 வழித்தடம் கொடுத்து அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடுகட்டும் என்பது போன்ற திட்டஙகள் சரியானது தானா என்பது யோசிக்க வேண்டிய ஒன்று.</p><p>நாட்டில் முன்மாதிரி போக்குவரத்து கழகங்கள் தமிழ் நாட்டின் சிறப்பு. அந்த சிறப்பு தொடர வேண்டும். அவை தனியார் மயம் ஆக்கப்படக்கூடாது என்பது தான் எல்லோரும் விரும்பும் நிலைப்பாடு.</p><p>அரசு எந்த தனியாரின் நலன் கருதி இந்த திட்டத்தை கொண்டு வந்தது என தெரியாது. ஆனால் அதை கைவிட்டு கலைஞர் வழியில் மக்களின் நலன் கருதி திட்டத்தை மாற்றம் செய்வது நல்லது.</p><p>****</p><p>பார்வை:</p><p>1. <a href="https://www.hindutamil.in/news/tamilnadu/955194-mtc-will-implement-a-new-initiative-to-run-buses-privately.html" target="_blank">செய்தி</a> </p><p>2 <a href="https://t.co/8r2Me6XeMU" target="_blank">டெண்டர்</a></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-88597053870229338632022-11-08T04:14:00.002+05:302022-11-08T04:14:56.760+05:30EWS வழக்கு தீர்ப்பு<p><b><span style="font-size: large;">க</span></b>டந்த 2019 ஆம் ஆண்டு, ஒன்றிய அரசு, முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது.</p><p>பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம் ஆத்மி, என பல கட்சிகளும் இந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்து இருந்தார்கள். தமிழ்நாட்டில் இருந்து அதிமுக இந்த சட்டத்தை ஆதரித்தது. திமுக இந்த சட்டத்தை எதிர்த்து வாக்களித்தது.</p><p>Economically Weaker Section எனும் EWS சட்டம் சமூக நீதிக்கு எதிரானது என பல எதிர்ப்புகள் வந்து, இந்த சட்டத்தை எதிர்த்து வழக்குகளும் தாக்கல் செய்யப் பட்டன.</p><p>இந்த சட்டத்தின் படி ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு கீழே உள்ள முற்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு பெற தகுதி பெறுவார்கள். வேறு எந்த இட ஒதுக்கீட்டிலும் வராதஅ சமூகத்தினருக்கு மட்டுமே இது பொருந்தும்.</p><p>சுருக்கமாக சொன்னால் முற்பட்ட அல்லது சமூக ரீதியாக முன்னேறிய வகுப்பினரில் உள்ள பொருளாதார நலிவடைந்த மக்கள்.</p><p>ஆனால் ஆண்டு வருமானம் ₹8 லட்சம் வாங்கும் ஒருவர் எப்படி பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவில் வர முடியும்? என்கிற கேள்விக்கு இது வரை விடை இல்லை.</p><p>பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு கொடுக்க இந்திய அரசியல் சாசனத்தில் வழி இல்லை. சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின் தங்கியுள்ள மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. எனில், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு சட்டம் செல்லுமா என்பதும் மற்றொரு கேள்வி.</p><p>ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில், மொத்த இட ஒதுக்கீடு என்பது 50% க்கு கூடுதலாக கொடுக்க முடியாது என சொல்லி இருக்கிறது. ஏற்கனவே 22.50% தாழ்த்தப்பட்ட பழஙகுடி மக்களுக்கும் 27% இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஒதுக்கீடு கொடுத்து மொத்தம் 49.50% ஒதுக்கீடு கொடுத்து விட்டதால் இதற்கு மேல் கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை. எனில் இப்போது கூடுதலாக 10% இட ஒதுக்கீடு எப்படி கொடுக்க முடியும்? என்பதும் கேள்வியே. </p><p>(இந்த 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பு என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் பொருந்தாது. தமிழ் நாட்டை பொறுத்தவரை 69% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டம் அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்கப்பட்டு இருப்பதால் சட்ட ரீதியான பாதுகாப்பும் இருக்கிறது. எனவே தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு கொள்கைக்கு இந்த 50% உச்ச வரம்பு எல்லாம் இல்லை)</p><p>இப்படியான பல்வேறு கேள்விகளை உள்ளடக்கிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>சமூக நீதிக்கான போராட்டத்தை எப்போதும் முன்னெடுத்து செல்லும் இயக்கமான திமுக இந்த வழக்கில் தொடர்ந்து ஆணித் தரமான வாதஙகளை எடுத்து வைத்து, EWS ஒதுக்கீடு எந்த அளவுக்கு சட்டத்தின் பார்வையில் தவறானது என விரிவாக வாதாடியது.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOPYuRoBGlXHiwZTHQUS5ioAmWUB6MYWaTzVprzMQ9bmL5-ItPAfyvtQYMzUky0EqD8ExjetjhNkluhNW_K7_PRqczmRYT5bWBQJKgQHwejGcZ-7dpzffbQD0pYOv4HUU_XEfCcJg-JyCu10PSde3ynp0cjbZwEB3w9EZrtoxZ2HUEF-AoZpGDkRHKLQ/s554/images%20-%202022-11-08T041139.343.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="554" data-original-width="554" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOPYuRoBGlXHiwZTHQUS5ioAmWUB6MYWaTzVprzMQ9bmL5-ItPAfyvtQYMzUky0EqD8ExjetjhNkluhNW_K7_PRqczmRYT5bWBQJKgQHwejGcZ-7dpzffbQD0pYOv4HUU_XEfCcJg-JyCu10PSde3ynp0cjbZwEB3w9EZrtoxZ2HUEF-AoZpGDkRHKLQ/s320/images%20-%202022-11-08T041139.343.jpeg" width="320" /></a></div><p>இந்த வழக்கில் நேற்று வந்த தீர்ப்பு, இந்த வழக்குக்கான தீர்வாக அமையாமல் மேலும் பல வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டிய சூழலுக்கு எல்லோரையும் தள்ளும் அளவுக்கு புதிய குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.</p><p>ஐந்து நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வந்தது. அதில் நீதியரசர்கள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பார்டிவாலா ஆகிய மூன்று நீதிபதிகள் EWS ஒதுக்கீடு செல்லும் என்றும், நீதியரசர்கள் ரவீந்திர பட், யூ. யூ.லலித் ஆகிய இரண்டு நீதிபதிகள் EWS ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பு அளித்து உள்ளனர்.</p><p>இது தவிர நேற்றைய தீர்ப்பு இன்னும் பல விஷயங்களையும் குறிப்பிடுகிறது. அதாவது மிக நீண்ட காலத்துக்கு இட ஒதுக்கீடு தொடர முடியாது என்றும், விரைவில் இட ஒதுக்கீடு முறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும், எல்லா வகுப்பினருக்கும் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு கொடுக்க ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்கிறது.</p><p>பொருளாதாரம் என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடக் கூடியது. இன்றைக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் நாளையே கல்வி கற்று நல்ல வேலை நல்ல பதவி பெற்று பொருளாதார ரீதியாக முன்னேறி விட முடியும். ஆனால் சமூக ரீதியான ஒடுக்குமுறை என்பது எவ்வளவு பணம் செல்வாக்கு இருந்தாலும் மாறவே மாறாது. எவ்வளவு உயர் பதவியை அடைந்தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு எல்லோரையும் போல சமமான உரிமைகள் கிடைப்பது இல்லை. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.</p><p>எனவே பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பதே அடிப்படையில் தவறான முடிவு.</p><p>ஆனால், பெரும்பான்மை அடிப்படையில் மூன்று நீதிபதிகளின் கருத்துப் படி, இப்போதைக்கு EWS ஒதுக்கீடு செல்லும் எனபது தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தரும் செய்தி. எனவே இப்போதைக்கு EWS ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை.</p><p>EWS ஒதுக்கீடு செல்லும் என மூன்று நீதிபதிகள் எந்த அடிப்படையில் சொன்னார்கள் என்பது தான் ஆச்சர்யம்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY1HKqPCI0EzNS8SUhiM13R-x0F4thU8cU7_Iosw_15wnlwyALtQXczV18CmZSXb3ukhEcb01QVHsH5ehnEl9E0XEEgJv0vwtK_jqfuFvqdj4X-xZ7p1z7PRxJB_aJaE1RMlZoDA2Fk3vZBQAbqfM8IalKvO1scl5G9C98WTtiGRw2kX6vt7QyJDuW3Q/s739/images%20-%202022-11-08T041111.024.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="415" data-original-width="739" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY1HKqPCI0EzNS8SUhiM13R-x0F4thU8cU7_Iosw_15wnlwyALtQXczV18CmZSXb3ukhEcb01QVHsH5ehnEl9E0XEEgJv0vwtK_jqfuFvqdj4X-xZ7p1z7PRxJB_aJaE1RMlZoDA2Fk3vZBQAbqfM8IalKvO1scl5G9C98WTtiGRw2kX6vt7QyJDuW3Q/s320/images%20-%202022-11-08T041111.024.jpeg" width="320" /></a></div><br /><p><br /></p><p>ஏற்கனவே சொன்னது போல இந்திய அரசியல் சாசனம் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு கொடுக்க வழி வகுக்கவே இல்லை எனும் போது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுக்க முடியுமா என்கிற புதிய கேள்வி இப்போது எழுகிறது.</p><p>எனவே, இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு அரசியல் சாசன பெஞ்ச் முன் விவாதிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன்.</p><p>அரசியல் சாசன சட்ட விதிகளில் இல்லாத ஒரு விதியை நீதிபதிகள் உருவாக்க முடியுமா? 50% ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக ஒதுக்கீடு கொடுக்க முடியுமா? சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நீதியை மறுக்க முடியுமா? என்பன போன்ற ஆக்கப்பூர்வமான விவாதஙகளை இனி எதிர்பார்க்கலாம்.</p><p>1990 களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அமல் செய்யப்பட்ட உடனே நம்முடைய மிகப்பெரிய போராட்டம் வெற்றி பெற்று விட்டதாக கருதி ஓய்வெடுக்க தொடங்கி விட்டதாக ஒரு உணர்வு மேலிடுகிறது.</p><p>நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீடு எதற்காக தேவை என்பதே புரியவில்லை. EWS ஒதுக்கீடு காரணமாக பாதிக்கப்படும் மக்கள் யார் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. அரசியல் ரீதியாக தாங்கள் சார்ந்த கட்சியின் நிலைப்பாட்டை மட்டுமே ஆதரித்து வரும் மக்களாக அவர்கள் மாறிப் போயிருக்கும் நிலையில், நம்முடைய முதல் கட்ட நடவடிக்கை இட ஒதுக்கீடு குறித்த சரியான புரிதல்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டியதாக இருக்க வேண்டும். அதற்காக, சமூக நீதிக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.</p><p>நேற்றைய தினம் மாண்புமிகு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான திரு. ஸ்டாலின் அவர்கள் இந்த தீர்ப்பு குறித்து வெளியிட்ட அறிக்கை கூட அதை தான் சொல்லி இருக்கிறது. </p><p>சமூக ரீதியான விளக்க கூட்டஙகள், அரசியல் ரீதியான காய் நகர்த்தல்கள் ஆகியவற்றுடன் சட்ட ரீதியான போராட்டமும் ஒருங்கிணைந்து தான் கால காலமாக ஒடுக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கான நீதியை பெற்று தர முடியும்.</p><p>நேற்றைய தீர்ப்பை எதிர்த்து விரைவில் மேல் முறையீடு செய்யப்படும் என நம்புகிறேன். இதுவரை அரசியல் சாசன பெஞ்ச் அரசியல் சாசனத்திற்கு எதிராக எந்த நிலைப்பாடும் எடுத்தது இல்லை என்பதால் அங்கே இந்த சமூக நீதி போராட்டத்துக்கு சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறேன்.</p><p><br /></p><p><br /></p>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-29118027824074024542022-10-24T15:48:00.002+05:302022-10-24T15:49:26.645+05:30தீபாவளி கொண்டாட்டம்<p><span style="font-size: large;"><b>எ</b></span>ல்லா சிறுவர்களை போலவே எனது பால்யமும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் கலந்தே கழிந்ததால் பண்டிகைகளை பல நேரங்களில் நான் சிறப்பாக எல்லாம் கொண்டாடியது இல்லை.</p><p>எனினும், எல்லோரையும் போலவே எனக்கும் தீபாவளி பண்டிகை என்பது கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது தான்.</p><p>எந்த பண்டிகை கொண்டாடாமல் போனாலும், தீபாவளிக்கு எப்படியாவது புது துணி, பட்டாசு, பலகாரம் கிடைத்து விடும். வருஷம் தவறாமல் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது என்னளவில் தீபாவளி தான்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGzgEiJj5_t5fhmOG0u-7lhw5-r-5DFwNF9-T8w9Cg5ZHTRuoz7fG-8wRvmMYwVJvWXtczZw-86VlDqlKXtO8oC4m7gCO5q7otCK3TvObTqeg7t81Z1BYWRfDwnOFVPdbLMSoQMayTmOEvvhzvk7t1V41bsa1gPdZHyt9KnmNb7jOo406kVdcrDNLXag/s600/images%20-%202022-10-24T154421.270.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="338" data-original-width="600" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGzgEiJj5_t5fhmOG0u-7lhw5-r-5DFwNF9-T8w9Cg5ZHTRuoz7fG-8wRvmMYwVJvWXtczZw-86VlDqlKXtO8oC4m7gCO5q7otCK3TvObTqeg7t81Z1BYWRfDwnOFVPdbLMSoQMayTmOEvvhzvk7t1V41bsa1gPdZHyt9KnmNb7jOo406kVdcrDNLXag/s320/images%20-%202022-10-24T154421.270.jpeg" width="320" /></a></div><br /><p><br /></p><p>உறவுகள் என்று எல்லாம் அப்போது பெரிதாக யாரும் கண்டு கொள்வது இல்லை என்பதால், உறவினர் வீடு விஜயம், கூடி கொண்டாடுதல் போன்றவை எதுவும் இருந்தது இல்லை. ஆனாலும் எப்படியாவது தீபாவளிக்காக புது துணி கடைசி நேரத்திலாவது எடுத்து பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாடுவது தடைபட்டது இல்லை.</p><p>முக்கியமான விஷயம், தீபாவளிக்கு கண்டிப்பாக புதுப்படம் பார்த்தே ஆக வேண்டும் என்பது. தீபாவளி ரிலீஸ் படங்களை தீபாவளி அன்றே பார்க்கும் வழக்கம் அப்போது இருந்தது.</p><p>குணா, தளபதி இரண்டும் ஒரே நாளில் பேக் டூ பேக் பார்த்த பரவச நினைவுகள் எல்லாம் இப்போதும் பசுமையாக இருக்கிறது.</p><p>வளர்ந்து எப்படியோ தட்டு தடுமாறி படித்து முடித்து வேலைக்கு போக ஆரம்பித்து சுயமாக சம்பாதிக்க தொடங்கிய காலத்தில் மெல்ல மெல்ல இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் குறைந்து போய் விட்டது.</p><p>அதிகமாக புத்தகஙகள் படிக்க ஆரம்பித்ததும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். புத்தகம் வாசித்தல், சிந்தித்தல், சுயமரியாதை, பகுத்தறிவு போன்றவை இது போன்ற பண்டிகைகள் பற்றி நமக்குள்ளேயே கேள்விகளை எழுப்ப தொடங்கி விடும். அவற்றுக்கான சரியான, நம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கங்கள் கிடைக்கும் வரையும் அந்த கேள்விகள் உறுத்திக் கொண்டே தான் இருக்கும்.</p><p>அந்த கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்காததாலோ என்னவோ மெல்ல மெல்ல தீபாவளி பண்டிகை மீதான ஆர்வம் எனக்கு குறைய தொடங்கி விட்டது.</p><p>அப்படியான கேள்விகள் நமக்கு அமையும் ஆசிரியரை பொறுத்தும் அமையலாம். </p><p>என் பள்ளிக் காலங்களில் தீபாவளி பண்டிகையின் வரலாறு குறித்து என் ஆசிரியர்களில் ஒருவர் சுருக்கமாக சொன்னது இங்கே பலரும் விளக்கமாக இப்போது பல நண்பர்கள் இணையத்தில் விரிவாக எழுதுவதை பார்க்கையில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.</p><p>தீபாவளி பண்டிகை வட மாநிலங்களில் சந்தோஷமான பண்டிகையாகவும், தமிழ் நாட்டில் முன்னோர்/நீத்தோர் வழிபாடாகவும் கொண்டாடப்படும் வித்தியாசம் எதனால்? என என் சக மாணவர் ஒருவர் அப்போது கேள்வி எழுப்பினார்.</p><p>இது குறித்து எனது ஆசிரியர் சொன்ன காரணங்களில் ஒன்று.. "நரகாசுரன் என சொல்லப்படும் அசுரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்பவர் தென்னாட்டு கடைநிலை மக்கள் என்பதை போன்ற புனைவுகள் தான் புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiis9xcfWca214bsjCYN7E3btqDwPJ5O7ZXfwBC1Tbf2asjpxrctagMvXF-eFHDG2d1cWCTUM3z6ScuqiHTA_WCtTDYPoI9OQQ9vesiUS-lB1Y4UXBlVnkpl6RvDeGw0VQ2ARNyNfjJToPsZxI4lNXy3Lkc6LYSz_bZUvCeoL6fWB3MeRT2dRCp-xyV-A/s615/images%20-%202022-10-24T154735.020.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="350" data-original-width="615" height="182" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiis9xcfWca214bsjCYN7E3btqDwPJ5O7ZXfwBC1Tbf2asjpxrctagMvXF-eFHDG2d1cWCTUM3z6ScuqiHTA_WCtTDYPoI9OQQ9vesiUS-lB1Y4UXBlVnkpl6RvDeGw0VQ2ARNyNfjJToPsZxI4lNXy3Lkc6LYSz_bZUvCeoL6fWB3MeRT2dRCp-xyV-A/s320/images%20-%202022-10-24T154735.020.jpeg" width="320" /></a></div><br /><p><br /></p><p>இறைவனின் பிரியத்துக்குரிய உயர் வகுப்பு தேவர்கள் யாகம் செய்வதற்கு நரகாசுரன் இடையூறாக இருப்பதாக கிருஷ்ணரிடம் தேவர்கள் புகார் சொல்ல அவர்களுக்காக நரகாசுரனை பகவான் கிருஷ்ணன் வெற்றி கொள்கிறார். அந்த வெற்றியை கொண்டாடும் பண்டிகையாக வட மாநில மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.</p><p>அசுரர்கள் என குறிப்பிடப்படும் மக்களாகிய நாம், தோல்வி உற்ற காரணத்தால் நீத்தார் வழிபாடாக முன்னோர் வழிபாடாக இந்த நாளை கொண்டாடுகிறோம். அதனால் தான் தீபாவளி அன்று உச்சந்தலையில் நல்லெண்ணெய் வைத்து குளிப்பது (பெல குளி போல), முன்னோருக்கு படையல் வைப்பது போன்ற சடஙகுகள் நாம் செய்கிறோம். காரணம் இது நம் முன்னோர்கள் இழந்த நாள். அதனால் இதில் நாம் மகிழ்ச்சியாக கொண்டாட எதுவும் இல்லை" என சொல்வார் ஆசிரியர்.</p><p>இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கூட இது என் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் சென்று தங்கிக் கொண்டது. </p><p>எனது ஆசிரியர் அப்போத சொண்ணதைப் போன்ற கருத்துக்களைக் கொண்ட பல பதிவுகள் இங்கே சமீப காலமாக இணையத்தில் காணக் கிடைக்கிறது. </p><p>நான் ஏற்கனவே சொன்னதை போல, சம்பாதிக்க தொடங்கிய பிறகான பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றின் பின்னால் ஓடிக் கொண்டு இருக்கையில் கொண்டாட்டங்கள் குறைந்து போக தொடங்கியதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. </p><p>எந்த குழப்பமும் இல்லாத பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாட எந்த தயக்கமும் வந்தது இல்லை. ஆனால், விடை தெரியாத கேள்விகள் வேறு உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டு இருந்ததால் தீபாவளிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டேன்.</p><p>சில வருடங்கள் இப்படி போக, சிவகாசி பட்டாசு ஆலை விபத்து ஒன்று 2000 களின் துவக்கத்தில் நிகழ்ந்து பல குழந்தை தொழிலாளர்கள் உயிரிழந்த செய்திக்கு பின் பட்டாசு வாங்குவது குறைந்து, பண்டிகை ஆர்வமே இல்லாத போது புது துணி எதுக்கு என அதுவும் நின்று, நாம் தோற்ற நிகழ்வுக்கு வாழ்த்து எதற்கு என வாழ்த்து அட்டை அனுப்புவதற்கும் மனமின்றி நிறுத்தி.. சில ஆண்டுகள் இப்படியே கழிந்தது.</p><p>ஆனால், வாழ்க்கை ஒரு வட்டம் ஆயிற்றே.</p><p>மீண்டும் குடும்பம், புதிய உறவுகள், சம்பாத்தியம், விட்டு போன உறவுகள் என எல்லாம் சேர சேர.. நாமும் ஊருடன் சேர்ந்து வாழ தயார் ஆகி தீபாவளி கொண்டாடும், புது துணி எடுக்கும், குழந்தைக்காக பட்டாசு வாங்கும், இனி பிரிந்து போய் விடாமல் தக்கவைத்து கொள்வதற்காக தேடி தேடி போய் உறவுகளுடன் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒரு பெரும் நிகழ்வாக தீபாவளி என் வாழ்வில் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது.</p><p>வாழ்க்கையில் நமது கொள்கைகளை விடவும் மேலானதாக ஆகி விடுகிறது குடும்பத்திற்கான சில சடஙகுகள்.</p><p>அப்படி ஒரு சடங்காக, சம்பிரதாயமான நிகழ்வாக, இன்றைக்கும் கழிந்து போய் கொண்டு இருக்கிறது இந்த தீபாவளி. </p><p>இனி என்றைக்கும்.. </p><p><br /></p>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-8021936542563057622022-08-22T14:38:00.002+05:302022-08-22T14:38:36.139+05:30அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்<p><b>அ</b>ர்ச்சகர்கள் வழக்கில் இன்று திமுக அரசின் முடிவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து உள்ளது.</p><p>பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்கிற நிலையை மாற்றி, பிராமணர் அல்லாத ஹிந்துக்கள் எல்லோரும் முறையாக வேதாகமம் படித்தால் அர்ச்சகர் ஆகலாம் என்பதை திமுகவின் சட்டம் உறுதி செய்து உள்ளது.</p><p>அந்த சட்டத்தை எதிர்த்து பிராமணர்கள் தாக்கல் செய்த வழக்கில் தான் இன்றைக்கு திமுக அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பு ஆகி இருக்கிறது.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIzIDSb75AHZOfiLCnVq1eFBte11mqqKK_7ISiOG5a6atzp-ia-Dg6JtCxaD_WM7VA2zUQg7CSoi_Nzm7ngtDLNRNYflFMVcrgI9Y-N6U5SDcQwyM3gLyxykwIK-mbzAsxi4Hu8287TJLAMgjL7trZ8hpbWCTABh1m-FfWwMlt6d40yKH1mWHVg4hwXw/s320/images%20-%202022-08-22T143600.028.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="214" data-original-width="320" height="214" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIzIDSb75AHZOfiLCnVq1eFBte11mqqKK_7ISiOG5a6atzp-ia-Dg6JtCxaD_WM7VA2zUQg7CSoi_Nzm7ngtDLNRNYflFMVcrgI9Y-N6U5SDcQwyM3gLyxykwIK-mbzAsxi4Hu8287TJLAMgjL7trZ8hpbWCTABh1m-FfWwMlt6d40yKH1mWHVg4hwXw/s1600/images%20-%202022-08-22T143600.028.jpeg" width="320" /></a></div><br /><p><br /></p><p>இந்துக்களாய் ஒன்றிணைவோம் என தேர்தலுக்காக மட்டும் பேசும் பாஜக போல அல்லாமல், உண்மையிலேயே இந்துக்களாக ஒன்றிணைத்து உள்ளது திமுக.</p><p>பிராமணர்கள், பிராமணர் அல்லாதோர் என ஹிந்துக்களை இரண்டாக பிரித்து வைத்து பாகுபாடு பார்த்து பதவி கொடுத்த நிலையை மாற்றி எல்லா ஹிந்துக்களும் ஹிந்துக்களே எனும் ஒற்றை புள்ளியில் கொண்டு வந்து எல்லோரையும் சமமாக பாவித்து பதவி கொடுக்க திமுகவின் புதிய சட்டம் வழி செய்கிறது.</p><p>ஹிந்துவாக இருந்தும் இறைவனுக்கு சேவை செய்ய முடியவில்லையே என வருந்திய பிராமணர் அல்லாத ஹிந்துக்களுக்கு அந்த வாய்ப்பை அந்த உரிமையை இன்றைக்கு பெற்றுக் கொடுத்து இருக்கிறது திமுக.</p><p>இந்துக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டிய பாராட்டத்தக்க செயல் இது என்பதில் சந்தேகம் இல்லை.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUF3uX9BM2YFmupKhegOdeoQGbsYVaN6pRxeVO1UoXbhAKYToP4q2MJ2DyEJbnQMpdWvti_T8PcJIaP2JayBGPdccAw8M6Ay4yHM4BdMoYWfWb1kB1ZdiaEiytJpKlPVH-IOtJObbLI4GAnkDxTOOqtfYTe9y5CuFJB6E3vtFU9B8ZkTicxMw-7ZGUvA/s640/images%20-%202022-08-22T143612.235.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="480" data-original-width="640" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUF3uX9BM2YFmupKhegOdeoQGbsYVaN6pRxeVO1UoXbhAKYToP4q2MJ2DyEJbnQMpdWvti_T8PcJIaP2JayBGPdccAw8M6Ay4yHM4BdMoYWfWb1kB1ZdiaEiytJpKlPVH-IOtJObbLI4GAnkDxTOOqtfYTe9y5CuFJB6E3vtFU9B8ZkTicxMw-7ZGUvA/s320/images%20-%202022-08-22T143612.235.jpeg" width="320" /></a></div><br /><p><br /></p><p>நமக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அப்படி நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஏற்படும் உரிமை பிரச்சனைகளில் கூட திமுக பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக நின்று அவர்களுக்கான உரிமை கிடைக்க எப்போதும் போராடும் என்பதற்கு இன்றைய தீர்ப்பு இன்னும் ஒரு சான்று</p><p>ஒடுக்கப்பட்டவர்களின் குரல் திமுக 🙏🙏</p>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-42113487518177774112022-08-14T06:33:00.001+05:302022-08-14T06:33:14.929+05:30வீட்டு வாடகைக்கு GST - விளக்கங்கள்<p>நடந்து முடிந்த GST கவுண்சில் கூட்டத்தில் நிறுவனஙகள் வாடகைக்கு எடுக்கும் வீடுகளுக்கும் இனி GST வரி செலுத்த வேண்டும் என முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>நிறுவனஙகள் எதற்காக வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும்?</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7Jtc5h28PMsUUsjJm66y7wj7grIbwiJYkgt1S2vPyBJEFOl9KeJywQLtobvkuZKuXJZM9lnwl53qgrWMJo1fgw_aPBV_cgfaZrblIjDTN4szAoFLeIo4SETzTeAgjdtpDV37MqeaEAa2aceGJjzjRVezrrBsEEFGpTSIGxuPUCURgqTLYnkV6Pob0AQ/s460/images%20-%202022-08-14T063227.012.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="258" data-original-width="460" height="179" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7Jtc5h28PMsUUsjJm66y7wj7grIbwiJYkgt1S2vPyBJEFOl9KeJywQLtobvkuZKuXJZM9lnwl53qgrWMJo1fgw_aPBV_cgfaZrblIjDTN4szAoFLeIo4SETzTeAgjdtpDV37MqeaEAa2aceGJjzjRVezrrBsEEFGpTSIGxuPUCURgqTLYnkV6Pob0AQ/s320/images%20-%202022-08-14T063227.012.jpeg" width="320" /></a></div><br /><p><br /></p><p>உதாரணமாக அரியலூர் பெரம்பலூர் போன்ற பகுதிகளில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த தொழிற்சாலைக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள், அதிகாரிகள், பொருட்கள் வழங்கும் நிறுவனததினர், சேவை வழங்கும் நிறுவனத்தினர், புதிய ஆர்டர்கள் வாங்க வருவோர் என பலரும் தொழில் நிமித்தமாக வந்து செல்வார்கள்.</p><p>திருச்சியில் தங்கி அங்கே வந்து செல்ல சிரமப்படுவதை தவிர்க்க தொழிற்சாலை நிர்வாகம் அந்த ஊரிலேயே சகல வசதிகளும் கொண்ட ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும். </p><p>தொழில் நிமித்தமாக தொழிற்சாலைக்கு வருவோர் ஒன்றிரண்டு நாட்கள் தங்கி செல்ல அந்த வீடு பயன்படும். </p><p>அந்த தொழிற்சாலையின் தலைமை அலுவலகம் டெல்லியில் இருக்கிறது என வைத்து கொள்வோம். அங்கிருந்து இதே நிறுவனத்தின் அதிகாரிகள் தொழிற்சாலையில் மீட்டிங், ரிவியூ போன்றவற்றுக்கு வரும் போதும் அந்த வீட்டை பயன் படுத்தி கொள்வார்கள்.</p><p>இது ஒரு உதாரணமாக சொன்னது தான்.</p><p>டெல்லி மும்பை சென்னை பெங்களூரு ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் தலைமை அலுவலகம் கொண்ட நிறுவனஙகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தங்கள் நிறுவன ஊழியர்கள் அதிகாரிகள் தங்க அங்கே பல வீடுகளை வாடகைக்கு எடுத்து வைக்கும்.</p><p>ஒரு சில பெரிய நிறுவனஙகள் தங்கள் நிறுவன இயக்குநர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் போன்றவர்களுக்கு தங்குமிடம் கொடுப்பது வழக்கம். கம்பெனி செலவில் வீட்டு வசதி கொடுப்பது.. குறிப்பாக அந்த அதிகாரிகள் வெளியூர் ஆட்களாக இருந்து இந்த வேலைக்காக இந்த ஊருக்கு வரவேண்டும் என்று இருந்தால்.. அவர்களை போன்றவர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது நிறுவனஙகள் வழக்கமாக செய்வது தான்.</p><p>இப்படியாக தொழில் நிமித்தமாக கெஸ்ட் ஹவுஸ், transit accommodation, employee accommodation என பல காரணங்களுக்காக வீடு வாடகைக்கு எடுப்பது உண்டு.</p><p>அவ்வாறு எடுக்கப்படும் வாடகை வீடுகளுக்கு இனி GST வரி உண்டு என்பது தான் GST கவுண்சில் எடுத்து இருக்கும் முடிவு.</p><p>ஒரு நிறுவனம் தனது தொழில் சார்ந்து வாடகைக்கு எடுக்கும் அலுவலகம், தொழிற்சாலை, கடை, வணிக வளாகம் போன்றவற்றுக்கு எப்படி வரி கட்டுகிறதோ அதே போல தொழில் நிமித்தமாக எடுக்கும் வீடுகளுக்கும் வரி கட்ட வேண்டும் என்பது சரியான முடிவு தான்.</p><p>இந்த வரியை கூட வீட்டு உரிமையாளர் செலுத்த தேவை இல்லை. </p><p>வாடகைக்கு வீடு எடுக்கும் நிறுவனமே Reverse Charge Mechanism (RCM) முறையில் இந்த GST வரியை கட்டி விடும்.</p><p>அப்படி கட்டிய வரியை Input Tax Credit ஆக மீண்டும் அந்த நிறுவனங்களே எடுத்துக் கொள்ளும். தொழில் நிமித்தமாக எடுத்த வீடு என்பதால் ITC கு தடை இல்லை.</p><p>இதனால் அரசுக்கு ஒரு பைசா வருமானமும் இல்லை. நிறுவனஙகளுக்கு ஒரு பைசா நஷ்டமும் இல்லை.</p><p>யார் யாருக்கு வாடகையாக எவ்வளவு தொகை ஒரு ஆண்டில் கொடுக்கப் படுகிறது. அப்படி வாடகையாக வாங்கும் வருவாயை வீட்டு உரிமையாளர் தனது வருமான வரி விவரஙகளில் முறையாக காட்டி இருக்கிறாரா போன்ற தகவல்களை ஆராய இந்த புதிய நடைமுறை உதவும்.</p><p>இதன் மூலம் இது வரை இருந்த வருமான வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்படும்.</p><p>இந்த செய்தியின் உண்மை தன்மை புரியாமல் இனி வாடகை வீடுகளுக்கு எல்லாம் GST வரி விதிக்கப்பட்டு உள்ளது என ஒரு தவறான செய்தி இணைய தளங்களில் சுற்றிக் கொண்டு இருக்கிறது.</p><p>தனி நபர் தனது குடும்பத்துக்காக எடுக்கும் வாடகை வீட்டுக்கு GST கிடையாது.</p><p>நிறுவனஙகள் தங்கள் தொழில் தேவைக்காக எடுக்கும் வாடகை வீட்டுக்கு மட்டுமே GST வரி விதிக்கப்படும்.</p><p>அந்த வரியை நிறுவனஙகள் செலுத்தி திரும்ப எடுத்துக் கொள்ளும்.</p><p>யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லாத வெறும் declaration process தான் இது.</p><p>நன்றி</p><p><br /></p><p><br /></p><p><br /></p>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-66057499037962378782022-06-27T21:18:00.005+05:302022-06-27T21:29:56.074+05:30வழிபாட்டு தலங்களுக்கான மின் கட்டண சர்ச்சை<p><b><span style="font-size: large;">த</span></b>மிழ் நாட்டில் வழிபாட்டு தலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது என்று ஒரு பொய்யான புரளி பரவலாக சுற்றலில் விடப்பட்டுக் கொண்டு இருக்கிறது.</p><p>அதாவது இந்து கோவில்களுக்கு ₹8.00/- என்றும் கிறித்தவ சர்ச் மற்றும் இஸ்லாமிய மசூதிகளுக்கு ₹2.85/- என்றும் ஒரு யூனிட்டுக்கு மின் கட்டணம் வசூலிக்க படுகிறது எனவும் இது இந்து மதத்துக்கு காட்டப்படும் பாகுபாடு எனவும் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.</p><p>இது குறித்து தமிழக மின்சார துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள் விரிவாக விளக்கம் அளித்த பிறகும் வதந்தி நின்ற பாடில்லை.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyQw8FKhd2FL0wKrW2EjlDzg-7hd5HcGxVn-qLNXqM5TLpfwsvk4tMwF6xAcwNBkpt_46XLVGYZP8fIBlRDvhr72oa1n8NY6_V9n-AeLqdORaSADiFWzXk-bBRYBopESwx6kJy8zLUL7jtbTIjO4hCF7K0DV6E8PRg6Ll2U8bFKS4EMfVnXe0HFF9zRQ/s600/images%20-%202022-06-27T211609.811.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="400" data-original-width="600" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyQw8FKhd2FL0wKrW2EjlDzg-7hd5HcGxVn-qLNXqM5TLpfwsvk4tMwF6xAcwNBkpt_46XLVGYZP8fIBlRDvhr72oa1n8NY6_V9n-AeLqdORaSADiFWzXk-bBRYBopESwx6kJy8zLUL7jtbTIjO4hCF7K0DV6E8PRg6Ll2U8bFKS4EMfVnXe0HFF9zRQ/s320/images%20-%202022-06-27T211609.811.jpeg" width="320" /></a></div><p>உண்மையில் என்ன தான் பிரச்சனை என பார்ப்போம்.</p><p>தமிழ் நாட்டை பொறுத்த வரை மின்சார கட்டணம் விதிக்க வழிபாட்டு தலங்கள் நான்கு வகையாக வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.</p><p>1. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோவில்கள். அதாவது அந்த கோவில்களின் அனைத்து நிர்வாகமும் சொத்துக்களும் அரசுக்கு சொந்தமானது. அதை நிர்வாகம் செய்வதும் அரசு தான். எனவே அது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் என வகைப்படுத்த பட்டு உள்ளது.</p><p>2. இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பில் உள்ள இந்து கோவில்கள். கோவிலின் அறங்காவலர் குழு கோவில் நிர்வாகத்தையும் சொத்துக்களையும் நிர்வகிக்கும். இந்து சமய அறநிலைய துறை அந்த ஆலயத்தின் வருவாயை, கணக்கு வழக்குகளை கண்காணிக்கும். எனவே இது இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பில் உள்ள கோவில் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.</p><p>3. கிறித்தவ மத சர்ச்சுகள்</p><p>4. இசுலாம் மத மசூதிகள்</p><p>இந்த நான்கு வகை வழிபாட்டு தலங்களும் மின்சார கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு <b>₹2.85/-</b> செலுத்தினால் போதும். இது முதல் 120 யூனிட் வரையான கட்டணம்.</p><p>120 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உபயோகித்தால் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு <b>₹5.75/- </b>செலுத்த வேண்டி இருக்கும்.</p><p><u>இந்த கட்டண விகிதத்தில் எந்த பாகுபாடும் இல்லை.</u></p><p>இந்து கோவில்கள், கிறித்தவ சர்ச்சுகள், இசுலாம் மசூதிகள் என அனைத்தும் ஒரே கட்டண விகிதம் தான் நிர்ணயம் செய்யப்பட்டு செலுத்தி வருகின்றன. இதில் யாருக்கும் உயர்வு தாழ்வு சலுகை எதுவும் இல்லாமல் ஒரே மாதிரியான மின் கட்டணம் தான் வசூலிக்கப்பட்டு வருகின்றன.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7LDHxhAeAsb4rG3exde5o_w_oN9aHahZd8KDQE6IeDuTh5BjNBOk2vjTcXL1bRxFOnK5S2oVSuazGTu7BiWizC_i9_DRC4jTguxN-w3ZLDmMX-jqqz_WMIxcRPsPJ0cTBPXYAV9gEx9PaLDhwwHadAPtki_AFvU-Pbtv3mzWQndZqRd3BvRC5jFOePg/s1619/IMG_20220626_075750.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1619" data-original-width="1242" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7LDHxhAeAsb4rG3exde5o_w_oN9aHahZd8KDQE6IeDuTh5BjNBOk2vjTcXL1bRxFOnK5S2oVSuazGTu7BiWizC_i9_DRC4jTguxN-w3ZLDmMX-jqqz_WMIxcRPsPJ0cTBPXYAV9gEx9PaLDhwwHadAPtki_AFvU-Pbtv3mzWQndZqRd3BvRC5jFOePg/s320/IMG_20220626_075750.jpg" width="245" /></a></div><p>இவை தவிர, இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத, தனியாரால் நடத்தப்படும் வணிக ரீதியான கோவில்கள், வழிபாட்டு தலங்கள் என்கிற வரையறைக்குள் வராது.</p><p>இவை தனியாரால் நடத்தப்பட்டு, அதன் வருவாய் எல்லாம் தனியாராலேயே நிர்வகிக்கப்பட்டு வருவதால், வழிபாடு என்பதை ஒரு பகுதி ஆக்கி பெரும்பாலான பகுதி வணிக நோக்கில் அமைக்கப்பட்டு, வியாபார ரீதியிலான வர்த்தகம் அதிகமாக நடைபெறும் இடங்கள் எனில் அவை வணிக இடங்கள் என வகைப்படுத்தப்பட்டு வணிக ரீதியிலான மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><p>அதாவது, முதல் 100 யூனிட்டுகளுக்கு ₹5.00/- அதற்கு மேல் என்றால் யூனிட்டுக்கு ₹8.05 வசூலிக்கப்படும்.</p><p>உதாரணமாக வழிபாட்டுக்கு என ஒரு சிறு இடம் ஒதுக்கி, பெரும்பாலான இடங்களில் வணிக வளாகம் நடத்தி வருவாய் பார்க்கும் இடங்கள். அவற்றில் பெரும்பாலும் வணிகமே நடப்பதாலும், தனியாறால் நடத்தப்பட்டு வருவதாலும், இந்து சமய அறநிலையத் துறையின் கண்காணிப்பு இல்லாமல் அங்கே வசூல் ஆகும் அனைத்து வருவாயும் தனியார் நிறுவனமே நிர்வகிப்பதாலும், அவை போன்ற இடங்களில் வழிபாட்டு தலங்கள் என்று அல்லாமல் வணிக இடங்கள் என்று வகைப்படுத்தி வணிக ரீதியிலான மின்சாரக் கட்டணம் வசூலிக்க பட்டு வருகிறது.</p><p>மேலே சொன்னது எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய ஒரு உதாரணத்துக்கு சொல்லப்பட்டவை. இவை போல பல இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அதாவது இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பில் இல்லாமல் தனியாரே நிர்வகித்து வருவாயை அவர்களே வைத்து கொள்ளும் இடங்கள்.</p><p>எனவே நாம் இந்த முக்கியமான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.</p><p>வழிபாட்டு தலங்கள் என்கிற வரையறைக்குள் வரும் அனைத்து இடங்களுக்கும் எந்த பாரபட்சமும் இன்றி ஒரே மாதிரியான கட்டணம் தான் வசூலிக்கப் படுகிறது.</p><p>இப்போதைய சர்ச்சை என்னவென்றால், வணிக ரீதியிலான மின் கட்டணம் வசூலிக்கப்படும் தனியார் இடங்களுக்கும் இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பில் இருக்கும் கோவில்களுக்கு வசூலிப்பது போல குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது.</p><p>இதில் இன்னும் சிலர் மேலும் ஒரு படி மேலே போய், அப்படி குறைந்த கட்டணத்தில் வசூலிக்க முடியாது என்றால், சர்ச் & மசூதிகளுக்கு்ம் வணிக ரீதியிலான அதிக மின்சார கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது.</p><p>அதாவது எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என வழங்கும் ஒரு சொலவடை போல, மத வேற்றுமை மனதுக்குள் வன்மமாக உருவெடுத்த மக்களால் மட்டுமே இப்படி எல்லாம் குரூரமாக யோசிக்க முடியும்.</p><p>தமிழக அரசை பொறுத்த வரை தனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. வழிபாட்டு தலங்கள் எல்லாவற்றையும் ஒரே கணக்கீட்டில் கொண்டு வந்து குறைந்த கட்டணமும், வணிக ரீதியிலான இடங்களுக்கு அதிக கட்டணமும் என்பது தான் அரசின் நிலைப்பாடு.</p><p>இந்த புரிதல் இல்லாமல் வெறும் வதந்திகளை புரளிகளை மட்டுமே நம்பி, தமிழ்நாடு அரசு இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து விட்டதாக கருதி கிடக்கும் மிகச் சிலரின் அறியாமையை நீக்கி உண்மை என்ன என்பதை விளக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.</p><p>இது தொடர்பான விரிவான தகவல்களை அவ்வப்போது விளம்பரமாக வெளியிடுவது, கட்சி சார்பாக மக்களுக்கு விளக்குவது போன்றவை அரசின் மீதான தவறான புரிதல்களை குறைக்க உதவும் </p><p>பொய்யான தகவல்களை வைத்து மக்களிடம் குழப்பத்தையும், மத ரீதியான வேற்றுமையையும் பரப்பி வருவோர் மீது தயவு தாட்ஷனியம் இல்லாமல் கடுமையாக நடவடிக்கை எடுப்பது, வேறு யாரும் அத்தகைய செயலில் ஈடுபடாமல் தடுக்க உதவும்.</p><p>மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டியது அரசுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் மக்களிடம் பரவும் பொய்யான தகவல்களை தடுத்து விளக்கம் அளித்து புரிய வைப்பதிலும் வேண்டும்.</p><p> </p>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-90548580172561395652022-06-27T17:16:00.002+05:302022-06-27T21:33:13.467+05:30சாகித்ய அகாடமி விருதும் மாலனும்<p>எழுத்தாளர் மாலன் அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான "சாகித்ய அகாதமி" விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு சின்னதாக ஒரு சர்ச்சையை எழுப்பி இருக்கிறது</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWmvOhjuNSnGTwngkZvnHl4jOEhNAKeFAN1LDoZ47vlwJQSHjJXjjxNm2UHX1Dx_2_wfyWVDMaFg5PzqGWt-IBbQTCl3mq7v0dIS9ywY0WttgDLCM5ioG1yRJ2ehvGCNAVUFHBjiEk6SnOk1XyuIEHVeuf1qWKbRdcRGQ8GHxzj5WSjsON5NH-6zVMgA/s524/IMG_20220625_071550.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="524" data-original-width="504" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWmvOhjuNSnGTwngkZvnHl4jOEhNAKeFAN1LDoZ47vlwJQSHjJXjjxNm2UHX1Dx_2_wfyWVDMaFg5PzqGWt-IBbQTCl3mq7v0dIS9ywY0WttgDLCM5ioG1yRJ2ehvGCNAVUFHBjiEk6SnOk1XyuIEHVeuf1qWKbRdcRGQ8GHxzj5WSjsON5NH-6zVMgA/s320/IMG_20220625_071550.jpg" width="308" /></a></div><br /><p><br /></p><p>எழுத்தாளர் சைரஸ் மிஸ்ட்ரி எழுதிய 'Chronicle of a Corpse Bearer' என்னும் ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்' நூலுக்காக திரு மாலன் அவர்களுக்கு இந்த சாகித்ய அகாதமி விருது "மொழி பெயர்ப்பு நூல்" பிரிவில் அறிவிக்கப்பட்டது.</p><p>இந்திய அரசால் எழுத்தாளர்கள், நூல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக சாகித்திய அகாடமி விருது கருதப்பட்டு வருகிறது. 1955 ஆம் ஆண்டில் இருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.</p><p>ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த புத்தகங்களுக்கு ஆண்டுதோறும் சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. </p><p>அதேபோல் மொழி பெயர்ப்பு நூல்களுக்கும் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகின்றன. </p><p>இந்த விருதை பெறுபவர்களுக்கு ரூ.50,000 ரொக்கம், சால்வை செப்பு பட்டயம் ஆகியவை வழங்கப்படும்.</p><p>இந்த மொழி பெயர்ப்பு பிரிவில் தான் திரு. மாலன் அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>திரு. மாலன் அவர்கள் மிக பிரபலமான எழுத்தாளர். குமுதம், குங்குமம், புதிய தலைமுறை, இந்தியா டுடே போன்ற பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தவர். </p><p>இவரது எழுத்துக்களுக்கு என்று ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது. இவரது சிறுகதைகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டு உள்ளது.</p><p>"வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்", 'நந்தலாலா", "தப்புக் கணக்கு" போன்ற நூல்களும், "மனம் எனும் வனம்" கவிதை தொகுப்பும் எல்லோரும் படித்து இருக்கலாம். இவை தவிர எழுத்தாளர் திரு லா.சா.ராமாமிர்தம் அவர்களை பற்றி எழுதிய "மனவெளிக் கலைஞன்" புத்தகம் மிக நெகிழ்ச்சியான ஒன்று.</p><p>மேலும் நிறைய புத்தகங்கள் எழுதிய சிறந்த எழுத்தாளர் அவர். அதில் சந்தேகம் இல்லை.</p><p>ஆனால் இந்த விருது சர்ச்சை ஆனதற்கு காரணம் அவர் தகுதி இல்லாதவர் என்று எல்லாம் அல்ல. அவர் தகுதியானவர் தான்.</p><p>சாகித்ய அகாதமி பொது ஆலோசனை குழுவில் தமிழ் நாடு சார்பாக திரு. மாலன் அவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.</p><p>அவர் ஆலோசனை குழு உறுப்பினராக இருக்கும் நிலையில் அவருக்கே விருது அறிவிக்கப்பட்டு உள்ளது அறத்தின் அடிப்படையில் சரியா என்பது தான் விவாதமே.</p><p>தார்மீக அடிப்படையில் திரு. மாலன் அவர்கள் இந்த விருதை தவிர்த்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது அவரது எழுத்தின் வலிமையை குறைத்து மதிப்பிட்டு, அவர் குழு உறுப்பினர் என்பதால் கிடைத்த விருது என சிறுமைப் பட்டு விடக் கூடும். </p><p>பாரம்பரியம் மிக்க சாகித்ய அகாதமி விருது தேர்வு முறையையும் அது இனி சந்தேகத்துக்கு உள்ளாக்கி விடக்கூடும்.</p><p>பொதுவாகவே, அங்கீகாரம் அளிக்கும் இடத்தில் இருப்பவர்கள் அவர்களுக்காக அந்த அங்கீகாரத்தை எடுத்து கொள்வதை சரியானது என சொல்ல மாட்டார்கள்.</p><p>அப்படியான ஒரு விமர்சனத்தில் இருந்து திரு மாலன் அவர்கள் வெளி வர இன்னமும் காலம் இருக்கிறது</p><p><br /></p>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-61562298195805520272022-06-09T03:44:00.003+05:302022-06-09T03:44:43.892+05:30திருமணம் என்பது யாதெனின்<p>திருமணம் </p><p>இந்த ஒற்றை சொல் தான் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் உந்து சக்தியாக உள்ளது.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLcgTPwXVw_IWfZwZpxeNDVo_uAEb6mi990jFvnbt-C8e1GROtFxTxgCwi1VKW8xz2o-Aia7Ia2c3FvUMXNbxwcSrwg7XDOyvt0VoHFwEbug9sD4OURfScJ3mgCIkFOQn8r1iH8rAwGnVGsd7Xse4n9jfevqbt1PKF3k6eZdkYzMNNgkV7ABrNbm9tpw/s540/images%20-%202022-06-09T034300.692.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="405" data-original-width="540" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLcgTPwXVw_IWfZwZpxeNDVo_uAEb6mi990jFvnbt-C8e1GROtFxTxgCwi1VKW8xz2o-Aia7Ia2c3FvUMXNbxwcSrwg7XDOyvt0VoHFwEbug9sD4OURfScJ3mgCIkFOQn8r1iH8rAwGnVGsd7Xse4n9jfevqbt1PKF3k6eZdkYzMNNgkV7ABrNbm9tpw/s320/images%20-%202022-06-09T034300.692.jpeg" width="320" /></a></div><br /><p><br /></p><p>பெற்றோர், தங்கள் மகளுக்கு / மகனுக்கு நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டும் என போராடுகிறார்கள். அதற்காக நல்ல கல்வி, கௌரவமான வேலை அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என மெனக்கெடுகிறார்கள். பிள்ளைகளின் எதிர்காலம், அவர்கள் மண வாழ்க்கை, அவர்களை நம்பி வருபவர்களை நல்ல படியாக பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வருமானம் கிடைப்பதற்கான முயற்சிகள் என போகிறது பட்டியல். இது தவிர திருமணச் செலவுகள், நகைகள் என அதற்கான மெனக்கெடல் எல்லாம் தனி.</p><p>இவற்றை சமாளிக்க பெற்றோர் பெரிய வேலைகளுக்கு முயற்சிப்பது, அதிக வருமானம் உள்ள வேலைகளுக்கு மாறுவது, இருக்கும் வேலையை விட்டு பிசினஸ் செய்வது, இருக்கும் வேலையில் கிடைக்கும் வருவாய் போதாமல் பார்ட் டைம் வேலைக்கு செல்வது என எல்லா வகையிலும் முயற்சி செய்கிறார்கள்.</p><p>எல்லாம் பிள்ளைகளின் எதிர்காலம் என்கிற ஒற்றை புள்ளியை நோக்கி. அந்த எதிர்காலம் எனப்படுவது பிள்ளைகளின் கல்வி வேலை வாய்ப்பு என சுருக்கிக் கொண்டாலும், அதன் நீட்சி அவர்களுக்கு நல்ல ஒரு இடத்தில் நல்லபடியாக திருமணம் செய்து கொடுத்து அந்த திருமண வாழ்வை தானாகவே சமாளிக்கும் நிலைக்கு பிள்ளைகளை தயார் படுத்துதல் என்கிற புள்ளியில் கொண்டு போய் தான் நிறுத்துகிறது.</p><p>சுருக்கமாக சொன்னால் இந்திய வாழ்வியலில் திருமணம் என்பதை மையப் புள்ளியாக வைத்தே பெரும்பாலான குடும்பங்கள் இயங்கி வருவதாக பார்க்கலாம்.</p><p>தனது திருமண வாழ்வு, அதன் பொறுப்புகள் கடமைகள், பிள்ளைகளின் வாழ்வு, அவர்களது திருமணம், இதற்கான பொருளாதார தேவை, அதை ஈடு செய்யும் வேலை.. என எல்லாமே ஏதோ ஒரு வகையில் திருமணம் என்கிற புள்ளியை சுற்றியே இயங்கி வருவதாக ஒரு உணர்வு.</p><p>இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருமணம் என்பது என்ன?</p><p>ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அதிகாரப்பூர்வமாக இணைந்து தங்கள் வாழ்க்கையை இணைந்து முன்னெடுத்து செல்லும் ஒரு வைபோகம் என பொதுவாக சொல்லலாம்.</p><p>அது ஒரு ஆண் ஒரு பெண் இணைப்பு மட்டும் அல்ல, இரு வேறு குடும்பங்கள், அவர் தம் உறவுகள், சொந்தங்கள், பந்தங்கள் ஆகியவையும் இணைந்து கொள்ளும் வைபோகம் என்றும் விரிவாக சொல்லலாம்.</p><p>இதனாலேயே, தன் பிள்ளைகளுக்கு வரப்போகும் மணமகன்/மணமகள் பற்றி மட்டும் அல்லாமல் அவர்களது வேலை, குடும்பம், சொந்தம் பற்றி எல்லாம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டி உள்ளது.</p><p>இவை எல்லாம் கலாச்சார ரீதியான விஷயங்கள். </p><p>திருமணம் - இதை சட்ட ரீதியாக பார்த்தால் வேறு வகையான புரிதல்கள் வருகிறது.</p><p>சட்டத்தின் பார்வையில் பதினெட்டு வயது நிரம்பிய ஒரு ஆணும் பெண்ணும் பழகுவதற்கு, நட்பாக இருப்பதற்கு, காதலிப்பதற்கு எந்த தடையும் இல்லை. அவர்கள் ஒன்றாக பொது இடங்களுக்கு, கோவில், பூங்கா, திரையரங்கு என போய் வருவதற்கும் சட்டம் எந்த தடையும் சொல்வது இல்லை.</p><p>நீங்கள் ஏன் பழகுகிறீர்கள், காதலிக்கிறீர்கள் என்று சட்டம் கேள்வி கேட்பது இல்லை. அப்படி பழகுகிறவர்களை யாரேனும் தொந்தரவு செய்தால், அது குறித்து சம்பந்தப் பட்டவர்கள் புகார் அளித்தால், தொந்தரவு செய்பவர்களை தண்டிக்கவும் சட்டம் தயஙகுவது இல்லை.</p><p>பருவம் பூர்த்தி அடைந்த ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமானவரை திருமணம் செய்துகொள்ள சட்டம் தடை சொல்வது இல்லை. மேலே நாம் விரிவாக பார்த்த கலாச்சார ரீதியான எதிர்பார்ப்புகள், முன் நிபந்தனைகள் எதையும் சட்டம் எதிர்பார்ப்பது இல்லை. யாரும் யாரையும் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.</p><p>இன்னும் ஒரு படி மேலே போய், இப்போது ஒரு பாலின திருமணங்களைக் கூட சட்டம் அங்கீகரிக்க தொடங்கி உள்ளது.</p><p>ஆக சட்டத்தின் பார்வையில் திருமணம் என்பது வேறு. அது பொறுப்பு சம்பந்தப்பட்டது. அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியான பொறுப்பு சம்பந்தப்ப ட்டது.</p><p>ஒரு ஆண் அல்லது ஒரு பெண் தனது பாதுகாப்பு, எதிர்காலம், வருமானம், சொத்து (தனக்கு பாரம்பரியமாக கிடைத்த சொத்து / தான் உழைத்து சேர்த்து வைத்த சொத்து) ஆகியவற்றை தனக்கு பின் யார் பொறுப்பு எடுத்துக் கொள்வது எனதற்கான ஆவணப் பதிவாகவே திருமணம் பார்க்கப்படுகிறது.</p><p>திருமணத்துக்கு முன்னரோ பின்னரோ யார் யாருடன் பழகினாலும், உறவு கொண்டாலும் சட்டம் அது பற்றி கேள்வி கேட்பது இல்லை. சட்டத்தின் பார்வையில் அது தவறும் இல்லை. </p><p>ஆனால் அதிகாரப்பூர்வமாக ஒருவரை திருமணம் செய்து இவர் தான் இனி தனது பொறுப்பு, தனது பொருளாதார ரீதியான செயல்களுக்கு பொறுப்பு என்று அங்கீகரித்த பிறகு, இன்னொருவரை திருமணம் செய்ய சட்டம் அனுமதிக்காது. </p><p>திருமணம் செய்யாமல் பழகுவது, திருமணம் மீறிய உறவு, அவர்களுக்கு செலவு செய்வது போன்றவற்றை கூட சட்டம் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் ஒருவரை திருமணம் செய்த பின் இன்னொருவரை திருமணம் செய்வதை மட்டுமே தவறு என்கிறது. சுருக்கமாக ஒருவருக்கு அதிகாரப்பூர்வமாக ஒருவர் தான் பொறுப்பாக இருக்க முடியும். அவரை விவாக ரத்து செய்து விட்டு தான் இன்னொருவரை திருமணம் செய்து பொறுப்பாளர் ஆக்க முடியும்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWTSeQ5Qsb5WeXPGUl3loNXIFHEagJocDachTOr7CM6X1KyUB4Bh7-XnvsQ1JlkXYTVq54LoVb_2ZXCUQ7TQ_EB0zEu6M6XsoDvkPHXDR6TAlNLiHr4ks3kl98-ZcGfEWmFTdT4dpzTLsi9JCXQ_zMeb-jITk4VyoD2tr32WyURY8kXFiI277ut8xLjg/s615/images%20-%202022-06-09T034312.033.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="350" data-original-width="615" height="182" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWTSeQ5Qsb5WeXPGUl3loNXIFHEagJocDachTOr7CM6X1KyUB4Bh7-XnvsQ1JlkXYTVq54LoVb_2ZXCUQ7TQ_EB0zEu6M6XsoDvkPHXDR6TAlNLiHr4ks3kl98-ZcGfEWmFTdT4dpzTLsi9JCXQ_zMeb-jITk4VyoD2tr32WyURY8kXFiI277ut8xLjg/s320/images%20-%202022-06-09T034312.033.jpeg" width="320" /></a></div><br /><p><br /></p><p>சுருக்கமாக பார்த்தால் சொத்துக்கள், வருமானம் ஆகியவற்றுக்கான வாரிசு பொறுப்பு யார் என்பது மட்டுமே சட்ட ஆவணம் கவனிக்கும் ஒரே செயல். ஒருவரை திருமணம் மூலம் அங்கீகரித்து விட்டால் அது யார் எவர் என்ன என்று எல்லாம் ஆராயாமல் சட்டமும் அவர்களை தான் பொறுப்பான நபராக பார்க்கும். அவரை சட்டப்பூர்வமாக விவாக ரத்து செய்த பின் இன்னொருவரை திருமணம் செய்தால் அதை ஏற்றுக் கொள்ளும். விவாகரத்து செய்யாமல் இன்னொரு திருமணம் செய்தால் அதை சட்டம் ஏற்காது. அதாவது இரண்டு பொறுப்பாளர்களை ஏற்காது. அதிலும் விதி விலக்கு உண்டு. முதல் பொறுப்பாளர் சம்மதத்துடன் இரண்டாம் பொறுப்பாளராக ஒருவரை அங்கீகரிக்கும்.</p><p>முதல் பொறுப்பாளர் இருக்கும் போது, வேறு ஒருவருடன் பழகினாலும் வாழ்ந்தாலும் சட்டப்படி முதல் பொறுப்பாளர் தான் சட்டபூர்வமான வாரிசுதாரர். விவாக ரத்து என்பது ஆகும் வரை அவர் தான் பொறுப்பாளர்.</p><p>எனவே பொருளாதார சார்பு எவரிடத்தில் என்பது மட்டுமே ஆவணங்கள் கவனிக்கும். மற்றப்படி யார் எவருடன் எப்படி பழகினாலும் சட்டம் அதை கேள்வி கேட்காது. </p><p>அவ்வளவு ஏன், பெரு நகரங்களில் இப்போது பரவலாக இருக்கும் லிவ் இன் கலாச்சாரம் கூட சட்டம் தவறு என்று சொல்லி கேள்வி கேட்பது இல்லை. அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் சட்டம் தலை இடுவது இல்லை. எல்லோருக்கும் அவரவர் விருப்பப்படி வாழ உரிமை தருகிறது. ஆனால் அங்கீகார பொறுப்பாளர் ஒருவர் தான் என்பதில் மட்டுமே உறுதியாக இருக்கிறது.</p><p>இப்போது மீண்டும் திருமணம் என்பதை பார்ப்போம்.</p><p>கலாச்சார பண்பாட்டு ரீதியாக திருமணம் என்பது இரு நபர்கள் இரு குடும்பங்கள் இணையும் விழா.</p><p>சட்ட ரீதியாக திருமணம் என்பது பொருளாதார சமூக பொறுப்பு யாரிடம் என்பதை தீர்மானிக்கும் ஒரு ஆவணம்.</p><p>குடும்ப ரீதியாக தனக்கும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் சரியான துணையை சரியான குடும்பத்தை தேர்ந்தெடுத்து ஒப்படைக்கும் வைபோகம்.</p><p>இந்த திருமணம் எனும் ஒற்றை புள்ளி தான் வாழ்வின் பல முடிவுகளை தீர்மானிக்கிறது.</p><p>திருமணம் ஒரு சமூக நிகழ்வு, இரு குடும்ப இணைப்பு, இரு பாரம்பரிய ஒட்டுதல், எதிர்கால பாதுகாப்பு என விரிவாக்கம் செய்தும் பார்க்கலாம்.</p><p>திருமணம் ஒரு வாரிசு ஆவனத்துக்கான ஆயத்தம் மட்டுமே என சட்ட ரீதியாக சுருக்கியும் பார்க்கலாம்.</p><p>அப்போ திருமணமே வேண்டாம் என தனியாக வாழ்பவர்கள்?</p><p>அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-86440261185315661682022-06-01T09:29:00.004+05:302022-06-01T09:29:36.950+05:30GST இழப்பீடு குழப்பங்கள்<p><b><span style="font-size: large;">அ</span></b>னைத்து மாநிலங்களுக்கும் உரிய GST நிலுவைத் தொகையை நேற்றைய தினம் ஒன்றிய அரசு விடுவித்து இருப்பதாக நிதி அமைச்சக செய்திக்குறிப்பு வெளியாகி உள்ளது. </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMX_PXP91uIU_XeUAiyUD1Z0TqO8Im0JtpdBItksaMKqcuJlLPjL0xZOt1WAxFjENvqBFe-ysoyWOtUJ8cD0PSAiY8M_jhp-OjwB5RtILvdXnud9Gki7RzFp03ePrxeM8aauF0gyY_dCyjPczfhtux5fxEgXVtJMbO2b5Odigv9drRRfSwse6k3gIeHA/s1280/IMG_20220531_192819.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1216" data-original-width="1280" height="304" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMX_PXP91uIU_XeUAiyUD1Z0TqO8Im0JtpdBItksaMKqcuJlLPjL0xZOt1WAxFjENvqBFe-ysoyWOtUJ8cD0PSAiY8M_jhp-OjwB5RtILvdXnud9Gki7RzFp03ePrxeM8aauF0gyY_dCyjPczfhtux5fxEgXVtJMbO2b5Odigv9drRRfSwse6k3gIeHA/s320/IMG_20220531_192819.jpg" width="320" /></a></div><br /><p><br /></p><p>ஒன்றிய அரசின் கையில் Compensation CESS ₹25,000 கோடி தான் இருந்தது. எனினும் பிற கணக்குகளில் இருந்து பாக்கி தொகை போட்டு நிலுவை தொகையை மொத்தமாக ₹86,912 கோடி மாநிலங்களுக்கு கொடுத்து இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்து இருக்கு. </p><p>அதுவும் 31.05.2022 வரை கணக்கிட்டு நிலுவை தொகையை கொடுத்ததாகவும் சொல்லி இருக்கிறார்கள்.</p><p>முதலில் Compensation CESS என்றால் என்ன என சுருக்கமாக பார்ப்போம்.</p><p>GST சட்டம் அமல் ஆகும் முன்பு இருந்த VAT, CST, Central Excise, Service Tax போன்ற வரிகளின் மூலம் மாநிலங்களுக்கு கிடைத்துக் கொண்டு இருந்த வரி வருவாய் எவ்வளவு என பார்த்து..</p><p>GST வந்த பிறகு சில குறிப்பிட்ட பொருட்கள் தவிர பெரும்பாலான பொருட்களுக்கு அந்த பழைய வரிகள் எல்லாம் செல்லாது என அறிவிக்கப்பட்டு GST வரி மட்டும் தான் என ஆன பிறகு, மாநிலங்களுக்கு கிடைக்கும் வருவாயை கணக்கிட்டு..</p><p>இரண்டுக்கும் இடையிலான வருவாய் மாறுபாடு பற்றாக்குறை ஆக இருந்தால், அதாவது முன்பு கிடைத்த வரியை விட GST வருவாய் குறைந்து இருந்தால், அந்த பற்றாக்குறையை ஈடு செய்ய வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. </p><p>அந்த வரி வருவாய் பற்றாக்குறையை மாநிலங்களுக்குஈடு செய்வது தான் Compensation CESS வழியிலான இழப்பீடு. </p><p>இந்த Compensation CESS ஐ தான் ஒன்றிய அரசு நேற்று விடுவித்து இருக்கிறது.</p><p>இந்த ₹86,912 கோடியில் தமிழக அரசுக்கு நிலுவை தொகையாக ₹9,602 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhewDNjeZxurrS6evIYfg6W3x_6EM6c4e8utQvXkTrYBh3Xz3YQugGDI1r8Ddzr1lEJs6Dfc5EPJsiinVXFCNruf1aimVXxoUkQ03p_d-mvIIA37HdPe-u50dxBN1G3MSN9Qa5o4_d1oJGDGGIUjCpPIeqJvMYAW29CM0lf1ICvQYaZfF1ZGXItqrGBww/s1177/IMG_20220531_194435.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1177" data-original-width="920" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhewDNjeZxurrS6evIYfg6W3x_6EM6c4e8utQvXkTrYBh3Xz3YQugGDI1r8Ddzr1lEJs6Dfc5EPJsiinVXFCNruf1aimVXxoUkQ03p_d-mvIIA37HdPe-u50dxBN1G3MSN9Qa5o4_d1oJGDGGIUjCpPIeqJvMYAW29CM0lf1ICvQYaZfF1ZGXItqrGBww/s320/IMG_20220531_194435.jpg" width="250" /></a></div><br /><p><br /></p><p>இது தவிர இன்னொரு பங்கும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கொடுக்கவேண்டும்.</p><p>மாநிலம் விட்டு மாநிலம் நடக்கும் வர்த்தகங்களுக்கு (Inter State Transactions) ஒன்றிய அரசு மொத்தமாக வசூலிக்கும் IGST வரியில் இருந்து மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை இன்னமும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை.</p><p>அந்த வகையில் தமிழகத்துக்கு இன்னமும் சுமார் ₹4,400 கோடி வர வேண்டி உள்ளது.</p><p>ஆனால் நேற்றைய ஒன்றிய அரசின் அறிக்கையில் எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.</p><p>அதெப்படி 31.05.2022 வரை இழப்பீட்டை கணக்கிட்டு கொடுத்தார்கள்?</p><p>மே மாத விற்பனை விவரங்களை வணிகர்கள் ஜூன் மாதம் 11 ஆம் தேதி தான் தாக்கல் செய்வார்கள். Input Tax Credit (ITC) விவரங்களை ஜூன் மாதம் 20 ஆம் தேதி தான் வணிகர்கள் முழுமையாக தாக்கல் செய்வார்கள். இந்த அனைத்து விவரங்களும் GST இணைய தள ஒருங்கிணைப்பு பிரிவில் ஜூன் மாதம் 21 ஆம் தேதி தான் கிடைக்கும்.</p><p>இப்படி இருக்க, மே மாதம் 31 ஆம் தேதி வரையிலான இழப்பீடு என எப்படி கணித்து இருப்பார்கள் என்று புரியவில்லை.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGh5ihH2tmO4MUBKdW-0-lTHXYVaiwfIow_n0p2UAeFbiGSpKNTGjuxL4xahA1fSG5Q36CmZ5SFnx_QORGhqrj4trkgfuB6waNRdqg9UT8PaLxMyzkErWty87w0BLrOpPXYLQXzW7_A0WHQPV-ezDyGg2doXr33Zt8tHZdN8aqlvHn5wg8Iqr-RuobBA/s1152/IMG_20220531_194459.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="420" data-original-width="1152" height="117" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGh5ihH2tmO4MUBKdW-0-lTHXYVaiwfIow_n0p2UAeFbiGSpKNTGjuxL4xahA1fSG5Q36CmZ5SFnx_QORGhqrj4trkgfuB6waNRdqg9UT8PaLxMyzkErWty87w0BLrOpPXYLQXzW7_A0WHQPV-ezDyGg2doXr33Zt8tHZdN8aqlvHn5wg8Iqr-RuobBA/s320/IMG_20220531_194459.jpg" width="320" /></a></div><br /><p><br /></p><p>மாதக் கடைசி நாளில் பெரும்பாலும் இரவு வரை விற்பனை இருக்கும். வெளி மாநிலத்துக்கு அனுப்ப வேண்டிய பொருட்கள் இரவு தான் ஏற்றி அனுப்புவார்கள். </p><p>அப்படியான இறுதி நாள் வர்ததகங்கள் நடைபெறும் முன்பே எப்படி இழப்பீடு கணிக்க முடியும்?</p><p>ஒன்று.. குத்து மதிப்பாக கணித்து பணத்தை கொடுத்து இனி கொடுக்க எதுவும் இல்லை என பொறுப்பினை தட்டிக் கழிக்க நடக்கும் முயற்சியாக இருக்கலாம்.</p><p>அல்லது, பெருமைக்காக மொத்தமாக கொடுத்து விட்டதாக சொல்லி பின்னர் கணக்கு பார்த்து சரிக் கட்டிக் கொள்ளலாம் என நினைத்து இருக்கலாம்.</p><p>இரண்டுமே நிதி அமைச்சகம் மாதிரியான பொறுப்பான துறைக்கு அழகல்ல.</p><p>வரும் ஜூன் 2022 வரை தான் Compensation CESS ஒன்றிய அரசால் இழப்பீடு வழங்க முடியும். அதன் பின் மாநிலங்கள் அவரவர் வரி வருவாயை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது சட்டம். </p><p>இந்த கால அளவை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என மாநிலங்கள் கேட்டு கொண்டு இருக்கும் வேளையில், எல்லா பாக்கியையும் கொடுத்து விட்டோம் என ஒன்றிய அரசு அவசரம் அவசரமாக கணக்கை முடிக்க முயற்சி செய்வது, கால அளவை நீட்டிக்கும் உத்தேசம் ஒன்றிய அரசுக்கு இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறது.</p><p>அப்படி கால அளவு நீட்டிக்கப் படாமல் போனால், கடந்த இரண்டு ஆண்டுகள் கோவிட் காரணமாக பொருளாதாரம் தொய்வு அடைந்து வரி வருவாய் குறைந்து இப்போது தான் அதில் இருந்து மீள தொடங்கி இருக்கும் நிலையில் மாநிலங்கள் எல்லாம் மிகுந்த நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.</p><p>அது மற்ற துறைகளை பாதித்து ஒட்டு மொத்தமாக மாநிலங்களுக்கு பெரும் சிக்கலை உண்டு பண்ணவும் சாத்தியம் உண்டு.</p><p>நிதி அமைச்சகம் இந்த குழப்பங்களை எல்லாம் போக்கும் விதமாக இப்போது உடனடியாக செய்ய வேண்டியது:</p><p>1. நேற்றைய இழப்பீடு எந்த அடிப்படையில் கணக்கிட பட்டு உள்ளது என விளக்குவது.</p><p>2. IGST நிலுவை எவ்வளவு என தெளிவு படுத்துவது.</p><p>3. மே & ஜூன் நிலுவை எப்போது விடுவிப்பார்கள் என உறுதிப் படுத்த வேண்டியது.</p><p>4. Compensation CESS கால அளவை நீட்டிக்கும் எண்ணம் உண்டா என தெளிவு படுத்த வேண்டியது.</p><p>இவற்றை பொறுப்போடு செய்வார்களா.. அல்லது வழக்கம் போல பொறுப்பு இல்லாமல் இருப்பார்களா என்பதை நிதி அமைச்சகத்தின் நடவடிக்கைகள் தான் நமக்கு உணர்த்தும்.</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1829777</p>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-69758944563011251892022-05-21T09:59:00.004+05:302022-05-21T09:59:26.843+05:30குருகிராம் GST முறைகேடு<p> குருகிராம் #GST முறைகேடு வழக்கு முழுசா படிச்சா தெரிவது.. GST யின் IT கட்டமைப்பு வீக்காக இருப்பது தான் காரணம் என்பது..</p><p><br /></p><p>இதை சரி செய்ய போன வருஷம் ஒரு IT Task Force அமைத்தார்கள். அஜித் பவார் அவர்கள் தலைவர். உறுப்பினர்களில் ஒருவர் தமிழக நிதி அமைச்சர் திரு PTR அவர்கள்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXaAFGPvBPicecNPUYMtDxb_KooqhHbng-YcvQ1jboDBu3cyImdGewHOR1Qg2-07CAp_fDJ1y8P31SgVdMsgImWit7D75B_e0Y51hgaxOQKqttt1-YhJHAZAg_SNo3ugBsPmULV9swTqHe78R_bPAHm-M1t9GfMsf9C0kmxOOaPmKwRbHUn0qJklcL8A/s1140/IMG_20220521_095015.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1140" data-original-width="1044" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXaAFGPvBPicecNPUYMtDxb_KooqhHbng-YcvQ1jboDBu3cyImdGewHOR1Qg2-07CAp_fDJ1y8P31SgVdMsgImWit7D75B_e0Y51hgaxOQKqttt1-YhJHAZAg_SNo3ugBsPmULV9swTqHe78R_bPAHm-M1t9GfMsf9C0kmxOOaPmKwRbHUn0qJklcL8A/s320/IMG_20220521_095015.jpg" width="293" /></a></div><br /><p><br /></p><p>அந்த குழு இதுவரை ஒரு முறை கூட கூடவே இல்லை. ஒரு சின்ன பரிந்துரையும் வரவில்லை</p><p><br /></p><p>குருகிராம் வழக்கு சுருக்கமா:</p><p><br /></p><p>சில ஆடிட்டர்கள் சேர்ந்து இல்லாத நிறுவனங்கள் பெயரில் போலியாக பில்கள் தயாரித்து முறைகேடாக ITC எடுக்கிறார்கள்..</p><p><br /></p><p>அந்த ITC ஐ refund கேட்கிறார்கள். சுமார் ₹15 கோடி</p><p><br /></p><p>இதற்கு அதிகாரிகள் ₹7 லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள் </p><p><br /></p><p>லஞ்சம் கொடுத்த பின், refund application தாக்கல் செய்து ஒன்றரை மணி நேரத்தில் ₹15 கோடி refund கொடுத்து விட்டார்கள்</p><p><br /></p><p>இதை investigate செய்த மேல் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஆடிட்டர்கள் எல்லோரையும் விசாரித்து அதில் இருவரை கைது செய்து உள்ளார்கள்</p><p><br /></p><p>Refund கொடுத்த அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது </p><p><br /></p><p>இந்த மொத்த குழப்பமும் IT network இல் உள்ள குளறுபடியால் வந்தது</p><p><br /></p><p>ITC முறைகேடான ஒன்று என்பதை realtime ல validate செய்யும் வசதி இல்லை. </p><p><br /></p><p>Refund ஸ்டேட்மென்ட் விவரங்களை கூட return filing data உடன் reconconcile செய்ய முடியல</p><p><br /></p><p>2B data வை 3B data வில் எளிதாக edit செய்ய முடிகிறது</p><p><br /></p><p>3B data edit செய்ய (கூடுதல் தொகைக்கு) முடியாமல் ஒரு சின்ன validation lock இருந்து இருந்தா கூட இந்த முறைகேடு நடக்க வாய்ப்பு இருந்து இருக்காது</p><p><br /></p><p>இனியாவது IT task force செயல்பட்டு network ஐ ஆராய்ந்து உரிய பரிந்துரைகள் கொடுத்து எல்லா ஓட்டைகளையும் அடைத்தால் தான் நல்லது</p><p><br /></p><p><br /></p>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-72953744165434343022021-09-29T20:41:00.000+05:302021-09-29T20:41:15.175+05:30பெட்ரோல் டீசல் GST யின் கீழ் வருமா?சமீப காலமாக மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது, பெட்ரோல் மற்றும் டீசலை GST ககுள் கொண்டு வரவேண்டும் என்கிற விவாதம்.<div><br></div><div>பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இது குறித்த விவாதம் GST council கூட்டத்தில் விவாதிக்க படாமலேயே சென்று கொண்டு இருக்கிறது.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-0VHFOWYteX3Opm-jM2M35rwOVM7H2YvXvXAD0Ik54CwQFQYSv1l0V1EjO_DAvQzAh5iHp0Bc33ZnEvVyQkryDyc7eWtuK45yJGPYrlBruUpzB8hmX3jRoR7s6_DYDca0LtgGsYGo1nMk/s1600/1632928223023001-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-0VHFOWYteX3Opm-jM2M35rwOVM7H2YvXvXAD0Ik54CwQFQYSv1l0V1EjO_DAvQzAh5iHp0Bc33ZnEvVyQkryDyc7eWtuK45yJGPYrlBruUpzB8hmX3jRoR7s6_DYDca0LtgGsYGo1nMk/s1600/1632928223023001-0.png" width="400">
</a>
</div><br></div><div>பெட்ரோல் டீசல் ஆகியவற்றை GST வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து பலருக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள் இருக்கலாம். என்னிடம் பல நண்பர்கள் அவர்களது சந்தேகங்களை கேட்டார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு இங்கே முக்கியமான ஐந்து கேள்விகளுக்கு சுருக்கமாக விளக்க முயற்சிக்கிறேன்.<br></div><div><br></div><div><b><u>1. GST வரம்புக்குள் பெட்ரோல் டீசல் ஆகியவற்றை கொண்டு வந்தால் அதன் விலை குறையுமா?</u></b></div><div><br></div><div>குறையும். எப்படி என சொல்கிறேன்.</div><div><br></div><div>இப்போது GST இல்லாத காரணத்தால் GST க்கு முன்பு இருந்த சட்டங்களின் அடிப்படையில் தான் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரி விதிக்கப்படுகிறது.</div><div><br></div><div>பெட்ரோலை உதாரணமாக எடுத்து கொள்வோம். (விலை ஒரு லிட்டருக்கு)</div><div><br></div><div>பெட்ரோல் அடிப்படை விலை (உற்பத்தி ஆகி பெட்ரோல் பங்குக்கு வரும் விலை) - ₹40</div><div><br></div><div>அதன் மீது மத்திய அரசு விதிக்கும் Excise மற்றும் CESS வரி (இது மொத்தமும் மத்திய அரசுக்கு போகும்) - ₹32</div><div><br></div><div>பெட்ரோல் பங்க் டீலர் கமிஷன் - ₹4</div><div><br></div><div>இவை மூன்றையும் சேர்த்தால் - ₹76</div><div><br></div><div>இந்த ₹76 மீது மாநில அரசு விதிக்கும் வரி - ₹23</div><div><br></div><div>இதையும் சேர்த்தால் விற்பனை செய்யப்படும் விலை - ₹99</div><div><br></div><div>GST குள் கொண்டு வரப்பட்ட பிறகு இது என்ன ஆகும் என பார்ப்போம்.</div><div><br></div><div>பெட்ரோல் அடிப்படை விலை (உற்பத்தி ஆகி பெட்ரோல் பங்குக்கு வரும் விலை) - ₹40</div><div><br></div><div>Excise மற்றும் CESS வரி (GST வந்தால் இந்த வரிகள் ரத்து ஆகி விடும்) - ₹0</div><div><br></div><div>பெட்ரோல் பங்க் டீலர் கமிஷன் - ₹4</div><div><br></div><div>இவை மூன்றையும் சேர்த்தால் - ₹44</div><div><br></div><div>இந்த ₹44 மீது GST வரி - ₹12 (இதில் மாநில அரசுக்கு ₹6 மத்திய அரசுக்கு ₹6 போகும்)</div><div><br></div><div>GST யின் படி அதிக பட்ச வரி 28% என்பதால் அதை கணக்கு இட்டு உள்ளேன்.</div><div><br></div><div>GST லும் CESS உள்ளது. ஆனால் அது Luxury Items வகைகளுக்கு மட்டுமே பொருந்தும். பெட்ரோல் டீசல் Luxury Item ஆக வராது.</div><div><br></div><div>எனவே இப்போது ₹99 ஆக இருக்கும் பெட்ரோல் விலை GST யின் கீழ் ₹56 ஆகும்.</div><div><br></div><div><u><b>2. மாநிலங்கள் பெட்ரோல் டீசலை GST குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?</b></u></div><div><br></div><div>மேலே சொன்ன கணக்கீடு படி, மத்திய அரசுக்கு கிடைத்து வந்த வரியான ₹32 என்பது ₹6 ஆக குறைகிறது. மாநில அரசுக்கு கிடைத்து வந்த வரியான ₹23 என்பது ₹6 ஆக குறைக்கிறது.</div><div><br></div><div>அதாவது சுருக்கமாக சொன்னால் ஒரு லிட்டருக்கு, மத்திய அரசுக்கு ₹26 மாநில அரசுக்கு ₹17 இழப்பு ஆகும்.</div><div><br></div><div>இப்போதைய சூழலில் மாநில அரசுக்கான பெரும் வருவாய் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இருந்தும், மது விற்பனையில் இருந்தும் தான் கிடைக்கிறது. எனவே இந்த இழப்பு மிகப்பெரிய நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தி விடும்</div><div><br></div><div>ஏற்கனவே, GST வந்த பிறகு ஏற்கனவே கிடைத்து வந்த வரி வருவாய் கிடைக்காமல் பற்றாக்குறையில் இருக்கும் நிலையில் வருகின்ற கொஞ்ச நஞ்ச வருவாயையும் இழக்க மாநிலங்கள் தயாராக இல்லை.</div><div><br></div><div><b><u>3. GST குள் கொண்டு வந்த பின்னால் வரியை அரசுகள் உயர்த்தி இப்போதைய விலைக்கே கொண்டு வராதா?</u></b></div><div><br></div><div>GST சட்டம் அதிக பட்சமாக 28% வரி கொண்டது. அதை விட அதிகமாக வரி விதிக்க இப்போதைக்கு சட்டத்தில் இடம் இல்லை.</div><div><br></div><div>GST விதிக்கும் போது வேறு வரிகள் நிழைக்கவும் சட்டத்தில் இடம் இல்லை.</div><div><br></div><div>ஒன்று எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய விலையை இப்போது இருக்கும் ₹40 லிருந்து உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தினால் அதன் அடிப்படையில் வரியும் உயரும். ஆனால் அது பெரிய அளவுக்கு அரசுக்கு பயன் தராது.</div><div><br></div><div><b><u>4. பெட்ரோலுக்கு வசூல் ஆகும் வரிகள் மாநிலத்துக்கு கிடைக்காமல் இழுத்தடிக்க வாய்ப்பு உள்ளதா?</u></b></div><div><br></div><div>பெட்ரோலை பொறுத்த வரை, பங்கில் இருந்து வாகனத்துக்கு செலுத்துவது தான் விற்பனை எனப்படும். இரண்டும் ஒரே இடத்தில் தொடங்கி ஒரே இடத்தில் முடியும் (பெட்ரோல் பங்க்).</div><div><br></div><div>எனவே GST யின் Place of Supply Rules படி, இது மாநிலத்திலேயே நடக்கும் விற்பனையாகத் தான் கருதப்படும்.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuCimr4eQKgxoXe5QDrYnLyxQ6gWMvWIgSIHUOMxnZd6YxXr_PS3O4s4ATV1Tfjo_kLlE7yjiACcFA6a-xwPPg5t-Cr9DOkBplchRr2-tfT65EPKFKDIMFa86Nh2S-bU8VWJKAcB4hwLR0/s1600/1632928216653895-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuCimr4eQKgxoXe5QDrYnLyxQ6gWMvWIgSIHUOMxnZd6YxXr_PS3O4s4ATV1Tfjo_kLlE7yjiACcFA6a-xwPPg5t-Cr9DOkBplchRr2-tfT65EPKFKDIMFa86Nh2S-bU8VWJKAcB4hwLR0/s1600/1632928216653895-1.png" width="400">
</a>
</div><br></div><div>பெட்ரோல் பங்க் தமிழகத்தில் இருந்தாலும் பெட்ரோல் வாங்கும் வாகனம் டெல்லியை சேர்ந்தது ஆக இருந்தாலும் அது Interstate வியாபாரம் ஆகாது. Intra-State வியாபாரமாக தான் கருதப்படும்.</div><div><br></div><div>எனவே இதற்கான வரி, CGST & SGST கணக்கில் தான் வரவு வைக்கப்படுமே தவிர IGST கணக்கில் வராது.</div><div><br></div><div>SGST தொகை நேரடியாக மாநிலத்துக்கு கிடைத்து விடும். CGST தொகை நேரடியாக மத்திய அரசுக்கு சென்று விடும்.</div><div><br></div><div>எனவே, மத்திய அரசு மாநிலத்துக்கு வரி தராமல் இழுத்தடிக்கும் வாய்ப்பு இதில் ஏற்படாது. ஏனெனில் மாநிலத்தின் பங்கு நேரடியாக மாநிலத்துக்கு வந்து விடும்.</div><div><br></div><div><b><u>5. எல்லா வகையிலும் மக்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் GST வரம்புக்குள் பெட்ரோல் டீசல் ஏன் கொண்டு வரக்கூடாது?</u></b></div><div><br></div><div>மக்கள் நலன் முக்கியம் எனில் தாராளமாக GST குள் பெட்ரோல் டீசலை எப்போதோ கொண்டு வந்திருக்க முடியும் </div><div><br></div><div>அவ்வளவு ஏன், இப்போது இருக்கும் Excise வரியை 23 முறைக்கு மேல் உயர்த்தி இருக்கும் மத்திய அரசு, மக்கள் நலன் முக்கியம் எனில் அப்படி உயர்த்தாமல் தவிர்த்து இருக்கும்.</div><div><br></div><div>GST குள் கொண்டு வராமலேயே விலையை குறைத்து இருக்க முடியும்.</div><div><br></div><div>ஆனால் இங்கே எல்லா அரசுகளும் பார்ப்பது வரி வருவாய் எனும் ஒரே விஷயத்தை தான்.</div><div><br></div><div>பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கும் நிலையில் வரி வருவாயை இழக்க எந்த அரசும் விரும்பவில்லை. இப்போது கிடைத்துக் கொண்டு இருக்கும் வரியே குறைவு எனும் நிலையில் மேலும் குறைக்க யாரும் தயார் இல்லை.</div><div><br></div><div>அப்படி ஆனால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். அதற்கான வட்டி கட்ட கூட மேலும் வரி உயர்த்தும் நிலை வரும்.</div><div><br></div><div>GST வரம்பில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றை கொண்டு வர மாநிலங்கள் சம்மதித்தால் கூட மத்திய அரசு சம்மதிக்காது. ஏனெனில் அதிக இழப்பு மத்திய அரசுக்குத் தான்.</div><div><br></div><div>எனவே இது முடிவு இல்லாமல் நீண்டு கொண்டு இருக்கும் பிரச்சினையாகவே என்றென்றும் நிலைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.</div><div><br></div><div>****</div><div>உங்களுக்கு இது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் கமெண்டில் பதிவு செய்யவும்.</div><div><br></div><div>அடுத்த பாகத்தில் விளக்க முயற்சி செய்கிறேன்.</div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-78521460441062712772021-09-18T22:07:00.000+05:302021-09-18T22:07:07.410+05:30ஏர் இந்தியா விற்பனைஏர் இந்தியாவை விற்கும் முடிவில் உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு, அதற்கான விருப்பங்ளை கோரி இருந்தது.<div><div><br></div><div>டாடா நிறுவனமும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் கடந்த செப் 15 ஆம் தேதி தங்களது விருப்பத்தை தெரிவித்து உள்ளது.</div><div><br></div><div>யார் அந்த நிறுவனத்தை பெற போகிறார்கள் என்பதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.</div><div><br></div><div>*****</div><div><br></div><div>ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இப்போது சுமார் ₹43,000 கோடி கடன் உள்ளது. அதற்காக அந்த நிறுவனத்தை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்தது ஒன்றிய அரசு.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcIMQef8_BjhdKERsHtmrNz9V_GD4lhEVkW-xHMDRAlybNttwziXxrJW2xvjdgWOakuPyW0xcm2eXAAl5SIjfZiHzvhJ8VlZmgXOQVB2tcE3ao-SVCcOLicJ4ayD_ZGpN6DN6ou6WmDd0i/s1600/1631983021101375-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcIMQef8_BjhdKERsHtmrNz9V_GD4lhEVkW-xHMDRAlybNttwziXxrJW2xvjdgWOakuPyW0xcm2eXAAl5SIjfZiHzvhJ8VlZmgXOQVB2tcE3ao-SVCcOLicJ4ayD_ZGpN6DN6ou6WmDd0i/s1600/1631983021101375-0.png" width="400">
</a>
</div><br></div><div>ஏர் இந்தியா நிறுவனம் முழுமையும், விமானங்கள், பராமரிப்பு நிறுவனம், நிலங்கள், அலுவலகங்கள், வீட்டு குடியிருப்புக்கள் என எல்லாவற்றையும் விற்பனைக்கு அறிவித்து இருக்கிறது அரசு.</div><div><br></div><div>இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, விமான பயணங்கள் அதி வேகமாக வளர்ந்து வரும் இப்போதைய காலகட்டத்தில் ஏன் நஷ்டம் ஆனது, ஏன் அதனை சீரமைக்காமல் விற்பனை செய்யப்படுகிறது என்பது எல்லாம் மிகப் பெரிய புதிர் தான்</div><div><br></div><div>உள்நாட்டு விமான சேவை கொள்கையில் அரசால் செய்யப்பட்ட மாறுதல்கள் காரணமாக ஏர் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய லாபகரமான வழித்தடங்கள் எல்லாம் தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்தன.</div><div><br></div><div>அதிக பயணிகள் பயணிக்கும் வழித்தடங்களில் ஏர் இந்தியாவை விட அதிகமாக தனியாருக்கு அனுமதி கொடுத்தது.. அதிக பயணிகள் இல்லாத இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்களுக்கு ஏர் இந்தியாவை இயக்க செய்ததும் தான் நஷ்டத்தில் மிக முக்கிய காரணி</div><div><br></div><div>சுமார் 127 விமானங்கள் கொண்டது ஏர் இந்தியா. அதில் 4 ஜம்போ ஜெட் (B 747) விமானங்களும் அடக்கம். இது தவிர ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சுமார் 24 விமானங்கள் வைத்து இருக்கிறது.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgowiMGk3iZpuDDE4RGzDZY2Kn04JJRbAAObtoomSMFSrN6BJSRdFvJomHePbAmw26QaliCMAJsvV6SbPVYhxPjnEjKwUvDDVFesjiZYnPUhw2lH22LjcvK5wvlQHTeVwL97lT7QVTQyo7X/s1600/1631983018240469-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgowiMGk3iZpuDDE4RGzDZY2Kn04JJRbAAObtoomSMFSrN6BJSRdFvJomHePbAmw26QaliCMAJsvV6SbPVYhxPjnEjKwUvDDVFesjiZYnPUhw2lH22LjcvK5wvlQHTeVwL97lT7QVTQyo7X/s1600/1631983018240469-1.png" width="400">
</a>
</div><br></div><div>ஏர் இந்தியா நிறுவனத்தின் பெரும்பாலான சேவை முக்கியம் அல்லாத வழித் தடங்களில் தான் அமைந்து இருக்கின்றன.</div><div><br></div><div>அதிக பயணிகள் தேவை உள்ள வழித்தடங்களில் ஏர் இந்தியாவுக்கு கிடைத்த அனுமதி மிகக் குறைவே.</div><div><br></div><div>இது தவிர மற்றொரு முக்கிய காரணி, ஏர் இந்தியாவை முழு சேவை கொண்ட நிறுவனமாக (Full Service Carrier) நடத்துவது.</div><div><br></div><div>இந்தியாவில் இப்போது குறைந்த செல்லவுள்ள விமான சேவைகள் (LCC - Low Cost Carriers) தான் பயணிகளிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. எல்லா முக்கிய வழி தடங்களும் சுமார் 2 மணி நேரத்துக்குள் பயணிக்கத் தக்கவை என்பதால் முழு சேவை அவசியம் இல்லை.</div><div><br></div><div>உணவு தேவைப்படும் பயணிகள் அதை தனியாக வாங்கி கொள்ளலாம். இப்படி தான் தனியார் விமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அவற்றின் கட்டணங்களும் குறைவே.</div><div><br></div><div>ஆனால் ஏர் இந்தியா இன்னமும் Full Service Airline ஆக செயல்பட்டு சில வழித் தடங்களில் தனியாரின் போட்டியை சமாளிக்க கட்டண குறைப்பையும் அறிவிப்பதால் நஷ்டம் ஏற்படுகிறது.</div><div><br></div><div>உணவு மற்றும் பிற சேவைகளுக்காக கொடுத்த காண்டிராக்ட் ரத்து செய்யும் துணிச்சலான முடிவை எடுக்க முடிந்தால், ஏர் இந்தியாவையும் LCC ஆக மாற்ற முடிவு எடுக்கக் கூடிய திராணி உள்ள ஒரு அரசு அமைந்தால், நிச்சயமாக operating cost கணிசமாக குறைந்து நஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் என்ன காரணத்தாலோ அரசு இந்த முடிவை எடுக்கவே இல்லை.</div><div><br></div><div>UDAAN போன்ற சேவைகள் வரக்கூடிய நேரத்தில் ஏர் இந்தியாவுக்கு மிகப் பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளன.</div><div><br></div><div>Indigo நிறுவனம் 200+ விமானங்கள் இப்போது கைவசம் வைத்து இருந்த போதும் இன்னமும் 500+ விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து இருப்பதில் இருந்தே இந்திய விமான சேவை துறைக்கு உள்ள வாய்ப்புக்கள் எவ்வளவு என்பது தெளிவு ஆகும்.</div><div><br></div><div>இச்சூழலில் 127 விமானங்கள் கொண்ட ஏர் இந்தியா முழு கொள்ளளவு நிறைய பயணிகளை கொண்டு பறப்பது சுலபம். இன்னமும் கூட விமானங்களை வாங்கி அவற்றையும் முழு கொள்ளளவுடன் இயக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் என்ன? நல்ல டிமாண்ட் உள்ள வழித்தடங்களை ஏர் இந்தியாவுக்கு அரசு கொடுக்க வேண்டும்.</div><div><br></div><div>உதாரணமாக சென்னை - மும்பை வழி தடத்தில் 11 விமானங்கள் இயங்கினால் அதில் 3 தான் ஏர் இந்தியா. கோவை மும்பை வழித்தடத்தில் 7 க்கு 1 தான் ஏர் இந்தியா. அதிலும் ஏர் இந்தியாவுக்கு PHS எனும் Peak Hour Service நேரமான காலை மாலை வேளைகளில் அனுமதி கொடுக்காமல் அதிக பயணிகள் இல்லாத மதிய நேரத்தை கொடுத்து இருக்கிறது அரசு. எப்படி ஏர் இந்தியா வருவாய் பார்க்கும்?</div><div><br></div><div>எனவே எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்க்கையில் திட்டமிட்டே அரசு ஏர் இந்தியாவை நஷ்டத்துக்கு தள்ளி விட்டதோ? அதையே காரணம் காட்டி தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி செய்கிறதோ? என்கிற சந்தேகங்கள் பலருக்கும் வருவதில் வியப்பு இல்லை.</div><div><br></div><div>அதை மேலும் அதிகரிக்கும் விதமாக, தனியார் நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க காட்டும் ஆர்வம், ஏர் இந்தியா ஒரு மதிப்பு மிக்க, வருவாய் ஈட்டும் வாய்ப்பு கொண்ட நிறுவனம் என அவர்கள் புரிந்து கொண்டதை தெளிவு ஆக்குகிறது.</div><div><br></div><div>ஏர் இந்தியாவிடம் போயிங் மற்றும் ஏர் பஸ் ஆகிய இரண்டு வகை விமானங்களும் உள்ளன. மேலும் ATR விமானங்களும் உள்ளன. அவற்றுக்கான ரிப்பேர் & சேவை அமைப்பும் சொந்தமாக உள்ளன.</div><div><br></div><div>இத்தனை பெருமையும் வசதிகளும் கொண்ட நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார் வாங்க துடிப்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.</div><div><br></div><div>தனியார் நிறுவனங்களால் ஏர் இந்தியாவை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றால், அரசால் ஏன் அதை செய்ய முடியவில்லை?</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjF588mnfQCa_8erK0yDTY_vFcH1zE-8A0dbSaT_wcC9Xxs6D2mfsnNG8NJdYS-U4CpKCBa577HB4aJ0v8MpRsbLLiF441xdLouQuZxRbJ95am0KyIos4LEa47E5CQT35ONU2SElR0fCSrW/s1600/1631983014206325-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjF588mnfQCa_8erK0yDTY_vFcH1zE-8A0dbSaT_wcC9Xxs6D2mfsnNG8NJdYS-U4CpKCBa577HB4aJ0v8MpRsbLLiF441xdLouQuZxRbJ95am0KyIos4LEa47E5CQT35ONU2SElR0fCSrW/s1600/1631983014206325-2.png" width="400">
</a>
</div><br></div><div>சரியான நிர்வாகிகளை நியமித்து, விமான கொள்கைகளை சீர் திருத்தினால் ஏர் இந்தியா மீண்டும் பழைய பெருமையை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. சரியான நிர்வாகி கிடைக்கவில்லை எனில், மூன்றாம் நபர் நிர்வாக அமைப்பை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கலாம். Contract based third party administrator. </div><div><br></div><div>ஏர் இந்தியாவை சீர் செய்ய வேண்டும் என நினைத்தால் அரசுக்கு அது மிக மிக எளிதான காரியம் தான்.</div><div><br></div><div>அதிலும் வெறும் ₹43,000 கோடி கடனுக்காக அதை விட அதிக மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்வது எல்லாம் பலருக்கும் பல விதமான சந்தேகத்தை கிளப்பாமல் இல்லை.</div><div><br></div><div>பெட்ரோல் டீசல் போன்றவற்றின் வரி வருவாய் மூலம் மட்டுமே சுமார் ₹3 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் ஒரு அரசுக்கு, ₹43,000 கோடி ரூபாய் எல்லாம் ஒரு விஷயமே அல்ல.</div><div><br></div><div>ஆனால் அரசு ஏனோ ஏர் இந்தியாவை விற்றே ஆக வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி கொண்டு இருக்கிறது.</div><div><br></div><div>BSNL நிறுவனத்தை போலவே ஏர் இந்தியாவையும் அவற்றுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கூட கொடுக்காமல் மறுதலித்து நஷ்டத்துக்கு உள்ளாக்கி தனியாருக்கு தாரை வார்ப்பதாக குற்றச்சாட்டு கிளம்பி இருந்தாலும் அதை எல்லாம் பொருட் படுத்தாமல் ஏர் இந்தியாவை விற்பனை செய்வதில் உறுதியாக இருக்கிறது அரசு.</div><div><br></div><div>அரசின் முடிவில் மாற்றம் இல்லை என்பது தெளிவான பிறகு நாம் இனி அதை யார் வாங்குவார்கள்? ஏர் இந்தியாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? ஊழியர்கள் நிலை என்ன என்பதை பற்றிய கவலைக்கு திரும்புவதே சரியாக இருக்கும்</div><div><br></div><div>அதற்கு.. யார் வாங்க போகிறார்கள் என தெரிய வேண்டும்.</div><div><br></div><div>அது வரை காத்திருப்போம்.</div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div></div>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-4539326129272553682021-09-01T19:27:00.000+05:302021-09-01T19:27:49.116+05:30திருக்கோவிலில் திருக்குறள்நடைபெற்று வரும் தமிழ் நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் "தமிழ் வளர்ச்சி துறை" மானிய கோரிக்கை குறித்த விவாத்துக்கு பதில் அளித்து பேசிய மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.<div><br></div><div>அதில் ஒன்று இந்து சமய அறநிலைய துறையுடன் இணைந்து, கோவில்களில் திருக்குறள் வகுப்பு நடத்தப்படும் என்பதும் ஒன்று.</div><div><br></div><div>தேவாரம், திருவாசகம் ஆகியவை கோவில்களில் வகுப்பு எடுப்பதை போல திருக்குறளையும் கோவில்களில் வகுப்பாக எடுக்க தமிழக அரசு திட்டம் அறிவித்து இருக்கிறது.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim0z3DrfK53wic9dKjO33y8CdIsXtsAQOyTcdg50YsnZBK1KW_nLHovB_vNJlaoIY3NPMVZXE1Tjhs0QnN1b2_T7izo38AG1AzljuY4CiF7RaCfPQ-833PSBUboxHYiiSqM9DDjdepumdN/s1600/1630504617122777-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim0z3DrfK53wic9dKjO33y8CdIsXtsAQOyTcdg50YsnZBK1KW_nLHovB_vNJlaoIY3NPMVZXE1Tjhs0QnN1b2_T7izo38AG1AzljuY4CiF7RaCfPQ-833PSBUboxHYiiSqM9DDjdepumdN/s1600/1630504617122777-0.png" width="400">
</a>
</div><br></div><div>மேலோட்டமாக பார்த்தால் இது தமிழை வளர்க்கும் மற்றும் ஒரு திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.</div><div><br></div><div>ஆனால் இதன் பின்னே இருக்கும் சில சிக்கல்களை இந்த அரசு ஆராய்ந்து பார்த்ததா என தெரியவில்லை.</div><div><br></div><div>சமீப காலங்களாக தமிழ்நாட்டில் திருவள்ளுவரை வைத்து சர்ச்சைகள் உருவாகி வருவது நமக்கு தெரிந்த ஒன்றே.</div><div><br></div><div>திருவள்ளுவர் இந்து மத முனிவர் என்றும் திருக்குறள் இந்து மத நூல் என்றும் பாஜகவும் அதன் துணை அமைப்புக்களும் ஒரு புனை கதையை ஏற்கனவே பரப்பி விட தொடங்கி இருக்கிறது.</div><div><br></div><div>திருவள்ளுவர் இந்து முனிவர் அல்ல, திருக்குறள் இந்து மத நூல் அல்ல, திருக்குறள் அனைத்து மதங்களுக்கும் பொதுவான கருத்துக்களை வாழ்வியல் அறிவுரைகளை கொண்ட "உலக பொது மறை" என விளக்கங்கள் கொடுத்து கொடுத்து ஓய்ந்து போய் கொண்டு இருக்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.</div><div><br></div><div>இதற்கிடையில் பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் குதர்க்க புத்தியுடன் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிந்து இருப்பது போல ஒரு போலி படம் ஒன்றை உருவாக்கி பரப்ப தொடங்கினர்.</div><div><br></div><div>தமிழ் நாடு அரசு தீர்க்கமான முடிவை எடுத்து திருவள்ளுவர் என்பவர் அதிகாரப்பூர்வமாக வெள்ளுடை அணிந்து வெண்தாடியுடன் வீற்றிருக்கும் திருக்கோலம் தான் தமிழ்நாடு அரசு அங்கீகரித்த படம் என சொல்லி அந்த பிரச்சனைக்கும் முற்றுப் புள்ளி வைத்தது.</div><div><br></div><div>***</div><div><br></div><div>இப்படியான சர்ச்சைகள் ஒரு வழியாக ஓய்ந்து இருக்கும் வேளையில் தான் தமிழ்நாடு அரசு இப்போது திருக்கோவில்களில் திருக்குறள் வகுப்பு எடுக்கும் திட்டம் பற்றி அறிவித்து இருக்கிறது</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlV971vg6859HzigUcOLwVohl9f7UyjesBDthIIG23qofSpRqfG9QHsejz-TU5mksDVg1SCvQ-86pr1uaXmT_SPZLrvSg6JqChbcnhQJcz51Cm1R4L68sao6_rD02GHTWwASgoGw3wz1vx/s1600/1630504604135309-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlV971vg6859HzigUcOLwVohl9f7UyjesBDthIIG23qofSpRqfG9QHsejz-TU5mksDVg1SCvQ-86pr1uaXmT_SPZLrvSg6JqChbcnhQJcz51Cm1R4L68sao6_rD02GHTWwASgoGw3wz1vx/s1600/1630504604135309-1.png" width="400">
</a>
</div><br></div><div>மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களின் அறிவிப்பு வந்த உடனேயே, பாஜகவின், அதன் துணை அமைப்புக்களின் ஆதரவாளர்கள், "திருவள்ளுவர் இந்து மத முனிவர் என்பதையும், திருக்குறள் இந்து மத நூல் என்பதையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டது" என்பதை போல ஒரு செய்தியை எல்லோருக்கும் பரப்பி வருகிறார்கள். </div><div><br></div><div>அரசு அறிவிப்பின் உண்மை தன்மையை விளக்கி சொல்ல முடியாத நிலையை தமிழக அரசு நமக்கு ஏற்படுத்தி இருப்பது தான் இப்போதைய சிக்கல். </div><div><br></div><div>அரசின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இருக்கையில் அதற்கு வேறு எந்த காரண காரியங்களையும் சொல்லி நம்மால் மடை மாற்றி விட முடியாது.</div><div><br></div><div>நோக்கம் என்னவோ திருக்குறளை பரவலாக்க கொண்டு சேர்க்கும் நோக்கம் தான். ஆனால் அதை கோவில்களில் சொல்லி கொடுப்போம் என்பதையும் தேவாரம் திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சொல்லி இருப்பதும் தான் பிரச்சனையை வேறு வகையில் திருப்பி இருக்கின்றன.</div><div><br></div><div>உதாரணமாக, இந்து மத கோவில்களில் இருந்து கொண்டு வரும் பழங்களை கூட ஏற்காத சிலர் பிற மதத்தில் குறிப்பாக கிறித்துவ மதத்தில் இருக்கிறார்கள். வேறு ஒரு மதத்தின் அடையாளமாக எது இருந்தாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள்.</div><div><br></div><div>திருக்குறள் இதுவரை பள்ளிகளிலும், பேருந்துகளிலும், அரசு அலுவலகங்களிலும் என பொதுவாக இருந்த நிலையில், குறிப்பிட்ட ஒரு மதத்தின் வழிபாட்டு தலத்தில் திருக்குறளை கொண்டு போய் வைப்பது எத்தகைய மாறுபாடான நிலைப்பாட்டை குழப்பத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்பதை சொல்லி தெரிய வைக்க வேண்டியது இல்லை.</div><div><br></div><div>திருக்குறளை ஒரு மதம் சார்ந்த நூலாக மக்களிடத்தில் இந்த திட்டம் கொண்டு சேர்த்து விடுமோ என்கிற அச்சம் எழுவது இயல்பே.</div><div><br></div><div>இந்து மதம் என சுருக்காமல் எல்லா வழிபாட்டு தலங்களிலும் என சொல்லி இருந்தால் கூட பிரச்சனை இருந்து இருக்காது என நினைக்கிறேன்.</div><div><br></div><div>தமிழ் இலக்கியங்களை பரவலாக்கம் செய்வது தான் நோக்கம் எனில் திருக்குறள் மட்டும் அல்லாமல் வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி என எல்லா தமிழ் இலக்கியத்தையும் கொண்டு சேர்த்து இருக்கலாம்.</div><div><br></div><div>திருக்குறள் ஏற்கனவே பள்ளிகளில் கட்டாயமாக்கபபட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் பேருந்துகள் என எங்கும் திருக்குறள் சென்று சேர்ந்து இருக்கிறது. பெரும்பாலான மக்களிடம் திருக்குறள் குறித்த புரிதல் உள்ளது. அதை மீண்டும் கோவில்கள் மூலம் கற்றுக் கொடுக்க வேண்டும் என அரசு முனைவது எதனால் என்பது புரியவில்லை. </div><div><br></div><div>திருக்குறளை பரவலாக்க பல்வேறு வழி முறைகள் இருக்கின்றன.</div><div><br></div><div>தமிழ் இலக்கிய பரவல் தான் நோக்கம் எனில் முன்பே சொன்னது போல இதுவரை பரவலாகக் கிடைக்காத பிற தமிழ் இலக்கியங்களை கொண்டு சேர்க்க முயற்சி செய்து இருக்கலாம்</div><div><br></div><div>எது எப்படியோ, அரசின் முடிவுக்கு, அது சரியோ தவறோ, ஏதேனும் ஒரு வகையில் நியாயம் கற்பித்து, அரசு செய்வது தான் சரி என சொல்லியாக வேண்டிய நிலையில் பலரும் உள்ளனர்.</div><div><br></div><div>ஆழ்ந்து யோசிக்கையில், திருவள்ளுவர் இந்து மத முனிவர் அல்ல என மூச்சு பிடித்து உரக்க சொல்லி களமாடிய நண்பர்களுக்கு தர்ம சங்கடத்தை கொடுத்து இருக்கிறது இந்த அரசு என்று தான் சொல்ல வேண்டும்.</div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-67210880891036314452021-07-21T18:02:00.000+05:302021-07-21T18:02:20.190+05:30GST வரி வசூலும் மாநில உரிமைகளும்சமீப காலங்களாக இணையத்தில் பெரும் விவாதம் ஆன விஷயங்களில் ஒன்று GST வரி வசூல் குறித்தது.<div><br></div><div>ஒன்றிய அரசு எல்லா வரியையும் வசூலித்து மாநிலங்களுக்கு தராமல் ஏமாற்றுவதாக ஒரு கருத்து உள்ளது.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtuZkBklzX6_5WbAAf2nR7eVeQD-sMTievnEHgNRvVlqBg2wSghIpH2kLZQHpWIXtQvOPdJSJeuQ-TWBOxDfl2LqN1-kC4h2U0xjLggbwfVeak5YQYz237yMa_5VDhDDbJan3hekA50Ser/s1600/1626870694446501-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtuZkBklzX6_5WbAAf2nR7eVeQD-sMTievnEHgNRvVlqBg2wSghIpH2kLZQHpWIXtQvOPdJSJeuQ-TWBOxDfl2LqN1-kC4h2U0xjLggbwfVeak5YQYz237yMa_5VDhDDbJan3hekA50Ser/s1600/1626870694446501-0.png" width="400">
</a>
</div><br></div><div>மாநிலங்களுக்கு வரி பங்கு முறையாக ஒன்றிய அரசு தரவில்லை என்பது உண்மை தான். ஆனால் ஒட்டுமொத்தமாக மாநிலங்களுக்கு வரி வசூல் எதுவுமே கிடைக்கவில்லை என்பது சரியல்ல.</div><div><br></div><div>விளக்கமாக சொல்கிறேன்.</div><div><br></div><div>GST வருவதற்கு முன்னர், உற்பத்தி நிறுவனஙகள் Excise வரி செலுத்த வேண்டும். சேவை நிறுவனங்கள Service Tax செலுத்த வேண்டும். இந்த இரண்டும் ஒன்றிய அரசின் கணக்குக்கு போகும்.</div><div><br></div><div>விற்பனையை பொறுத்த வரை, மாநிலத்துக்கு உள்ளே நடைபெறும் விற்பனைக்கு VAT வரியும் மாநிலத்துக்கு வெளியே நடைபெறும் விற்பனைக்கு CST வரியும் அந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.</div><div><br></div><div>இதில் VAT வரி மாநில அரசுக்கும், CST வரி ஒன்றிய அரசுக்கும் போகும்.</div><div><br></div><div>அதாவது Excise, Service Tax, CST ஆகியவை ஒன்றிய அரசுக்கும், VAT வரி மட்டும் மாநில அரசுக்கும் கிடைக்கும்.</div><div><br></div><div>GST யிலும் இதே முறை தான் சற்றே மாறுதலுடன் அமல் படுத்தப்பட்டது.</div><div><br></div><div>Excise Service Tax ஆகியவை ஒழிக்கப்பட்டு, GST யின் கீழ் கொண்டு வரப்பட்டது.</div><div><br></div><div>மாநிலத்துக்கு உள்ளே நடைபெறும் விற்பனைக்கு SGST & CGST ஆகியவையும், மாநிலத்துக்கு வெளியே நடைபெறும் விற்பனைக்கு IGST வரியும் இப்போது நிறுவனங்கள் கட்ட வேண்டும்</div><div><br></div><div>இதில் SGST நேரடியாக முழுமையாக மாநில அரசுக்கு கிடைத்து விடும்.</div><div><br></div><div>CGST முழுமையாக ஒன்றிய அரசின் கைக்கு போகும்</div><div><br></div><div>IGST வரியில் தான் மாநிலங்களுக்கு உரிய பங்கு பகிர்ந்து அளிக்கப் படும்.</div><div><br></div><div>இவை தவிர CESS வரி என்று ஒன்று ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் வரியை மாநிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையாக (Compensation CESS) ஆக கொடுக்கப் படுகிறது. இந்த CESS பற்றி பிறகு சொல்கிறேன்.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNam5Vi79h-dlDsSbNGvI_doDSKGCSIgMjEGKMR0LgTdH3_TulaY4guxvXgnQ9ibtXmf3s4aYP9BGB55j34e0Th3cNLnXe9ZK7tiCaqVHiuVcSNn8gbml3uO8Bu87HiUmss6Dy510bGGTQ/s1600/1626870690644112-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNam5Vi79h-dlDsSbNGvI_doDSKGCSIgMjEGKMR0LgTdH3_TulaY4guxvXgnQ9ibtXmf3s4aYP9BGB55j34e0Th3cNLnXe9ZK7tiCaqVHiuVcSNn8gbml3uO8Bu87HiUmss6Dy510bGGTQ/s1600/1626870690644112-1.png" width="400">
</a>
</div><br></div><div>இதில் இருந்து VAT வரி போலவே SGST வரியும் மாநிலங்களுக்கு நேரடியாக கிடைக்கிறது என்பது புரியும்.</div><div><br></div><div>GST என்பது மாநிலங்களின் உரிமையை மனதில் வைத்து இயற்றப் பட்ட சட்டம் என்பதால், சேவைகளுக்கும், உற்பத்திக்கும் கூட GST வரி அமல் ஆனது. இதன் மூலம் GST க்கு முன்பு கிடைக்காத வரிகளும் மாநிலத்துக்கு கிடைக்கத் தொடங்கி உள்ளது</div><div><br></div><div>உதாரணமாக ஒரு சேவை நிறுவனம் (service Industry) எடுத்து கொள்வோம். Contract Labour Supply செய்யும் நிறுவனத்தை மனதில் வைத்து கொள்ளுங்கள்.</div><div><br></div><div>அவர்களுக்கு ஆபீஸ் சென்னையில் உள்ளது. கோவையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கும், பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கும் அவர்கள் ஆட்களை அனுப்பி வைக்கிறார்கள் என்றால் அவர்களின் பில் இப்படி இருக்கும்</div><div><br></div><div>கோவை நிறுவனத்துக்கு - SGST 9% & CGST 9% என வரி விதித்து கட்டுவார்கள். இதில் SGST மாநிலத்துக்கு நேரடியாக கிடைக்கும்.</div><div><br></div><div>பெங்களூர் நிறுவனத்துக்கு - IGST 18% என வரி விதித்து கட்டுவார்கள். இதில் மாநிலத்தின் பங்கு பகிர்ந்து அளிக்கப்படும்.</div><div><br></div><div>GST வருவதற்கு முன்பு இந்த மாதிரி அல்லாமல் மொத்தமாக Service Tax 14.50% வரி கட்டி அது மொத்தமும் ஒன்றிய அரசுக்கு மட்டுமே போகும். மாநிலத்துக்கு உள்ளே நடந்தாலும் மாநிலத்துக்கு வெளியே நடந்தாலும் எல்லா வரியும் ஒன்றிய அரசுக்கு தான் போய் கொண்டு இருந்தது.</div><div><br></div><div>GST அதை மாற்றி, மாநிலத்தில் நடைபெறும் சேவையில் பாதி வரி நேரடியாக மாநிலத்துக்கு கிடைக்க வழி செய்து உள்ளது. </div><div><br></div><div>இது தவிர முன்பு மாநிலத்துக்கு உள்ளே விற்பனை ஆகும் பொருளுக்கு VAT வரி 5% என்று இருந்தது. ஆனால் GST சட்டம் மூலம் அதற்கு சராசரியாக 18% வரி விதிக்கப்பட்டு அதில் பாதியான 9% வரி மாநிலத்துக்கு கிடைக்கிறது. இது முன்னர் கிடைத்த 5% வரியை விட 4% அதிகம் ஆகும்.</div><div><br></div><div>இதனால் மாநில வரி வருவாய் உயரும் என்பது தான் நோக்கம்.</div><div><br></div><div>முன்னர் Excise வரி செலுத்தும் உற்பத்தி நிறுவனங்களின் வரி முழுமையும் ஒன்றிய அரசுக்கு தான் போகும். இப்போது அதுவும் GST மூலம் மாநிலத்துக்கு உரிய வரி நேரடியாக கிடைக்க வழி செய்யப்பட்டு உள்ளது.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKeqrLP-CURz02-oWQzQ9oa-0Bf3doOURor-M32wY3gUTj9Tnb_U-mITm0lXUueVDUgBNIup7JRnqUn_kuNpn-8K__Dn1MxP1bjJBfI-C-_26Cui3poWuLgXq1SjTBEtx_Nq67X4BVl7Hz/s1600/1626870686732682-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKeqrLP-CURz02-oWQzQ9oa-0Bf3doOURor-M32wY3gUTj9Tnb_U-mITm0lXUueVDUgBNIup7JRnqUn_kuNpn-8K__Dn1MxP1bjJBfI-C-_26Cui3poWuLgXq1SjTBEtx_Nq67X4BVl7Hz/s1600/1626870686732682-2.png" width="400">
</a>
</div><br></div><div>இவை எல்லாம் வைத்து பார்த்தால் மாநிலங்கள் வரி வருவாயில் அதிக லாபம் அடைவதை போல தோன்றும்.</div><div><br></div><div>ஆனால் சட்டம் சரியாக இருந்தாலும் அதை செயல்படுத்தும் ஒன்றிய அரசு அதை முறையாக செய்யாமல் இருப்பதால் தான் மாநிலங்கள் கஷ்டப்படுகின்றன.</div><div><br></div><div>மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய பங்கை கொடுக்காமல் இருப்பதால் மாநிலங்கள் கடன் வாங்கி சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.</div><div><br></div><div>GST செய்த முக்கியமான மற்றும் ஒரு மாற்றம், பொருள் சென்று சேரும் இடம் எதுவோ அந்த மாநிலத்துக்கு தான் பங்கு என மாற்றியது. (Consumption based tax)</div><div><br></div><div>இதனால் உற்பத்தி மாநிலங்களாக உள்ள தமிழ்நாடு, கர்நாடக, குஜராத் மாநிலங்கள் பாதிக்கப்பட்டு, பொருட்களை பெறும் மாநிலங்களான பீகார் அசாம் போன்ற மாநிலங்களுக்கு வரி பங்கு அதிகம் கிடைக்க தொடங்கி உள்ளது.</div><div><br></div><div>இது வளர்ச்சியை நோக்கி திட்டங்கள் தீட்டும் மாநிலங்களுக்கான தண்டனையாக அமைந்து விட்டது</div><div><br></div><div>மாநில உரிமையின் அடிப்படையில், வளர்ச்சி திட்டங்களை செய்யும் மாநிலங்களுக்கு வரி பங்கு கிடைக்குமாறு சட்டத்தை மாற்ற வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை யாரும் இதுவரை செய்யவில்லை.</div><div><br></div><div>முறையாக வரி பங்கீட்டை மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி இருக்க வேண்டும். அதையும் மாநிலங்கள் செய்யவில்லை. அல்லது வலியுறுத்தியும் அது நடைபெறவில்லை.</div><div><br></div><div>இவைகளால் தான் மாநில பொருளாதாரம் சிக்கலுக்கு ஆளாகிறது.</div><div><br></div><div>இனி CESS விஷயத்துக்கு வருகிறேன்.</div><div><br></div><div>GST வருவதற்கு முன்பு மாநிலங்களுக்கு கிடைத்த வரியையும், GST வந்த பிறகு மாநிலங்களுக்கு கிடைக்கும் வரியையும் ஒப்பிட்டு GST காரணமாக வரி வருவாய் குறைந்து இருந்தால் அதை ஈடு கட்ட உருவாக்கப்பட்டது தான் இந்த Compensation CESS. இதுவும் 5 ஆண்டு காலத்துக்கு தான் தர முடியும் என சட்டம் சொல்கிறது. அதற்கு பிறகு அந்தந்த மாநிலங்கள் அவர்களாகவே சமாளித்து கொள்ள வேண்டும்.</div><div><br></div><div>இது மாநில உரிமைக்கு எதிரானது.</div><div><br></div><div>ஏற்கனவே சொன்னது போல, நாம் உற்பத்தி செய்து பின் தங்கிய மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் அதற்கான பலன் பின் தங்கிய மாநிலங்களுக்கு தான் செல்லும் எனில், நமக்கான வரி இழப்பை எப்படி ஈடு கட்டுவது?</div><div><br></div><div>CESS பங்கீடு ஒழுங்காக செய்யப்படவில்லை என்கிற குறை ஒருபுறம் இருந்தாலும், CESS பங்கீடு அடுத்த ஆண்டு முடிவுக்கு வந்து விட்டால், அதன் பிறகு எந்த இழப்பீடும் இல்லாமல் மாநிலங்கள் எப்படி சமாளிக்கும் என்பது தான் முக்கியமான கேள்வி</div><div><br></div><div>ஆனால், இது குறித்து கூட பெரிதாக எந்த மாநிலங்களும் அக்கறை காட்டியதாக தெரியவில்லை.</div><div><br></div><div>கவுன்சில் கூட்டத்தில் வாக்கு சதவீதம் குறைவு போன்ற முக்கியமல்லாத விஷயங்களை விவாதிப்பதை விடவும் அவசியமானது Consumption Based Taxing முறையை மாற்றுவது என்பதை யாரும் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.</div><div><br></div><div>அடுத்த ஆண்டு CESS முடிவுக்கு வந்தால் ஒவ்வொரு மாநிலமும் இழப்பை நோக்கி செல்கையிலாவது சுதாரித்து கொள்கிறார்களா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்</div><div><br></div><div><br></div><div><br></div>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-73623302679753498642021-07-08T06:40:00.000+05:302021-07-08T06:40:31.805+05:30எழுவர் விடுதலையும் அதன் அரசியலும்முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்பு உடைய எழுவர் விடுதலை தொடர்பாக இப்போது தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள், இயக்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.<div><br></div><div>சமீபத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பு ஏற்று உள்ள திமுக, அந்த எழுவரில் ஒருவரான திரு. பேரறிவாளன் அவர்களுக்கு சட்ட விதிகளை தளர்த்தி சிறப்பு விடுமுறை கொடுத்து வெளியே அனுப்பியது. அந்த விடுமுறை மீண்டும் நீட்டிக்கப் பட்டு உள்ளது. இப்படியே அந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமற்ற விடுதலையாக அது மாறும் வாய்ப்பு உள்ளது. மகிழ்ச்சி.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZYv2JGjq8gy8cX3_ahxFCoI61wM9373ljqhICGEGHxmBlGCzzW7M-VkTtQuM5Ro6r0FOZ69nFKqiJVk0FzXrUIa8Y5-4iS92LiiKI2xB0KxTFaJ0-hYP8skgJyDkr8yF1TKyChfqmKPTm/s1600/1625706580193038-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZYv2JGjq8gy8cX3_ahxFCoI61wM9373ljqhICGEGHxmBlGCzzW7M-VkTtQuM5Ro6r0FOZ69nFKqiJVk0FzXrUIa8Y5-4iS92LiiKI2xB0KxTFaJ0-hYP8skgJyDkr8yF1TKyChfqmKPTm/s1600/1625706580193038-0.png" width="400">
</a>
</div><br></div><div>மீதம் உள்ள ஆறு பேரின் (முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்) விடுதலைக்காகவும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. </div><div><br></div><div>இணையத்தில், இந்த எழுவர் விடுதலை என்பது "ஈழ மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்பு" என்கிற கருத்துருவாக்கம் இன்னொரு புறம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது</div><div><br></div><div>ஈழ மக்களுக்காக நாம் செய்ய கூடிய செய்தே ஆக வேண்டிய மிக மிக முக்கியமான விஷயமாக இந்த எழுவர் விடுதலை முன்வைக்கப் பட்டு வருகிறது.</div><div><br></div><div>அநேகமாக இப்போது எடுக்கும் வேகமான நடவடிக்கைகளை பார்த்தால் அடுத்த ஓராண்டு காலத்துக்குள் அவர்கள் விடுதலை ஆவதற்கான வாய்ப்புக்கள் தெரிகின்றன. </div><div><br></div><div>இவை எல்லாம் இப்போது நடைபெற்று வருபவை.</div><div><br></div><div>எழுவர் விடுதலை என்பது எந்த வகையில் ஈழ மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கை என்பது மட்டும் இங்கே பலருக்கும் புரியவில்லை. அப்படியானால் ராஜீவ் கொலை என்பது ஈழ மக்கள் நலன் சார்ந்த ஒன்றா என்பதையும் யாரும் இன்னமும் தெளிவு படுத்தவில்லை.</div><div><br></div><div>ராஜீவ் கொலை என்பது வெறும் ராஜீவ் கொலை மட்டுமல்ல. அது அந்த வழக்கின் தீர்ப்பிலேயே விவரிக்கப்பட்டது போல "மிக மிக அரிதிலும் அரிதான திட்டமிட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல்".</div><div><br></div><div>ராஜீவ் கொலைக்கு இந்த வெடிகுண்டு தாக்குதல் முறையை தேர்ந்தெடுத்தவர்கள், அந்த பொது கூட்டத்தில் இந்த வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தினால் பல அப்பாவி பொதுமக்களும் இறந்து போவார்கள் என நன்றாக தெரிந்தவர்கள் தான். அது தெரிந்தும், தமிழக தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை என திட்டமிட்டு செயல்படுத்திய பயங்கரவாத தாக்குதல் அது.</div><div><br></div><div>அப்பாவி பொது மக்கள், தமிழ் நாட்டு தமிழர்கள் 15 பேர் வரை பலியான நிகழ்வு அது. 40 பேருக்கு மேல் மிக கடுமையாக காயம்பட்டு உடல் உறுப்புக்களை இழந்து வாழ்வாதாரம் நொடிந்து போனது எல்லாம் தனி கதை.</div><div><br></div><div>தமிழ் நாட்டு தமிழர்கள் மீது, அவர்களுக்கான உதவிகள் மீது அக்கறை கொண்டு, உயிர் இழந்தவர்களுக்கு, படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்காக போராட வேண்டிய தமிழ் நாட்டு இயக்கங்கள், அதில் போதுமான கவனம் செலுத்தாமல், அந்த பயங்கரவாத நிகழ்வுக்கு துணை நின்றவர்களை பாதுகாப்பதில் காட்டும் அரசியல் தான் முப்பது ஆண்டுகளாக இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.</div><div><br></div><div>****</div><div>முப்பது ஆண்டுகள் சிறையில் அவர்கள் தண்டனை பெற்று வந்தார்கள் என்கிற பரிதாபமான குரல்களும் இப்போது அதிகமாக கேட்க தொடங்கி இருக்கின்றன.</div><div><br></div><div>பயங்கரவாத தடுப்பு சட்டப்படி, பயங்கரவாத நிகழ்வு நடக்கப் போவது குறித்த தகவல் தெரிந்தாலே அரசிடம் அதை சொல்ல வேண்டும். தகவல் தெரிந்து அரசிடம் சொல்லாமல் இருப்பதே தண்டனைக்கு உரிய குற்றம். </div><div><br></div><div>இந்நிலையில் அந்த பயங்கரவாத செயல் நிகழ்த்த தேவைப்படும் உதவிகள் செய்து, அந்த பயங்கரவாதிகளை அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வைத்தது எல்லாம் கடுமையான தண்டனைக்கு உரிய குற்றமாக TADA & POTA சட்டங்கள் வரையறை செய்து உள்ளது.</div><div><br></div><div>அந்த வகையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உச்ச பட்ச தண்டனையை, குறைப்பதற்கான மேல் முறையீடு, கருணை மனு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான கால அவகாசம் வரை அவர்களுக்கான தண்டனை தள்ளி வைக்கப்பட்டது. ஆதனால் முப்பது ஆண்டு காலம் "தண்டனை" என்பதை விட அவர்களுக்கான சலுகை பெறுவதற்கான கால அவகாசம் என்றே சட்டம் பார்க்கும்.</div><div><br></div><div>அவர்களுக்கான தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படவே பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த பதினைந்து ஆண்டுகளும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை தள்ளி வைக்கப்பட்டு தண்டனை குறைபுக்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டது என்பதே உண்மை.</div><div><br></div><div>இதில் இன்னொரு புறம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் தண்டனையை பற்றி புரியாமல் சாதாரண குற்றவியல் தண்டனை சட்ட விதிமுறைகளின் படி நினைத்து பேசும் பெரும் தலைவர்களின், அவர்தம் தொண்டர் அடிபொடிகளின் விவாதங்கள் வேறு ஆச்சர்யம் தருகின்றன.</div><div><br></div><div>பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கொடுக்கப் பட்ட தண்டனை ஏற்கனவே குறைக்கப்பட்ட நிலையில் (remission) இன்னும் ஒரு தண்டனை குறைப்பு (second remission) சாத்தியமா என்பது போக போக தான் தெரியும்.</div><div><br></div><div>ஆனால் இந்தியாவில் சட்டத்தை விட அரசியல் தானே சக்தி வாய்ந்தது? </div><div><br></div><div>தேவைப்பட்டால் சட்டத்தையே கூட திருத்தி முன் தேதி இட்டு வெளியிட செய்தாலும் ஆச்சர்யம் இல்லை.</div><div><br></div><div>****</div><div><br></div><div>தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில், பேருந்தை எரிப்பது தான் நோக்கம், ஆனால் துரதிர்ஷ்ட வசமாக மூன்று மாணவிகளும் பலியானார்கள் என்கிற வாதத்தை நாமெல்லாம் எந்த அளவுக்கு கடுமையாக எதிர்த்தோம் என்பது தெரியும். </div><div><br></div><div>ஆனால் ராஜீவ் கொலையின் போது உடன் இறந்த அப்பாவி தமிழர்கள் பற்றி எந்த கவலையும் இன்றி கொலைக்கு உதவி செய்தவர்களை காப்பாற்றும் முனைப்பில் மட்டுமே தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இயங்கி கொண்டு இருப்பது வியப்பு தான்.</div><div><br></div><div>ஈழ மக்கள் நலன் என்கிற ஒற்றை புள்ளியில் நாம் நமது மக்களை சமரசம் செய்து கொள்கிறோமோ என தோன்றுகிறது.</div><div><br></div><div>எனினும் நான் முன்பே சொன்னது போல, ராஜீவ் கொலைக்கான பயங்கரவாத நிகழ்வு நடைபெற உதவியவர்களை காப்பாற்றுவது என்பது எந்த வகையில் ஈழ மக்களின் நலனுக்கு உதவும் என்பதை யாராவது விளக்கினால் நல்லது.</div><div><br></div><div>ஈழ மக்களின் நலம் என்பது எழுவர் விடுதலையில் தான் இருக்கிறது என்கிற கட்டமைப்பு எதற்காக உருவாக்கப்படுகிறது என்பதையும் விளக்கினால் மேலும் நல்லது.</div><div><br></div><div>என்னை போன்ற சாமானியர்கள் அதன் தொடர்பை, அதன் பின்னுள்ள அரசியலை பற்றி புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.</div><div><br></div><div>யாரேனும் விளக்குவார்களா?</div><div><br></div><div><br></div>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-6913536065586792672021-06-18T08:03:00.000+05:302021-06-18T08:03:14.586+05:30தங்கத்துக்கு ஹால்மார்க் கட்டாயம் - விரிவான தகவல்கள்நேற்று இந்திய அரசு எடுத்த முடிவின் படி, இனிமேல் நகைக் கடைகள் விற்கும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் (Hallmark) தர முத்திரை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.<div><br></div><div>ஏற்கனவே கடந்த ஜனவரி 16 ஆம் தேதி அமல் ஆக வேண்டிய இந்த கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்ட நிலையில் இப்போது அமல் ஆகி உள்ளது.</div><div><br></div><div>இந்தியாவில் தங்கம் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. தங்க நகைகளின் மீதான ஆர்வம் இந்தியர்களுக்கு மிக அதிகம்.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpOsZevFLOLNq18MGgY0PLn10qBnMT6cfUA6rDivByYj0QNBRjT5VZhi9WjJuHRjdsmgFbhUKM2lkFs_DXxMkuHbNsfWgIEw3V-tC1NCnaS8a_2o2Lm_0_gJ_XLxSqsLJ1FRUpAbHRehlg/s1600/1623983543127199-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpOsZevFLOLNq18MGgY0PLn10qBnMT6cfUA6rDivByYj0QNBRjT5VZhi9WjJuHRjdsmgFbhUKM2lkFs_DXxMkuHbNsfWgIEw3V-tC1NCnaS8a_2o2Lm_0_gJ_XLxSqsLJ1FRUpAbHRehlg/s1600/1623983543127199-0.png" width="400">
</a>
</div><br></div><div>மொத்த தங்கத்தில் 49% இந்தியர்களின் வீடுகளில் உள்ளன. 22% கோவில்களிலும். மற்றவை பார்கள், காயின்களாக உள்ளவை.</div><div><br></div><div>வீடுகளிலும் கோவில்களிலும் உள்ள நகைகள் பெரும்பாலும் ஹால்மார்க் முத்திரை இல்லாத பழைய நகைகள். </div><div><br></div><div>2000 ஆண்டு முதல் தான் BIS (Bureau of Indian Standards) இந்திய தர நிர்ணய அமைப்பு, Hallmark முத்திரையை தங்க நகைகளுக்கு வழங்கும் முறையை கொண்டு வந்தது. தங்கத்தின் சுத்தத்தன்மை பரிசோதிக்கப்பட்டு இந்த சான்றிதழ் வழங்கப்படும். 0.916 கிராம் சுத்தமான தங்கம் கொண்ட நகைகள் என்கிற உறுதியை இது வழங்கும். (1 கிராம் தங்க நகையில் 0.916 கிராம் தங்கமும், 0.084 கிராம் இதர உலோகங்களும் கொண்டவை என்கிற உறுதி சான்றிதழ்)</div><div><br></div><div>Hallmark இல்லாத நகைகளில் பிற உலோகங்களின் கலப்பு மிக அதிகமாக இருக்கும். அவை சுத்தமான தங்கம் அல்ல என்பது BIS நிறுவனத்தின் முடிவு.</div><div><br></div><div>பொதுமக்கள் இது போன்ற ஏமாற்றங்களை தவிர்த்து அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு ஈடான சுத்தமான நம்பகமான தங்க நகைகளை வாங்க வேண்டும் என்பதற்காக அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது.</div><div><br></div><div>இதன் படி, எந்த ஒரு நகை கடையும் இன்று முதல் (18.06.2021) பொது மக்களுக்கு விற்கும் நகைகள் கட்டாயமாக Hallmark முத்திரை கொண்டதாகவும், 6 இலக்க குறியீடு கொண்டதாகவும், BIS தர நிறுவனம் கொடுத்த சான்றிதழ் உள்ளதாகவும் இருக்க வேண்டும்</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2XJSFsbt4qkLUR9LFmejyRaQOaVpYmK-mg2Jo_hcanGiyH0XwU7tZx-mOLZyFiW0INDRE5WTOpHEV9aOtqB60S6hymXN7GF4HsLNJVn3wFcVeO0_BooE5SyXozMiLA-r2_aDhdZPwsVCx/s1600/1623983535567266-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2XJSFsbt4qkLUR9LFmejyRaQOaVpYmK-mg2Jo_hcanGiyH0XwU7tZx-mOLZyFiW0INDRE5WTOpHEV9aOtqB60S6hymXN7GF4HsLNJVn3wFcVeO0_BooE5SyXozMiLA-r2_aDhdZPwsVCx/s1600/1623983535567266-1.png" width="400">
</a>
</div><br></div><div>Hallmark இல்லாத நகைகளை விற்பனை செய்தால் நகையின் விலையை போல ஐந்து மடங்கு அபராதமும் ஓராண்டு சிறையும் தண்டனையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</div><div><br></div><div>சில விதி விலக்குகள் இதில் உள்ளன.</div><div><br></div><div>ஆண்டுக்கு ₹40 லட்சம் வரையே விற்பனை உள்ள நகை கடைகளும், ஜாப் வர்க் முறையில் நகைகளை செய்து கொடுக்கும் நிறுவனங்களும் இந்த விதிகளின் கீழ் வராது.</div><div><br></div><div>முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 256 மாவட்டங்களில் (தங்க நகை பரிசோதனை நிலையங்கள் உள்ள மாவட்டங்கள்) கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களும் விரைவில் இந்த விதி முறையின் கீழ் கொண்டு வரப்படும்.</div><div><br></div><div>பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய நகைகளை விற்க விரும்பினால் அதை நகை கடைகள் வாங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் மாத இறுதி வரை அதற்கு எந்த அபராதமும் தண்டனையும் கிடையாது என்று ஒரு விதி விலக்கும் அளிக்கப் பட்டு உள்ளது.</div><div><br></div><div>இப்போது நாம எதார்த்த விஷயத்துக்கு வருவோம்.</div><div><br></div><div>வீடுகளில் உள்ள பழைய தங்க நகைகளை ஆகஸ்டு மாதம் வரை வழக்கம் போலவே நகை கடைகளில் கொடுத்து புதிய Hallmark நகைகளாக மாற்றி வாங்கிக் கொள்ளலாம். வித்தியாச தொகை மட்டும் கட்டினால் போதும்</div><div><br></div><div>ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு நகைக் கடைகள் பழைய நகைகளை வாங்குவார்களா என தெரியாது. வாங்கினால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது நடக்கும். பொது மக்கள் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு விற்கும் பழைய நகைகளுக்கு உரிய மதிப்பு மிக மிக குறைவாகவே கிடைக்கும். எனவே மாற்ற விரும்புபவர்கள் ஆகஸ்ட் இறுதிக்குள் மாற்றி விடுவது லாபம்.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrGurOWnK24wMd2R8R0lzUbUf7x7xGKkQtBPjMZbkaJsxwucpw_cV2esNK6Jza7cglAEIo7aqWhfTnDDR8FC7U9pHm98dP5w4p6sw7Z1MRAJf_XQF6NL1Pp8JNvzWbS4y-K5XNuN2u-2QS/s1600/1623983528736866-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrGurOWnK24wMd2R8R0lzUbUf7x7xGKkQtBPjMZbkaJsxwucpw_cV2esNK6Jza7cglAEIo7aqWhfTnDDR8FC7U9pHm98dP5w4p6sw7Z1MRAJf_XQF6NL1Pp8JNvzWbS4y-K5XNuN2u-2QS/s1600/1623983528736866-2.png" width="400">
</a>
</div><br><br></div><div>இப்போது இருக்கும் சூழலில் நகைகளை மாற்றவும் செலவு செய்ய வேண்டி இருக்கும் (வித்தியாச தொகை). பலரது பழைய நகைகள் அடமானத்தில் இருக்கும். அதை மீட்டு மறு அடகு வைக்க வேண்டும் என்றாலும் பணம் வேண்டும்.</div><div><br></div><div>திடீர் என்று இத்தனை பணத்துக்கு பொது மக்கள் எங்கே போவார்கள் என அரசு யோசித்தது மாதிரி தெரியவில்லை.</div><div><br></div><div>தங்க கடத்தல் அதிகம் நடப்பது ஜாப் வர்க் முறையில் நகைகளை செய்து கொடுக்கும் நபர்கள் & சிறு நகை கடைகள் மூலம் தான் என்பது தெரிந்தும் ஏன் அவர்களுக்கு மட்டும் இந்த விதிகளில் விலக்கு கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் புரியவில்லை.</div><div><br></div><div>பெரிய கடைகள் தாங்கள் கைவசம் வைத்து இருக்கும் நகைகளுக்கு கட்டாயம் purchase details வைத்து இருக்க வேண்டும். பொது மக்களிடம் இருந்து பழைய நகைகளை வாங்கினாலும் அவர்களிடம் இருந்து declaration வாங்கி இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் சிறு சிறு கடைகள் மூலம் தான், எங்கிருந்து வாங்கப்பட்டது என்கிற விவரங்கள் இல்லாத தங்கம், வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம், கணக்கில் வராத தங்கம், ஆகியவை நகைகளாக மாற்றப்பட்டு மறு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.</div><div><br></div><div>சமீபத்தில் கூட வருமான வரித்துறை நடத்திய ரெய்டுகளில் சம்மந்தப்பட்ட நகை விற்பனையாளர்கள் அதிகமாக தெரியாத பிரபலம் அல்லாத நிறுவனங்கள் தான்.</div><div><br></div><div>எனவே அவர்களுக்கான விலக்கு யோசிக்க வைக்கிறது.</div><div><br></div><div>எது எப்படியோ.. இந்த முடிவு உண்மையில் வரவேற்க வேண்டிய ஒன்று.</div><div><br></div><div>இனி தங்கம் வாங்குவதாக இருந்தால் பெரிய கடைகளில் சென்று தர சான்றும் Hallmark குறியீடும் கொண்ட நம்பகமான சுத்தமான தங்க நகைகளை மட்டுமே வாங்குங்கள். எல்லா கடைகளிலும் தங்கத்தின் விலை ஒன்று தான். சிறிய கடைகளில் சென்று Hallmark இல்லாத நகைகளை வாங்கி ஏமாற வேண்டாம்</div><div><br></div><div>கைவசம் பழைய நகைகள் இருந்தால் எவ்வளவு சீக்கிரம் மாற்றிக் கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாற்றி கொள்வது நஷ்டத்தை குறைக்கும். ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு பழைய நகை வாங்க கடைகள் யோசிக்கக் கூடும். அப்படியே வாங்கினாலும் மிக குறைந்த தொகையே மதிப்பீடு செய்து கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.</div><div><br></div><div>அரசு Hallmark கட்டாயம் என அறிவித்த செய்தி குறிப்பு இங்கே காணலாம்.</div><div><br></div><div><a href="https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727661">அரசின் செய்தி குறிப்பு</a><br></div><div><br></div>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-51142403096463592192021-05-26T12:01:00.001+05:302021-05-26T12:05:35.310+05:30தமிழக அரசும் தடுப்பூசி முகாம்களும்<div>சத்தமே இல்லாம தமிழகத்தில் தடுப்பூசி போடும் முகாம்கள் தமிழக அரசின் சார்பில் பெரிய அளவில் நடந்துகொண்டு இருக்கிறது.</div><div><br></div><div>பெரிய நகரங்களில் நடமாடும் மினி கிளினிக் மூலமும், பிற மாவட்டங்களில் PHC மூலமும் பல்லாயிரக்கணக்கான ஊசிகள் போடப்படுகிறது</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP7cXDFlItt049F6_CklwgZveAV5NSs2lP7CoSPrOQC-iB85wZ7YSZW8f_odMMlhNGU4HYDfevDlTLmK5bj1OuGbamTxTvH1nqy2K_MD7Xy7Ec3PGD3QmvHRLXpKjYLrrS3GtsUhL6q6R6/s1600/1622010613282039-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP7cXDFlItt049F6_CklwgZveAV5NSs2lP7CoSPrOQC-iB85wZ7YSZW8f_odMMlhNGU4HYDfevDlTLmK5bj1OuGbamTxTvH1nqy2K_MD7Xy7Ec3PGD3QmvHRLXpKjYLrrS3GtsUhL6q6R6/s1600/1622010613282039-0.png" width="400">
</a>
</div><br></div><div>தமிழக சுகாதாரத்துறை கட்டமைப்பு நம் எல்லோருக்கும் அறிந்த ஒன்றே. நகரங்கள் மட்டும் அல்லாமல் கிராமங்கள், மலை பகுதி மக்கள் வாழிடங்கள், தொலை தூர குடியிருப்புக்கள் என அனைத்து இடங்களிலும் கூடுமானவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப் பட்டு உள்ளன.</div><div><br></div><div>மத்திய அரசின் தடுப்பூசி தகவல்கள் பதிவேற்றப்படும் CoWin இணைய தளம் அல்லாமல் தமிழக அரசு தனக்கு என தனியான ஒரு தகவல் தளத்தை உருவாக்கி அதில் தடுப்பூசி குறித்த தகவலைக் குறித்து வருகிறது.</div><div><br></div><div>தமிழக அரசின் முகாம்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள CoWin தளத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் அட்டை எடுத்து சென்று நேரடியாக போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போட்டு கொண்டதற்கு சான்றாக தமிழக அரசு தற்காலிகமாக ஒரு அட்டை தருகிறார்கள். பின்னர் சான்றிதழ் வழங்கப்படும்.</div><div><br></div><div>CoWin தளத்தை மட்டுமே பார்த்து தமிழக அரசு மீது குறை சொல்வோர் விரைவில் ஒரு பெரும் சாதனை செய்தியைப் பற்றி அறிவார்கள் என நம்புகிறேன். எந்த வித விளம்பரங்களும் இல்லாமல் தமிழக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் ஒரு பெரிய இயக்கம் மாநிலம் முழுவதிலும் சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.</div><div><br></div><div>அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை கொண்ட பெரிய தொழிற்சாலைகளில் தனி தனியாக முகாம் போட்டு எல்லா தொழிலாளர்களுக்கும் அந்தந்த தொழிற்சாலைகளில் தடுப்பூசி முகாம்கள் நடந்து கொண்டு இருக்கிறது. </div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikUVQmUff4HoHmZtnGbz4GLOKBuyDI4EhyPY2d6zdC4Kh-FnDnsryQ4LiMwWdWWNCg46_zd2blZSP4RHM2et1LitPo0N4YwHZoVfm7SrzDfw9ytJxrO_9LgFuKQ-f-vDnqJfEBhvTZyvzU/s1600/1622010605660584-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikUVQmUff4HoHmZtnGbz4GLOKBuyDI4EhyPY2d6zdC4Kh-FnDnsryQ4LiMwWdWWNCg46_zd2blZSP4RHM2et1LitPo0N4YwHZoVfm7SrzDfw9ytJxrO_9LgFuKQ-f-vDnqJfEBhvTZyvzU/s1600/1622010605660584-1.png" width="400">
</a>
</div><br></div><div>இது போக பள்ளிகள் கல்லூரிகளில் வேறு தனியாக முகாம்கள் நடக்கிறது இருக்கு.</div><div><br></div><div>அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் கூட முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.</div><div><br></div><div>PHC, Mobile Clinics இன்னொரு புறம் மக்களுக்கு இலவசமாக ஊசிகள் போட்டுக் கொண்டு இருக்கு</div><div><br></div><div>வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள எனது நண்பர்கள் உறவினர்கள் மூலம் அறிந்த தகவலின் படி கிராமங்கள் மலை கிராமங்கள் தொலை தூர பகுதி மக்களுக்கு கூட நடமாடும் வாகனம் மூலம் சென்று ஊசி போட்டு வருகிறது தமிழக அரசு</div><div><br></div><div>ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் ஊசி போதுமான அளவு இல்லை, குறைவு தான் என்றாலும் அத்தனையும் உபயோகிக்கிறது தமிழக அரசு. </div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5LpzphCCpG4N7MRCmUvUWf9KYMLViStAt44zNqGJPKbMuHjQ1lAVCGJ56LC3gMezSU1yuYoqMZ_0Wq2yiwwnUAGw91AKwq_SE4UBUbsPe7Kdzp5fZgdIfEp9V_A9Vb3-5_dPh14UzhBwl/s1600/1622010598660443-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5LpzphCCpG4N7MRCmUvUWf9KYMLViStAt44zNqGJPKbMuHjQ1lAVCGJ56LC3gMezSU1yuYoqMZ_0Wq2yiwwnUAGw91AKwq_SE4UBUbsPe7Kdzp5fZgdIfEp9V_A9Vb3-5_dPh14UzhBwl/s1600/1622010598660443-2.png" width="400">
</a>
</div><br></div><div>சராசரியாக ஒவ்வொரு PHC யிலும் 200 பேருக்கு ஒரு நாளில் தடுப்பூசி போடப்படுகிறது. சில மையங்களில் ஒரு நாளைக்கு 500 ஊசிகள் எல்லாம் போடப்பட்டு இருக்கிறது.</div><div><br></div><div>கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளில் 14000 ஊசிகள் இலவசமாக போடப்படுகிறது</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2_GIirWXjbYKN1DaxfBUkVd2b5Cs5UP36AqwZO-uhz1j1sT4Nbf8LeXt_XqZm8XQYqEd3cjW7NZDlh8aiZ18bB8FwMAt8GygOKonEYAvxqedKIOhPwHLR-hAynJ6YvX7zxnJC2kBnBem5/s1600/1622010590721622-3.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2_GIirWXjbYKN1DaxfBUkVd2b5Cs5UP36AqwZO-uhz1j1sT4Nbf8LeXt_XqZm8XQYqEd3cjW7NZDlh8aiZ18bB8FwMAt8GygOKonEYAvxqedKIOhPwHLR-hAynJ6YvX7zxnJC2kBnBem5/s1600/1622010590721622-3.png" width="400">
</a>
</div><br></div><div>ஆனைமலை சேத்துமடை என உட்பகுதி கிராமங்கள், நஞ்சுண்டாபுரம் பீளமேடு என நகர பகுதிகள் என எல்லா இடங்களிலும் முகாம்கள் உள்ளன.</div><div><br></div><div>இங்கே கள நிலவரம் தெரியாமல் இணைய தகவல்களை மட்டுமே பார்த்து தமிழக அரசை திமுகவை குறை சொல்லி கொண்டு இருக்கும் பலருக்கு விரைவில் இந்த தகவல்கள் எல்லாம் தெரிய வரும் போது மிக பெரிய ஆச்சர்யமாக அவர்களுக்கு இருக்கக்கூடும்</div><div><br></div><div>திமுக அரசு எப்போதும் போல விளம்பரம் இல்லாமல் மக்கள் பணி செய்வதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து கொண்டு இருக்கிறது</div><div><br></div><div>ஒரு சந்தோஷமான சாதனை செய்தி on the way மக்களே.. </div><div><br></div>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-8854995381845571642021-05-25T19:11:00.001+05:302021-05-25T19:11:12.961+05:30சமூக வலைதளங்களும் அரசின் கட்டுப்பாடும்<div>கடந்த பிப் மாதம் மத்திய அரசு, இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது (பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே)<br></div><div><br></div><div>அதன் படி இந்தியாவில் இயங்கும் சமூக வலை தள நிறுவனங்கள் சில விதிகளை கடை பிடிக்க வேண்டும்</div><div><br></div><div>1. குறை தீர்ப்பு குழு அமைத்தல்</div><div><br></div><div>2. மாதா மாதம், பெறப்பட்ட குறைகளின் எண்ணிக்கை, அதில் தீர்க்கப்பட்ட குரைகளின் நிலை ஆகியவற்றை அரசுக்கு அனுப்புவது</div><div>இதனுடன் இன்னொரு விதியாக</div><div><br></div><div>3. பயனர்கள் பதிவுகளை முன்னதாக தணிக்கை செய்து சட்டப்படி ஏற்புடைய சரியான பதிவுகளை மட்டுமே வெளியிட வேண்டும்</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVZpDiRNjGE1layJAEtKwVPiNP9RhoXoqM0uIcyj8WWzhMblO7k58m1rVk1VrWtb_wx4UfmocHg8ZmY-ICmSqZK0-rhilja2-VbO9krh5HaUjCEo__zBIiCv_I9wM2uuiKTjgq6ErltyoD/s1600/1621950014311984-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVZpDiRNjGE1layJAEtKwVPiNP9RhoXoqM0uIcyj8WWzhMblO7k58m1rVk1VrWtb_wx4UfmocHg8ZmY-ICmSqZK0-rhilja2-VbO9krh5HaUjCEo__zBIiCv_I9wM2uuiKTjgq6ErltyoD/s1600/1621950014311984-0.png" width="400">
</a>
</div><br></div><div>4. வெளியான பதிவுகளின் மீது அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படும் எனில் அதற்கான பொறுப்பு சமூக வலைதள நிறுவனங்களை தான் சேரும்</div><div><br></div><div>5. பயனர் தவறுக்கு நிறுவனங்களே பொறுப்பு</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOgHwQoJQp_OdboIyMPSXsDXhITg_mGUHRVLOaLroPS9EmMW1H017aCxGBRftF22D6gP3lInVmp03Y85qMeSEM2kN2rUktHZqEJrGSHYiB4OPEwsJZo601YBGkpeDDJNemmW04LYkFBOI-/s1600/1621950006613916-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOgHwQoJQp_OdboIyMPSXsDXhITg_mGUHRVLOaLroPS9EmMW1H017aCxGBRftF22D6gP3lInVmp03Y85qMeSEM2kN2rUktHZqEJrGSHYiB4OPEwsJZo601YBGkpeDDJNemmW04LYkFBOI-/s1600/1621950006613916-1.png" width="400">
</a>
</div><br></div><div>இந்த விதிகள் எல்லாம் மே 26 ஆம் தேதி அமலுக்கு வரும்</div><div><br></div><div>அரசின் இந்த விதிமுறை ஏற்காத நிறுவனங்கள் செயல்பட முடியாது</div><div><br></div><div>இது பேச்சுரிமை / கருத்து உரிமையை கட்டுப்படுத்தும் செயல் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmaHwKBQTnuk2E1nORJUGQnrYmVwakynBl7xulJhZismVWTcwFfLaUswur_tWrWtcpVqi1_DVHHrNl35t5P41zjJ-k40hMY_Z4Hl2XB9_0kGNPBGYaaW-ZdkiPdM92cKZYLHlxiqQ7KTFh/s1600/1621949999006875-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmaHwKBQTnuk2E1nORJUGQnrYmVwakynBl7xulJhZismVWTcwFfLaUswur_tWrWtcpVqi1_DVHHrNl35t5P41zjJ-k40hMY_Z4Hl2XB9_0kGNPBGYaaW-ZdkiPdM92cKZYLHlxiqQ7KTFh/s1600/1621949999006875-2.png" width="400">
</a>
</div><br></div><div>WhatsApp நிறுவனம் பயனர்களின் பதிவை கட்டுப்படுத்த முடியாது என அறிவித்து உள்ளது</div><div><br></div><div>Facebook நிறுவனம் குறை தீர்க்கும் குழு விதியை ஏற்பதாக சொல்லி உள்ளது.</div><div><br></div><div>Twitter முடிவு தெரியவில்லை</div><div><br></div><div>இந்நிலையில் மே 26 காலை முதல் சமூக வலை தளங்கள் இயங்காதோ என்கிற அச்சம் பயனர்களிடம் இப்போது உள்ளது</div><div><br></div><div>என்னை பொறுத்த வரை.. இயங்க தடை விதிக்கப்படாது என்றே நினைக்கிறேன்</div><div><br></div><div>மேலும் கால அவகாசம் கொடுக்க வாய்ப்பு உள்ளது</div><div><br></div><div>அல்லது பயனர்களை tracking செய்யும் அமைப்பை வைக்க சொல்லக் கூடும்</div><div><br></div><div>பயனர்களை track செய்வது என்பது.. எல்லா பயனாளர்களையும் validate செய்வது.. (Aadhaar, PAN, License போன்றவை மூலம்)</div><div><br></div><div>இப்போதே Twitter தனது users verification செய்ய ஆவணங்களை கேட்கிறது. இதே போல அனைத்து பயனர்களுக்கும் கொண்டு வரலாம்.</div><div><br></div><div>தவறான பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க இது உதவும்</div><div><br></div><div>இதன் மூலம் fake ID, ananymous tweets ஆகியவை கட்டுப்படுத்தப்படும்</div><div><br></div><div>பயனாளர்கள் தவறான அல்லது சட்ட விரோத கருத்துக்கள் வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவரை கண்டு பிடிக்கவும் இந்த ஆவணங்கள் & validation உதவும்</div><div><br></div><div>இப்படியான practical rules விதிக்க தான் வாய்ப்பு உள்ளது</div><div><br></div><div>எது எப்படி ஆகினும் சமூக வலை தளங்களை இயங்காமல் செய்வது என்பது இயலாத காரியம்</div><div><br></div><div>சில கட்டுப்பாடுகளுடன் அவை தொடர்ந்து இயங்கும் என்றே நான் நம்புகிறேன்</div><div><br></div><div>அத்தகைய கட்டுப்பாடுகள் சமூக வலைதள பதிவுகளை சரியான வழியில் கொண்டு செல்லவும் உதவக்கூடும்.</div><div><br></div><div>பார்ப்போம்.. என்ன நடக்கிறது என்று </div><div><br></div>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-12811074982085972672021-05-21T12:02:00.000+05:302021-05-21T12:38:30.677+05:30பேரறிவாளன் விடுப்புமுன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான திரு. பேரறிவாளன் அவர்களின தாயார் அற்புதம்மாள் அவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார்கள்.<div><br></div><div>"நோய் தொற்று பாதிப்பு அபாயம் உள்ள காரணத்தால் எனது மகன் பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு அளிக்க வேண்டும்" என்பதே அந்த கோரிக்கை.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicU_fKrkaLp3yiRa-jJKQ_gG1nfWd5ji4e_l6jztW2VM-KcsfRUPAASDomV4YbFXY4b2nns0EKrIIfDjK5FfbAB2VJRIrZ4kKd0_DgZr6HvcRfGsO92q4OM0XnSglKe0x7-1AlVCjVuthc/s1600/1621578703992590-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicU_fKrkaLp3yiRa-jJKQ_gG1nfWd5ji4e_l6jztW2VM-KcsfRUPAASDomV4YbFXY4b2nns0EKrIIfDjK5FfbAB2VJRIrZ4kKd0_DgZr6HvcRfGsO92q4OM0XnSglKe0x7-1AlVCjVuthc/s1600/1621578703992590-0.png" width="400">
</a>
</div><br></div><div>இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் மனிதாபிமான அடிப்படையில், வழக்கமான விதிகளை எல்லாம் "தளர்த்தி" திரு. பேரறிவாளனுக்கு 30 நாட்களுக்கு சாதாரண விடுப்பு வழஙக உத்தரவிட்டு உள்ளார்.</div><div><br></div><div>இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகிறது.</div><div><br></div><div>******</div><div><br></div><div>கைதிகளில் இரண்டு வகை உண்டு. தண்டனை கைதிகள். விசாரணை கைதிகள்.</div><div><br></div><div>குற்றம் நிரூபணம் ஆகாத நிலையிலும் விசாரணை நடந்து கொண்டு இருப்பதால் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகள் பலர்.</div><div><br></div><div>நோய் தொற்று அபாயம் தான் விடுப்புக்கான காரணம் என்றால், அதன் அடிப்படையில் விடுப்பு வழஙகுவதற்கான முன்னுரிமை விசாரணை கைதிகளுக்கு கொடுத்து இருக்கலாம்.</div><div><br></div><div>தண்டனை கைதிகளுக்கு, அதிலும் தூக்கு தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட கைதிகளுக்கு கூட விடுப்பு கொடுக்க விதிகளை தளர்த்த முடியும் என்கிற செய்தி ஆச்சர்யமாக உள்ளது.</div><div><br></div><div>இதே போன்ற கோரிக்கையுடன் பிற தண்டனை கைதிகள் அல்லது விசாரணை கைதிகளின் உறவினர்கள் தமிழக அரசை அணுகினால், இதே போன்று விடுப்பு கொடுக்கப்படுமா என தெரியவில்லை. </div><div><br></div><div>நோய் தொற்று அபாயம் பிற கைதிகளுக்கும் உள்ளதால் அவர்களையும் விடுப்பில் அனுப்ப அரசு முன் வருமா என்ன?</div><div><br></div><div>எனவே இப்போதைய இந்த விடுப்பில், தனிப்பட்ட ஒருவருக்காக விதிகளை தளர்த்துவதில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு "சிறப்பு தன்மை" தானாகவே வந்து உட்கார்ந்து விடுகிறது.</div><div><br></div><div>அரசு அதிகாரம் என்பது தனக்கு வேண்டப்பட்டவர்கள் பலன் அடைவதற்காக விதிகளை தளர்த்துவதற்காக பயன்படுத்தப் படுவதல்லை. விதி தளர்வு என்பது பொதுவானதாக இருக்க வேண்டும். தனிப்பட்ட காரணங்களுக்காக இருப்பது சரியல்ல.</div><div><br></div><div>அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தால் தான் பெருமை என கருதுகிறேன்</div><div><br></div><div>எல்லோரும் தண்டனை அனுபவிக்கும் சிறை கூடத்தில் ஒருவருக்கு மட்டும் நோய் தொற்று அபாயத்தை காரணம் காட்டி விடுப்பு அளிப்பது விசித்திரமாக இருக்கிறது.</div><div><br></div><div>பேரறிவாளன் அவர்கள் விடுப்பில் வருவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அதே விதி மற்ற கைதிகளுக்கு பொருந்தாது என சொல்லப்படுவது சட்டத்தை இஷ்டத்துக்கு வளைப்பதை போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதை தவிர்க்க முடிவதில்லை.</div><div><br></div><div>எல்லோருக்கும் ஒரே நிலைப்பாடு எடுப்பதே ஒரு நல்ல அரசுக்கு அழகு. </div><div><br></div><div>தமிழக சிறை துறை வரலாற்றில் மற்றும் ஒரு தவறான முன் உதாரணத்தை இப்போது எழுதி வைத்திருக்கிறது இந்த அரசு என்றே கருதுகிறேன்.</div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-69545748566727195812021-03-28T12:54:00.001+05:302021-03-28T12:54:16.853+05:30சூயஸ் கால்வாய் முடக்கம்கடல் வாணிபம் கொஞ்ச காலம் முடங்கி போகும் அளவுக்கு ஆகி உள்ளது இப்போதைய #SuezCrisis காரணமாக<div><br></div><div>சுருக்கமா அதைப் பார்ப்போம்</div><div><br></div><div>அரபி கடல் - செங்கடல் - மத்திய தரைக் கடல் மூலமா இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு பயணிக்க குறுக்கு வழி இந்த #SuezCanal </div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSuGga09NcKjry5kVSBMuksiI_amA0zDpqnEvrs9PhNl0-IQLWaZG3PuUGt8lcR8ZMeDCuQnCMEeMIRqu1GOvTy1QQKIfmfiOCCGmucu8cx-J9Cg-Fl_mOwogbhXy_na8jk_Y_S6CC5JvC/s1600/1616916209416239-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSuGga09NcKjry5kVSBMuksiI_amA0zDpqnEvrs9PhNl0-IQLWaZG3PuUGt8lcR8ZMeDCuQnCMEeMIRqu1GOvTy1QQKIfmfiOCCGmucu8cx-J9Cg-Fl_mOwogbhXy_na8jk_Y_S6CC5JvC/s1600/1616916209416239-0.png" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>இப்போது #Evergreen நிறுவனம் இயக்கும் #Evergiven எனும் கன்டெய்னர் கப்பல் அந்த கனாலில் சிக்கி கொண்டு உள்ளது..</div><div><br></div><div>25 பேர் கொண்ட இந்திய மாலுமிகளால் இயக்கப்பட்ட கப்பல் அது. </div><div><br></div><div>நேராக பயணிக்க வேண்டிய கப்பல் தடுமாறி கரையில் தட்டி நின்று விட்டது </div><div><br></div><div>கிட்டத்தட்ட 20,000 கண்டெய்னர் சுமந்து வரும் பிரம்மாண்டமான கப்பல் அது</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVe-hzQrIoV1XGXCxzuCeCw8j7t5h4EkYlJHdYXzuRLm0SvRa0L0O0oj7IhBU_Qn4R-_wlZL1c7hhffLcQg9nCMjfkLN4jf2asZsv9EAg1bhK3tA-3XG3MvZvvkPEYmsqxMbO3K_h012CP/s1600/1616916200405167-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVe-hzQrIoV1XGXCxzuCeCw8j7t5h4EkYlJHdYXzuRLm0SvRa0L0O0oj7IhBU_Qn4R-_wlZL1c7hhffLcQg9nCMjfkLN4jf2asZsv9EAg1bhK3tA-3XG3MvZvvkPEYmsqxMbO3K_h012CP/s1600/1616916200405167-1.png" width="400">
</a>
</div><br></div><div>அது #Suez கால்வாயை கிட்டத்தட்ட குறுக்காக மறித்து நிற்பதால் சுமார் 300 கும் அதிகமான கப்பல்கள் அந்த கால்வாயில் பின்னோக்கி இயக்கவும் முடியாமல் முன்னோக்கி செல்லவும் முடியாமல் ஜாம் ஆகி நிற்கின்றன. </div><div><br></div><div>இந்த கப்பலை சரியான திசைக்கு திருப்பி இயங்க செய்யும் நடவடிக்கைகள் சில நாட்களாக நடைபெற்று வந்தாலும் இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை</div><div><br></div><div>இரு பக்கமும் கரைகளை சேதப்படுத்தாமல் மீட்கும் சவாலான செயல் அது. கரை கொஞ்சம் உடைந்தாலும் அந்த நாட்டுக்குள் கடல் நீர் புகுந்து விடும் </div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixRZiht_YaPzNxZKGlBG9MqIHfURK7CSq4pxULJ9U0sXf-SFNaJaO2oaDUaw4UbA69fcykJfMVIbHGt9m3PJZa7i3QjIDKIgA8aAZuKzYp9QAdoZZaDl-LFOawB6qfIBZ30IhLeQTcE8Wl/s1600/1616916193161944-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixRZiht_YaPzNxZKGlBG9MqIHfURK7CSq4pxULJ9U0sXf-SFNaJaO2oaDUaw4UbA69fcykJfMVIbHGt9m3PJZa7i3QjIDKIgA8aAZuKzYp9QAdoZZaDl-LFOawB6qfIBZ30IhLeQTcE8Wl/s1600/1616916193161944-2.png" width="400">
</a>
</div><br></div><div>இந்த பிரச்சனை காரணமாக கடல் வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. உலகின் மொத்த கடல் வாணிபத்தில் 15% இந்த கால்வாய் வழியாக நடைபெறுகிறது</div><div><br></div><div>தெற்கு ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கிய கடல் வழி தடம் இது</div><div><br></div><div>இப்போது கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றி செல்கின்றன </div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk1YMdyP3zxQdJxk_lgxYEeEODA230g0pPLiJgT9vGYKlN1oSt6o8dZbnXJMdigc2mTbATaLSI0yoqZ9MuGP8lQPscDFZCTQ2MIriw9paI5KVTWveTYl30N7_egOWR7L_5OlnCfJMgDLTz/s1600/1616916185808087-3.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk1YMdyP3zxQdJxk_lgxYEeEODA230g0pPLiJgT9vGYKlN1oSt6o8dZbnXJMdigc2mTbATaLSI0yoqZ9MuGP8lQPscDFZCTQ2MIriw9paI5KVTWveTYl30N7_egOWR7L_5OlnCfJMgDLTz/s1600/1616916185808087-3.png" width="400">
</a>
</div><br></div><div>இதனால் கால விரையம், எரிபொருள் விரயம், பொருள் விரையம், கட்டண உயர்வு, அதனால் பொருட்களின் உயர்வு என பாதிப்புக்கள் ஒரு புறம்</div><div><br></div><div>தாமதமான பொருள் வரவு காரணமாக உற்பத்தி தாமதம் ஆவது, குறித்த நேரத்தில் பொருட்களை விற்க முடியாதது என வணிக பாதிப்புகள் மறு புறம்</div><div><br></div><div>அதிகம் இந்த பிரச்சனையால் பாதிப்பது இந்தியா </div><div><br></div><div>இந்திய தொழிற்சாலைகளுக்கு ஐரோப்பாவில் இருந்து வர வேண்டிய பொருட்களும், இந்தியாவில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களும் முடங்கி கிடக்கின்றன</div><div><br></div><div>முடங்கிய கப்பல்களில் எரிபொருள் உணவு பற்றாக்குறை என்பது அந்த கப்பல்களில் காத்துகிடப்போருக்கு மற்றொரு பாதிப்பு </div><div><br></div><div>#Suez கால்வாயில் இப்போது சுமார் 300+ கப்பல்கள் நின்று கொண்டு இருக்கின்றன</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiatdOGDZXfgO5FqD39Z-h0wsUhsAgRpM9yvL3vJEdh1pLLGPnTgMHvOXf3psxIoMWDBJjEwF8UF0Qxh8G4P06F4cK6LAD8N-kDS42leuOM-tMkkaO-_MUeVNmwJfhwOQ1Sh4so1sw7UlKP/s1600/1616916180444039-4.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiatdOGDZXfgO5FqD39Z-h0wsUhsAgRpM9yvL3vJEdh1pLLGPnTgMHvOXf3psxIoMWDBJjEwF8UF0Qxh8G4P06F4cK6LAD8N-kDS42leuOM-tMkkaO-_MUeVNmwJfhwOQ1Sh4so1sw7UlKP/s1600/1616916180444039-4.png" width="400">
</a>
</div><br></div><div>அதில் உள்ளவர்களுக்கு எந்த உதவியும் யாரும் செய்ய முடியாத நிலை. </div><div><br></div><div>எத்தனை நாள் அங்கே இருக்க வேண்டி இருக்கும் என்பது இன்னும் தெளிவு இல்லை</div><div><br></div><div>அது வரை உணவு கையிருப்பு & எரிபொருள் உள்ளதா என்று தெரியவில்லை </div><div><br></div><div>இவை எல்லாம் சேர்ந்து அடுத்த சில மாதங்களுக்கு இந்திய தொழில் துறைக்கும், இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதிக்கு மிக பெரிய சவால் இருக்க கூடும்</div><div><br></div><div>இப்போது மாற்று வழியில் பயணிப்போம் என நினைத்தால் அதற்கான கூடுதல் செலவு ஏற்றுமதி செய்யும் பொருளின் விலையில் சேர்க்க வேண்டி இருக்கும். </div><div><br></div><div>அப்படி விலையை ஏற்ற வாய்ப்பில்லாத நிலையில் அந்த கூடுதல் செலவு பொருளாதார இழப்பாக பெரும் சுமையாக தொழிற்சாலைகளுக்கு அழுத்தம் கொடுக்கும்</div><div><br></div><div>#SuezCrisis தீரும் வரை தீர்ந்து எல்லா கப்பல்களும் இயல்பாக சென்றுவரும்வரை இந்திய தொழில் துறைக்கு ஏற்படும் இழப்புகள் பல்லாயிரம் கோடிகள் ஆகும்</div><div><br></div><div>விரைவில் இது சரியாக வேண்டும்</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdl31xph-9Fzl67ukWThI-LWMiIVT41dLqsN9suUUXCokWZtxF1OPQ-Q7OuwDjahUB5ER0wda1C7RJBBfwvbCN1qvgfwvDyaVEMFkHyUKidRa4PzUzjKLzgBnO3eQyDcog-fTg0D9K7i4e/s1600/1616916175343765-5.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdl31xph-9Fzl67ukWThI-LWMiIVT41dLqsN9suUUXCokWZtxF1OPQ-Q7OuwDjahUB5ER0wda1C7RJBBfwvbCN1qvgfwvDyaVEMFkHyUKidRa4PzUzjKLzgBnO3eQyDcog-fTg0D9K7i4e/s1600/1616916175343765-5.png" width="400">
</a>
</div><br></div><div>இனி அவ்வழி இயங்கும் கப்பல்களில் தேர்ந்த மாலுமிகள் நியமித்து எந்த பிரச்சனையும் இல்லாமல் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்</div><div><br></div><div>இப்போதைய #SuezCrisis கடல் சார் வாணிபத்தில் மிகப் பெரிய பாடமாக அமைந்து உள்ளது நமக்கு.</div>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-4083765149252939462021-02-27T07:13:00.000+05:302021-02-27T07:13:47.874+05:30தமிழக சட்டமன்ற தேர்தல் - 2021தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.<div><br></div><div>நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் தொடங்குவதாக அறிவித்தது சரி தான்.</div><div><br></div><div>மற்ற மாநிலத்தில் தேர்தல் வாக்கு பதிவு இன்னமும் மிச்சம் இருக்கும் போது இன்னொரு மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியானால் அது மிச்சம் இருக்கும் வாக்கு பதிவை மக்களின் மன நிலையை மாற்றும் என்பதால் எல்லா வாக்கு பதிவுகளும் முடிந்த பிறகு ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படுகிறது. இது கால காலமாக நடக்கும் ஒன்றே.</div><div><br></div><div>ஆனால் இது போன்ற சமயங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் மாநிலத்தில் வாக்குப்பதிவை முதலில் நடத்தாமல் இறுதி கட்டத்தில் நடத்தினால் காத்திருக்கும் நேரம் குறைவாகும். அதாவது மற்ற மாநிலங்களில் இறுதி கட்ட வாக்கு பதிவு நடக்கும் நாளில் தமிழ் நாட்டில் வாக்கு பதிவு வைத்து இருந்து இருக்கலாம்.</div><div><br></div><div>தேர்தல் ஆணையம் அது போல செய்யாமல் முதலில் தமிழகத்தில் வைத்து காத்திருக்க வைப்பது தேவையற்றது.</div><div><br></div><div>***</div><div><br></div><div>தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggfIwd1HtSehpXEa8T5xpHktDi376LMhoANusF-uGNga2hqosx9dK6pS-3tRFVEp7StlUWe1S8Pi2ISJ_iOXzDBcuGFt2Sr-j8uN9uWO75Q2OrjLh42vdRdWNPDd8E85mR7xJhJY2mUzXG/s1600/1614390183492556-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggfIwd1HtSehpXEa8T5xpHktDi376LMhoANusF-uGNga2hqosx9dK6pS-3tRFVEp7StlUWe1S8Pi2ISJ_iOXzDBcuGFt2Sr-j8uN9uWO75Q2OrjLh42vdRdWNPDd8E85mR7xJhJY2mUzXG/s1600/1614390183492556-0.png" width="400">
</a>
</div><br></div><div>கிராம சபை கூட்டங்கள் வாயிலாக திமுக கிட்டத்தட்ட அனைத்து மாவட்டஙகளிலும் ஒரு சுற்று பிரச்சாரத்தை முடித்து விட்டது. திமுக தரப்பில் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, என பலரும் சுற்று பயணம் செய்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தனர்</div><div><br></div><div>அதிமுகவின் ஒரே பிரச்சாரகர் ஆக உள்ள முதல்வர் எடப்பாடி அவர்களும் தமிழகம் முழுவதும் முதல் சுற்று பிரச்சாரத்தை முடித்து விட்டார்.</div><div><br></div><div>இப்போதைய நிலையில் திமுக தான் அடுத்து ஆட்சிக்கு வரும் என்பது மக்களின் மனதிலும் மீடியாக்கள் பார்வையிலும் மிக தெளிவாக பதிவாகி விட்ட ஒன்று</div><div><br></div><div>திமுகவை எதிர்த்து நிற்கவோ, திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்தவோ தகுந்த எதிர் அணி என எதுவும் இப்போது இல்லை. அதிமுக கூட்டணியில் அதிமுக மட்டுமே ஓட்டு வாங்கும் கட்சி. பாஜகவுக்கு என தனியான ஓட்டு வங்கி இல்லை. அதிமுகவின் தொண்டர்கள் உழைத்து அதிமுக ஆதரவாளர்கள் போடும் ஓட்டுகளை நம்பியே பாஜக இருப்பதால், மற்ற மாநிலங்களை போல அதிகாரம் செலுத்தும் நிலையிலோ தேர்தல் வியூகத்தை வகுக்கும் நிலையிலோ பாஜக தமிழகத்தில் இல்லை.</div><div><br></div><div>எனவே அதிமுக மட்டுமே திமுகவுக்கு எதிராக நிற்கிறது. பிற உதிரி கட்சிகள் எல்லாம் ஒற்றை இலக்க இடங்களை வெல்வதற்கே வாய்ப்பு இல்லாத கட்சிகளாக இருக்கின்றன.</div><div><br></div><div>அதிமுகவின் நிலையும் மோசமாகவே உள்ளது. மக்களை சந்தித்து ஆதரவை கேட்டு பெறும் அளவுக்கு மக்களை ஈர்க்க கூடிய தலைவரோ, மக்களிடம் சொல்ல கூடிய அளவுக்கு சாதனைகளோ இல்லாமல் திமுக மீதான அவதூறுகளை சொல்லியே பிரச்சாரம் செய்ய வேண்டிய கையறு நிலையில் தான் அதிமுக உள்ளது.</div><div><br></div><div>மேலும் இப்போது சசிகலா விடுதலை ஆகி தனது பொது செயலாளர் பதவிக்காக நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில், அதிமுகவின் மற்ற தலைவர்கள் அமைச்சர்கள் எல்லோரும் என்ன செய்வது என தெரியாமல் அமைதி காப்பதால், எவருடைய துணையும் கிடைக்காமல் முதல்வர் ஒருவர் மட்டுமே பிரச்சாரம் செய்து ஆக வேண்டிய சூழல்.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeMKm3yBpuxmAyAZaNeDyyanQhhnjiWCHVJ7rM8f6n-yLIofej3x5rQPPUohUdFmFSiVtP26V57a2uucEgWURZKUXYJmrdJonX0XM_mkY2p-j7F5o-ba98rQ9AGism9XeIISgs8mNEAs48/s1600/1614390180197835-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeMKm3yBpuxmAyAZaNeDyyanQhhnjiWCHVJ7rM8f6n-yLIofej3x5rQPPUohUdFmFSiVtP26V57a2uucEgWURZKUXYJmrdJonX0XM_mkY2p-j7F5o-ba98rQ9AGism9XeIISgs8mNEAs48/s1600/1614390180197835-1.png" width="400">
</a>
</div><br></div><div>சசிகலா கைக்கு அதிமுக போகுமா? போனால் கூட்டணியில் மாற்றம் வருமா? என்பது எல்லாம் தெரியாத நிலையில் அதிமுகவின் பிரச்சாரம் அடக்கியே வாசிக்கப்பட்டு வருகிறது.</div><div><br></div><div>ஆனால் மறு பக்கம், மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு செய்து வரும் துரோகங்கள், அதிமுக பாஜகவிடம் விட்டுக்கொடுத்து உள்ள மாநில உரிமைகள், தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுகள், ஊழல்கள் என எல்லா குறைகளையும் திமுக தரப்பு பொது மக்களிடம் விரிவாக பட்டியலிட்டு புரியவைத்து இருக்கிறது.</div><div><br></div><div>இன்னும் சொல்ல போனால், இந்த முறை தேர்தல் பிரச்சாரம் வழக்கமான பிரச்சாரமாக இல்லாமல், ஒரு இடத்தில் மக்களை எல்லாம் அழைத்து அமர்ந்து நீண்ட நேரம் கலந்துரையாடல் போல சகஜமாக பேசி, இயல்பான மொழியில் அவர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து அவர்களுக்கு கொஞ்சம் நெருக்கமாக நடந்து கொள்வது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. மட்டும் அல்ல மேடை போட்டு அடுக்கு மொழியில் பேசி புரிய வைக்க முடியாத பல விஷயங்களை, இப்படி கலந்துரையாடலில் இயல்பாக பேசி புரிய வைக்க முடிந்து இருக்கிறது.</div><div><br></div><div>*****</div><div><br></div><div>மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் இதை எல்லாம் உணர்ந்து இருப்பார் என நினைக்கிறேன்.</div><div><br></div><div>திமுக தலைவர் அறிவிக்கும் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை தனதாக்கி கொள்ள அதே திட்டத்தை தமிழக அரசும் உடனே உடனே அறிவித்தது அதற்கான சான்று.</div><div><br></div><div>அடுத்த ஆட்சி திமுக தான் என உறுதி ஆனா நிலையில் கஜானாவை சுத்தமாக காலி செய்து ₹5.70 லட்சம் கோடி கடனையும் வைத்து செல்கிறது அதிமுக அரசு.</div><div><br></div><div>அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இந்த ஆண்டு யாரும் ஓய்வு பெறாமல் பார்த்து கொண்டது. இதன் மூலம் இப்போது பணி கொடை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதிமுகவுக்கு இல்லை. ஆனால் எதிர்வரும் திமுக ஆட்சியில் முதல் இரண்டு வருடங்களுக்குள் அதை கொடுப்பதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டி இருக்கும்</div><div><br></div><div>அதே போல பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தும் வராத திட்டங்கள் எல்லாம் ஆட்சியை விட்டு இறங்க போகும் கடைசி ஓரிரு தினங்களில் வெறும் அறிவிப்பாக வெளியிட்டு அதற்கான நிதி ஆதாரம் எதையும் ஏற்படுத்தாமல் வெற்று அறிவிப்பாக விட்டு செல்கிறது அதிமுக அரசு.</div><div><br></div><div>கூட்டுறவு கடன் தள்ளுபடி, சுய உதவி குழு கடன் தள்ளுபடி, பயிர்க்கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி என அரசுக்கான வருவாய் அனைத்தும் தள்ளுபடி செய்வது என்பது புதிய ஆட்சி வந்து நிதி ஆதாரத்தை உருவாக்கி பின்னர் செய்ய வேண்டியவை.</div><div><br></div><div>ஆனால் அதை எல்லாம் கூட ஆட்சியில் இருந்து இறங்கி செல்லும் கடைசி நாட்களில் அறிவித்து விட்டு வெளியேறுவது.. அடுத்து வரும் திமுக ஆட்சிக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்</div><div><br></div><div>மிகப்பெரும் சவாலான நிதி மேலாண்மையை அடுத்து வரும் அரசு எப்படி சமாளிக்க போகிறது என்பது மிகப்பெரிய கேள்வி</div><div><br></div><div>மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகைகளை கேட்பதற்கு எந்த உறுதியான முயற்சியும் எடுக்க தயங்கும் அதிமுக அரசு, இப்படி கையில் உள்ள நிதி ஆதாரங்களையும் மொத்தமாக காலி செய்வது சிறு பிள்ளை தனமான ஒன்று.</div><div><br></div><div>அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை நன்கு உணர்ந்து திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகவே கஜானா காலியாக்கும் நிகழ்வை பார்க்கிறேன்.</div><div><br></div><div>தேர்தல் முடிவு என்ன என்பது ஓரளவு தமிழகத்தில் எல்லோரும் ஊகித்து வைத்து உள்ளனர்.</div><div><br></div><div>தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்து அவர்கள் எப்படி தமிழகத்தை வழி நடத்தி செல்ல போகிறார்கள் என்பதை காணவே எல்லோரையும் போல நானும் ஆவலாக உள்ளேன்</div><div><br></div><div>வாருங்கள்.. காத்திருப்போம்</div><div><br></div><div><br></div>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-20165069494743591952021-02-02T07:55:00.000+05:302021-02-02T09:22:00.559+05:30பட்ஜெட் 2021 - GST திருத்தங்கள்இந்திய அரசின் பட்ஜெட் 2021 நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.<div><br></div><div>அதில் GST தொடர்பான சில சட்ட திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான திருத்தங்களை குறித்து சுருக்கமாக பார்ப்போம்</div><div><br></div><div><b><u>Section 16(2)(aa)</u></b></div><div><br></div><div>இந்த புதிய விதிப்படி, பொருளை விற்பனை செய்த / சேவையை வழங்கிய நிறுவனம் தனது பில்லை GST இணைய தளத்தில் GSTR 1 ரிட்டர்ன் தாக்கல் செய்து அது வாங்கியவரின் GSTR 2A படிவத்தில் வெளியானால் மட்டுமே வாங்கியவர் Input Tax Credit (ITC) எடுக்க முடியும்</div><div><br></div><div>இது வரை, அப்படி GSTR 2A வில் வராவிட்டாலும் அவரது கொள்முதல் படிவம் (Purchase Register) அடிப்படையில் ITC எடுத்து வந்தனர்.</div><div><br></div><div>பின்னர் Rule 36(4) எனும் புது விதி கொண்டு வரப்பட்டு GSTR 2A வில் உள்ள ITC உடன் கூடுதலாக 5% ITC எடுத்து கொள்ள அனுமதிக்கப் பட்டு இருந்தது</div><div><br></div><div>இனி மேல் GSTR 2A வில் இருந்தால் மட்டுமே ITC எடுக்க முடியும்</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4Y_PMzSGbkPvRg-Ce0M7ThUN7FDNjU_63WlHMy-_gZGpPVF3vPSZcdpSuX6fnViyMhcTn_zvICMWD0TfHr7kBMSH6yGtlVRpv93qJrnsGytawbKgczpKDG27mr7TU8ws0buW-drFnVJ5S/s1600/1612232696536570-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4Y_PMzSGbkPvRg-Ce0M7ThUN7FDNjU_63WlHMy-_gZGpPVF3vPSZcdpSuX6fnViyMhcTn_zvICMWD0TfHr7kBMSH6yGtlVRpv93qJrnsGytawbKgczpKDG27mr7TU8ws0buW-drFnVJ5S/s1600/1612232696536570-0.png" width="400">
</a>
</div><br></div><div>இது வாங்கியவர் மீது கூடுதல் சுமையை ஏற்றும். விற்பனை செய்தவர் ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் வாங்கியவர் ITC எடுக்க முடியாது. தன்னிடம் சட்டப் பூர்வமாக அனைத்து ஆவணங்கள் இருந்தாலும் ITC எடுக்க முடியாமல் பணமாக வரியை கட்ட வேண்டி வரும். அவரது Working Capital அடி வாங்கும்</div><div><br></div><div>மேலும் இருக்கிற வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து, தனக்கு விற்பனை செய்தவர் ரிட்டர்ன் தாக்கல் செய்து விட்டாரா இல்லையா என தினமும் கண்காணித்து வரவேண்டும். அவரை ரிட்டர்ன் தாக்கல் செய்ய சொல்லி நினைவுறுத்தும் கடிதங்கள் அனுப்ப வேண்டும். இப்படி எல்லாம் மெனக்கெட்டு அவர் ரிட்டர்ன் தாக்கல் செய்தால் தான் ITC கிடைக்கும். அவர் தாக்கல் செய்ய தாமதிக்கும் காலம் வரை வாங்கியவர்களுக்கு சிக்கல் தான்.</div><div><br></div><div>ஒரு நிறுவனத்துக்கு 50 பேர்களிடம் இருந்து பொருட்கள் / சேவைகள் வாங்கினால் அந்த 50 பேரையும் கண்காணிக்க வேண்டும்</div><div><br></div><div>பெரு நிறுவனங்கள் நிலை இதை விட மோசம். அவர்கள் ஆயிரக்கணக்கான நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் / சேவைகள் பெறுகிறார்கள். அத்தனை பேரின் ரிட்டர்ன் தாக்கல் நிலவரத்தை இனி கண்காணிக்க வேண்டும்.</div><div><br></div><div>முறையாக ரிட்டர்ன் தாக்கல் செய்யாத விற்பனையாளர்கள் மேற்கொண்டு தங்களுக்கு வியாபாரம் நடக்காது என்கிற நிலைக்கு வரக்கூடும். பெரு நிறுவனங்கள் அப்படி பட்ட வரி தாக்கல் தாமதிக்கும் நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் / சேவைகள் பெறுவதை நிறுத்தி கொள்ள கூடும்</div><div><br></div><div>சிறு நிறுவனங்கள், ஒரு மாதத்தில் விற்பனை செய்த அனைத்து பொருட்களுக்கும் உரிய வரியை 20 நாளுக்குள் அரசிடம் கட்ட வேண்டும் என்கிற நிலையை பார்த்தால் நிதி பற்றாக்குறை, விற்பனை செய்யப்பட்டதற்கான தொகை 60 நாட்களுக்கு பிறகு கிடைப்பது, அதனால் வரி கட்ட வாங்க வேண்டிய கடன் என தொழிலின் முக்கிய தேவையான உற்பத்திக்கு தேவையான working capital கிடைக்காமல் வரியை மட்டுமே கட்டி கொண்டு இருக்க நேரும். </div><div><br></div><div>எந்த ஒரு நிறுவனம், தனது வாடிக்கையாளர் பணம் தரும் வரை தனது சொந்த காசை போட்டு வரி கட்டி வரும் அளவுக்கு நிதி நிலை ஆதாரம் கொண்டு இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே இனி தாக்கு பிடிக்க முடியும்.</div><div><br></div><div><b><u>Section 35(5) நீக்கம் & Section 44 திருத்தம்</u></b></div><div><br></div><div>இதன் படி ஒவ்வொரு ஆண்டும் Annual Return ஐ ஆடிட்டர்களிடம் கொடுத்து certify செய்து வாங்கி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இனி இல்லை. </div><div><br></div><div>அவரவர் கணக்கை அவரவர்களே சரிபார்த்து Self Assessment முறையில் தாக்கல் செய்தால் போதும்</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilMiCmiGwYjQb9O4XUN-gFoqX-smpVcaWIrmo44ONo28WitWVsuAkKPblG5RpXIOEY7qPXW-M9hn6QB6rXkfkg5VzK_UIa4x0hhkvazJIsIV2XT7QejMyy9GGTRlUDmJrYYnDBNeITlule/s1600/1612232690103868-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilMiCmiGwYjQb9O4XUN-gFoqX-smpVcaWIrmo44ONo28WitWVsuAkKPblG5RpXIOEY7qPXW-M9hn6QB6rXkfkg5VzK_UIa4x0hhkvazJIsIV2XT7QejMyy9GGTRlUDmJrYYnDBNeITlule/s1600/1612232690103868-1.png" width="400">
</a>
</div><br></div><div>இது மிக மிக நல்ல முடிவு. ஆடிட்டர்களின் தேவையற்ற கெடுபிடிகள், வியாபாரத்தை / உற்பத்தியை சரிவர புரிந்து கொள்ளாமல் ஆடிட்டர்கள் அவர்களாக கற்பிதம் செய்து கொண்டு கேட்கும் கேள்விகளுக்கான விடை தேடல்கள், ஆடிட்டர்களுக்கு கொடுக்கவேண்டிய மிக அதிகமான கட்டணம் ஆகிய அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை</div><div><br></div><div>அவரவர் தொழிலை நன்றாக புரிந்து வைத்து இருப்பதால் அது குறித்த தகவல்களை அவர்களே இனி தாக்கல் செய்யலாம் </div><div><br></div><div><u><b>Section 50 திருத்தம்</b></u></div><div><br></div><div>இது வரை வட்டி கட்டும் போது மொத்த தொகைக்கும் வட்டி கட்ட வேண்டும் என்று இருந்ததை திருத்தி இனி நிகர தொகைக்கு மட்டும் வட்டி காட்டினால் போதும் என்று மாற்றப்பட்டு உள்ளது. இதுவும் நல்ல முடிவே</div><div><br></div><div><u>உதாரணமாக</u>:</div><div><br></div><div>கட்ட வேண்டிய வரி ₹1,000/-</div><div>ITC இருப்பு ₹800</div><div>பாக்கி ₹200</div><div><br></div><div>என இருந்தால் இதுவரை ₹1,000/- க்கு வட்டி வாங்கி வந்தார்கள். இனிமேல் ₹200/- க்கு கட்டினால் போதும்</div><div><br></div><div><b><u>Section 107(6)</u></b></div><div><br></div><div>வாகனங்களை விடுவிக்க தொடுக்கும் வழக்கு அப்பீல் செய்யும் போது இனி பெனால்டி தொகையில் 25% முன்பணமாக கட்டினால் தான் அப்பீல் செய்ய முடியும்</div><div><br></div><div><b><u>Section 129 திருத்தம்</u></b></div><div><br></div><div>வாகனங்களை அரசு சோதனைக்காக நிறுத்தி அதில் குறைகள் இருப்பதாக நோட்டீஸ் கொடுத்தால், நாம் அடைக்கவேண்டிய வரியுடன் 200% கூடுதல் பெனால்டி சேர்த்து அடைத்தால் தான் இனி வாகனத்தை விடுவிக்க முடியும்.</div><div><br></div><div><u>உதாரணம்</u>:</div><div><br></div><div>வாகனத்தில் உள்ள பொருளின் மதிப்பு - ₹10,00,000/- எனில்</div><div><br></div><div>அந்த பொருளுக்கான 18% வரி - 1,80,000/-</div><div>பெனால்டி (வரியின் 200%) - 3,60,000/-</div><div><br></div><div>என மொத்தமாக ₹3,60,000/- செலுத்தினால் தான் வண்டி விடுவிக்கப்படும்.</div><div><br></div><div>அதிலும் முன்னெல்லாம் ₹3,60,000/- க்கு Bank Guarantee கொடுத்தால் போதும். ஆனால் இப்போது ₹3,60,000/- மொத்தமாக வங்கியில் செலுத்தி சலாண் காட்ட வேண்டும். அப்போது தான் விடுவிக்கப்படும்.</div><div><br></div><div>ஒரு வேளை 7 நாட்களுக்குள் நாம் பெனால்டி அடைக்க முன் வராவிட்டால்</div><div><br></div><div>பொருளின் மதிப்பில் 50% - ₹5,00,000/-</div><div>அல்லது</div><div>வரியின் மதிப்பில் 200% - ₹3,60,000/-</div><div>இதில் எது அதிகமோ அதை செலுத்தினால் தான் (₹5,00,000/-) வண்டி விடுவிக்கப்படும்</div><div><br></div><div>சிறு பிழைகள், கணக்கீடுகள் ஏற்படும் சிறு தவறுகள் ஆகியவை கூட இப்படியான பெரும் தொகையை கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படும்.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAQ_lyJoGtQHgXIdU9H14TkRM3okueysy8r91DF-2LhrdDwJlCZAGeP4JFZVUw61FJ9RYXuqKTX9QTTEc9N333nMpJvOD6WNe98QDQ1HxAl1h588kgL1DL8jDJQaQSdzo-KhlZOHPuVeqN/s1600/1612232682164100-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAQ_lyJoGtQHgXIdU9H14TkRM3okueysy8r91DF-2LhrdDwJlCZAGeP4JFZVUw61FJ9RYXuqKTX9QTTEc9N333nMpJvOD6WNe98QDQ1HxAl1h588kgL1DL8jDJQaQSdzo-KhlZOHPuVeqN/s1600/1612232682164100-2.png" width="400">
</a>
</div><br></div><div>EWB எனப்படும் வழி கடவு சீட்டு காலாவதி ஆனால் கூட பெனால்டி அடைக்க வேண்டும்.</div><div><br></div><div>எல்லா டாக்குமெண்ட் சரியா இருந்தாலும் EWB தயாரிக்கும் போது சிறு பிழைகள் ஏற்பட்டால் கூட இந்த அளவு பெனால்டி அடைக்க வேண்டி இருக்கும்</div><div><br></div><div>எனவே டாகுமெண்ட் தயாரிக்கும் போதும், அதில் கையெழுத்து இட்டு கொடுத்து அனுப்பும் போதும் முழுமையாக சரி பார்த்து விடுவது நல்லது.</div><div><br></div><div><b><u>Section 130 திருத்தம்</u></b></div><div><br></div><div>நிறுத்தி வைக்கப்பட்ட வண்டிக்கு 7 நாட்களுக்குள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும், அந்த நோட்டீஸ் கொடுத்த 7 நாட்களுக்குள் ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று நேர வரையறை செய்யப்பட்டு உள்ளது. இது வரை பல நாட்கள் எந்த நடவடிக்கையும் இல்லாமல் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்.</div><div><br></div><div>மேலும், நோட்டீஸ் கொடுத்து 15 நாட்கள் வரை பொருளின் உரிமையாளர் பெனால்டி கட்டவில்லை என்றால் அந்த பொருளை விற்று பெனால்டி தொகையை எடுத்து கொள்ள அரசுக்கு இப்போது அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.</div><div><br></div><div>வண்டியை 15 நாள் கழித்து விடுவித்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு லாரி உரிமையாளர் ₹1 லட்சம் வரை செலுத்த வேண்டும்.</div><div><br></div><div>அதாவது பொருளின் உரிமையாளர் தவறு செய்தாலோ, அரசு அதிகாரி தனது தவறான புரிதல்கள் காரணமாகவோ வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டால், பொருளின் உரிமையாளர் பெனால்டி கட்டாத பட்சத்தில் லாரி உரிமையாளர் ₹1 லட்சம் கட்டி தான் வண்டியை எடுக்க முடியும். அதுவும் 22 நாட்கள் கழித்து.</div><div><br></div><div>இது லாரி தொழிலை கடுமையாக பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.</div><div><br></div><div><b><u>IGST Section 16 திருத்தம்</u></b></div><div><br></div><div>SEZ எனப்படும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் '0%' வரி என்று இருந்ததை திருத்தி அந்த SEZ நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட உற்பத்திக்கு தேவையான பொருட்களுக்கு மட்டுமே இனி Zero Rated Supply செய்ய முடியும். </div><div><br></div><div>இனி SEZ க்கு விற்பனை செய்யும் நிறுவனங்கள், தாங்கள் சப்ளை செய்யும் பொருட்கள் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்திக்கு தான் போகிறதா என பார்த்து போகிறது என்றால் 0% வரியிலும் இல்லை என்றால் முழு வரியிலும் விற்பனை செய்ய வேண்டும்</div><div><br></div><div>இது SEZ க்கு supply செய்யும் ஆர்வத்தை குறித்து விடும். </div><div><br></div><div>ஏற்கனவே SEZ நிறுவனங்களுக்கு கிடைத்து வந்த வருமான வரி சலுகை பரிக்கபப்ட்ட நிலையில் இது போன்ற கெடுபிடிகளும் சேர்ந்தால் SEZ அமைப்பதே வீண் என்று ஆகி விடும்.</div><div><br></div><div>****</div><div><br></div><div>மறைமுக வரிகள் எனப்படும் Indirect Taxes ஐ பொறுத்த வரை இந்த பட்ஜெட் ஓரளவு நல்ல பட்ஜெட் என்றே நினைக்கிறேன்.</div><div><br></div><div>பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் அவை எல்லாம் வரி செலுத்தும் வழக்கத்தை முறைப்படுத்தும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன்</div><div><br></div><div>இப்போதைய திருத்தங்கள் விற்பனை செய்வோர் முறையாக வரி செலுத்தவும் வாங்குவோர் அதை கண்காணித்து ITC எடுக்கவும் பொருட்களை அனுப்பும் பொது கொடுக்கப்படும் ஆவணங்கள் பிழை இல்லாமல் இருக்கவும் ஏற்படுத்தப்பட்ட முயற்சி என்றே நான் பார்க்கிறேன்</div><div><br></div><div>ஒரு Honest Tax Paying Culture உருவாக்க இப்படியான கடுமையான சட்ட திருத்தங்கள் தேவை என்றாலும், நமது அரசு அதிகாரிகளின் மன நிலை, நோக்கம் என்ன என்பதை கால காலமாக புரிந்த நமக்கு அவர்கள் இதை வைத்து இன்னும் என்னென்ன வகையில் தொழில் துறையினரை அவதிக்கு உள்ளாக்குவார்கள் என்று யோசிக்கும் போது அச்சமாக தான் இருக்கிறது</div><div><br></div><div>தொழில் முனைவோர் எல்லோரும் தவறு செய்பவர்கள், அரசு அதிகாரிகள் எல்லோரும் அதை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக நியமனம் ஆகி உள்ளவர்கள் என்கிற மன நிலை அரசு அதிகாரிகளிடம் இருக்கும் வரையில் இப்படியான சட்ட திருத்தங்கள் அதன் உண்மையான நோக்கத்தை அடைவது கஷ்டமே.</div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-9890241085974444442020-12-30T05:35:00.000+05:302020-12-30T05:36:08.958+05:30ரஜினியின் முடிவு - இனி என்ன?கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு எதிர்பார்ப்பு இன்று முடிவுக்கு வந்து உள்ளது.<div><br></div><div>அரசியலுக்கு வருவார் ரஜினி, தமிழகத்தை ஆட்சி செய்வார் என்ற அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், ரஜினி எனும் பிம்பத்தை வைத்து அரசியல் லாபம் பார்க்க நினைத்த சில அரசியல் இயக்கங்களையும் ஒரு சேர முடிவுக்கு கொண்டு வந்து விட்டார்.</div><div><br></div><div>சில வாரங்களுக்கு முன்பு கூட, ஏதோ ஒரு அழுத்தம் காரணமாக, ஜனவரி மாதம் கட்சி ஆரம்பித்து விடுவேன்.. அது தொடர்பான அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பேன் என சொல்லி இருந்தார். </div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgM9dDWXiXVnlvm_MrAcWvK_8P9kywFAROvBKRs84CqFIWawDCFWmn_PqDOLhPxizlqT27hQUFvhWZVYYyHOBcDYaVGMtbrrY8PKgjL4iCIJrO4qsCVRQcOmK3d55NpVF09GMmSAi0d9xza/s1600/1609286737643385-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgM9dDWXiXVnlvm_MrAcWvK_8P9kywFAROvBKRs84CqFIWawDCFWmn_PqDOLhPxizlqT27hQUFvhWZVYYyHOBcDYaVGMtbrrY8PKgjL4iCIJrO4qsCVRQcOmK3d55NpVF09GMmSAi0d9xza/s1600/1609286737643385-0.png" width="400">
</a>
</div><br></div><div>பாஜகவின் "அறிவுசார்" அணியின் தலைமை பொறுப்பில் இருந்த திரு.அர்ஜுன மூர்த்தியை அந்த பதவியில் இருந்து பாஜக "விடுவித்து" அவர் ரஜினியுடன் இணைந்து ரஜினியின் அறிவிக்கப்படாத கட்சியின் தலைமை ஒருஙகினைப்பாளர் ஆக பொறுப்புக்கு கொண்டு வந்தார்.</div><div><br></div><div>ரஜினி சார்பாக கட்சி பெயர் பதிவு, ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு என்றெலலாம் வந்த செய்திகள் அவர் அரசியலுக்கு வருவதில் தீவிரமாக இருப்பதாக நம்ப வைத்தன.</div><div><br></div><div>ஆனால் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக அவர் அரசியலுக்கு வரவில்லை என்பதை முடிவு செய்து அறிவித்து விட்டார். இது இறுதி முடிவா அல்லது வழக்கமான "மாறுதலுக்கு உட்பட்ட" முடிவா என்பது தெரியவில்லை.</div><div><br></div><div>ரஜினியின் இந்த முடிவுக்கு பிறகு தமிழக தேர்தல் களம் எப்படி இருக்கும்?</div><div><br></div><div>ரஜினி கட்சி தொடங்கி கூட்டணி இல்லாமல் தனித்து போட்டி இட வேண்டும் என்பதில் பாஜக தான் தீவிர ஆர்வம் காட்டி வந்தது. அதற்கான கணக்கீடுகள் இல்லாமல் இல்லை.</div><div><br></div><div>இன்றைய சூழலில் திமுக மக்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று வருகிறது. அடுத்த ஆட்சி திரு ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி என மக்கள் மனநிலைக்கு வந்து விட்டனர்.</div><div><br></div><div>திமுக ஆட்சிக்கு வராமல் இருக்க வேண்டும் என்றால், அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்களும், நடுநிலை ஓட்டுக்களும் திமுகவுக்கு போகாமல் தடுக்க வேண்டும்.</div><div><br></div><div>எனவே ரஜினி கட்சி ஆரம்பிப்பது, அதிமுக & பாஜக கூட்டணிக்கு மிக அவசியமாக இருந்தது.</div><div><br></div><div>திமுக & அதிமுகவை விரும்பாத நபர்கள் வாக்கு அளிக்க ஒரு நம்பிக்கையான முகம் தேவை ஆக இருந்தது. எனவே பாஜகவின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்தே ரஜினியின் பிம்பத்தை மெருகேற்றும் அறிக்கைகள் வெளிப்படையாக வர தொடங்கின.</div><div><br></div><div>ரஜினி மிக நல்லவர். மக்களுக்கு ஏதாவது செய்ய ஆசை படுகிறார், அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என குருமூர்த்தி போன்ற தீவிர பாஜக ஆதரவாளர்கள் சொல்லியது எல்லாம் பாஜக ரஜினியை எதற்காக முன்னிறுத்திக் கொண்டு உள்ளது என்பதை புரிய வைத்தது.</div><div><br></div><div>ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு, பாஜகவின் தலைவர்கள் வெளிப்படையாக அதிமுகவை விமர்சிக்க ஆரம்பித்தனர். </div><div><br></div><div>"மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தில் இருந்து தான் பொங்கல் பரிசை அதிமுக தருகிறது" என்றும்</div><div><br></div><div>"கார் டயரை கும்பிடும் தலைவர்களை கொண்ட கட்சி" என்றும்</div><div><br></div><div>"தமிழகத்தில் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகவின் டெல்லி தலைமை தான் அறிவிக்கும். அதிமுக அறிவிப்பை ஏற்க முடியாது" என்றும்</div><div><br></div><div>"பாஜகவுக்கு அமைச்சர் பதவி கட்டாயம்" என்றும்</div><div><br></div><div>பாஜக துணிச்சலாக பேச ரஜினியின் வருகை ஒரு முக்கிய காரணம்.</div><div><br></div><div>அதிமுக கூட்டணியில் இருந்து விலகி ரஜினி தலைமையில் அணி அமைக்க பாஜக காய் நகர்த்துவது போன்ற ஒரு தோற்றம் தெரிய தொடங்கியது.</div><div><br></div><div>அதிமுக சமீபத்தில் நடத்திய தேர்தல் பரப்புரை தொடக்க கூட்டத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்தது, அவர்களுக்கு இடையிலான உறவில் விரிசல் அதிகரித்ததை காட்டுகிறது.</div><div><br></div><div>இந்த சூழலில் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்கிற அறிவிப்பு பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சி தந்ததில் வியப்பு இல்லை.</div><div><br></div><div>அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே பாஜக ஆதரவாளர்கள் ரஜினியை விமர்சிக்கத் தொடங்கியது அவர்களது பெருத்த ஏமாற்றத்தை காட்டுகிறது.</div><div><br></div><div>இனி என்னென்ன வழிகள் உள்ளது?</div><div><br></div><div>பாஜகவுக்கு அதிமுகவுடன் இணைவது தான் அதன் வளர்ச்சிக்கு நல்லது. எனவே அதிமுக குறித்து விமர்சித்து பேசிய தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதிமுகவை சமாதானப்படுத்தும் வழிகளை தான் முதலில் முயற்சி செய்வார்கள் என நினைக்கிறேன்.</div><div><br></div><div>அதிமுக பாஜகவின் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் அதிமுகவின் ஊழல்கள் குறித்த விரிவான பட்டியலை திமுக சமீபத்தில் தான் ஆளுநரிடம் சமர்ப்பித்து இருக்கிறது. அதை வைத்து பாஜக அதிமுகவை பணிய வைக்கக் கூடும்.</div><div><br></div><div>ஒருவேளை அதிமுக பாஜக பிரிந்தால், பாஜக அடுத்ததாக மக்கள் நீதி மையத்தின் உதவியை நாடும். அவர்களுடன் இணைந்து மூன்றாவது அணி அமைத்து தேர்தலில் போட்டி இடலாம். ஆனால் இதற்கான வாய்ப்பும் இது நடந்தால் வெற்றி வாய்ப்பும் மிக மிக குறைவு.</div><div><br></div><div>இந்த நிமிடம் தமிழக தேர்தல் களம் திமுக & அதிமுக இருவருக்கானது.</div><div><br></div><div>அவர்களை தலைமையாக கொண்டு இயங்கும் கட்சிகள் அணி சேர்ந்து இரு முனை போட்டியாக தேர்தல் களம் அமையும் என்றே எதிர் பார்க்கிறேன்.</div><div><br></div><div>தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு சாதாரண கட்சி. புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் நீதி மையம் பெற்று இருக்கும் மக்கள் ஆதரவு அளவு கூட மக்களிடம் ஆதரவு இல்லாத கட்சி.</div><div><br></div><div>எனவே இந்த எதார்த்தத்தை புரிந்து கொண்டு அதிமுகவின் கீழ் தேர்தலை சந்திப்பது தான் பாஜக எடுக்கக்கூடிய சரியான முடிவாக இருக்கும்.</div><div><br></div><div>ரஜினி தனது முடிவை மீண்டும் மாற்றி கொள்ளாத வரை, தமிழக தேர்கள் களம் அதிமுக & திமுக அணிகளுக்காக களமாக தொடரும்.</div><div><br></div><div>பார்ப்போம்</div>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-89262701907717076262020-12-11T14:33:00.000+05:302020-12-11T14:33:38.557+05:30ரஜினியின் அரசியல் வருகை1990 க்களின் துவக்கத்தில் இருந்து இதோ வர்றேன் அந்தோ வர்றேன் என போக்கு காட்டி கொண்டு இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு வழியா ஒரு அறிவிப்பை கொடுத்து இருக்கார்<div><br></div><div>அதாவது, ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும் (ஜனவரி 2021 என்றுதான் நினைக்கிறேன்) அது தொடர்பான அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என சொல்லி இருக்கிறார்.</div><div><br></div><div>சோ, அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்கிற அளவில் இப்போது வந்து நிற்கிறது.</div><div><br></div><div>இது எதிர்வரும் தமிழக தேர்தல் 2021 இல் என்ன மாதிரியான விளைவுகளை, மாற்றத்தை, ஏமாற்றத்தை, பாதிப்பை தரக்கூடும் என பார்ப்போம்.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5FN1T9IEc7FdIJUtXxEgjS3o8wCADxknwPQkIwM_nCAVAmQV4NKolLxIK45vL8Sc5dRLY2gvCI2440P8_ffsTAu5UTmOVPGG89BbbW2P8Cocl7SSV_LqgL-7WchSU4GEXloBuAa2Gngbn/s1600/1607677411482370-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5FN1T9IEc7FdIJUtXxEgjS3o8wCADxknwPQkIwM_nCAVAmQV4NKolLxIK45vL8Sc5dRLY2gvCI2440P8_ffsTAu5UTmOVPGG89BbbW2P8Cocl7SSV_LqgL-7WchSU4GEXloBuAa2Gngbn/s1600/1607677411482370-0.png" width="400">
</a>
</div><br></div><div>அரசியலுக்கு வர தயக்கம் காட்டி பேசி இரண்டு நாளுக்குள் அரசியலுக்கு வருவதை அறிவிக்கும் அளவுக்கு அவருக்கு என்ன பிரஷர் என்கிற குழப்பமான கேள்வியை தவிர்த்து விட்டு போவோம்</div><div><br></div><div>தமிழகத்தில் 234 தேர்தலிலும் தனித்து போட்டி இடப்போவதாக ரஜினி ஏற்கனவே சொல்லி இருந்தார். எனவே அவர் எந்த அணியிலும் சேர மாட்டார் என தோன்றுகிறது.</div><div><br></div><div>ஆட்சி மாற்றம் தான் குறிக்கோள் என சொல்லி இருப்பதையும் வைத்து பார்த்தால் அவர் அதிமுக & பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிராகத் தான் கட்சி தொடங்குவதாக தோன்றும்.</div><div><br></div><div>ஆனால், பாஜக அவரை ஆதரித்து மகிழ்ந்து துள்ளி குதிப்பதை பார்த்தால் அஜெண்டா வேறு ஏதோ ஒரு ரூட்டில் பயணிப்பது புரியும்.</div><div><br></div><div>இப்போதைய சூழலில் அதிமுக ஸ்ட்ராங்கா இல்லை. திமுக மக்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைக்கும் என்பது கிட்டத்தட்ட நிச்சயம் ஆகிவிட்டது போல ஒரு தோற்றமும் தெரியத் தொடங்கி இருக்கிறது.</div><div><br></div><div>பாஜக + அதிமுக அணிக்கு வாக்குகளை கவரக்கூடிய முகம் எதுவும் இல்லை. திமுக மக்களிடம் பெற்று வரும் அசுர பலம் கொண்ட ஆதரவை முறியடிக்க தகுந்த வழிகள் எதுவும் பாஜக + அதிமுக கூட்டணியில் இல்லை. மேலும் அதிமுக மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது.</div><div><br></div><div>இப்போது இருக்கும் ஒரே வழி.. அதிமுகவுக்கு எதிராக உள்ள வாக்குகளை மொத்தமாக திமுக பக்கம் போகாமல் பார்த்துக் கொள்வது மட்டும் தான் அதிமுக + பாஜக வெல்ல ஒரே வழி</div><div><br></div><div>எனவே, கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யமும், ரஜினி தலைமையில் "பெயர் சூட்டப் படாத" அவரது கட்சியும் எல்லா 234 தொகுதிகளிலும் போட்டி இடுவது தான் பாஜக + அதிமுக வெல்ல ஒரே வழி</div><div><br></div><div>அதிமுக மீது அதிருப்தி கொண்டவர்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போட்டு ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தை மாற்றி, கமலுக்கு அல்லது ரஜினிக்கு கூட போடலாமே என்கிற சாய்சை மக்களுக்கு கொடுத்தால் அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் பிரியும்.</div><div><br></div><div>அந்த எதிர்ப்பு ஓட்டுக்கள் திமுகவை நோக்கி செல்லாமல், கமல், ரஜினி, சீமான் என பிரிவது திமுகவை பலவீனம் ஆக்கும். </div><div><br></div><div>அதிமுக அதிருப்தி ஓட்டுக்கள் மட்டும் அல்லாமல் எந்த கட்சியும் சாராத நடுநிலை வாக்குகளும் ரஜினி எனும் ஆளுமை மீதான ஈர்ப்பால் அவருக்கு ஓட்டு போட வாய்ப்பு இருக்கிறது. இதை குறி வைத்தே ரஜினி நல்லவர் வல்லவர் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் என பாஜக தரப்பில் இருந்தே ரஜினியின் இமேஜை பூஸ்ட் செய்யும் பணிகள் நடக்கிறது.</div><div><br></div><div>ரஜினியின் "பெயர் அறிவிக்காத கட்சி"யின் தலைமை ஒருங்கிணப்பாளர் பதவிக்கு பாஜகவில் இருந்து ஆளை அனுப்பி வைத்த நிகழ்வும், குருசாமி போன்றோர் ரஜினி குறித்து கட்டமைத்து வரும் உயர் பிம்பமும் அதை ஆமோதிப்பது போலுள்ளது.</div><div><br></div><div>எனவே கமல் & ரஜினி இருவரும் அதிமுக+பாஜக கூட்டணி வெற்றிக்காக மறைமுகமாக செயல்படுவதாக ஒரு தோற்றம் தான் இன்றைய சூழலில் இருக்கிறது.</div><div><br></div><div>ஒருவேளை, ரஜினி உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்யவேண்டும், ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் அவரது செயல்பாடு வேறு மாதிரி இருக்கும்.</div><div><br></div><div>வெறும் சினிமா புகழ் வைத்து அரசியலில் வாக்குகள் பெற முடியாது. அப்படி இருந்தால், சிவாஜி எப்போதோ முதல்வர் ஆகி இருப்பார். </div><div><br></div><div>எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எல்லோரும் தேர்தலை சந்திக்கும் முன்பே, மக்களின் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்துவது, மக்களுக்காக குரல் கொடுப்பது, மக்களோடு மக்களாக நிற்பது என தங்கள் இமேஜை ஒரு நடிகர் என்பதில் இருந்து மாற்றி, மக்களுக்கான தலைவராக உருமாற்றி பிறகு தான் தேர்தலில் வென்றார்கள்.</div><div><br></div><div>எனவே, சினிமா புகழில் யாரும் வென்றிடவில்லை. அரசியல் களமாக தந்து களத்தை மாற்றி அதில் போராடி அதில் இருந்து தான் வென்று வந்தார்கள்.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7sDq_7g1POvb8V_khzTilFG6OfQgsMI0FrZP8R-ZfCphKKCJAxXuE3i4DSZQ89l3_104YwRmo58MARpANeoynCZM9Hc9wkpp9ayqWQNmwRvjafXsxtdydp7KPbfHeXe6oVeIOZ_QtqK1J/s1600/1607677406406785-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7sDq_7g1POvb8V_khzTilFG6OfQgsMI0FrZP8R-ZfCphKKCJAxXuE3i4DSZQ89l3_104YwRmo58MARpANeoynCZM9Hc9wkpp9ayqWQNmwRvjafXsxtdydp7KPbfHeXe6oVeIOZ_QtqK1J/s1600/1607677406406785-1.png" width="400">
</a>
</div><br></div><div>எந்த ஒரு அரசியலும் களத்தில் நின்று தான் செய்ய முடியுமே தவிர வீட்டு போர்டிகோவில் இருந்தோ ஆபீஸ் அறையில் இருந்தோ டிவி நிகழ்ச்சிகளில் போடியத்தில் இருந்தோ நிகழ்த்த முடியாது.</div><div><br></div><div>எனவே ரஜினி உண்மையிலேயே ஆட்சி அதிகாரத்துக்கு வர நினைத்தால்.. அவர் செய்ய வேண்டியது எல்லாம்:</div><div><br></div><div>- இப்போதைய மக்கள் பிரச்சனைகளில் தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும்</div><div><br></div><div>- மக்கள் பாதிக்கப்படும் போது (இயற்கை சீற்றங்கள்) அவர்களோடு நின்று ஆறுதல் சொல்ல வேண்டும்</div><div><br></div><div>- மக்களின் தேவைகளுக்கு அவர்களோடு நின்று குரல் கொடுக்க வேண்டும்</div><div><br></div><div>- ஆளும் அரசுகள் மக்கள் விரோத நடவடிக்கைகள் எடுக்கும் போது அதை எதிர்த்து போராட வேண்டும்</div><div><br></div><div>இப்படி எல்லாம் செய்தால் தான் அரசியல் களத்தில் வெல்ல முடியுமே தவிர வெறும் பேச்சுக்கள் உதவாது</div><div><br></div><div>எனவே.. முதலில்.. ரஜினி அவர்களது நோக்கம்</div><div><br></div><div>மக்களுக்காக ஆட்சி அமைத்து நல்லது செய்வதா</div><div><br></div><div>அல்லது</div><div><br></div><div>அதிமுக+பாஜக அதிருப்தி வாக்குகளை பிரித்து அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதா என்பதை அவர் தெளிவு படுத்தி பேசுவது நல்லது</div><div><br></div><div>அது வரை இது வெறும் "அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிக்கப்படும் அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும்" என்கிற அறிவிப்பாக மட்டுமே நீடிக்கும்</div>சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.com0