Sunday, April 29, 2018

GST Return Simplification

Was reading the proposals of Nandan Nilekani & Committee set by GST Council regarding simplification of GST returns

Actually this study should have done by the govt before June 2017. Since we don't have proactive thinking and just passing our days with Trial and Error method of administration (like many corporates do) the govt initiated this study only after a huge mess created by this immatured GSTN procedures.

So coming to the proposals

Both talks about GSTR3B with an annexure of Invoices (GSTR1) to be uploaded by the seller. This is OK, as it is being followed by existing VAT regime also

From buyer point of view, to avail ITC the two proposals gives two methods.

Nilekani proposes, if the buyer find his purchase bill uploaded by the seller, he can accept it and take credit. If not found he can insist seller to upload. In anycase , unless the seller uploads, buyer can't get ITC.

In this method, the Working capital of the buyer goes for a toss. If the seller not uploaded his bills, the buyer can't take credit. Even though he received the material and bill, he need to pay CASH till seller uploads the bill. Once uploaded he can avail ITC and it sits in the Credit ledger. Credit can be claimed as refund. Hope you are all aware how the refund system 'working' now on GST

Second proposal was by the committee. It suggests buyer to avail ITC even though the seller not uploaded the bill. It is similar to the present system of GSTR2. But the ITC will be valid only of buyer adds the bill and seller accepts it.

It is so tedious job. If a company has around 2000 bills per month for purchase, they have to reconcile every bill and add missing bill to take ITC after it was accepted by the buyer. If not, he has to pay CASH and go for refund.

Both the proposals are useless in my view. It increases the burden and won't give any accuracy of Cashflow. It spoils the Working capital of businesses and the MSME sector will be finished easily.

My worry or surprise is, doesn't we have a single person out of 132 Cr people (or 125 Cr as per PM, after deducting TN population 😝) who can suggest a simple & useful mechanism for filing GST returns?

Or why can't the govt calls for a discussion with Indirect tax experts, CBIC officials etc., to find a working system for statutory compliance?

What stops them to find a solution to resolve the mess up?

Can someone explain?

100% கிராமங்களுக்கும் மின் இணைப்பு

100% கிராமங்களுக்கு மின் இணைப்பை வழங்கியதற்காக மோடிஜியை பாராட்டி வாழ்த்தி பல பதிவுகளை காண்கிறேன்.

இதுபோன்ற பதிவுகளை எழுதி மகிழ்வோர் இன்னும் கொஞ்சம் தெளிவாகவே விஷயத்தை விளக்கி இருக்கலாம.

இதுவரையும் தென்னகத்தில் மின் இணைப்பு அதிகமாகவும் வடக்கு வடகிழக்கு மாநிலங்களில் குறைவாகவும் இருந்தது

தமிழகத்தை பொறுத்தவரை 95% மின் இணைப்பு பத்து ஆண்டுகளுக்கு முன்பே எட்டப்பட்டு விட்டது. கடந்த 2011 முதல் ஜெ ஆட்சியில் தான் அது தடைபட்டது.

ஒவ்வொரு குடிசைக்கும் ஒரு மின் விளக்கு இலவசம் என 1970 களிலேயே திட்டம் கொண்டுவந்து அதற்காகவே மின் இணைப்பை எல்லா கிராமங்களுக்கும் விரிவு படுத்தியது தமிழக அரசு என்பது வரலாறு.

இதுதவிர விவசாயத்துக்காக இலவச மின்சாரம் வழங்கிய முன்னோடி மாநிலமும் தமிழகம் தான். அதுவும் தமிழகத்தின் பொற்காலம் என போற்றப்படும் அதே 1970 களில் தான். அந்த இலவச மின்சாரம் ஒவ்வொரு கிராமத்துக்கும் வயல் வரப்புகளுக்கும் கிடைப்பதற்காக தாலூகா தோறும் சப் ஸ்டேஷன்களையும் மின் வினியோக கட்டமைப்புக்களையும் செய்து கொடுத்தது தமிழக அரசு.

தமிழக திட்டங்களை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டுவரும் மத்திய அரசு, கிராமங்களுக்கான மின் இணைப்பு திட்டத்தையும் 1980 களில் தொடங்கியது. அது திட்டமிட்ட இலக்கான 2020 க்கு முன்பாகவே இப்போது முடிக்கப்பட்டு இருக்கிறது (கவனிக்க: வடக்கு வடகிழக்கு மாநிலங்களில்)

இந்த விவரம் எதுவுமே தெரியாமல் சிலர், திராவிட இயக்கங்கள் வேஸ்ட் என்றும், மோடி வந்து ஜஸ்ட் மூணே வருடத்தில் இத்தனையையும் சாதித்தார் எனவும் தவறான பொருள் படும் வகையில் பல பதிவுகள் புரிந்துகொள்ள படக்கூடும்.

அதற்கான விளக்கமாகவே இப்பதிவு

🙏

உயர்நீதிமன்ற தீர்ப்புகள் - திமுகவுக்கு தோல்வியா?

சமீபத்திய உயர்நீதிமன்ற தீர்ப்புகள் மிகுந்த சுவாரஸ்யமானவை.

தீர்ப்பு 1:

சட்டமன்ற அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் பதவியை ரத்து செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட கோரி திமுக தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

சட்டமன்ற சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது என தலைமை நீதிபதி சொல்லி இருக்கிறார். இது சரியானது தான்.

ஆனால் சமீபத்தில் புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் உத்தரவில் இதே உயர்நீதிமன்றம் மன்றம் தலையிட்டு அவரது உத்தரவை ரத்து செய்தபோது எப்படி கோர்ட்டுக்கு அதிகாரம் வந்தது என தெரியவில்லை.

ஒருவேளை, பாதிக்கப்படுவோர் பா.ஜ.க ஆக இருப்பின், அந்த பாதிப்பிலிருந்து அவர்களை மீட்க எல்லோருக்கும் எல்லாவித அதிகாரங்களும் வழங்கப்பட்டு இருக்கிறதோ என்னவோ?

நீதிமன்றங்கள் நடுநிலை தன்மை கொண்டவை. தன்னிச்சையாக சட்டத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்குபவை என நான் நம்புகிறேன். (அது ஒருவேளை மூட நம்பிக்கையில் வருமோ என்னவோ)

தீர்ப்பு 2:

சட்டமன்றத்தில் குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை வைப்பது 'தார்மீக அடிப்படையில்' தவறுதான். ஆனாலும் அதை தீர்ப்பாக சொல்ல சட்டத்தில் இடமில்லை என தலைமை நீதிபதி சொல்லி இருக்கிறார்

உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்ததை இப்போது உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருப்பதில் மகிழ்ச்சி. இனியேனும் அதிமுகவினர் அதை உணர்ந்தால் நல்லது.

தார்மீக ரீதியில் தவறு. ஆனால் சட்ட ரீதியாக தவறில்லை என்பது டான்சி நில வழக்கிலேயே இதே ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்ன கருத்தை நினைவு படுத்துகிறது.

திமுக இந்தவிஷயத்தில் வழக்கு போட்டிருக்க தேவையே இல்லை என ஒரு வாதம் வைக்கப்பட்டு வந்தது. சட்டத்தில் இடமில்லாத ஒன்றுக்காக திமுக வழக்கு போட்டு விளம்பரம் தேடுவதாக நான் கூட பலமுறை நினைத்திருக்கிறேன்.

ஆனால் நேற்றைய தீர்ப்பின் படி ஜெயலலிதா குற்றவாளி என மீண்டும் உறுதிப்படுத்த பட்டுள்ளதால் அரசின் திட்டங்களில் அவரது படத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு வழக்கை திமுக தாக்கல் செய்ய இந்த தீர்ப்பு உதவும்.

சட்டமன்றத்தில் படத்தை நீக்கத்தானே சட்டத்தில் இடமில்லை?

சுருக்கமாக பார்த்தால் முதல் தீர்ப்பை அப்பீலில் வெல்ல முடியும். இரண்டாவது தீர்ப்பின் அடிப்படையில் புதிய வழக்கு பதியலாம்

திமுகவுக்கு ஆறுதல் வெற்றிதான். தோல்வி அல்ல.

பார்ப்போம்!

Sunday, April 15, 2018

ஜெ திராவிட தலைவரா ?

ஜெ திராவிட தலைவரா என்று ஒரு விவாதம்.

இதில் என்ன சந்தேகம் என தெரியவில்லை. ஜெ. நிச்சயமாக திராவிட இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவர்தான். குழப்பமே வேண்டாம்.

அவர் சார்ந்த இனத்தின் அடிப்படையில் அவரை திராவிட தலைவர் அல்ல என வாதிடுவோர் நீதிக்கட்சி பற்றி அறியாதவர்களாக இருக்கக்கூடும். இனத்தின் அடிப்படையில் அல்ல. உணர்வின் அடிப்படையிலேயே அவரது திராவிடத்துவம் தீர்மானிக்கப்படுகிறது.

திராவிட இயக்க உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு திராவிட கொள்கைகளுள் சிலவற்றையேனும் செய்ய முனைந்தவர்கள், அவர்கள் எவ்வினத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களும் திராவிட இயக்கத்தின் தலைவர்களே.

***

திராவிட கொள்கைகளுள் சமூக நீதியும் ஒன்று. எல்லா இனத்தவர்க்கும் சம உரிமை.. சமத்துவம்.. எல்லாவர்க்கும் கல்வி வழங்குவதற்கான வசதிகள்..அதற்கான சட்டங்கள் என சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமையை, அவர்களுக்கு வழங்கி அவர்களையும் எல்லோரையும் போல சமூகத்தில் உயரிய இடத்தை அடைய செய்வதும் திராவிட கொள்கையே.

ஆதிக்க இனத்தினரின் அழுத்தங்களையும் மீறி, அவர்களில் ஒருவராக இருந்தும் அதை புறக்கணித்த்ய், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளுக்காக போராடி 69% இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்ததுடன், அதற்கு அரசியல் சாசன பாதுகாப்பும் பெற்று தந்த ஜெ.வை எப்படி திராவிட தலைவர் அல்ல என சொல்ல முடியும்?

திராவிட உணர்வை.. பெரியாரின் அண்ணாவின் கனவுகளை.. நனவாக்கும்  எவரும் பெரியாரிஸ்டுகளே!

விழுப்புரம் கூட்டத்தில் ஜெ ஒருமுறை சொன்னதுபோல 'இது பெரியாரின் புண்ணிய பூமி.. அவரது வழி வந்தவர்கள் மட்டுமே ஆள உரிமை கொண்ட இடம்'. இதை சொல்லி முழங்கும்போது அவரது இனம் நமக்கு ஞாபகம் வருவதில்லை. அவரது உணர்வு தான் ஞாபகம் வருகிறது. அது திராவிட உணர்வு. பெரியாரியலில் ஊறிய உணர்வு.

இது ஒன்றே போதும்.. புரட்சித்தலைவி ஜெயலலிதா திராவிட தலைவர்களுள் முக்கியமானவர்.. பெரியாரின் வழிவந்தவர் என சொல்வதற்கு.

ஏழைப்பெண்களின் திருமணம், பெண்ணுரிமை போற்றும் ஒதுக்கீடு, அனைத்து மகளிர் காவல் நிலையம், தொட்டில் குழந்தைகள், பாலூட்ட தனி அறை, விதவை மறுமணத்துக்கான உதவி என பெண்ணியம் சார்ந்த திட்டங்கள் ஆகட்டும்

தொழில் கல்வி கிராம வளர்ச்சி என சமூக நலன் சார்ந்த பிற திட்டங்கள் ஆகட்டும்

பெரியாரின் பார்வையில் பெரியாரின் சிந்தனையில் தான் செயல்பட்டு வந்திருப்பதாக உணர்கிறேன்!

என்னளவில் ஜெ திராவிட தலைவரே. ஐயமில்லை!

என்ன செய்தது திராவிடம்?

இன்று நண்பருடன் சிறு உரையாடல்

திராவிடம் அப்படி என்ன பெரிசா செய்தது? அதிலும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க அவர்கள் என்ன செய்தார்கள்? இப்போதும் அதே ஏற்றத்தாழ்வு இருக்கத்தானே செய்கிறது? என உண்மையான வருத்தத்தோடே கேட்டார். அவர் உயர்வகுப்பை சேர்ந்தவர் (ஆம் அதே தான் 😝) ஆனாலும் அவரது கேள்வியில் உண்மையான வேதனை இருந்தது

ரவா கிச்சடி சாப்பிட்டபடியே பேசினேன்.. சுருக்கமாக

"நீங்க இப்போ என்ன வேலை செய்கிறீர்கள்னு சொல்லமுடியுமா?" நான்

"சென்னையில் ஒரு கம்பெனியில் தலைமை எஞ்சினியர்" அவர் (இனி உரையாடலாக புரிந்துகொள்ளவும்)

"உங்களுடன் பணிபுரிவோர்....??."

"பல தரப்பட்டவர்கள்.. பல இனத்தவர்..குலத்தவர்.."

"அவர்களோடு இணைந்து பணியாற்றுவது உங்களுக்கு சங்கடமாக இருக்கிறதா?"

"இல்லவே இல்லை.. அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களை வேறுபடுத்தி நான் பார்ப்பதில்லை. அவர்களோடு சகஜமாக பழகுகிறேன்.. அவ்வளவு ஏன்.. அவர்களோடு உணவை பகிர்ந்துகொள்ளுகிறேன்.. அவர்களது டிபன்பாக்ஸையே எடுத்து சாப்பிடுவேன்.. (வெஜிட்டேரியன் ஐட்டம்சாக இருந்தால் மட்டும்)"

"உங்களுக்கு எப்படி எல்லோரும் சமம் என்கிற உணர்வு வந்தது?"

"அது எனது கல்வியினால் வந்த மெச்சூரிட்டி"

"ஏன் வட மாநிலங்களில் கல்வி கற்றவர்களுக்கே கூட இந்த மெச்சூரிட்டி வரவில்லை?"

"......."

"சரி அதை விடுங்கள். உங்களுக்கான தொழில்களை விட்டுவிட்டு நீங்கள் எஞ்சினியரிங் படிக்க விரும்பியதும்.. உங்களுடன் பணிபுரியும் அந்த ஒடுக்கப்பட்டோர் எஞ்சினியரிங் படித்து உங்களுக்கு சமமாக வந்திருப்பதையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?"

"இது சமுதாய வளர்ச்சியின் பரிணாம வெளிப்பாடு. சமூக வளர்ச்சியும் நாகரீகமும் வளர வளர நாங்களும் பிற துறைகளில் கால்பதித்து வென்றோம். அவர்களும் மெல்ல எல்லா துறைகளிலும் முன்னேறினர். இது கால மாற்றம். இதில் என்ன ஸ்பெஷல்?"

"இதே சமுதாய முன்னேற்றம்.. நாகரீக யுகம் வடக்கிலும் உள்ளதே? பிறகும் ஏன் ஒடுக்கப்பட்டவர்களால் அவர்கள் விரும்பிய கல்வியை படிக்க முடியவில்லை? தென்கோடியில் மட்டும் எப்படி அது சாத்தியமானது? அவர்களது வளர்ச்சி உங்களுக்கு எந்த உறுத்தலையும் தராத அளவுக்கு உங்களுக்கு மன முதிர்ச்சி வந்திருக்கிறது. ஆனால் உங்களை சார்ந்தவர்களுக்கு வடக்கில் உள்ளவர்களுக்கு ஏன் அந்த முதிர்ச்சி வரவில்லை?"

"இங்கு அடிப்படி கல்வியில் இருந்தே அந்த சமதர்மம் பாடமாக இருக்கிறது. வடக்கில் எப்படி என தெரியவில்லை"

"அது தான் திராவிடம் தந்த பெரும் மாற்றம்... "

நான் முடித்துவிட்டேன்

உணவையும் உரையாடலையும்

அவர் என்னுடன் காரில் வரும்பொழுது நிறைய பேசினார். இப்போது அவருக்குள் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. உற்சாகமாக இருந்தார். திராவிட இயக்கம் பற்றி நிறைய படிக்கப்போவதாக சொன்னார். ஒரே நேரத்தில் சுதந்திரம் கிடைத்தும் தென் மாநிலங்களில் மட்டும் இந்த மெச்சூரிட்டியும் சகிப்புத்தன்மையும் எல்லோருக்குள்ளும் வந்திருப்பதன் தாத்பர்யத்தை விரிவாக தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாக சொன்னார். திராவிடம் சத்தமில்லாமல் மிக பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொள்வதாக சொன்னார். இன்னும் இன்னும் நிறைய பேசினார்.. வழி நெடுக நீண்ட பயணத்தில்..

சந்தோஷமாக இருந்தது.

ஒரு சாதாரண உரையாடல் பத்து நிமிடத்துக்குள் இத்தனை மாற்றத்தை தரும் என நானே கூட நினைத்துப்பார்க்கவில்லை

ரவா கிச்சடி மிகவும் சக்திவாய்ந்தது !

Wednesday, April 11, 2018

மோஹன் தாஸா? மோஹன் லாலா?

பிரதமரின் டங் ஸ்லிப்கள் பிரசித்தம். அதிலும் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் 'டங் ஸ்லிப்'பாக சொல்வதில் அவர் கில்லி

எடப்பாடி ஸ்டாலின் எல்லாம் ஒரே விஷயத்தில் மீண்டும் மீண்டும் ஸ்லிப் ஆகும் அளவுக்கு இன்னும் தரம் தாழலை

மஹாத்மா காந்தியை 'மோஹந்தாஸ் கரம்சந்த் காந்தி' என சொல்வதற்கு பதிலாக ஒவ்வொரு தடவையும் "மோஹன்லால்" கரம்சந்த் காந்தி என்றே சொல்லி வருகிறார் நம் பிரதமர்.


அவர் சார்ந்த இயக்கத்தை பொறுத்தவரை காந்தி ஆகாதவராக இருந்தாலும், அவர் இப்போது பிரதமராக இருப்பதால் அவர் மரபுகளையும் மரியாதைகளையும் மீறாமல் இருக்கவேண்டும் என்பது தான் முறை.

ஒரு முறை தவறினாலே திருத்திக்கொள்ளும் நம் தலைவர்கள் மத்தியில் பலமுறையாக ஒரே தவறை செய்து வரும் பிரதமரின் செயல் எதேச்சையானதா தெளிவாக செய்ததா என்பது விவாதிக்கவேண்டிய விஷயம்

அல்லது அவரது இயல்பான ஆர்வமான சினிமா மீது கொண்ட தீராத காதலின் காரணமாக, சினிமா பிரபலங்கள் மீதான அதீத ஆர்வம் காரணமாகக்கூட மோஹந்தாஸ் என சொல்ல வருகையில் மோஹன்லால் என சொல்லி இருக்கலாம்.

எது எப்படியோ, பிரதமர் பதவிக்கு என உள்ள ஒரு மரியாதையை அவர் இனியாவது காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பது எல்லோருடைய ஆவல்

ஸ்டாலின் எடப்பாடி போன்றோருக்கு எதேச்சையாக டங் ஸ்லிப் ஆகி உடனே அடுத்த செகண்டே அதை திருத்தி சொன்னாலும் கூட எள்ளி நகையாடி கைகொட்டி சிரித்து கேலி செய்து பதிவுகள் இட்ட நடுநிலை நண்பர்கள் பிரதமரின் விஷயமாக மௌனம் காப்பது ஏன் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டும் என்றில்லை. அவர்களது மனநிலை என்ன என்பதை இங்குள்ளோரும், மக்களும், நன்கு அறிவார்கள்!

பிரதமர் பீஹாரில் பேசிய லேட்டஸ்ட் வீடியோ.. இதோ இந்த ட்வீட்டில்

https://twitter.com/GauravPandhi/status/983752677116010496

Tuesday, April 10, 2018

காவிரி - ஸ்கீம் - விளக்கம்

உச்சநீதிமன்றம் நேற்று கொடுத்திருக்கும் விளக்கம் என்னை (விளக்கெண்ணெய் என தப்பா படிச்சா கம்பெனி பொறுப்பல்ல 😝) மிகவும் வருத்தத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு தான் வழக்கின் சாரம்சமே. அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இனி அதை அமல்ப்படுத்த வேண்டியது தான் பாக்கி.

சரி, நடுவர் மன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது? நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பு காவிரி விவகாரத்தின் முழுமையான ஆவணம். இதுவரை நடந்தது என்ன? எத்தனை பேச்சுவார்த்தை நடந்தது? ஒப்பந்தத்தை மீறி அதிகரிக்கப்பட்ட பாசன பரப்புக்கள், கூடுதல் அணைகள் என்னென்ன? ஒவ்வொரு பகுதியிலுமான சராசரி மழை அளவு. ஒவ்வொரு மாநிலத்தின் நீர் தேவை. என எல்லா விதமான ஆய்வுகளையும் விரிவாக ஆராய்ந்து பதிவுசெய்து அதன் அடிப்படையில் இனி பேச்சுவார்த்தையோ மாநிலங்களின் கட்டுப்பாட்டில் அணையோ சாத்தியமில்லை என்பதற்கு தகுந்த காரணிகளையும் பதிவு செய்திருக்கிறது.

இதற்கு தீர்வாக சொல்லப்பட்ட ஸ்கீம் பற்றியும் விரிவாக ஸ்டெப் பை ஸ்டெப் புரசீஜர்ஸ் நடுவர் மன்ற தீர்ப்பிலேயே இருக்கிறது. அதாவது, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும். அதில் உரிய நபர்களை உள்ளடக்கிய ஒரு குழு (மத்திய மாநில அரசு அதிகாரிகள் & மாநில பிரதிநிதிகள்) அமைத்து அவர்களது பொறுப்பில் எல்லா அணைகளையும் கொடுக்கவேண்டும்.

மாதாமாதம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நீர் கொடுக்கவேண்டும் என நடுவர் மன்ற தீர்ப்பிலேயே இருக்கிறது. அதன் அடிப்படையில் முறையாக நீர் திறந்துவிடும் கடமை காவிரி மேலாண்மை வாரியத்தின் பொறுப்பு. அதற்கு தக்க அதிகாரங்களும் பாதுகாப்பும் மத்திய அரசு செய்யவேண்டும்.

இது தான் அந்த ஸ்கீம். இந்த ஸ்கீமின் ஒரு பகுதி தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது.

இத்தனை விளக்கமாக நடுவர் மன்ற தீர்ப்பு இருந்தும் அதை படிக்காமல், ஸ்கீமுக்கான விளக்கம் கேட்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் அல்ல.

ஆனால் அந்த நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்கமாட்டோம் என கர்னாடக அரசு பிடிவாதம் பிடித்ததால் தான் உச்சநீதிமன்றம் சென்றோம்.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் விரிவாக மீண்டும் சொன்னதையே சொல்ல விரும்பாமல் சுருக்கமாக 'நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை. அந்த ஸ்கீமை செயல்படுத்த ஆறுவார காலம் மத்திய அரசுக்கு கெடு' என சிம்பிளாக முடித்து விட்டது. மத்திய அரசு என்ன செய்திருக்கவேண்டும்? நடுவர் மன்ற தீர்ப்பை எடுத்து படித்து பார்த்து அதில் சொன்னபடி செயல்பட ஆரம்பித்து இருக்கவேண்டும். ஆனால் அதை படிக்காமல் காலத்தை கடத்த விளக்கம் கேட்டு குறுக்குசால் ஓட்டிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஆறு வாரம் கழிச்சு ஸ்கீம்னா இன்னா? என ஒரு விளக்கம் கேட்டு அதற்கு நேற்று உச்சநீதிமன்றம் விளக்கமும் தந்திருக்கிறது

அதாவது CMB அமைத்து நீர் திறந்துவிடும் திட்ட அறிக்கை தயாரித்து மாநிலங்களின் பிரதிநிதிகள் நியமித்து அணையின் மேலாண்மை பொறுப்பை நிறைவேற்றுவது.

இதை தான் நடுவர் மன்றம் விரிவாக தனது தீர்ப்பில் சொல்லி இருக்கிறது. அதை அமல்ப்படுத்த தானே ஆறுவாரம் அவகாசம்.

திரும்பவும் எல்.கே.ஜி குழந்தை போல் சந்தேகம் கேட்பதும் நடுவர் மன்ற தீர்ப்பையே மீண்டும் வாசித்து காட்டுவதும் தமிழகத்தை கேலிக்குள்ளாக்குவதும் நேரம் கடத்துவதுமே அன்றி வேறில்லை

இதில் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் இன்னொன்று உள்ளது.

மத்திய அரசு தனது மனுவில் "தீர்ப்பை செயல்படுத்த தனக்குள்ள பிரச்சனைகள் இருப்பதால்.." என மேம்போக்காக சொல்லி இருக்கிறது. அது என்ன பிரச்சனை? தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மனமில்லையா? நடுவர் மன்ற தீர்ப்பை அமல்ப்படுத்தி கர்னாடக மக்களின் கோபத்துக்கு ஆளாகவேண்டாம் என நினைக்கிறதா? கர்னாடக தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறதா? என்றெல்லாம் விரிவாக சொல்லாமல் மொட்டையாக பிரச்சனைகள் என சொல்லி இருக்கிறது. இதை தான் நாம் இப்போது கேள்வி கேட்கவேண்டும். தீர்ப்பை அமல்ப்படுத்துவதில் தமிழகத்துக்கு நீதி வழங்குவதில் பாஜகவுக்கு என்ன பிரச்சனை என்பதை விளக்க சொல்லி கேட்பது தமிழகத்தின் தமிழக மக்களின் கடமையும் கூட

முன்பை விட பாஜக மீது அதீத வெறுப்பை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது இவ்விளக்கம்

Sunday, April 8, 2018

காவிரி - பேச்சுவார்த்தை சாத்தியமா?

கேப்டன் நேற்று "கர்னாடக அரசுக்கு ராகுல் மூலம் அழுத்தம் தந்து காவிரி விவகாரத்தை தீர்க்கவேண்டும்" என்கிற ரீதியில் பேசி இருப்பதை 'சிலர் மட்டும்' ஆகா ஓகோ என புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

முதலில் பிரச்சனை இப்போது மத்திய அரசின் கையில் இருக்கிறது. கர்னாடக அரசின் கையில் அல்ல. இந்த அடிப்படை கூட இங்கே பலருக்கும் புரியவில்லை.

இதில் கூடுதலாக திமுக/அதிமுக காவிரிக்காக எதையுமே செய்யவில்லை என்கிற உளறல் வேறு.

கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தமிழகம் பேச்சுவார்த்தை, சட்ட போராட்டங்கள் என போராடி வந்ததை அறியாதவர் எவரும் தமிழகத்தில் இல்லை.

பாசனபரப்பு அதிகரித்தல், கூடுதல் வாய்க்கால்கள் அமைத்தல், அணைகள் என தமிழக ஒப்பந்தத்துக்கு எதிராக கர்நாடக அரசு நடந்து அதை எதிர்த்து ஜெ & முக இருவர் ஆட்சியிலும் பல வழக்குகள் பதிந்து பல்வேறு சட்டப்போராட்டங்கள் நடைபெற்றது.

திமுக மத்திய விபி சிங் அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதன் அடிப்படையில் தான் நடுவர் மன்றம் அமைந்தது.

நடுவர் மன்றம் முழுமையாக விசாரித்து விரிவான தீர்ப்பு கொடுத்தபின் அதை அரசிதழில் வெளியிட ஜெ அரும்பாடு பட்டு ஜெயித்தார்.

இப்படி திராவிட இயக்கங்களின் தொடர் சட்ட போராட்டங்களின் காரணமாகவே தமிழகத்துக்கு சாதகமான இறுதி தீர்ப்பு வந்தது

இதன் படி, CMB அமைத்து அவர்களது கட்டுப்பாட்டில் நீர் திறப்பு/தேக்கம் ஆகியவை ஒப்படைக்க வேண்டும். அது நடுவர் மன்ற தீர்ப்பின் படி நீரை திறந்து விடும்.

மத்திய அரசு இந்த CMB அமைத்தால் மட்டும் போதும். மற்றவற்றை அதுவே பார்த்துக்கொள்ளும். அதற்கான அதிகாரத்தை Tribunal & SC அதற்கு கொடுத்து இருக்கிறது

எனவே இனியும் பூசி மெழுகி மழுப்பாமல், சட்டப்படி தமிழகத்துக்கு சேரவேண்டிய உரிமையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். அதை வலியுறுத்துவதை தவிர வேறு எதை சொன்னாலும் அது சரியல்ல. ஒவ்வொரு மனசாட்சியுள்ள மனிதனும் இனியும் தாமதப்படுத்தாமல் ம.அரசு தனது கடமையை செய்யவேண்டும் என்றே விரும்புவான்

---------

பிற்சேர்க்கை:

இது தொடர்பான சில கேள்விகள் பிறிதொரு இடத்தில் கேட்கப்பட்டு அதற்கான எனது பதிகள்

கே: அரசு அரசியல்வாதிகள் சட்டம் எல்லாம் தேவையில்லை. இரு மாநில விவசாயிகள் பேசி தீர்த்துக்கொள்ளலாமே?

ப: விவசாயிகள், அரசு, கட்சிகள், சட்டம், நீதிமன்றம் என அனைத்து முறைகளிலான பேச்சுவார்த்தைகளும் சட்ட போராட்டங்களும் நடந்து முடிந்து இறுதியாக தான் நடுவர்மன்றமும் அதன் தீர்ப்பும் வந்திருக்கிறது. மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டிய நிலையில் தமிழகம் இல்லை

கே: வி.பி.சிங்குக்கு கொடுத்தது போல ஏன் மன்மோகன்சிங்குக்கு அழுத்தம் கொடுக்கவில்லை?

ப: மன்மோகன் சிங் காலத்தில் தான் நடுவர் மன்ற தீர்ப்பு அமல்ப்படுத்துவதற்கான அழுத்தத்தை கொடுத்து அது அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து கர்னாடக அரசு வழக்கு தொடுத்து அந்த வழக்கு விரிவாக நடந்து அதற்கான தீர்ப்பு தான் இப்பொப்து பிப்ரவரியில் வந்திருக்கிறது

கே: CMB அமைக்கப்பட்ட பிறகும் மாநிலங்கள் அதற்கு பணியவில்லை என்றால்?

ப: CMB க்கு மாநிலங்கள் பணிய வேண்டும் என்று இல்லை. CMB யிடம் அணைகளின் பொறுப்பை மத்திய அரசு கொடுத்துவிடும். நடுவர் மன்ற தீர்ப்புப்படி ஒவ்வொரு மாதமும் தமிழகத்துக்கு சேரவேண்டிய நீரை முறைவைத்து திறந்துவிட வேண்டியது அதன் பொறுப்பு. CMB முறையாக செயல்படுவதற்கான சூழலையும் பாதுகாப்பையும் மத்திய நீர்வளத்துறை மூலம் மத்திய அரசே செய்யவேண்டும். (இந்த நிலைக்கு நடுவர் மன்றம் வர காரணமே இது வரையும் வந்த எந்த தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்காமல் நடந்துகொண்டது தான். ஒவ்வொரு முறையும் எதிர்த்து எதிர்த்து வழக்கிட்டு வழக்கிட்டு தாமதப்படுத்திக்கொண்டே வந்தது. நாமும் அதை எதிர்த்து நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி தான் இந்த தீர்ப்பை பெற்று இருக்கிறோம்)

கே: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் நதிநீர் பங்கீட்டு பிரச்சனை வந்திருக்காதே?

ப: மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்காக அப்போது இருந்த அதே காரணங்கள் இப்போதும் இருக்கின்றன. அதற்கும் நீர் பங்கீட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

Printfriendly