Wednesday, May 26, 2021

தமிழக அரசும் தடுப்பூசி முகாம்களும்

சத்தமே இல்லாம தமிழகத்தில் தடுப்பூசி போடும் முகாம்கள் தமிழக அரசின் சார்பில் பெரிய அளவில் நடந்துகொண்டு இருக்கிறது.

பெரிய நகரங்களில் நடமாடும் மினி கிளினிக் மூலமும், பிற மாவட்டங்களில் PHC மூலமும் பல்லாயிரக்கணக்கான ஊசிகள்  போடப்படுகிறது
தமிழக சுகாதாரத்துறை கட்டமைப்பு நம் எல்லோருக்கும் அறிந்த ஒன்றே. நகரங்கள் மட்டும் அல்லாமல் கிராமங்கள், மலை பகுதி மக்கள் வாழிடங்கள், தொலை தூர குடியிருப்புக்கள் என அனைத்து இடங்களிலும் கூடுமானவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப் பட்டு உள்ளன.

மத்திய அரசின் தடுப்பூசி தகவல்கள் பதிவேற்றப்படும் CoWin இணைய தளம் அல்லாமல் தமிழக அரசு தனக்கு என தனியான ஒரு தகவல் தளத்தை உருவாக்கி அதில் தடுப்பூசி குறித்த தகவலைக் குறித்து வருகிறது.

தமிழக அரசின் முகாம்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள CoWin தளத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் அட்டை எடுத்து சென்று நேரடியாக போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போட்டு கொண்டதற்கு சான்றாக தமிழக அரசு தற்காலிகமாக ஒரு அட்டை தருகிறார்கள். பின்னர் சான்றிதழ் வழங்கப்படும்.

CoWin தளத்தை மட்டுமே பார்த்து தமிழக அரசு மீது குறை சொல்வோர் விரைவில் ஒரு பெரும் சாதனை செய்தியைப் பற்றி அறிவார்கள் என நம்புகிறேன். எந்த வித விளம்பரங்களும் இல்லாமல் தமிழக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் ஒரு பெரிய இயக்கம் மாநிலம் முழுவதிலும் சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை கொண்ட பெரிய தொழிற்சாலைகளில் தனி தனியாக முகாம் போட்டு எல்லா தொழிலாளர்களுக்கும் அந்தந்த தொழிற்சாலைகளில் தடுப்பூசி முகாம்கள் நடந்து கொண்டு இருக்கிறது. 
இது போக பள்ளிகள் கல்லூரிகளில் வேறு தனியாக முகாம்கள் நடக்கிறது இருக்கு.

அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் கூட முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

PHC, Mobile Clinics இன்னொரு புறம் மக்களுக்கு இலவசமாக ஊசிகள் போட்டுக் கொண்டு இருக்கு

வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள எனது நண்பர்கள் உறவினர்கள் மூலம் அறிந்த தகவலின் படி கிராமங்கள் மலை கிராமங்கள் தொலை தூர பகுதி மக்களுக்கு கூட நடமாடும் வாகனம் மூலம் சென்று ஊசி போட்டு வருகிறது தமிழக அரசு

ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் ஊசி போதுமான அளவு இல்லை, குறைவு தான் என்றாலும் அத்தனையும் உபயோகிக்கிறது தமிழக அரசு. 
சராசரியாக ஒவ்வொரு PHC யிலும் 200 பேருக்கு ஒரு நாளில் தடுப்பூசி போடப்படுகிறது. சில மையங்களில் ஒரு நாளைக்கு 500 ஊசிகள் எல்லாம் போடப்பட்டு இருக்கிறது.

கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளில் 14000 ஊசிகள் இலவசமாக போடப்படுகிறது
ஆனைமலை சேத்துமடை என உட்பகுதி கிராமங்கள், நஞ்சுண்டாபுரம் பீளமேடு என நகர பகுதிகள் என எல்லா இடங்களிலும் முகாம்கள் உள்ளன.

இங்கே கள நிலவரம் தெரியாமல் இணைய தகவல்களை மட்டுமே பார்த்து தமிழக அரசை திமுகவை குறை சொல்லி கொண்டு இருக்கும் பலருக்கு விரைவில் இந்த தகவல்கள் எல்லாம் தெரிய வரும் போது மிக பெரிய ஆச்சர்யமாக அவர்களுக்கு இருக்கக்கூடும்

திமுக அரசு எப்போதும் போல விளம்பரம் இல்லாமல் மக்கள் பணி செய்வதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து கொண்டு இருக்கிறது

ஒரு சந்தோஷமான சாதனை செய்தி on the way மக்களே.. 

Tuesday, May 25, 2021

சமூக வலைதளங்களும் அரசின் கட்டுப்பாடும்

கடந்த பிப் மாதம் மத்திய அரசு, இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது (பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே)

அதன் படி இந்தியாவில் இயங்கும் சமூக வலை தள நிறுவனங்கள் சில விதிகளை கடை பிடிக்க வேண்டும்

1. குறை தீர்ப்பு குழு அமைத்தல்

2. மாதா மாதம், பெறப்பட்ட குறைகளின் எண்ணிக்கை, அதில் தீர்க்கப்பட்ட குரைகளின் நிலை ஆகியவற்றை அரசுக்கு அனுப்புவது
இதனுடன் இன்னொரு விதியாக

3. பயனர்கள் பதிவுகளை முன்னதாக தணிக்கை செய்து சட்டப்படி ஏற்புடைய சரியான பதிவுகளை மட்டுமே வெளியிட வேண்டும்
4. வெளியான பதிவுகளின் மீது அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படும் எனில் அதற்கான பொறுப்பு சமூக வலைதள நிறுவனங்களை தான் சேரும்

5. பயனர் தவறுக்கு நிறுவனங்களே பொறுப்பு
இந்த விதிகள் எல்லாம் மே 26 ஆம் தேதி அமலுக்கு வரும்

அரசின் இந்த விதிமுறை ஏற்காத நிறுவனங்கள் செயல்பட முடியாது

இது பேச்சுரிமை / கருத்து உரிமையை கட்டுப்படுத்தும் செயல் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்
WhatsApp நிறுவனம் பயனர்களின் பதிவை கட்டுப்படுத்த முடியாது என அறிவித்து உள்ளது

Facebook நிறுவனம் குறை தீர்க்கும் குழு விதியை ஏற்பதாக சொல்லி உள்ளது.

Twitter முடிவு தெரியவில்லை

இந்நிலையில் மே 26 காலை முதல் சமூக வலை தளங்கள் இயங்காதோ என்கிற அச்சம் பயனர்களிடம் இப்போது உள்ளது

என்னை பொறுத்த வரை.. இயங்க தடை விதிக்கப்படாது என்றே நினைக்கிறேன்

மேலும் கால அவகாசம் கொடுக்க வாய்ப்பு உள்ளது

அல்லது பயனர்களை tracking செய்யும் அமைப்பை வைக்க சொல்லக் கூடும்

பயனர்களை track செய்வது என்பது.. எல்லா பயனாளர்களையும் validate செய்வது.. (Aadhaar, PAN, License போன்றவை மூலம்)

இப்போதே Twitter தனது users verification செய்ய ஆவணங்களை கேட்கிறது. இதே போல அனைத்து பயனர்களுக்கும் கொண்டு வரலாம்.

தவறான பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க இது உதவும்

இதன் மூலம் fake ID, ananymous tweets ஆகியவை கட்டுப்படுத்தப்படும்

பயனாளர்கள் தவறான அல்லது சட்ட விரோத கருத்துக்கள் வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவரை கண்டு பிடிக்கவும் இந்த ஆவணங்கள் & validation உதவும்

இப்படியான practical rules விதிக்க தான் வாய்ப்பு உள்ளது

எது எப்படி ஆகினும் சமூக வலை தளங்களை இயங்காமல் செய்வது என்பது இயலாத காரியம்

சில கட்டுப்பாடுகளுடன் அவை தொடர்ந்து இயங்கும் என்றே நான் நம்புகிறேன்

அத்தகைய கட்டுப்பாடுகள் சமூக வலைதள பதிவுகளை சரியான வழியில் கொண்டு செல்லவும் உதவக்கூடும்.

பார்ப்போம்.. என்ன நடக்கிறது என்று 

Friday, May 21, 2021

பேரறிவாளன் விடுப்பு

முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான திரு. பேரறிவாளன் அவர்களின தாயார் அற்புதம்மாள் அவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார்கள்.

"நோய் தொற்று பாதிப்பு அபாயம் உள்ள காரணத்தால் எனது மகன் பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு அளிக்க வேண்டும்" என்பதே அந்த கோரிக்கை.

இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் மனிதாபிமான அடிப்படையில், வழக்கமான விதிகளை எல்லாம் "தளர்த்தி" திரு. பேரறிவாளனுக்கு 30 நாட்களுக்கு சாதாரண விடுப்பு வழஙக உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகிறது.

******

கைதிகளில் இரண்டு வகை உண்டு. தண்டனை கைதிகள். விசாரணை கைதிகள்.

குற்றம் நிரூபணம் ஆகாத நிலையிலும் விசாரணை நடந்து கொண்டு இருப்பதால் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகள் பலர்.

நோய் தொற்று அபாயம் தான் விடுப்புக்கான காரணம் என்றால், அதன் அடிப்படையில் விடுப்பு வழஙகுவதற்கான முன்னுரிமை விசாரணை கைதிகளுக்கு கொடுத்து இருக்கலாம்.

தண்டனை கைதிகளுக்கு, அதிலும் தூக்கு தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட கைதிகளுக்கு கூட விடுப்பு கொடுக்க விதிகளை தளர்த்த முடியும் என்கிற செய்தி ஆச்சர்யமாக உள்ளது.

இதே போன்ற கோரிக்கையுடன் பிற தண்டனை கைதிகள் அல்லது விசாரணை கைதிகளின் உறவினர்கள் தமிழக அரசை அணுகினால், இதே போன்று விடுப்பு கொடுக்கப்படுமா என தெரியவில்லை. 

நோய் தொற்று அபாயம் பிற கைதிகளுக்கும் உள்ளதால் அவர்களையும் விடுப்பில் அனுப்ப அரசு முன் வருமா என்ன?

எனவே இப்போதைய இந்த விடுப்பில், தனிப்பட்ட ஒருவருக்காக விதிகளை தளர்த்துவதில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு "சிறப்பு தன்மை" தானாகவே வந்து உட்கார்ந்து விடுகிறது.

அரசு அதிகாரம் என்பது தனக்கு வேண்டப்பட்டவர்கள் பலன் அடைவதற்காக விதிகளை தளர்த்துவதற்காக பயன்படுத்தப் படுவதல்லை. விதி தளர்வு என்பது பொதுவானதாக இருக்க வேண்டும். தனிப்பட்ட காரணங்களுக்காக இருப்பது சரியல்ல.

அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தால் தான் பெருமை என கருதுகிறேன்

எல்லோரும் தண்டனை அனுபவிக்கும் சிறை கூடத்தில் ஒருவருக்கு மட்டும் நோய் தொற்று அபாயத்தை காரணம் காட்டி விடுப்பு அளிப்பது விசித்திரமாக இருக்கிறது.

பேரறிவாளன் அவர்கள் விடுப்பில் வருவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அதே விதி மற்ற கைதிகளுக்கு பொருந்தாது என சொல்லப்படுவது சட்டத்தை இஷ்டத்துக்கு வளைப்பதை போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதை தவிர்க்க முடிவதில்லை.

எல்லோருக்கும் ஒரே நிலைப்பாடு எடுப்பதே ஒரு நல்ல அரசுக்கு அழகு. 

தமிழக சிறை துறை வரலாற்றில் மற்றும் ஒரு தவறான முன் உதாரணத்தை இப்போது எழுதி வைத்திருக்கிறது இந்த அரசு என்றே கருதுகிறேன்.






Printfriendly