Sunday, December 23, 2018

GST கவுன்சில் கூட்ட முடிவுகள்

நேற்று கூடிய GST கவுன்சில் கூட்டம் பல முக்கியமான முடிவுகளை எடுத்து இருக்கிறது.

சுருக்கமாக சொல்வதானால் 23 பொருட்களுக்கு வரி குறைப்பு, 42 கொள்கை முடிவுகள், 18 விளக்கங்கள், 4 சட்ட திருத்தங்கள். அவ்வளவு தான்.

இவற்றுள் சிலவற்றின் சாதக பாதகங்கள் என்ன என சுருக்கமாக பார்க்கலாம்.

1. மாதாந்திர ரிட்டர்ன் தொடர்ந்து 2 மாதங்கள் தாக்கல் செய்யாத வணிகர்கள் இனி E Way Bill எடுக்க முடியாது.

இது ஒருவகையில் நல்ல திட்டம். பல வர்த்தகர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமலும் வரி கட்டாமலும் தொடர்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களிடம் பொருட்கள் வாங்குவோருக்கு ITC கிடைக்காமல் பெரும் பொருள் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக இந்த திட்டம். வரவேற்கத்தக்கது.

ஆனால் இதில் ஒரு சிக்கலும் உள்ளது. உதாரணமாக ஒரு கன்ஸ்டிரக்‌ஷன் சர்வீஸ் புராஜக்டை எடுத்து கொள்வோம். திட்டம் முடிவடைய ஆறு மாதங்கள் ஆகும் என வைத்து கொள்வோம். ஆறு மாதம் கழித்து திட்டம் முடிந்த பின்னர் தான் பில் இட்டு வருவாய் பெற்று வரி செலுத்த முடியும் எனில், இடைப்பட்ட காலங்களில் அவர்கள் பொருட்களை எப்படி எடுத்து செல்வது? இது பற்றி எல்லாம் சிந்தித்தார்களா என தெரியவில்லை. இதற்கு இன்னொரு திருத்தம் கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

2. 2017-18 காலகட்டத்தில் நடைபெற்ற வர்த்தகத்துக்கு ரிட்டர்ன் தாக்கல் செய்யும் அவகாசம் 31.10.2018 ல் முடிவடைந்து விட்டது. அதை மீண்டும் உயிர்பித்து 31.03.2019 வரை நீட்டித்து இருக்கிறார்கள்.

இதுவும் ஒரு வகையில் நல்ல முடிவு. பல வர்த்தகர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை. அதனால் அவர்களிடம் பொருட்களை வாங்கியவர்களுக்கு ITC கிடைக்கவில்லை. எனவே பொருட்களை விற்றவர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்யவும் அதன் அடிப்படையில் பொருட்களை வாங்கியோர் ITC எடுத்து கொள்ளவும் மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இது வணிகர்களின் நஷ்டத்தை பெருமளவில் குறைக்கும்.

இப்போது வணிகர்கள் மீண்டும் 2017-18 வர்த்தக விவரங்களை சரிபார்த்து விடுபட்ட விவரங்களை அந்தந்த வணிகர்களுக்கு அனுப்பி வரிகட்ட சொல்ல வேண்டும். ஏற்கனவே பல நிறுவனங்கள் அவ்வாறு ரிட்டர்ன் தாக்கல் செய்யாத வர்த்தகர்களை Blacklist செய்து வியாபாரத்தை நிறுத்தியதால் அந்த வணிகர்கள் நொடிந்து போயிருந்தனர். பல்வேறு முறையீடுகளுக்கு பின்னர் இப்போது அரசு அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறது.

3. 2017-18 ஆண்டுக்கான வருடாந்திர ரிட்டர்ன் (GSTR9) தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 31.12.2018 லிருந்து 31.03.2019 ஆக முன்பு நீட்டிக்கப்பட்டிருந்தது. அது மீண்டும் 30.06.2019 க்கு நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம், டிஜிட்டல் இந்தியாவில் இன்னமும் GSTR9 படிவத்தை இணையத்தில் ஏற்றமுடியாத நிலை ஏற்பட்டு தவிப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த நீட்டிப்பின் அடிப்படையில் தான் வரிக்கழிவுக்கான கால அளவை 31.03.2019 வரை நீட்டப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.


4. 2017-18 காலகட்ட வணிகங்களை 2018-19 காலகட்டத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்தாலும் செல்லும் என முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. அதனடிப்படையில் சட்டத்தை திருத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இது கொஞ்சமும் லாஜிக் இல்லாத விஷயம் என்றாலும், வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ள விஷயம் என்பதால் வரவேற்கத்தக்கது.

அதாவது, ஒரு வணிகர் தனது பொருளை நவம்பர் 2017 ல் விற்பனை செய்தார் என வைத்துக்கொள்வோம். அவர் அதற்கான வரியை டிசம்பர் 2017 ல் செலுத்தி, ரிட்டர்னை தாக்கல் செய்திருக்கவேண்டும். அந்த பொருளை வாங்கியவருக்கு அப்போது தான் ITC கிடைக்கும்.

ஆனால் விற்றவர் வரி தாக்கல் செய்யவில்லை. அவருக்கு 31.10.2018 வரை அவகாசம் கொடுத்தது அரசு. ஆனால் அவர் அந்த காலகட்டத்தில் வரி செலுத்துவதாக இருந்தாலும் நவம்பர் 2017 மாதத்துக்குரிய ரிட்டர்ன் படிவத்தில் தாக்கல் செய்தால் தான் செல்லும். ITC யும் கிடைக்கும். மாறாக ஜூன் 2018 மாதத்துக்குரிய ரிட்டர்னில் வரி செலுத்தி இருந்தால் ITC கிடைக்காது. காரணம் அது 2018-19 க்குரிய ரிட்டர்ன்.

சில டெக்னிகல் கரணங்கள் காரணமாக அவரால் நவம்பர் 2017 ரிட்டர்னை திறக்க முடியவில்லை. அரசும் தனது இணைய தளத்திலும் அந்த வசதி ஏற்படுத்தி வைக்கவில்லை. இதனால் வரி செலுத்த தயாராக இருக்கும் ஒரு நேர்மையான வணிகரால் வரி செலுத்த முடியாமல் போகிறது. அவரிடம் பொருளை வாங்கியவருக்கும் நஷ்டம். அந்த நஷ்டத்தை விற்றவரின் கணக்கில் வைப்பதோடு இனி அவர்களிடம் பொருட்கள் வாங்காதபடிக்கு Blacklist உம் செய்யப்பட்டது சில நிறுவனங்களில். இதனால் பல பல வணிகர்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

இப்போது அரசு தனது தவறால் ஏற்பட்ட முடிவை மாற்றிக்கொண்டு, ஜூன் 2018 ல் வரி தாக்கல் செய்தாலும் அதை நவம்பர் 2017 க்கு உரியதாக கருதி ITC எடுத்து கொள்ளலாம் என அறிவித்து இருக்கிறது.

இதில் ஒரு சிக்கலான சவாலும் உள்ளது.

2018-19 க்கான வரி தாக்கல் கணக்கீடு செய்கையில் இது போல 2017-18 க்கான வரிகள் எவை என்பதை தனியாக கணக்கிட்டு அவற்றை கழிக்க வேண்டி இருக்கும்.

இதை விட நவம்பர் 2017 ரிட்டர்னை திருத்த வசதி செய்திருந்தாலே போதும் என்பது எனது தாழ்மையான கருத்து. ஆனால் அது மிக மிக எளிமையான தீர்வு என்பதாலோ என்னவோ அரசு அதை செய்யாமல், சிக்கலான மற்றொரு தீர்வை முன்வைத்து இருக்கிறது.

எது எப்படியானாலும், சிரமமான பணி என்றாலும் இது நஷ்டத்தை பெருமளவு குறைக்கும் என்பதால் வரவேற்கத்தக்கது தான்.

5. புதிய ரிட்டர்ன் படிவங்கள் 01.07.2019 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. முன்னதாக 01.04.2019 முதல் 30.06.2019 வரை அதன் டிரயல் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் அர்த்தம் ஏப்ரல், மே, ஜூன் 2019 காலத்தில் நீங்கள் இரண்டிரண்டு ரிட்டர்ன்கள் தாக்கல் செய்ய வேண்டி வரும். (அதிகாரப்பூர்வமானது ஒன்று, டிரயல் ஒன்று)

மேலும் 2019-20 க்கான ஆனுவல் ரிட்டர்ன் கணக்கிடும் பொழுது முதல் மூன்று மாதங்கள் ஒரு வகையாகவும் மற்ற ஒன்பது மாதங்கள் வேறு வகையாகவும் கணக்கிட வேண்டி இருக்கும் என்பது தான் ஒரே சிறு சிரமம்.

ஆனால் முறையான ரிட்டர்ன் படிவத்தை கூட முடிவு செய்யாமல் அரைகுறையாக 2017 ஜூலையில் GST அமலாக்கி எல்லாரது வாழ்க்கையையும் சிரமத்துக்குள்ளாக்கியது ஏன் என்பது தான் தெரியவில்லை

6. பொருட்கள் வகைகளில் 17 சேவை துறையில் 6 இனங்கள் வரி குறைப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.

இதை தான் எல்லோரும் பல காலமாக கேட்டு வருகிறார்கள். ராகுல் மிக தீவிரமாக கோரிக்கை வைத்தபோது அவரை அரசு கிண்டல் செய்தது. இப்போது யதார்த்தத்தை உணர்ந்து இறங்கி வந்திருப்பது நல்ல விஷயம்.

மொத்தத்தில் வணிகர்களின் சிரமத்தை மிக மிக கால தாமதமாக உணர்ந்து கொண்டு செயல்பட தொடங்கி இருக்கிறது அரசு.

ஆனால் இடைப்பட்ட இந்த ஒன்றரை வருடங்களில் நசிந்து போன வர்த்தகம் இனி துளிர்த்தெழ மிக நீண்ட காலம் ஆகலாம். திருத்த முடியாத சில தவற்களை அரசு செய்ததால் அழிந்து போனவர்கள் அதிகம்.

இனியேனும் அரசு எதையும் யோசித்து தகுந்த ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டால் தான் இந்திய பொருளாதார நிலை சீராகும்

அதற்கு நேற்றைய முடிவுகள் முதல் படியாக இருக்கட்டும்

Saturday, December 22, 2018

GST யும் தோசை மாஸ்டரும்

ஊரில் ஒரு மெஸ் இருந்துச்சு.

தோசை, ரோஸ்ட், ஆனியன் ரவால்லாம் அங்கே செம ஃபேமசு. ரொம்ப காலமா ஒரே மாஸ்டர் தான். டேஸ்டில் அப்பப்ப சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் அவரோட தோசைக்கு மவுசு அதிகம்.

சில மாசம் முன்னெ புதுசா ஒரு பையன் வேலைக்கு சேர்ந்தான். மாஸ்டர் தோசை சுடுற லட்சணத்தை நக்கலடிச்சுகிட்டே இருந்தான். இதெல்லாம் என்ன தோசை நான் சுடுவேன் பாரு தோசைன்னு அவனோட புது புது ஐடியாக்களா அப்பப்ப சொல்லீட்டே இருப்பான். நான் தோசை சுட்டா இப்போ இருக்கிற கூட்டத்தைவிட இன்னும் கூட்டம் கூடும். முதலாளிக்கு லாபமோ லாபம்னு அடிச்சு விட்டுட்டே இருந்தான்.

முதலில் கண்டுக்காம இருந்த மொதலாளி மெல்ல மெல்ல அவனோட பேச்சுல ஈர்க்கப்பட்டு ஒரு நாள் கூப்பிட்டு அவனோட ஐடியாக்களை கேட்டாரு.

அவன் போன பெரிய பெரிய ஹோட்டல்கள்ள விதவிதமான தோசைகளை பார்த்த விவரம் பத்தியெல்லாம் அவன் சொன்னபோது மொதலாளிக்கும் ஆசை வந்திருச்சு.

அப்புறம் என்ன?

தோசை மாஸ்டரை பாத்திரம் கழுவ அனுப்பீட்டு, பையனை தோசை மாஸ்டர் ஆக்கீட்டாரு!

புது டைப் தோசை சுடுறதை பார்க்க பழைய மாஸ்டரும் மொதலாளியும் மற்ற வேலக்காரவுங்களும் கூட வந்துட்டாங்க. எல்லாம் ஒரு ஆர்வம் தான்.

பாரம்பர்யமான அந்த இரும்பு தோசைக் கல்லுல எண்ணெய் கூட காட்டாம மாவை ஊத்தும்போதே எல்லாரும் திட்டுனாங்க. ஏண்டா இப்படி பண்றேன்னு. இன்னும் என்ன பழைய ஸ்டைல் வேண்டி கிடக்கு, நீங்கல்லாம் எப்போ மாடர்ன் ஆவுறது? இது தான் இப்போ ஃபேஷன். நான் தானே தோசை மாஸ்டர். நீங்க புத்தி சொல்றத விட்டுட்டு ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாருங்கன்னு கிண்டலா சொல்லிட்டு தோசை சுட ஆரம்பிச்சாப்ல!

தோசை ஒட்டிக்கிச்சு. எப்படி எடுத்தாலும் வரலை. எல்லாரையும் பார்த்தான். யாரும் ஒண்ணும் சொல்லாம அமைதியா இருந்தாங்க. சட்டுகத்தை வெச்சு எல்லா சைடிலிருந்தும் குத்தி நெம்பி சுரண்டி தோசையை பீஸ் பீசா எடுத்துட்டான். மொத தடவை சுடும்போது இப்படித்தான் இருக்கும்னு சப்பைக்கட்டு வேறெ. அடேய் இது பலவருஷமா நல்லாருந்த கல்லுடா. நேத்து வரைக்கும் நல்லா தோசை வந்துச்சேன்னு கேட்ட முதலாளியை தனக்கு எதிரா சதி செய்யுறாரு, தனக்கு கெட்டபேரு வரவைக்கிறாருன்னு எரிஞ்சு விழுந்ததும் மொதலாளியும் அமைதி ஆயிட்டாரு.

முதலாளிக்கே இந்த கதின்னா நமக்கு எதுக்கு இந்த வம்புன்னு அமைதியான மத்தவங்களை, தன் திறமையை பார்த்து அதை ஆதரிக்கிறாங்கன்ற மமதையோட, இன்னும் பலமா சொரண்ட, தோசைக்கல்லு ஒண்ணுக்கும் உதவாத லெவலுக்கு உருப்படாம போச்சு.

கடுப்பான முதலாளி கன்னா பின்னான்னு திட்ட ஆரம்பிச்சதும், நான் ஒண்ணும் பண்ணலை. பழைய மாஸ்டர் தான் கல்லை கெடுத்து வெச்சிருக்கார்.  அவரும் இதோ இப்போ அமைதியா நின்னுட்டிருந்தாங்களே இவங்களும் தான் காரணம்னு அழ ஆரம்பிச்சிட்டான்!

சொல்லுங்க. இப்போ முதலாளி அவனை என்ன பண்ணணும்?

பி.கு:
கல்லு - எகனாமி
தோசை - GST
முதலாளி - வாக்காளர்
தோசை மாஸ்டர் - காங்
பையன் - பாஜகன்னெல்லாம் நீங்களா கற்பனை பண்ணிகிட்டா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல!

Friday, December 21, 2018

GST - பலாபலன்கள் என்ன? - பாகம் 1

ஆஹா ஓஹோ என மிக பெரிய எதிர்பார்ப்புக்களோடு கடந்த 2017 ஜூலை 1 முதல் அமலான GST உண்மையில் இந்த 17 மாதங்களில் என்னதான் சாதித்தது என பார்த்தால் அதில் 20% நன்மைகளையும் 80% பாதிப்புக்களையும் தான் காணமுடிகிறது.

அப்படியென்ன பாதிப்புகள் என வகை பிரித்தால், ஏற்றுமதி செய்வோர், சிறு குறு தொழில் செய்வோர், மத்திய ரக தொழிற்சாலைகள், வியாபாரிகள், சுயதொழில் செய்வோர் என வகை பிரிக்கலாம்.

ஒவ்வொன்றாக பார்க்கலாம் எனில் முதலில் ஏற்றுமதி செய்வோரில் இருந்து தொடங்கலாம்.

கடந்த ஆண்டு தொடர்ந்து 11 மாதங்கள் ஏற்றுமதி குறைந்து கொண்டே வந்தது. காரணம் சரியான முன் யோசனையின்றி GST சட்டத்தில் நுழைக்கப்பட்ட ஒரு சிறிய விதி (Rule).

பின்னர் நிதானமாக சுதாரித்துக்கொண்ட அரசு எடுத்த சில நடவடிக்கைகளால் இப்போது மெல்ல மெல்ல மேல் நோக்கி செல்ல தொடங்கி இருக்கிறது Graph.

ஏற்றுமதி குறைந்தால் என்ன ஆகும்? இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடைப்பட்ட வித்தியாசத்தை நாம் வர்த்தக பற்றாக்குறை (Current Account Deficit - CAD) என்கிறோம். இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி குறைந்தால் அது நமது அன்னிய செலாவணி கையிருப்பை (Foreign Exchange Reserve) குறைக்கும்.

எனவே ஏற்றுமதியை ஊக்குவிக்க, வரிவிலக்கு, ஊக்கத்தொகை திட்டங்கள் ஆகியவற்றை அரசு கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஏற்றுமதிக்கு சாதகமான ஒரு சூழல் இருந்தது.

ஏற்றுமதி செய்வோரில் முக்கியமானவர்கள் தொழில்துறை உற்பத்தியாளர்கள் (Industrial Manufacturers); துணி ஏற்றுமதி, விவசாய பொருட்கள் ஏற்றுமதி (காய், பழம், பூ); போன்றவை முக்கியமானவை.

விவசாய ஏற்றுமதியை பொறுத்தவரை நேரடி ஏற்றுமதியை (Direct Export) விடவும் வர்த்தக ஏற்றுமதி (Merchant Export) தான் அதிகம். அதாவது உற்பத்தியாளரே நேரடியாக ஏற்றுமதி செய்வதை விடவும், மற்றவர்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்வது.

ஏற்றுமதி செய்வதற்கு என பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதற்கான அனுமதிகள் பெற்றவர்கள் மட்டுமே ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுகிறார்கள். எனவே உற்பத்தியாளர்கள் (விவசாயிகள்) நேரடியாக ஏற்றுமதி செய்வதில்லை. வர்த்தகர் விவசாயிகளிடமிருந்து வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார். இப்படி விவசாயிகளிடம் இருந்து வாங்குவதற்கு வரி கட்ட தேவை இல்லை. ஏனெனில் அது ஏற்றுமதிக்கு போவதால் வரி விலக்கு இருந்தது.

எனவே, ஒரு வர்த்தகர் ஒரு விவசாயியிடமிருந்து ₹1 லட்சம் ரூபாய்க்கு பழங்கள் வாங்கி அதை பேக் செய்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ₹1.50 லட்சத்துக்கு விற்கிறார் என வைத்துக்கொள்வோம், பேக்கிங் செலவு வண்டி வாடகை ஏற்றுமதிக்கான ஏஜென்சி செலவு கஸ்டம்ஸ் அதிகாரிக்கான செலவு என 25000 போனாலும் 25000 லாபம். ஒரு மாதத்தில் 10 முறை ஏற்றுமதி செய்பவர்கள் இருக்கிறார்கள். இது விவசாய வளர்ச்சிக்கான மறைமுக காரணியும் கூட. தமிழகத்தில் இருந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள், ஊறுகாய், வற்றல் என பலவும் ஏற்றுமதி ஆகிறது. வெளிநாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் கிடைப்பது இப்படித்தான். இந்தியா முழுதும் இப்படி ஏற்றுமதி செய்வோர் சுமார் 40 லட்சம் பேர் உள்ளனர்.

சரி, GST யால் இவர்களுக்கு என்ன பதிப்பு? அப்படியென்ன அந்த விதி பெரிய சிக்கலை உண்டுபண்ணியது? அந்த விதி தான் என்ன?

GST அமலானபோது இந்த அரசு, வர்த்தக ஏற்றுமதிக்கு வாங்கும் பொருட்களுக்கும் 18% வரி விதித்தது. இந்த வரியை நீங்கள் உங்கள் GST ரிட்டர்ன் தாக்கல் செய்யும்பொழுது கட்டிவிட வேண்டும். ஆனால் நீங்கள் ஏற்றுமதி செய்தபின் ஏற்றுமதி செய்ததற்கான ஆவணங்களை (Proof of Export) சமர்பித்து விட்டால் நீங்கள் செலுத்திய வரியை அரசு உங்களுக்கு திரும்ப கொடுத்துவிடும் (ரீஃபண்டு)

நல்ல விஷயம் தானே? இதிலென்ன தவறு?

முன்னேற்பாடுகளின்றி அவசர கதியில் அள்ளித்தெளித்த நிலையில் GST யை அமல்ப்படுத்திய இந்த அரசு, ரீபண்டுக்கான தெளிவான விதிமுறைகளையோ, ரீஃபண்டு விண்ணப்பிப்பதற்கான முறைகளையோ, அதற்கான இணைய தள வசதியையோ சட்டம் அமலான ஜூலை 2017 ல் செய்யவில்லை. எல்லோரும் பல பல முறையீடுகள் செய்தபின்னர் மார்ச் 2018 ல் தான் ரீஃபண்டுக்கான முறையான வசதிகள் செய்தனர்.


ஒரு மிகப்பெரிய சட்டம் வருகையில் இது போன்ற சிறு சிறு பிரச்சனைகள் இருக்கும் தான். அதெல்லாம் சகஜம் என நம்மை நாமே சமாதானம் செய்துகொண்டாலும் இதனால் ஏற்பட்ட பாதிப்பை பார்க்கும்போது மிகுந்த மன கஷ்டம் ஏற்பட்டது. என்ன பதிப்பு? ரீஃபண்டு லேட்டாக கிடைத்தது. அவ்வளவு தானே?

அது தான் மிகப்பெரிய பாதிப்பு.

நான் மேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம்.

GST க்கு முன் ₹1 லட்சத்துக்கு பொருள் வாங்கி ₹1.5 லட்சத்துக்கு ஏற்றுமதி செய்தால் 25000 லாபம் கிடைத்தது.

GST க்கு பின், ₹1 லட்சத்துக்கு பொருள் வாங்க ₹18000 வரிகட்ட வேண்டும். எனவே லாபம் 7000 தான். இந்த 18000 அரசிடம் மாட்டிக்கொண்டது. மாதம் 5 ஏற்றுமதி செய்தால் 90000 அரசிடம். ஜூலை முதல் மார்ச் வரை 9 மாதங்களில் அரசிடம் சேர்ந்தது ₹8,10,000 இந்த ஒரு வர்த்தகரிடமிருந்து மட்டும். நாடு முழுதும்?? GST வருவாய் அதிகரித்தது என கணக்கு காட்டி சந்தோஷப்பட்ட அரசு அதில் திருப்பித்தரவேண்டிய இது போன்ற தொகை எவ்வளவு என்பதை கவனித்து கழிக்காமல் விட்டுவிட்டது. எனவே இந்த வரி வருவாய் ஒரு மாயை (இல்லாத வரியை புதிதாய் நுழைத்து வரி வசூலித்து திருப்பி தராமல் இழுத்தடித்தது)

கோர்ட் தலையிட்டு ரீஃபண்டு வழங்க சொன்ன பின் அவசரம் அவசரமான ரீஃபண்ட் வாரம் எல்லாம் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஏப்ரல் 2018 முதல் திருப்பித்தந்தது அரசு.

சரி இடைப்பட்ட காலத்தில் நம்ம வர்த்தகருக்கு என்ன ஆகி இருக்கும் என யோசித்து பார்த்தீர்களா?

ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் அரசுக்கு வரி செலுத்தி இருப்பார். லாபம் கணிசமாக குறைந்ததால் அவரது வாழ்க்கைத்தரம் குறைந்திருக்கும். குடும்பத்தில் நிம்மதியின்மை வேறு. போதாக்குறைக்கு தினசரி டீசல் விலை உயர்வால் வண்டி வாடகை அதிகரித்து உள்ள லாபத்துக்கும் வேட்டு. இது தவிர வரி தாக்கலுக்கு அடிட்டர்களுக்கு கொடுக்கவேண்டிய தொகை வேறு. வீடு, நகை எல்லாம் அடமானம் வைத்து GST வரி கட்டியவர்களை நான் அறிவேன். அடுத்த மாசமாவது அரசு ரீஃபண்டு தந்துவிடாதா என்கிற  எதிர்பார்ப்புடன் மாதாமாதம் ஒழுங்காக வரி கட்டி வந்தவர்கள் பலரில் ஐந்து மாதத்துக்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் தொழிலை மூடியவர்களும் சிலர்.

எல்லா பாதிப்புக்களும் மொத்தமாக நிம்மதியையும் எதிர்காலத்தையும் தொலைத்தழித்த பின்னர் ஏப்ரல் முதல் கிடைக்க தொடங்கியது ரீஃபண்டு.

பெரிய நிறுவனங்கள் கார்ப்பொரேட் ஏற்றுமதியாளர்கள் தாக்குபிடித்தனர். சிறு குறு ஏற்றுமதியாளர்கள் தான் அழிந்து போனார்கள்.

சரி இதை தவிர்த்திருக்க முடியுமா?

நிச்சயமாக முடியும். ஏற்கனவே அமலில் இருந்த சட்டத்தில் புதிதாக ஒரு  விதிமுறையை புகுத்தும்பொழுது அதன் சாதக பாதகங்கள் என்னென்ன என ஆராய்ந்து பார்த்து பின் முடிவெடுப்பது தான் ஒரு நல்ல அரசின் செயலாகும். ஆனால் GST அமலாக்கத்தில் அப்படியான ஆய்வுகள் நடந்ததா என தெரியவில்லை.

வர்த்தக ஏற்றுமதிக்கு வாங்கும் பொருட்களுக்கு வரியில்லை என்கிற கடந்த ஆட்சியின் நிலைப்பாடே தொடர்ந்திருக்கும் எனில், மிகைப்படுத்தப்பட்ட வரிவருவாயோ, ரீஃபண்டு தரவேண்டிய நிர்ப்பந்தமோ, ரீஃபண்டு வராததால் தொழிலை மூடவேண்டிய நிலைக்கு வர்த்தகர்களை தள்ளியதோ நடந்திருக்காது.

அல்லது இப்படி வரிவிதிப்பது தான் இறுதி முடிவு எனில் அதற்கான விதிமுறைகளை தெளிவாக வகுத்து வரி செலுத்துவதற்கும் ரீஃபண்டுக்கும் தேவையான இணைய தள வசதிகளை ஏற்படுத்தியபின் சட்டத்தை அமலாக்கி இருக்க வேண்டும்.

அதற்கு சற்றேனும் முன் யோசனை வேண்டும். அந்த முன் யோசனை இல்லாததால் ஏற்றுமதி பாதிப்பு, தொழில் முடக்கம், வர்த்தகர்களின் வேலை இழப்பு, ஏற்றுமதியை நம்பி விளைவித்த விளை பொருள் விற்பனை ஆகாமல் நொடிந்த விவசாயிகள் என பலதரப்பட்ட பாதிப்புக்களால் அந்த துறையே நொடிந்தது.

இது இந்த தொடரின் சின்ன உதாரண சாம்பிள் தான். நாம் இனி வரிசையாக அடுத்தடுத்த துறைகளின் பாதிப்புக்களை அடித்தடுத்த பதிவுகளில் அலசலாம்.

Saturday, December 15, 2018

5 மாநில தேர்தல் முடிவுகள்

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தல் பல வகைகளில் மிக மிக முக்கியமானது. இதன் முடிவுகள் மத்திய பாஜக அரசின் கொள்கைகளுக்கான மதிப்பீடு என கருதப்பட்டதால் பலத்த எதிர்பார்ப்புக்கள் நிலவியது.

ராஜஸ்தான் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கைக்கு போகும் என எதிர்பார்க்கப்பட்டதால் அதன் வெற்றி பெரிய ஆச்சர்யம் தரவில்லை. மேலும் பாஜக ஆட்சியின் மீது ராஜஸ்தான் மக்கள் எவ்வளவு வெறுப்பாக இருந்தார்கள் என்பதும் நாடறிந்த ஒன்று.

மத்திய பிரதேசம் இழுபறி இருந்தாலும் பாஜகவுக்கே செல்லும் என எதிர்பார்த்தேன். ஹிந்தி & ஹிந்து பெல்ட்டை பொறுத்தவரை பிரதமர் மோடி அவர்கள் தனது வளர்ச்சி திட்டங்கள் பற்றி எல்லாம் எதுவும் பேசாமல் ராமர் கோவில், ஏழை தாயின் மகன், டீக்கடை என பழைய செண்டிமெண்ட் சங்கதிகளையே பேசி வந்தார். எனக்குக்கூட பொதுவான ஒரு அபிப்பிராயம் இருந்தது. அதாவது, அந்த பெல்ட்டில் யாரும் வளர்ச்சி பற்றி எல்லாம் சிந்திக்க மாட்டார்கள். ஜெய் ராம் ஸ்ரீ ராம் என சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போட்டு விடுவார்கள். அடுத்து 2019 ம் கூட மோடி தான் வெல்வார் என்றெல்லாம் ஒரு கருத்து எனக்கும் இருந்தது.

ஆனால் மத்திய பிரதேசத்தின் தலையாய பிரச்சனைகள், அதனை களைவதற்கான திட்டங்கள், விவசாய கடன் தள்ளுபடி என ஆக்கப்பூர்வமாகவும் நிதானமாகவும் ராகுல் செய்த பிரச்சாரம் ஹிட் அடித்து இருக்கிறது.


இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ராமர் கோவில் எல்லாம் ஓட்டு வாங்கி தராது. செண்டிமெண்ட் பொய்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான். மக்களின் இந்த மன நிலையை மோடி புரிந்து கொள்ளாதபோது ராகுல் தெளிவாக அதை புரிந்துகொண்டது தான் முதல் வெற்றி.

சட்டீஸ்கார் தான் எனக்கு பேரதிர்ச்சி. காங்கிரஸ் ஓரளவு நல்ல எண்ணிக்கையில் வெற்றி பெற்று நல்ல பலமான எதிர்கட்சியாக வரவேண்டும் என எதிர்பார்த்திருக்கையில் முழு மெஜாரிட்டியிலான ஆட்சியே அமைத்திருக்கிறது. பாஜகவின் கோட்டை என சொல்லப்பட்ட மாநிலம் செதில் செதிலாக சிதைக்கப்பட்டதற்கு, மக்களின் வேதனைகளை பிரச்சனைகளை புரிந்துகொள்ளாத பாஜக ஆட்சியினர் தான் காரணம என்பஎன்பதில் மாற்று கருத்து இல்லை. ராகுலின் பேச்சும், திட்டங்களை பற்றிய விவரிப்பும் மக்களுக்கு அவர் மீது ஒரு நல்ல நம்பிக்கையை வரவழைத்து இருக்கிறது. இது யாரும் எதிர்பாராத ட்விஸ்ட். மக்களோடு மக்களாக பயணித்து அவர்களை நன்றாக புரிந்துகொள்வது என்பது ஒவ்வொரு தலைவருக்கும் அவசியமான குணம். மோடி இந்த விஷயத்தில் இதுவரை இறஙகியதே இல்லை. தமிழகத்தில் இது எல்லோரும் செய்வது தான். ராகுலும் அதே ஃபார்முலாவில் மக்களை கவர்ந்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அதுவும் அபரிமிதமான வெற்றி.

மிசோரம் எல்லோரும் எதிர்பார்த்த விஷயம் தான். மக்கள் முன்னணியின் கோரிக்கைகள் நியாயமானவை. இதுவரையும் காங்கிரசோ பாஜகவோ மத்திய அரசில் இருந்து கொண்டு மிசோராமின் கோரிக்கையை சரியாக கையாளவில்லை. அதனால் அவர்கள் இருவரையும் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்று தான்.

தெலுங்கானாவை பொறுத்தவரை சந்திரசேகர ராவ் மிக மிக சாதுர்யமாக செயல்பட்டு இருக்கிறார். முன்னதாகவே ஆட்சியை கலைத்து விட்டு, தேர்தல் நடத்தி முழு மெஜாரிட்டி பெற்று அடுத்த ஐந்து வருடத்தையும் தனதாக்கி கொண்டுள்ளார். ஒருவேளை வழக்கமான நேரத்தில் தேர்தல் வரட்டும் என காத்திருந்தால், இப்போது நான்கு மாநிலங்களில் தோல்வி அடைந்த பாஜக சுதாரித்துக்கொண்டு மக்கள் நல திட்டங்களை அள்ளி வீசினால் ஒருவேளை தெலுங்கானா தனது கையை விட்டு போகும் என முன்பே யோசித்து இருப்பார் சந்திரசேகர ராவ் என தோன்றுகின்ற அளவுக்கு அவரது திட்டமிடல் இருந்தது. எல்லா இடத்திலும் பாஜக அடி வாங்கும் என சரியாக கணித்தவர் அவர் மட்டும் தான். அந்த அலையில் தெலுங்கானாவிலும் தோற்கட்டும் என சரியாக திட்டமிட்டு ஆட்சியை கலைத்து தேர்தலை சந்தித்து வென்றிருக்கிறார். மிக தேர்ந்த அரசியல்வாதியாக வளர்ந்திருக்கிறார் சந்திரசேகர ராவ்.

***

பொதுவாகவே இந்த தேர்தல் நமக்கு சொல்லி இருப்பது பல செய்திகள். அதில் மிக மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியவை

செண்டிமெண்ட் டயலாக்குகள், சிம்பதி அழுகைகள், ராமர், மதம், மொழி ஆகியவை எல்லாம் ஓட்டுக்களை தரும் என்கிற நம்பிக்கை இனி வேலைக்கு ஆகாது. உருப்படியாக ஏதேனும் மக்களுக்கு செய்தால் தான் வெல்லமுடியும்.

மக்களின் மனதை புரிந்து கொண்ட மக்களுக்கு நல்லதொரு நம்பிக்கையை கொடுக்கக்கூடிய ஒரு தலைவராக ராகுல் வளர்ந்து வருகிறார். பாஜக செல்வாக்காக இருந்த பகுதிகளிலேயே அவர் பெற்றிருக்கும் வெற்றி அதை உறுதி செய்கிறது

மத்திய அரசின் கடந்த நான்கு ஆண்டு செயல்பாடுகள் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. கொள்கை முரண்பாடுகள், அடித்தட்டு மக்களுக்கு ஒழைக்கப்பட்ட அநீதி, வளர்ச்சியின்மை, பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சி இன்மை ஆகியன மக்களால் அன்றாடம் உணரப்பட்டன. ஆனாலும் அரசின் தரப்பில் இருந்து அவற்றுக்கான எந்த தீர்வும் இல்லை என்பது மக்களிடையே ஒரு விரக்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலிலும் அதைப்பற்றி பேசாமல் தன்னை பற்றியே பிரதமர் பேசி வந்ததின் பலன் தான் மக்கள் ஒட்டுமொத்தமாக பாஜகவை தோல்வியுத செய்தது

இனி மக்களை புரிந்து கொள்வதும் அவர்களுக்கான தேவைகளை தீர்த்து வைப்பதும் தான் வெற்றிக்கான வழி. அல்லாமல் ராமரோ, இந்துவோ, இந்தியோ தூக்கி நிறுத்தப்படுவதல்ல.

இதனை ராகுல் தெளிவாக புரிந்துகொண்டு விட்டார். மோடியும் பாஜகவும் புரிந்து கொள்வதற்கான முயற்சியேனும் செய்தால் தான் இனி வெல்ல முடியும்.

ராகுலின் தன்னம்பிக்கை, மோடியின் தலைக்கனத்தை இப்போதைக்கு தகர்த்திருக்கிறது.

இனி பாஜக சுதாரித்து கொள்ள வேண்டியது அவசியம். மக்கள் மோடி மீதான மாயையில் இருந்து வெளியேறிவிட்டதை உணர்ந்து எதார்த்தத்தை புரிந்து நடந்து கொள்ளவேண்டும்.

செய்வார்களா?

Thursday, September 13, 2018

விநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்


ட்விட்டரில் பலரும் 'வீதிக்கு வீதி விநாயகர் வழிபாடு நடந்து கொண்டிருக்கிறதே. இது திராவிட இயக்கத்தின் பெரியாரியலின் தோல்வி அல்லவா?' என ஏளன பதிவுகள் இட்டிருப்பதை பார்க்க நேர்ந்தது.

எனக்கு ஏனோ சிரிப்பு சிரிப்பாக வந்தது.

உண்மையில் இது பெரியாரியலின் வெற்றி. எந்த வகையிலும் தோல்வியே அல்ல.

ஆலையங்களுக்குள் சென்று இறைவனை வழிபடவேண்டும் என்கிற விருப்பம் இருந்தும் ஆலையத்தினுள் நுழையமுடியாமல் தடுக்கப்பட்டு இருக்கும் சமூகம், ஆலையத்தினுள் நுழைந்து இறைவனை வழிபடுவதற்கான உரிமையை மீட்டெடுக்க போராடிய இயக்கம் திராவிட இயக்கம்.

இறை நம்பிக்கை நமக்கு இல்லை எனினும், இறை நம்பிக்கை உள்ளவர்களின் உரிமைக்காக போராடுவதே சமத்துவம். இதை தான் வைக்கம் போராட்டத்தின் மூலம் பெரியார் புரியவைத்தார்

அத்தகைய நிலையில் இருந்து, இன்று ஆலையத்துள் அடைந்து கிடந்த இறைவனை வீதிதோறும் கொண்டு வந்து இருத்தி எல்லோரையும் வழிபட வைத்திருப்பது உண்மையில் பெரியாரியலின் திராவிட பேரியக்கத்தின் மகத்தான வெற்றி அல்லவா?

இந்து சமய ஆலைய ஆகம விதிகளின் படி பிரதிஷ்டை செய்யப்பட்ட இறை சிலைகள் தான் வழிபாட்டுக்குரியவை என்கிற தாத்பர்யங்களை எல்லாம் தூக்கி தூரப்போட்டு எந்த நிலையிலும், எந்த பொருளிலும், எந்த உருவிலும் சிலையாய் செய்து அதையும் தெய்வம் தான் எனச்சொல்லி வழிபட வைத்தது கூட இந்து சமய ஆகம விதிகளின் தளைகளை உடைத்துப்போட்ட ஒரு பகுத்தறிவு புரட்சி அல்லவா?

இந்து சமய கட்டுப்பாடுகளை அவர்களே உடைத்து எல்லோருக்கும் எல்லாமுமாய் இறைவனையும் இறங்கி வரவைத்தது பெரியாரியலின் திராவிட இயக்கங்களின் பெரு வெற்றியே!

இதில் மகிழ்ச்சி தான் எனக்கு!

Sunday, September 2, 2018

தமிழக அணைகள் - காமராஜரா கலைஞரா?

தமிழக அணைகள் பற்றிய துரைமுருகனின் பேட்டி ரெண்டு நாளாக சுற்றிக்கொண்டு இருக்கிறது.

காமராஜர் தான் அணைகள் கட்டி தமிழகத்தை காப்பாற்றியவர் என்கிற 'கட்டமைக்கப்பட்ட பொதுக்கருத்துக்கு' எதிரானதாக துரைமுருகனின் பேட்டி இப்போது பார்க்கப்படுகிறது.

உண்மையில் நாம் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

காமராஜர் காலம் என்பது சுதந்திரம் கிடைத்தவுடனான காலம். நாம் எல்லாவற்றையும் புதிதாக ஏற்படுத்த வேண்டி இருந்தது. பிரதமர் நேருவின் தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றான எல்லா நதிகளிலும் அணைகள் கட்டி நீர் சேமிப்பை செய்யவேண்டும் என்பதில் அனைத்து மாநில முதல்வர்களும் செயல்படுத்தினார்கள். அவர்களுள் காமராஜரும் ஒருவர்.

இரண்டாவதாக, அப்போது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக காமராஜர் இருந்தார். இப்போதைய தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரள மாநிலங்கள் அனைத்துக்கும் அவர் தான் முதல்வர். ஒருங்கிணைந்த சென்னை மாகாணம் என்பது இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது. சுருக்கமாக சொல்வதானால் 'திராவிட நாடு'.

அதனால் இந்த பரப்பு முழுமையும் அணைகள் கட்டவேண்டிய பொறுப்பு மாநில முதல்வரான காமராஜர் அவர்களின் அடிப்படை கடமையானது.

இதை வைத்து பார்க்கையில்..

மாநில பிரிவினைக்கு பின்னர், 1967 க்கும் பின்னர், விடுபட்டிருந்த இடங்களை எல்லாம் கண்டு பிடித்து, இங்கெல்லாம் அணைகள் இருந்தால் தான் தமிழகம் செழிக்கும் என திட்டமிட்டு மாவட்டங்கள் தோறும் அணைகள் கட்டியதெல்லாம் திமுகவின் சாதனைகள் தான் என்பது தெளிவாக புரியும்.

அடிப்படை கட்டமைப்புக்களை ஏற்படுத்தியவர் நேரு. அதில் மாநில தேவைகளை நிறைவேற்றியது திராவிட இயக்கங்கள்.

இந்த அடிப்படையில் மீண்டும் துரைமுருகன் அவர்களது பேட்டியை பாருங்கள். உங்களுக்கே மலைப்பாக இருக்கும்.

Friday, May 4, 2018

NEET - கருகிய கனவுகள்

தமிழகம் உயர்கல்வியில் உன்னத நிலையை பல வருடங்களுக்கு முன்பே எட்டிவிட்டது.

தலைசிறந்த கல்வி நிலையங்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என எல்லா வருடமும் பல்லாயிரம் எஞ்சினியர்களையும் டாக்டர்களையும் தந்துகொண்டிருக்கும் மாநிலம் தமிழகம்.

உலகம் முழுதம் அவர்கள் பரந்து விரிந்து பரவி கிடக்கிறார்கள்.

இதெல்லாம் இந்தியா முழுவதும் எல்லோரும் அறிந்ததே. அதனால் தான் எல்லா மாநில மாணவர்களும் தமிழகத்தில் கல்வி கற்க பேரார்வம் காட்டுகிறார்கள்.

தமிழக மாணவர்களே அதிக இடங்களை பிடித்து விடுவதால் மற்ற மாநில மாணவர்களுக்கு குறைந்த இடங்களே கிடைத்து வருகிறது என்பது ஒரு குறையாக வட மாநில மக்கள் மனத்தில் பன்னெடுங்காலமாகவே இருந்து வருகிறது.

அதற்கு தீர்வாக முதலில் நீட் கொண்டு வரப்பட்டது. அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய போதும் நீட் கட்டாயமாக்கப்பட்டதால் அதையும் எழுதி வென்று இடம்பிடித்தனர் நம் மாணவ சிங்கங்கள்.

அதனால் இந்த முறை புதியதொரு உபாயத்தை கைக்கொண்டு இருக்கிறது மத்திய பாஜக அரசு.

தனது கட்டுப்பாட்டில் உள்ள CBSE நடத்தும் நீட் தேர்வுக்கான தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்கையில், தமிழகத்தில் மட்டும் தேர்வு மையங்களை கோட்டைவிட்டு விட்டதாம். இதை மத்திய அரசே உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறது.

மற்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் அதிகமாக ஏற்படுத்தி தமிழகத்தில் குறைத்திருப்பதன்மூலம் தமிழக மாணவர்கள் ராஜஸ்தான், சிக்கிம் போன்ற மாநிலங்களுக்கு சென்று தேர்வெழுத வேண்டிய சூழலுக்கு தள்ளிவிட்டிருக்கிறது மத்திய பாஜக அரசு.

கேரள மாநில எர்ணாகுளத்தில் மட்டும் தமிழக மாணவர்கள் 5,371 பேர் தேர்வு எழுத இருக்கிறார்கள். ஆறுதலாக தமிழக மாணவர்களுக்கு உதவ கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் தானே முன்வந்து அதிகாரிகளுக்கு உத்தரவு இட்டு இருக்கிறார். மற்ற மாநிலங்களில் இதுபோன்ற ஆதரவுக்கரம் எதுவும் நம் மாணவர்களுக்காக நீளவில்லை.

மேலோட்டமாக பார்த்தால் மத்திய அரசு மீது எந்த தவறும் சொல்ல முடியாது. ஆனால் தொலை தூரத்துக்கு சென்று தேர்வு எழுதக்கூடிய சூழலில் பல மாணவர்கள் இல்லை என்பதை உணர்ந்தே மிக மிக தூரமாக தேர்வு மையங்களை ஏற்படுத்தி இருக்கிறதோ என்கிற சந்தேகம் எழாமலில்லை. அப்படியே அங்கே செல்ல முடிவெடுத்தால் கூட குறைந்த கால இடைவெளியில் அங்கே சென்று சேர முடியாதபடிக்கு தூரமாக தேர்வு மையங்களை அமைத்திருப்பதில் இருந்தே, தமிழக மாணவர்கள் இவ்வாண்டு நீட் தேர்வை எழுதக்கூடாது என்பதில் மத்திய பாஜக அரசு எவ்வளவு முனைப்பாக இருக்கிறது என்பது புரியும்.

இதில் சுவாரசியமான மற்றொரு விஷயமும் இருக்கிறது.

தமிழகத்தில் மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்களில் முன்னேறிய வகுப்பினரே அதிகம். மத்திய பாஜக அரசின் முடிவால் அதிகம் பாதிக்கப்படுபவர்களில் அவர்களும் அடக்கம்.

எனவே இதை இனரீதியான அடக்குமுறையாக அல்லாமல் மொழியியல் ரீதியான அடக்குமுறையாகவே நான் பார்க்கிறேன்.

தஞ்சை குடந்தை பகுதிகளில் தீவிர தமிழுணர்வுள்ள பிராமண குடும்பத்தினர் பலர் உள்ளனர். அவர்களில் எனது சில நண்பர்களும் அடக்கம். அவர்களது குடும்பத்திலேயே சில மாணவர்கள் இப்போது பாதிக்கப்பட்டு உள்ளதில் அவர்களுக்கே மத்திய பாஜக அரசு மீது கோபம் உள்ளது.

தனது மகன் நல்ல மதிப்பெண் எடுத்தும் நீட் எழுத வாய்ப்பு கிடைத்தும் தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதால் அவனது மருத்துவர் கனவே பாழாகிப்போன வருத்தத்தில் பலர் உள்ளனர். இதில் எல்லா இனத்தவர்களும் எல்லா குலத்தவர்களும் அடக்கம். அவர்கள் அனைவரின் ஒரே ஒற்றுமை, தமிழர்கள் என்பது மட்டும் தான்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் வட மாநில மாணவர்கள் அதிகமாக மருத்துவத்துறையில் நுழைய வேண்டும், அதுவும் தமிழகத்தின் சிறந்த கல்வி நிறுவனங்களின் மாணவர்களாக வரவேண்டும் என்பதற்காகவும், தமிழக மாணவர்கள் மருத்துவத்தில் சேர முடியாதபடிக்கு முட்டுக்கட்டை இடவேண்டும் என்பதற்காகவும் மத்திய பாஜக அரசு இத்தகைய கொடுமையான முடிவை எடுத்திருப்பதாக மெத்த படித்த அறிஞர்களே ஐயப்படுகிறார்கள்.

இரண்டொரு நாள் முன்புவரை கூட பாஜகவை தீவிரமாக ஆதரித்து வந்த என் நண்பர் ஒருவரே இன்று மிக கடுமையாக மத்திய அரசின் முடிவை சாடியது அதன் ஒரு துளி. அவரது குடும்பத்திலேயே ஒரு மாணவரின் டாக்டர் கனவு இப்போது கானலாகி விட்ட சோகமும், அடுத்தவருடம் வரை காத்திருப்பதன் விரயமும், பொருளாதார வசதி இருந்தும் நல்ல மதிப்பெண் இருந்தும் டாக்டர் ஆக முடியாமல் போன ஆதஙகமுமாக இன்று வெடித்து புலம்பி தள்ளிவிட்டார். அப்போது தான் இதன் வீச்சை நான் முழுமையாக உணர்ந்தேன்.

தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் இப்போது தமிழக மாணவர்களுக்கும் எதிராக மத்திய பாஜக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால், இன குல மத பேதமின்றி அனைத்து தமிழர்களும் மெல்ல மெல்ல ஒன்றிணைந்து வருவது ஒருபுறம் நடந்தாலும், இன்னொரு புறம் எதார்த்தம் புரியாமல் 'எங்கோ' இருந்து இணையத்தில் மத்திய அரசின் முடிவுக்கு சப்பைக்கட்டு கட்டிவரும் சில நண்பர்கள் எரிச்சலூட்டுவதும் நடந்து கொண்டு இருக்கிறது. இப்போது தான் அவர்களை மிகச்சரியாக கணித்து கண்டிக்க தொடங்கி இருக்கிறார்கள் சமீப காலம் வரை மோடியை ஆதரித்து வந்து இப்போது எதார்த்தம் புரிய தொடங்கிய மற்ற சில நண்பர்கள்.

தமிழக மாணவர்களின் நலன் காக்க வேண்டிய தமிழக அரசு வாளாவிருந்து மாணவர்களின் கனவுகளை சிதைத்து விட்டதையும், முன்னேற்பான நடவடிக்கைகளையோ மத்திய அரசுக்கு எதிரான கடுமையான கண்டனத்தையோ தெரிவிக்காமல் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தையே சிதைத்துவிட்டதாக சில அதிமுகவினரே கொந்தளித்து வருவதையும் கவனித்தேன்.

அதிமுகவினரே தமிழக அரசை தீவிரமாக எதிர்க்க தொடஙகியதை அறிந்த தமிழக அரசு வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு பயணப்படியும் செலவு தொகையும் வழஙகுவதாக அறிவித்து இருக்கிறது. இது சுத்தமாக போதாது.

கட்சி பேதமின்றி, இன மத குல பேதமின்றி எல்லோரும் பெற்றோர் என்கிற ஒற்றை வரியில் ஒன்றாகி மத்திய பாஜக அரசின் கொடுமையையும் மாநில அதிமுக அரசின் கையாலாகாத்தனத்தையும் உணர்ந்து கண்டித்து வருகிறார்கள்.

இதனால் எல்லாம் 'இந்த வருடம் மருத்துவத்துறை மாணவனாக சேரமுடியவில்லையே' என ஏங்கும் நம் பிள்ளைகளின் துயரத்தை துடைத்து விட முடியுமா? அவர்களது கனவுகளை நிறைவேற்ற முடியுமா? இத்தனை மன உளைச்சல்களுக்கிடையே நம் மாணவர்களால் இத்தேர்வை நன்கு எழுத முடியுமா?

மௌனம் மட்டுமே சுமந்து நிற்கும் ஒரு வக்கற்ற சமுதாயத்தில் நானும் இருப்பதை எண்ணி வெட்கி தலைகுனிகிறேன்.

நம் பிள்ளைகளுக்கான வாழ்க்கையை நம்மால் தரமுடியவில்லையே என்கிற குற்ற உணர்ச்சியுடனும்!

மன்னித்து விடுங்கள் பிள்ளைகளே!

Sunday, April 29, 2018

GST Return Simplification

Was reading the proposals of Nandan Nilekani & Committee set by GST Council regarding simplification of GST returns

Actually this study should have done by the govt before June 2017. Since we don't have proactive thinking and just passing our days with Trial and Error method of administration (like many corporates do) the govt initiated this study only after a huge mess created by this immatured GSTN procedures.

So coming to the proposals

Both talks about GSTR3B with an annexure of Invoices (GSTR1) to be uploaded by the seller. This is OK, as it is being followed by existing VAT regime also

From buyer point of view, to avail ITC the two proposals gives two methods.

Nilekani proposes, if the buyer find his purchase bill uploaded by the seller, he can accept it and take credit. If not found he can insist seller to upload. In anycase , unless the seller uploads, buyer can't get ITC.

In this method, the Working capital of the buyer goes for a toss. If the seller not uploaded his bills, the buyer can't take credit. Even though he received the material and bill, he need to pay CASH till seller uploads the bill. Once uploaded he can avail ITC and it sits in the Credit ledger. Credit can be claimed as refund. Hope you are all aware how the refund system 'working' now on GST

Second proposal was by the committee. It suggests buyer to avail ITC even though the seller not uploaded the bill. It is similar to the present system of GSTR2. But the ITC will be valid only of buyer adds the bill and seller accepts it.

It is so tedious job. If a company has around 2000 bills per month for purchase, they have to reconcile every bill and add missing bill to take ITC after it was accepted by the buyer. If not, he has to pay CASH and go for refund.

Both the proposals are useless in my view. It increases the burden and won't give any accuracy of Cashflow. It spoils the Working capital of businesses and the MSME sector will be finished easily.

My worry or surprise is, doesn't we have a single person out of 132 Cr people (or 125 Cr as per PM, after deducting TN population 😝) who can suggest a simple & useful mechanism for filing GST returns?

Or why can't the govt calls for a discussion with Indirect tax experts, CBIC officials etc., to find a working system for statutory compliance?

What stops them to find a solution to resolve the mess up?

Can someone explain?

100% கிராமங்களுக்கும் மின் இணைப்பு

100% கிராமங்களுக்கு மின் இணைப்பை வழங்கியதற்காக மோடிஜியை பாராட்டி வாழ்த்தி பல பதிவுகளை காண்கிறேன்.

இதுபோன்ற பதிவுகளை எழுதி மகிழ்வோர் இன்னும் கொஞ்சம் தெளிவாகவே விஷயத்தை விளக்கி இருக்கலாம.

இதுவரையும் தென்னகத்தில் மின் இணைப்பு அதிகமாகவும் வடக்கு வடகிழக்கு மாநிலங்களில் குறைவாகவும் இருந்தது

தமிழகத்தை பொறுத்தவரை 95% மின் இணைப்பு பத்து ஆண்டுகளுக்கு முன்பே எட்டப்பட்டு விட்டது. கடந்த 2011 முதல் ஜெ ஆட்சியில் தான் அது தடைபட்டது.

ஒவ்வொரு குடிசைக்கும் ஒரு மின் விளக்கு இலவசம் என 1970 களிலேயே திட்டம் கொண்டுவந்து அதற்காகவே மின் இணைப்பை எல்லா கிராமங்களுக்கும் விரிவு படுத்தியது தமிழக அரசு என்பது வரலாறு.

இதுதவிர விவசாயத்துக்காக இலவச மின்சாரம் வழங்கிய முன்னோடி மாநிலமும் தமிழகம் தான். அதுவும் தமிழகத்தின் பொற்காலம் என போற்றப்படும் அதே 1970 களில் தான். அந்த இலவச மின்சாரம் ஒவ்வொரு கிராமத்துக்கும் வயல் வரப்புகளுக்கும் கிடைப்பதற்காக தாலூகா தோறும் சப் ஸ்டேஷன்களையும் மின் வினியோக கட்டமைப்புக்களையும் செய்து கொடுத்தது தமிழக அரசு.

தமிழக திட்டங்களை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டுவரும் மத்திய அரசு, கிராமங்களுக்கான மின் இணைப்பு திட்டத்தையும் 1980 களில் தொடங்கியது. அது திட்டமிட்ட இலக்கான 2020 க்கு முன்பாகவே இப்போது முடிக்கப்பட்டு இருக்கிறது (கவனிக்க: வடக்கு வடகிழக்கு மாநிலங்களில்)

இந்த விவரம் எதுவுமே தெரியாமல் சிலர், திராவிட இயக்கங்கள் வேஸ்ட் என்றும், மோடி வந்து ஜஸ்ட் மூணே வருடத்தில் இத்தனையையும் சாதித்தார் எனவும் தவறான பொருள் படும் வகையில் பல பதிவுகள் புரிந்துகொள்ள படக்கூடும்.

அதற்கான விளக்கமாகவே இப்பதிவு

🙏

உயர்நீதிமன்ற தீர்ப்புகள் - திமுகவுக்கு தோல்வியா?

சமீபத்திய உயர்நீதிமன்ற தீர்ப்புகள் மிகுந்த சுவாரஸ்யமானவை.

தீர்ப்பு 1:

சட்டமன்ற அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் பதவியை ரத்து செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட கோரி திமுக தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

சட்டமன்ற சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது என தலைமை நீதிபதி சொல்லி இருக்கிறார். இது சரியானது தான்.

ஆனால் சமீபத்தில் புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் உத்தரவில் இதே உயர்நீதிமன்றம் மன்றம் தலையிட்டு அவரது உத்தரவை ரத்து செய்தபோது எப்படி கோர்ட்டுக்கு அதிகாரம் வந்தது என தெரியவில்லை.

ஒருவேளை, பாதிக்கப்படுவோர் பா.ஜ.க ஆக இருப்பின், அந்த பாதிப்பிலிருந்து அவர்களை மீட்க எல்லோருக்கும் எல்லாவித அதிகாரங்களும் வழங்கப்பட்டு இருக்கிறதோ என்னவோ?

நீதிமன்றங்கள் நடுநிலை தன்மை கொண்டவை. தன்னிச்சையாக சட்டத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்குபவை என நான் நம்புகிறேன். (அது ஒருவேளை மூட நம்பிக்கையில் வருமோ என்னவோ)

தீர்ப்பு 2:

சட்டமன்றத்தில் குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை வைப்பது 'தார்மீக அடிப்படையில்' தவறுதான். ஆனாலும் அதை தீர்ப்பாக சொல்ல சட்டத்தில் இடமில்லை என தலைமை நீதிபதி சொல்லி இருக்கிறார்

உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்ததை இப்போது உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருப்பதில் மகிழ்ச்சி. இனியேனும் அதிமுகவினர் அதை உணர்ந்தால் நல்லது.

தார்மீக ரீதியில் தவறு. ஆனால் சட்ட ரீதியாக தவறில்லை என்பது டான்சி நில வழக்கிலேயே இதே ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்ன கருத்தை நினைவு படுத்துகிறது.

திமுக இந்தவிஷயத்தில் வழக்கு போட்டிருக்க தேவையே இல்லை என ஒரு வாதம் வைக்கப்பட்டு வந்தது. சட்டத்தில் இடமில்லாத ஒன்றுக்காக திமுக வழக்கு போட்டு விளம்பரம் தேடுவதாக நான் கூட பலமுறை நினைத்திருக்கிறேன்.

ஆனால் நேற்றைய தீர்ப்பின் படி ஜெயலலிதா குற்றவாளி என மீண்டும் உறுதிப்படுத்த பட்டுள்ளதால் அரசின் திட்டங்களில் அவரது படத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு வழக்கை திமுக தாக்கல் செய்ய இந்த தீர்ப்பு உதவும்.

சட்டமன்றத்தில் படத்தை நீக்கத்தானே சட்டத்தில் இடமில்லை?

சுருக்கமாக பார்த்தால் முதல் தீர்ப்பை அப்பீலில் வெல்ல முடியும். இரண்டாவது தீர்ப்பின் அடிப்படையில் புதிய வழக்கு பதியலாம்

திமுகவுக்கு ஆறுதல் வெற்றிதான். தோல்வி அல்ல.

பார்ப்போம்!

Sunday, April 15, 2018

ஜெ திராவிட தலைவரா ?

ஜெ திராவிட தலைவரா என்று ஒரு விவாதம்.

இதில் என்ன சந்தேகம் என தெரியவில்லை. ஜெ. நிச்சயமாக திராவிட இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவர்தான். குழப்பமே வேண்டாம்.

அவர் சார்ந்த இனத்தின் அடிப்படையில் அவரை திராவிட தலைவர் அல்ல என வாதிடுவோர் நீதிக்கட்சி பற்றி அறியாதவர்களாக இருக்கக்கூடும். இனத்தின் அடிப்படையில் அல்ல. உணர்வின் அடிப்படையிலேயே அவரது திராவிடத்துவம் தீர்மானிக்கப்படுகிறது.

திராவிட இயக்க உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு திராவிட கொள்கைகளுள் சிலவற்றையேனும் செய்ய முனைந்தவர்கள், அவர்கள் எவ்வினத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களும் திராவிட இயக்கத்தின் தலைவர்களே.

***

திராவிட கொள்கைகளுள் சமூக நீதியும் ஒன்று. எல்லா இனத்தவர்க்கும் சம உரிமை.. சமத்துவம்.. எல்லாவர்க்கும் கல்வி வழங்குவதற்கான வசதிகள்..அதற்கான சட்டங்கள் என சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமையை, அவர்களுக்கு வழங்கி அவர்களையும் எல்லோரையும் போல சமூகத்தில் உயரிய இடத்தை அடைய செய்வதும் திராவிட கொள்கையே.

ஆதிக்க இனத்தினரின் அழுத்தங்களையும் மீறி, அவர்களில் ஒருவராக இருந்தும் அதை புறக்கணித்த்ய், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளுக்காக போராடி 69% இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்ததுடன், அதற்கு அரசியல் சாசன பாதுகாப்பும் பெற்று தந்த ஜெ.வை எப்படி திராவிட தலைவர் அல்ல என சொல்ல முடியும்?

திராவிட உணர்வை.. பெரியாரின் அண்ணாவின் கனவுகளை.. நனவாக்கும்  எவரும் பெரியாரிஸ்டுகளே!

விழுப்புரம் கூட்டத்தில் ஜெ ஒருமுறை சொன்னதுபோல 'இது பெரியாரின் புண்ணிய பூமி.. அவரது வழி வந்தவர்கள் மட்டுமே ஆள உரிமை கொண்ட இடம்'. இதை சொல்லி முழங்கும்போது அவரது இனம் நமக்கு ஞாபகம் வருவதில்லை. அவரது உணர்வு தான் ஞாபகம் வருகிறது. அது திராவிட உணர்வு. பெரியாரியலில் ஊறிய உணர்வு.

இது ஒன்றே போதும்.. புரட்சித்தலைவி ஜெயலலிதா திராவிட தலைவர்களுள் முக்கியமானவர்.. பெரியாரின் வழிவந்தவர் என சொல்வதற்கு.

ஏழைப்பெண்களின் திருமணம், பெண்ணுரிமை போற்றும் ஒதுக்கீடு, அனைத்து மகளிர் காவல் நிலையம், தொட்டில் குழந்தைகள், பாலூட்ட தனி அறை, விதவை மறுமணத்துக்கான உதவி என பெண்ணியம் சார்ந்த திட்டங்கள் ஆகட்டும்

தொழில் கல்வி கிராம வளர்ச்சி என சமூக நலன் சார்ந்த பிற திட்டங்கள் ஆகட்டும்

பெரியாரின் பார்வையில் பெரியாரின் சிந்தனையில் தான் செயல்பட்டு வந்திருப்பதாக உணர்கிறேன்!

என்னளவில் ஜெ திராவிட தலைவரே. ஐயமில்லை!

என்ன செய்தது திராவிடம்?

இன்று நண்பருடன் சிறு உரையாடல்

திராவிடம் அப்படி என்ன பெரிசா செய்தது? அதிலும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க அவர்கள் என்ன செய்தார்கள்? இப்போதும் அதே ஏற்றத்தாழ்வு இருக்கத்தானே செய்கிறது? என உண்மையான வருத்தத்தோடே கேட்டார். அவர் உயர்வகுப்பை சேர்ந்தவர் (ஆம் அதே தான் 😝) ஆனாலும் அவரது கேள்வியில் உண்மையான வேதனை இருந்தது

ரவா கிச்சடி சாப்பிட்டபடியே பேசினேன்.. சுருக்கமாக

"நீங்க இப்போ என்ன வேலை செய்கிறீர்கள்னு சொல்லமுடியுமா?" நான்

"சென்னையில் ஒரு கம்பெனியில் தலைமை எஞ்சினியர்" அவர் (இனி உரையாடலாக புரிந்துகொள்ளவும்)

"உங்களுடன் பணிபுரிவோர்....??."

"பல தரப்பட்டவர்கள்.. பல இனத்தவர்..குலத்தவர்.."

"அவர்களோடு இணைந்து பணியாற்றுவது உங்களுக்கு சங்கடமாக இருக்கிறதா?"

"இல்லவே இல்லை.. அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களை வேறுபடுத்தி நான் பார்ப்பதில்லை. அவர்களோடு சகஜமாக பழகுகிறேன்.. அவ்வளவு ஏன்.. அவர்களோடு உணவை பகிர்ந்துகொள்ளுகிறேன்.. அவர்களது டிபன்பாக்ஸையே எடுத்து சாப்பிடுவேன்.. (வெஜிட்டேரியன் ஐட்டம்சாக இருந்தால் மட்டும்)"

"உங்களுக்கு எப்படி எல்லோரும் சமம் என்கிற உணர்வு வந்தது?"

"அது எனது கல்வியினால் வந்த மெச்சூரிட்டி"

"ஏன் வட மாநிலங்களில் கல்வி கற்றவர்களுக்கே கூட இந்த மெச்சூரிட்டி வரவில்லை?"

"......."

"சரி அதை விடுங்கள். உங்களுக்கான தொழில்களை விட்டுவிட்டு நீங்கள் எஞ்சினியரிங் படிக்க விரும்பியதும்.. உங்களுடன் பணிபுரியும் அந்த ஒடுக்கப்பட்டோர் எஞ்சினியரிங் படித்து உங்களுக்கு சமமாக வந்திருப்பதையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?"

"இது சமுதாய வளர்ச்சியின் பரிணாம வெளிப்பாடு. சமூக வளர்ச்சியும் நாகரீகமும் வளர வளர நாங்களும் பிற துறைகளில் கால்பதித்து வென்றோம். அவர்களும் மெல்ல எல்லா துறைகளிலும் முன்னேறினர். இது கால மாற்றம். இதில் என்ன ஸ்பெஷல்?"

"இதே சமுதாய முன்னேற்றம்.. நாகரீக யுகம் வடக்கிலும் உள்ளதே? பிறகும் ஏன் ஒடுக்கப்பட்டவர்களால் அவர்கள் விரும்பிய கல்வியை படிக்க முடியவில்லை? தென்கோடியில் மட்டும் எப்படி அது சாத்தியமானது? அவர்களது வளர்ச்சி உங்களுக்கு எந்த உறுத்தலையும் தராத அளவுக்கு உங்களுக்கு மன முதிர்ச்சி வந்திருக்கிறது. ஆனால் உங்களை சார்ந்தவர்களுக்கு வடக்கில் உள்ளவர்களுக்கு ஏன் அந்த முதிர்ச்சி வரவில்லை?"

"இங்கு அடிப்படி கல்வியில் இருந்தே அந்த சமதர்மம் பாடமாக இருக்கிறது. வடக்கில் எப்படி என தெரியவில்லை"

"அது தான் திராவிடம் தந்த பெரும் மாற்றம்... "

நான் முடித்துவிட்டேன்

உணவையும் உரையாடலையும்

அவர் என்னுடன் காரில் வரும்பொழுது நிறைய பேசினார். இப்போது அவருக்குள் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. உற்சாகமாக இருந்தார். திராவிட இயக்கம் பற்றி நிறைய படிக்கப்போவதாக சொன்னார். ஒரே நேரத்தில் சுதந்திரம் கிடைத்தும் தென் மாநிலங்களில் மட்டும் இந்த மெச்சூரிட்டியும் சகிப்புத்தன்மையும் எல்லோருக்குள்ளும் வந்திருப்பதன் தாத்பர்யத்தை விரிவாக தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாக சொன்னார். திராவிடம் சத்தமில்லாமல் மிக பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொள்வதாக சொன்னார். இன்னும் இன்னும் நிறைய பேசினார்.. வழி நெடுக நீண்ட பயணத்தில்..

சந்தோஷமாக இருந்தது.

ஒரு சாதாரண உரையாடல் பத்து நிமிடத்துக்குள் இத்தனை மாற்றத்தை தரும் என நானே கூட நினைத்துப்பார்க்கவில்லை

ரவா கிச்சடி மிகவும் சக்திவாய்ந்தது !

Wednesday, April 11, 2018

மோஹன் தாஸா? மோஹன் லாலா?

பிரதமரின் டங் ஸ்லிப்கள் பிரசித்தம். அதிலும் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் 'டங் ஸ்லிப்'பாக சொல்வதில் அவர் கில்லி

எடப்பாடி ஸ்டாலின் எல்லாம் ஒரே விஷயத்தில் மீண்டும் மீண்டும் ஸ்லிப் ஆகும் அளவுக்கு இன்னும் தரம் தாழலை

மஹாத்மா காந்தியை 'மோஹந்தாஸ் கரம்சந்த் காந்தி' என சொல்வதற்கு பதிலாக ஒவ்வொரு தடவையும் "மோஹன்லால்" கரம்சந்த் காந்தி என்றே சொல்லி வருகிறார் நம் பிரதமர்.


அவர் சார்ந்த இயக்கத்தை பொறுத்தவரை காந்தி ஆகாதவராக இருந்தாலும், அவர் இப்போது பிரதமராக இருப்பதால் அவர் மரபுகளையும் மரியாதைகளையும் மீறாமல் இருக்கவேண்டும் என்பது தான் முறை.

ஒரு முறை தவறினாலே திருத்திக்கொள்ளும் நம் தலைவர்கள் மத்தியில் பலமுறையாக ஒரே தவறை செய்து வரும் பிரதமரின் செயல் எதேச்சையானதா தெளிவாக செய்ததா என்பது விவாதிக்கவேண்டிய விஷயம்

அல்லது அவரது இயல்பான ஆர்வமான சினிமா மீது கொண்ட தீராத காதலின் காரணமாக, சினிமா பிரபலங்கள் மீதான அதீத ஆர்வம் காரணமாகக்கூட மோஹந்தாஸ் என சொல்ல வருகையில் மோஹன்லால் என சொல்லி இருக்கலாம்.

எது எப்படியோ, பிரதமர் பதவிக்கு என உள்ள ஒரு மரியாதையை அவர் இனியாவது காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பது எல்லோருடைய ஆவல்

ஸ்டாலின் எடப்பாடி போன்றோருக்கு எதேச்சையாக டங் ஸ்லிப் ஆகி உடனே அடுத்த செகண்டே அதை திருத்தி சொன்னாலும் கூட எள்ளி நகையாடி கைகொட்டி சிரித்து கேலி செய்து பதிவுகள் இட்ட நடுநிலை நண்பர்கள் பிரதமரின் விஷயமாக மௌனம் காப்பது ஏன் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டும் என்றில்லை. அவர்களது மனநிலை என்ன என்பதை இங்குள்ளோரும், மக்களும், நன்கு அறிவார்கள்!

பிரதமர் பீஹாரில் பேசிய லேட்டஸ்ட் வீடியோ.. இதோ இந்த ட்வீட்டில்

https://twitter.com/GauravPandhi/status/983752677116010496

Tuesday, April 10, 2018

காவிரி - ஸ்கீம் - விளக்கம்

உச்சநீதிமன்றம் நேற்று கொடுத்திருக்கும் விளக்கம் என்னை (விளக்கெண்ணெய் என தப்பா படிச்சா கம்பெனி பொறுப்பல்ல 😝) மிகவும் வருத்தத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு தான் வழக்கின் சாரம்சமே. அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இனி அதை அமல்ப்படுத்த வேண்டியது தான் பாக்கி.

சரி, நடுவர் மன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது? நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பு காவிரி விவகாரத்தின் முழுமையான ஆவணம். இதுவரை நடந்தது என்ன? எத்தனை பேச்சுவார்த்தை நடந்தது? ஒப்பந்தத்தை மீறி அதிகரிக்கப்பட்ட பாசன பரப்புக்கள், கூடுதல் அணைகள் என்னென்ன? ஒவ்வொரு பகுதியிலுமான சராசரி மழை அளவு. ஒவ்வொரு மாநிலத்தின் நீர் தேவை. என எல்லா விதமான ஆய்வுகளையும் விரிவாக ஆராய்ந்து பதிவுசெய்து அதன் அடிப்படையில் இனி பேச்சுவார்த்தையோ மாநிலங்களின் கட்டுப்பாட்டில் அணையோ சாத்தியமில்லை என்பதற்கு தகுந்த காரணிகளையும் பதிவு செய்திருக்கிறது.

இதற்கு தீர்வாக சொல்லப்பட்ட ஸ்கீம் பற்றியும் விரிவாக ஸ்டெப் பை ஸ்டெப் புரசீஜர்ஸ் நடுவர் மன்ற தீர்ப்பிலேயே இருக்கிறது. அதாவது, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும். அதில் உரிய நபர்களை உள்ளடக்கிய ஒரு குழு (மத்திய மாநில அரசு அதிகாரிகள் & மாநில பிரதிநிதிகள்) அமைத்து அவர்களது பொறுப்பில் எல்லா அணைகளையும் கொடுக்கவேண்டும்.

மாதாமாதம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நீர் கொடுக்கவேண்டும் என நடுவர் மன்ற தீர்ப்பிலேயே இருக்கிறது. அதன் அடிப்படையில் முறையாக நீர் திறந்துவிடும் கடமை காவிரி மேலாண்மை வாரியத்தின் பொறுப்பு. அதற்கு தக்க அதிகாரங்களும் பாதுகாப்பும் மத்திய அரசு செய்யவேண்டும்.

இது தான் அந்த ஸ்கீம். இந்த ஸ்கீமின் ஒரு பகுதி தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது.

இத்தனை விளக்கமாக நடுவர் மன்ற தீர்ப்பு இருந்தும் அதை படிக்காமல், ஸ்கீமுக்கான விளக்கம் கேட்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் அல்ல.

ஆனால் அந்த நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்கமாட்டோம் என கர்னாடக அரசு பிடிவாதம் பிடித்ததால் தான் உச்சநீதிமன்றம் சென்றோம்.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் விரிவாக மீண்டும் சொன்னதையே சொல்ல விரும்பாமல் சுருக்கமாக 'நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை. அந்த ஸ்கீமை செயல்படுத்த ஆறுவார காலம் மத்திய அரசுக்கு கெடு' என சிம்பிளாக முடித்து விட்டது. மத்திய அரசு என்ன செய்திருக்கவேண்டும்? நடுவர் மன்ற தீர்ப்பை எடுத்து படித்து பார்த்து அதில் சொன்னபடி செயல்பட ஆரம்பித்து இருக்கவேண்டும். ஆனால் அதை படிக்காமல் காலத்தை கடத்த விளக்கம் கேட்டு குறுக்குசால் ஓட்டிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஆறு வாரம் கழிச்சு ஸ்கீம்னா இன்னா? என ஒரு விளக்கம் கேட்டு அதற்கு நேற்று உச்சநீதிமன்றம் விளக்கமும் தந்திருக்கிறது

அதாவது CMB அமைத்து நீர் திறந்துவிடும் திட்ட அறிக்கை தயாரித்து மாநிலங்களின் பிரதிநிதிகள் நியமித்து அணையின் மேலாண்மை பொறுப்பை நிறைவேற்றுவது.

இதை தான் நடுவர் மன்றம் விரிவாக தனது தீர்ப்பில் சொல்லி இருக்கிறது. அதை அமல்ப்படுத்த தானே ஆறுவாரம் அவகாசம்.

திரும்பவும் எல்.கே.ஜி குழந்தை போல் சந்தேகம் கேட்பதும் நடுவர் மன்ற தீர்ப்பையே மீண்டும் வாசித்து காட்டுவதும் தமிழகத்தை கேலிக்குள்ளாக்குவதும் நேரம் கடத்துவதுமே அன்றி வேறில்லை

இதில் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் இன்னொன்று உள்ளது.

மத்திய அரசு தனது மனுவில் "தீர்ப்பை செயல்படுத்த தனக்குள்ள பிரச்சனைகள் இருப்பதால்.." என மேம்போக்காக சொல்லி இருக்கிறது. அது என்ன பிரச்சனை? தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மனமில்லையா? நடுவர் மன்ற தீர்ப்பை அமல்ப்படுத்தி கர்னாடக மக்களின் கோபத்துக்கு ஆளாகவேண்டாம் என நினைக்கிறதா? கர்னாடக தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறதா? என்றெல்லாம் விரிவாக சொல்லாமல் மொட்டையாக பிரச்சனைகள் என சொல்லி இருக்கிறது. இதை தான் நாம் இப்போது கேள்வி கேட்கவேண்டும். தீர்ப்பை அமல்ப்படுத்துவதில் தமிழகத்துக்கு நீதி வழங்குவதில் பாஜகவுக்கு என்ன பிரச்சனை என்பதை விளக்க சொல்லி கேட்பது தமிழகத்தின் தமிழக மக்களின் கடமையும் கூட

முன்பை விட பாஜக மீது அதீத வெறுப்பை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது இவ்விளக்கம்

Sunday, April 8, 2018

காவிரி - பேச்சுவார்த்தை சாத்தியமா?

கேப்டன் நேற்று "கர்னாடக அரசுக்கு ராகுல் மூலம் அழுத்தம் தந்து காவிரி விவகாரத்தை தீர்க்கவேண்டும்" என்கிற ரீதியில் பேசி இருப்பதை 'சிலர் மட்டும்' ஆகா ஓகோ என புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

முதலில் பிரச்சனை இப்போது மத்திய அரசின் கையில் இருக்கிறது. கர்னாடக அரசின் கையில் அல்ல. இந்த அடிப்படை கூட இங்கே பலருக்கும் புரியவில்லை.

இதில் கூடுதலாக திமுக/அதிமுக காவிரிக்காக எதையுமே செய்யவில்லை என்கிற உளறல் வேறு.

கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தமிழகம் பேச்சுவார்த்தை, சட்ட போராட்டங்கள் என போராடி வந்ததை அறியாதவர் எவரும் தமிழகத்தில் இல்லை.

பாசனபரப்பு அதிகரித்தல், கூடுதல் வாய்க்கால்கள் அமைத்தல், அணைகள் என தமிழக ஒப்பந்தத்துக்கு எதிராக கர்நாடக அரசு நடந்து அதை எதிர்த்து ஜெ & முக இருவர் ஆட்சியிலும் பல வழக்குகள் பதிந்து பல்வேறு சட்டப்போராட்டங்கள் நடைபெற்றது.

திமுக மத்திய விபி சிங் அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதன் அடிப்படையில் தான் நடுவர் மன்றம் அமைந்தது.

நடுவர் மன்றம் முழுமையாக விசாரித்து விரிவான தீர்ப்பு கொடுத்தபின் அதை அரசிதழில் வெளியிட ஜெ அரும்பாடு பட்டு ஜெயித்தார்.

இப்படி திராவிட இயக்கங்களின் தொடர் சட்ட போராட்டங்களின் காரணமாகவே தமிழகத்துக்கு சாதகமான இறுதி தீர்ப்பு வந்தது

இதன் படி, CMB அமைத்து அவர்களது கட்டுப்பாட்டில் நீர் திறப்பு/தேக்கம் ஆகியவை ஒப்படைக்க வேண்டும். அது நடுவர் மன்ற தீர்ப்பின் படி நீரை திறந்து விடும்.

மத்திய அரசு இந்த CMB அமைத்தால் மட்டும் போதும். மற்றவற்றை அதுவே பார்த்துக்கொள்ளும். அதற்கான அதிகாரத்தை Tribunal & SC அதற்கு கொடுத்து இருக்கிறது

எனவே இனியும் பூசி மெழுகி மழுப்பாமல், சட்டப்படி தமிழகத்துக்கு சேரவேண்டிய உரிமையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். அதை வலியுறுத்துவதை தவிர வேறு எதை சொன்னாலும் அது சரியல்ல. ஒவ்வொரு மனசாட்சியுள்ள மனிதனும் இனியும் தாமதப்படுத்தாமல் ம.அரசு தனது கடமையை செய்யவேண்டும் என்றே விரும்புவான்

---------

பிற்சேர்க்கை:

இது தொடர்பான சில கேள்விகள் பிறிதொரு இடத்தில் கேட்கப்பட்டு அதற்கான எனது பதிகள்

கே: அரசு அரசியல்வாதிகள் சட்டம் எல்லாம் தேவையில்லை. இரு மாநில விவசாயிகள் பேசி தீர்த்துக்கொள்ளலாமே?

ப: விவசாயிகள், அரசு, கட்சிகள், சட்டம், நீதிமன்றம் என அனைத்து முறைகளிலான பேச்சுவார்த்தைகளும் சட்ட போராட்டங்களும் நடந்து முடிந்து இறுதியாக தான் நடுவர்மன்றமும் அதன் தீர்ப்பும் வந்திருக்கிறது. மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டிய நிலையில் தமிழகம் இல்லை

கே: வி.பி.சிங்குக்கு கொடுத்தது போல ஏன் மன்மோகன்சிங்குக்கு அழுத்தம் கொடுக்கவில்லை?

ப: மன்மோகன் சிங் காலத்தில் தான் நடுவர் மன்ற தீர்ப்பு அமல்ப்படுத்துவதற்கான அழுத்தத்தை கொடுத்து அது அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து கர்னாடக அரசு வழக்கு தொடுத்து அந்த வழக்கு விரிவாக நடந்து அதற்கான தீர்ப்பு தான் இப்பொப்து பிப்ரவரியில் வந்திருக்கிறது

கே: CMB அமைக்கப்பட்ட பிறகும் மாநிலங்கள் அதற்கு பணியவில்லை என்றால்?

ப: CMB க்கு மாநிலங்கள் பணிய வேண்டும் என்று இல்லை. CMB யிடம் அணைகளின் பொறுப்பை மத்திய அரசு கொடுத்துவிடும். நடுவர் மன்ற தீர்ப்புப்படி ஒவ்வொரு மாதமும் தமிழகத்துக்கு சேரவேண்டிய நீரை முறைவைத்து திறந்துவிட வேண்டியது அதன் பொறுப்பு. CMB முறையாக செயல்படுவதற்கான சூழலையும் பாதுகாப்பையும் மத்திய நீர்வளத்துறை மூலம் மத்திய அரசே செய்யவேண்டும். (இந்த நிலைக்கு நடுவர் மன்றம் வர காரணமே இது வரையும் வந்த எந்த தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்காமல் நடந்துகொண்டது தான். ஒவ்வொரு முறையும் எதிர்த்து எதிர்த்து வழக்கிட்டு வழக்கிட்டு தாமதப்படுத்திக்கொண்டே வந்தது. நாமும் அதை எதிர்த்து நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி தான் இந்த தீர்ப்பை பெற்று இருக்கிறோம்)

கே: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் நதிநீர் பங்கீட்டு பிரச்சனை வந்திருக்காதே?

ப: மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்காக அப்போது இருந்த அதே காரணங்கள் இப்போதும் இருக்கின்றன. அதற்கும் நீர் பங்கீட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

Wednesday, March 28, 2018

இளையராஜாவும் ஏசு உயிர்த்தெழுதலும்

ஏசு உயிர்த்தெழுந்தது கற்பனையே அறிவியல் பூர்வமான ஆய்வோ ஆதாரமோ இல்லை என இளையராஜா குறிப்பிட்டத்தில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.



எப்படி ராமன், கிருஷ்ணன், முருகன் போன்ற இறை நிலையில் வைத்து பார்க்கப்படும் மனிதர்களின் வாழ்க்கையில் நடந்ததாக சொல்லப்படும் சில சம்பவங்கள் (உதாரணமாக: பேசும் ஜடாயு, பறக்கும் வானரப்படை, சங்கு சக்கரத்தால் சூரியனை மறைய செய்தல் பொன்ற பல நூறு சம்பவங்களை சொல்லலாம்) நம்பமுடியாதவையாகவும் அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட இயலாததாகவும் இருக்கிறதோ அதைப்போலவே நான் ஏசுவின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களையும் நான் பார்க்கிறேன்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களது வாழ்க்கை கதையில் கூட இப்படியான சம்பவங்கள் சில உள்ளன. உமறு புலவரே கூட அதை சொல்லி இருக்கிறார்.

புத்தர், மஹாவீரர் என யாரும் இதில் விதிவிலக்கல்ல.

கதைகள் சொல்லப்பட்டபொழுது அந்த கதையின் சுவாரஸ்யத்துக்காக சில மிகைப்படுத்தல்கள் வருவது இயல்புதான்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி அவர்களது வாழ்க்கை பற்றி சொல்லும்பொழுது கூட சில சம்பவங்கள் இயல்பை மீறி மிகைப்படுத்தலோடு விவரிக்கப்பட்டதை நான் கேட்டுள்ளேன். அது அவர்களது ஆளுமையை அதீத உயரத்துக்கு கொண்டு செல்வதற்கான ஒரு வழிமுறை. அவ்வளவே.

சில நூற்றாண்டுகள் கழித்து 'ஸ்டாலின் சொடக்குப்போட்டால் கவிழ்ந்துவிடக்கூடிய ஆட்சியாக எடப்பாடியின் ஆட்சி நடைபெற்றது' என சொல்லப்பட்டு அதுவும் நம்பப்பட்டு வரலாறாகவே கூட ஆகும் வாய்ப்பு இருக்கிறது

எனவே ஒரு விஷயத்தை பற்றிய அதீதங்கள் இருந்தாலும் கூட அதை நாம் மென்மையாக புறக்கணித்துவிட்டு சொல்லவரும் விஷயங்கள் என்ன என்பதை மட்டும் கவனிப்பது நல்லது.

கீதோபதேசம் நடைபெற்ற சூழல் நடைபெற்ற விதம் அது தூரே இருக்கும் திருதிராஷ்டினனுக்கு சஞ்சயன் வழியாக நேரடி ஒலி/ஒளிபரப்பு செய்யப்பட்டது என்கிற செய்தி ஆகியவை எல்லாம் நம்பத்தக்கது அல்ல.. நம் இளையராஜா அவர்கள் குறிப்பிடுவது போல அறிவியல்பூர்வமானதோ ஆய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்ல.. எனினும் கீதையின் மூலம் கிருஷ்ணன் எனும் பாத்திரம் சொல்ல வரும் செய்தி என்ன என்பதில் மட்டுமே நமது கவனம் இருக்கவேண்டும். அது நல்ல கருத்துக்கள் உடையது எனில் அதை நம் வாழ்வில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான் எனது புரிதல்.

அதை விடுத்து அதெப்படி சஞ்செயன் நேரடி ஒளிபரப்பு செய்தார்? இதெல்லாம் என்ன நம்புறமாதிரியா இருக்கு? என எள்ளி நகையாடுவதை விடுத்து அதையும் நம்பும் அளவுக்கு தான் நாம் பலருக்கு கல்வித்தரத்தை கொடுத்திருக்கிறோம் என நினைத்து அதை மேம்படுத்த முனைவதில்லையா? அதைப்போலவே எல்லாவற்றையும் கருத வேண்டும்

இளையராஜா சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை. எல்லா மத கதைகளிலும் இருப்பது தான் அது. ஆனால் அதை குறிப்பான குற்றச்சாட்டாக வைப்பது சரியல்ல. அப்படி எனில் எல்லா மதத்திலும் இருக்கும் அதுபோன்ற அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத அனைத்து சம்பவங்களையும் அவர் சாடி இருக்கவேண்டும். சாடுவார் என எதிர்பார்க்கிறேன்.

என்னதான் ஆன்மீகத்தில் அமிழ முயன்றாலும் அடிப்படையாகவே அவர் மனதில் கொலுவிருக்கும் அந்த கம்யூனிசமும் பகுத்தறிவும் இன்னமும் உயிர்த்திருப்பதை அறிந்ததில் மகிழ்ச்சி

மெல்ல பகுத்தறிவு பாதைக்கே மீண்டு(ம்) வருவார் என நம்புகிறேன்!

Tuesday, March 20, 2018

பாஜக ஆட்சியின் காரணிகள்

பாஜக கடந்த 2014 ல் ஆட்சிக்கு வர காரணம் பொருளாதார காரணங்களே தவிர ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் இல்லை. ஏனெனில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை (!). வேலை வாய்ப்பின்மை பொருளாதார சீர்கேடு ஆகிய காரணங்களால் தான் காங்கிரசை மக்கள் எதிர்த்தனர் என்றொரு திடீர் புத்திசாலித்தன பதிவுகள் வர தொடங்கி இருக்கிறது..

ஊழல் இந்திய தேர்தலில் மிக முக்கிய காரணி

உதாரணம் 2ஜி. அது ஊழலே அல்ல. ஆனால் பாஜக அதை ஊழல் என ஊதி பெரிதாக்கி காங்கிரஸ் மீது மிகப்பெரிய பழியை போட்டது. மக்கள் அதை முழுமையாக நம்பி வாக்களித்தனர். (இப்போது அது ஊழல் இல்லை என்பதும் வினோத் ராயை வைத்து பாஜக ஆடிய நாடகம் என்பதும் மக்களுக்கு தெளிவாக தெரிந்தாலும் கறை கறை தான்)

மாநில அளவிலும் கூட, 1996 தேர்தலில் ஜெ தோற்க ஊழல் குற்றச்சாட்டு தான் காரணம். 2011 தேர்தலில் திமுக தோற்கவும் ஊழல் குற்றச்சாட்டு தான் காரணம்..

கடந்த 2014 தேர்தலை பொறுத்தவரை பாஜக ஜெயித்ததற்கு முக்கிய காரணங்கள்:

1. பொய்யான ஊழல் குற்றச்சாட்டுக்களால் காங்கிரசை Character Assassination செய்ததோடு தாங்கள் வந்தால் ஊழலற்ற ஆட்சி தருவோம் என வாக்களித்தது (உண்மையில் காங்கிரசை விட அதிக ஊழல்களும் முறைகேடுகளும் இப்போதைய ஆட்சியில் நடப்பது நாம் அறிந்ததே. உம். ரஃபேல்)

2. பாஜகவின் அஜெண்டாக்களுக்கு (ராமர் கோவில், காமன் சிவில் கோடு போன்றவை) அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்த பிரச்சாரம். இவை வட இந்தியாவில் இனியும் நன்றாக எடுபடும். தென்னிந்தியா சட்டை செய்யாது

3. கருப்பு பணத்தை 100 நாளில் மீட்பேன், கார்ப்பரேட் ஊழல்வாதிகளை ஒடுக்குவேன் என மாநிலத்துக்கு மாநிலம் விதம் விதமாக கொடுத்த வாக்குறுதிகள் (கார்ப்பரேட்  ஊழல்களின் பொற்காலம் இது என்பதும் குற்றவாளிகள் அரசு ஆதரவோடே வெளிநாடு சென்று பாதுகாப்பாக இருப்பதும் நீங்கள் அறிந்ததே)

மற்றபடி வேலைவாய்ப்பை வைத்தெல்லாம் ஆட்சியை மக்கள் தீர்மானிப்பதில்லை. அப்படி பார்த்தால் சிறு குறு தொழில்கள் 23% இழுத்து மூடப்பட்டு இருக்கிறதே இந்த ஒரே ஆண்டில்? அதற்காக பாஜக தோற்கடிக்கப்படும் என்கிறீர்களா? பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ள இந்நிலையில் ஏற்றுமதி முடங்கிவிட்ட சூழலில் அதெல்லாம் பாஜகவை பாதிக்கும் என நம்புகிறீர்களா என்ன?

உண்மையில் பொருளாதார நிலையை பார்த்தால், 2005-2014 மிக பிரமாதமாக இருந்ததும் 2014 க்கு பின் அதள பாதாளத்தில் வீழ்ந்ததும் எல்லோருக்குமே தெரியும்

அதேபோல வேலைவாய்ப்பு தொழில்வளர்ச்சி ஏற்றுமதி ஆகியவையும் இப்போது பாஜக ஆட்சியில் தான் சரிந்தது என்பதும் எல்லோருக்கும் தெரியும். மூடப்பட்ட தொழில் நிறுவனங்களே அதற்கு சாட்சி

பாஜகவுக்கு தேவை 275 எம்.பிக்கள். அதை ராமர் கோவில், இந்துத்துவா, இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் போகட்டும், தலித்கள் ஒடுக்கப்படுவார்கள், காமன் சிவில் சட்டம் போன்ற வழக்கமான வாக்குறுதிகளை வைத்தே வட இந்தியாவிலேயே எடுத்துக்கொள்ள முடியும்.

தென்னிந்தியாவில் 6 மாநிலங்களில் ஒரு இடம் கூட கிடைக்காவிட்டாலும் கவலையில்லை.

அடுத்ததும் பாஜக ஆட்சி தான்

காரணம் பாஜகவை ஆதரிப்பவர்களின், அவர்களின் சிந்தனைத்திறனின் தரத்தின் டிசைன் அப்படி.

Saturday, March 17, 2018

திராவிடநாடு

திராவிட நாடெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று. திமுக 50 வருஷத்துக்கு முன்னேயே கைவிட்ட கொள்கை அது

ஆனால் மனதளவில் திராவிடநாடு (Virtual Dravidanadu) எப்போதும் நம் எல்லோருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது.

திமுக மட்டுமல்லாமல், அதிமுகவும் கூட (எம்.ஜி.ஆர் & ஜெ.. இருவரும்) பல சமயங்களில் மாநில நலன் கருதி மத்திய அரசை எதிர்த்தும், மத்திய அரசுக்கு ஒத்துழைக்காமலும் தமிழகத்தின் தனித்தன்மையை காத்து வந்திருக்கிறது. இதில் எம்.ஜி.ஆரை விட அதீத ஆரவம் காட்டி மாநில சுயாட்சியை தீவிரமாக நிலைநாட்டியவர் ஜெ. என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

எனவே திராவிட நாடு என்பது நமக்கு புதிதல்ல. நமது மாநிலத்துக்கு தீமை பயக்கும் எல்லாவற்றையும் மத்திய அரசு என்று கூட பாராமல் எதிர்ப்பது, நமக்கான நியாயத்தை நிலைநாட்டி கொள்வது, மாநில உரிமைகளை பாதுகாப்பது ஆகியவை நம் தனித்துவத்தில் அடங்கும்

காவிரி, முல்லைப்பெரியார், கடலோர காவல்படை, இட ஒதுக்கீடு, மின்சார பகிர்மான க்ரிட், நவோதையா, உணவு பாதுகாப்பு, சமூக நல மானியங்கள்... என பல பல விஷயங்களில் நாம் நமக்கான தனிக்கொள்கைகள் வைத்து செயல்பட்டு வருகிறோம்.. தேவைப்பட்டால் இந்திய அரசுடன் எதிர்த்தும் வருகிறோம். அது பாராளுமன்றம் ஆனாலும் சரி உச்சநீதிமன்றம் ஆனாலும் சரி. எங்கும் போய் ஒரு கைபார்த்துவிட்டு வருவதே வழக்கம்.

இப்போது இத்தகைய செயல்பாடுகளை மெல்ல மெல்ல நம் அண்டை மாநில முதல்வர்களும் கைகொள்ள தொடங்கி இருப்பது மகிழ்ச்சி

அவரவர் மாநில தலைமை பதவியில் இருப்பவர்கள் அவரவர் மாநில நலன் கருதி மத்திய அரசுக்கு எதிராக தங்களுக்கென்று ஒரு தனிக்கொள்கையுடன் இயங்குவது என்பது தான் மாநில சுயாட்சியின் அடிப்படை.

அதை நோக்கி எல்லோரும் பயணிக்க தொடங்குகையில் மனதளவில் இருக்கும் 'திராவிடநாடு' இயல்பாகவே செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

மற்ற மானிலங்கள் எல்லாம் இப்படி ஒத்துவந்தால் (மத்திய அரசை எதிர்த்து மாநில நலன் காக்கும் நடவடிக்கைகள் எடுத்தால்) தமிழகமும் அதை ஆதரிக்கலாம். தவறில்லை. ஏனெனில் நாமும் அதைத்தான் காலகாலமாக செய்து வருகிறோம்

மற்றபடி, இங்கே சில திடீர் புத்திசாலிகள் பேசுவது போல தனி நாடெல்லாம் வாய்ப்பே இல்லை

Tuesday, March 6, 2018

பெரியார் சிலை ஏன் அவசியம்?

பெரியார் தான் உருவ வழிபாட்டுக்கு எதிரானவராச்சே? அப்புறம் அவருக்கு மட்டும் எதற்கு சிலை? என்றொரு கிண்டலான கேள்விகள் திடீரென முளைத்திருக்கிறது.

மகிழ்ச்சி


பெரியார் உருவ வழிபாட்டுக்கு எதிரானவர் தான். தனிநபர் வழிபாடு கூடாது என்றவர்தான். சிலைகள் வைக்கப்படக்கூடாது என வாதிட்டவர் தான்.

உருவ வழிபாடு என்பது வேறு.. தலைவர்களின் உருவத்தை பெரும் சிலையாக நிறுவி எதிர்வரும் சந்ததியினருக்கு பாடமாக படிப்பினையாக எடுத்துக்காட்டாக வைத்து மரியாதை செய்வது என்பது வேறு

ரஷ்யா அமெரிக்கா இங்கிலாந்து நாடுகளில் பல தலைவர்கள் மன்னர்களின் சிலைகள் அவ்வாறானவையே.

சென்னையில் கூட ஆங்கிலேயர் காலத்தில் அப்படி நிறுவப்பட்ட மன்றோ, ஜார்ஜ் மன்னர் போன்றோரின் சிலைகள் இப்போதும் இருக்கின்றன. அவற்றை பார்க்கும் இளம் தலைமுறையினர் அவர்களை பற்றி அறிய ஆவல் கொண்டு தேடி படிக்க துவங்குகின்றனர்.

எனவே உருவ வழிபாடு தான் தவறே தவிர தலைவர்களுக்கு உருவச்சிலை அமைத்து மரியாதை செய்வதில் தவறில்லை

இது போன்ற தர்க்கங்களை எல்லாம் கலைஞர் அவர்கள் எடுத்து வைத்து பெரியாரையே சம்மதிக்க வைத்து அவரும் மகிழ்ச்சியாக தன் சிலை திறப்புவிழாவிலே கலந்து கொண்டார் என்பது வரலாறு.

எனவே சிலைகளுக்கு எதிரானவர் பெரியார் என்பது தவறான வாதம். சிலைகளை வழிபடுவதற்கு மட்டுமே எதிரானவர் என்பதை புரிந்துகொள்வது நலம்.

நிற்க!

அது வெறும் சிலை தானே? அதை ஏன் நீக்கவேண்டும்? அதை நீக்குவதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

இரண்டுக்குமான பதில் ஒன்று தான்.

பெரியார் சிலையை பார்ப்பவர்கள் அவரைப்பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அவரது வாழ்க்கை, அவரது சிந்தனை, அவரது போராட்டம், அவர் அப்படி போராட நேர்ந்த சூழல், அப்போதைய காலகட்டத்தின் அடக்குமுறை, சமூக ஏற்ற தாழ்வுகள், அவரது கொள்கைகள், அவரது கருத்து வீச்சுக்கள் என பலவற்றை படித்து புரிந்து கொள்ள முயல்வார்கள்

அதற்காக தான் எல்லா தாலூகாவிலும் அவருக்கு சிலை வைக்கப்பட்டது.

அதனால் தான் அந்த சிலைகளை அகற்றவேண்டும் என சமூகத்தில் பிரிவினையை உருவாக்கி அதன் மூலம் குளிர்காய நினைப்பவர்கள் துடிக்கிறார்கள்

அதன் காரணமாகவே அப்படியான சிலை தகர்ப்புக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் ஒன்று திரள்கிறார்கள்

இதை படிக்கும் நீங்கள் சமூக ஏற்ற தாழ்வுகளை எதிர்ப்பவர் எனில், எல்லா மனிதனும் சமம் என எண்ணுவோர் எனில், சக மனிதனுக்கான மரியாதை ஒவ்வொருவருக்கும் அவசியம் என நினைப்பவர் எனில், சுயமாக சிந்திக்கும் திறன் உள்ளவர் எனில், நாகரீக மனித சமுதாயத்தில் வாழ விரும்புபவர் எனில், நீங்களும் அந்த சிலை தகர்ப்பை எதிர்த்து இந்நேரம் குரல் கொடுத்து இருப்பீர்கள்.

மாறாக, சமூக ஏற்றத்தாழ்வு படிநிலைகளில் மனிதத்தை வகைப்படுத்தி வைப்பவர் எனில் சிலை தகர்ப்பை நியாயப்படுத்துவீர்கள்

நீங்கள் யார் என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளலாம்

நன்றி!

Friday, February 9, 2018

Renuka's Laughing theraphy

Saw the full video of PM speech in parli.

Though it is about the Budgets and schemes, the speech is fully focussing on hatred sentences against opposition, particularly Congress.

OK. What else can our PM speak in support of this hollow budget? For example, the Modi care scheme was announced grandly but sufficient fund allocation was not done. This created a agitation in their party itself questioning why such stands are being taken spoiling party name.. Similar cases to many announcements where impracticality is openly known to all and understood its just another jumla series.

But our PM is clever enough to take diversion from Budget points to attacking opposition. There is no other option when there is nothing to defend the budget

The fear and nervousness is evident throughout the speech



Renuka Chaudary's laughing came at a right time when PM putting forward to the house a bunch of blatant lies. She, instead of arguing, simply laughed and that laugh did its work well.

Though a PM, common leader for entire nation, and saviour of women empowerment, exposed himself that he could not digest that laugh and openly compared a member of honourable parliament with a negative character of an imaginary story.

A Prime Minister of a democratic country should not have gone to such low level, that too on the Parliament itself.

When such incidents happened in the past, normally they ask for the reason for that sarcastic laughing and put the facts on the table before the speaker.

If our PM has given the factsheet for whatever he spoke on Aadhaar, and presented it before the speaker, then the laughing will gets a condemnation from all the corners. But unfortunately PM failed to justify his points and since he was already nervoused got furious and came to lowest of the lower level.

Secondly the Social Media burst out last night asking, 'is a women laughing loudly is a sin?' 'will you compare your Criticisers to a negative character?' and all.. Renuka simply did the attack just by laughing and all the I'll attitude of PM came out within seconds. Yes its an attitude problem. Nothing else

Rahul can be proud for this moment, in this 4 years now BJP gets a fear against Cong, and while speaking in Parliament also thinking that fear and speaking against congress, thus turning the respectable Parliament into a political campaigning meeting hall.
One more good day in Parliament for understanding the attitude of our honble Prime Minister

Thank you Parliament

Monday, January 15, 2018

தமிழை ஆண்டாள் - புரிதல்

வைரமுத்துவின் 'தமிழை ஆண்டாள்' கட்டுரையை தினமணி நீக்கி இருக்கிறது.

இன்று மதியம் கூட அதை படித்தேன்

அதை நீக்க வேண்டிய அளவுக்கு அதில் எந்த பிழையும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம், சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட நூலில் உள்ள பகுதியை தான் அங்கே எடுத்து சொன்னார். அந்த நூலின் கருத்தை பக்தர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்றும் சொல்லி இருக்கிறார். (பார்க்க: படம்)

இந்த ஒரு இடத்தை தவிர்த்து பார்த்தால் அது ஒரு தெள்ளிய நீரோடை போன்றதொரு அருமையான ஆய்வுரை



பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான கோதை, அவரது வாழ்வியல், அப்போதைய கால கட்டத்தின் கட்டுப்பாடுகள், அவற்றை உடைத்து பெண்விடுதலை பேசும் கோதையின் பாடல்கள், அந்த பாடல்களில் இளமையும் செழுமையும் இனிமையுமாக ததும்பி தெறிக்கும் அந்த தமிழ், அதன் நளினம், அதன் நயனம் என பலவற்றைப்பற்றி விரிவாக பேசியிருந்தது அக்கட்டுரை

அதே காலகட்டத்தில் பிற பெண்களின் நிலை, பிறரது பாடல்கள், அவற்றின் தொனிக்கும் கோதையின் தொனிக்குமான வேறுபாடு, திருவரங்கத்தில் மாயோனிடம் ஐக்கியமானதாக சொல்லப்படுவதன் நம்பகத்தன்மை, பெரியாழ்வாரின் நிலை என விசாலமான அலசல் அந்த கட்டுரையில் இருந்தது

தினமணி அதனை மொத்தமாக நீக்கி இருக்க வேண்டாம் என தோன்றுகிறது. அமெரிக்க நூலின் மேற்கோளை மட்டும் நீக்கி இருந்தால் மட்டுமே போதுமானதாக இருந்திருக்கும்.

தலைப்பே 'தமிழை ஆண்டாள்' அதாவது தமிழை ஆண்டவள் என்பது

ஆண்டாளின் தமிழை விவரித்த வைரமுத்து அது எதனால் தனிச்சிறப்பு பெறுகிறது என்பதையும் விவரிக்கிறார்

அதாவது.. ஆண்டாள் வாழ்ந்த காலமான 7ம் நூற்றாண்டில், பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம். அந்த சூழலிலும் ஆண்டாள் முற்போக்காக எழுதி இருக்கிறார். அவர் திருமணமாகாத இளம் பிராயத்தினர். எனவே குறுகிய காலத்தில் தமிழையும் கண்ணனையும் புராணங்களையும் தெள்ளென கற்று இத்தகைய தமிழ் பாசுரங்களை இயற்றி இருக்கிறார் என்கிற தனிச்சிறப்பு தான் கட்டுரையின் நோக்கம்

அதில் அந்த சிறப்பை மேலும் வலுப்படுத்த ஒரே ஒரு இடத்தில் அவரது குலம் குறித்தும் சொல்லப்படுவதை மேற்கோள் காட்டுகிறார். அது அப்போது உயரிய மரியாதைக்கு உரிய குலம். எனினும் அது இறைவனுக்கு தங்களை அர்ப்பணித்துக்கொண்ட குலம். பக்தி மயமானவர்கள். அப்படி ஒரு குலத்திலிருந்து வந்ததாக சொல்லப்படும் ஆண்டாள் தமிழையும் ஐந்திரிபற பயின்று யாரும் சொல்ல தயங்கும் விஷயங்களை எல்லாம் துணிச்சலாகவும் அழகாகவும் சொல்லி இருக்கும் அந்த சொல்லாட்சி... தமிழை ஆண்ட பாங்கு... அது தான் 'தமிழை ஆண்டாள்' கட்டுரையின் கரு

தமிழை முழுமையாக புரிந்துகொள்ளாத சிலரால், அந்த குலத்தின் வரலாறும் மாண்பும் பின்னர் அது எவரால் சிறுமைப்படுத்தப்பட்டது என்கிற நிகழ்வுகளும் அறியப்பெறாத சிலரால்.. வெற்று பரபரப்புக்காக பெரிதாக்கப்பட்ட பிரச்சனை தான் இப்போது நாம் கண்டதெல்லாம்.

உண்மையில் தமிழ் அறிந்தோர் இக்கட்டுரையை கண்டு படித்து புரிந்து கொண்டிருந்தால் இவ்வளவு பெருமையாக ஆண்டாளை எழுதியமைக்காக வைரமுத்துவை கொண்டாடி இருப்பார்கள்.

சிறுமதியாளர்கள் மட்டுமே விளம்பர நோக்கில் எதிர்ப்பார்கள். எதிர்ப்பவர்களை கண்டு பரிதாபப்படுவதை வேறொன்றும் சொல்வதற்கில்லை!

இந்தியா ஒரு சுதந்திர நாடு என்பதை யாரேனும் எனக்கு அவ்வப்போது நியாபகப்படுத்திக்கொண்டிருந்தால் தேவலாம்!

ஞாநி - நாம் இழந்த நடுநிலையாளர்

ஞாநி....

காலையிலேயே பேரதிர்ச்சி தந்திருக்கிறது இவ்விடியல்

****
அருமை நண்பர் திரு காளிபிரசாத் அவர்கள் தான் ஞாநி அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்.



ஞாநியின் கட்டுரைகள் அரசியல் விமர்சனங்கள் ஆகியவை எனக்கு அதற்கு முன்பே பரிச்சயமானவை. மிக விருப்பமானவையும் கூட. ஓ பக்கங்கள் மட்டுமல்ல அவரது பேச்சுக்களையும் நான் தேடி தேடி போய் ரசித்ததுண்டு

அஷோக் நகர் வீட்டில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிறு 'கேணி கூட்டம்' நடக்கும். ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொரு விஷயங்கள் பற்றி பேசுவார். எல்லோருடனும் இயல்பாக பழகுவார். ஒரு நெருங்கிய நண்பர் வீட்டில் இருப்பதைப்போல அவரது வீட்டில் வளைய வரலாம். நிறைய புத்தகங்களை அங்கே தான் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டேன்.

கேணிக்கூட்டத்தின்போது எல்லோருக்கும் அங்கே தேநீர் தயாராகும். Black Tea & Lemon Tea எனக்கு அறிமுகமானதும் முதன்முதலில் பருகியதும் அவரது வீட்டில் தான்.

***

தமிழக அரசியல் வெளியில் அவர் ஒரு பார்வையாளர்.. தீவிர ரசிகரும் கூட

இன்னார் என்றில்லாமல் எல்லோரையும் விமர்சிக்கும் உண்மையான நடுநிலை கொண்டவர். ஒரு சாதாரணனின் பார்வையிலிருந்து அரசியலை பார்ப்பவர். அந்த விஷயத்தில் அவர் தான் எனது ஆதர்சமும் கூட.

எங்கு தவறு நடந்தாலும் விமர்சிப்பார். ஆனால் அந்த விமர்சினத்தில் ஒரு நாகரீகம் இருக்கும். வரம்பு மீறாத வார்த்தைகளால் பிரம்பு நெய்து விளாசும் வாத்தியார் அவர்.

***

தமிழக அரசியல் களத்தில் இது போன்ற நடுநிலை விமரிசிகர்கள் மிகமிக அரிதாகி வருகின்றனர். இப்போது ஞாநியின் இழப்பு மற்றுமொரு பேரிழப்பு தான்.

அவர் ஆத்மா அமைதியில் துயில் கொள்ளட்டும்

Printfriendly