Sunday, September 1, 2019

பாலகுமாரனும் பெரியாரும்

எழுத்தாளர  பாலகுமாரன் முன்பு தனது முகநூல் பதிவில் சொல்லி இருந்த ஒரு விஷயம் இப்போது மீண்டும் சமூக வலை தளங்களில் உலாவருகிறது.

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பக்தி அதிகரித்து இருப்பதாகவும், எல்லா கோவில்களிலும் கூட்டம் அதிகரித்து இருப்பதாகவும், அதற்கு பெரியார் கட்சி தான் காரணம் என்றும் எழுதி இருந்தார்.



இதனை இப்போது வெளியிட்ட நண்பர்கள், அவர் சொல்ல வந்தது பெரியார் கட்சி இருந்தும் பக்தர்கள அதிகரித்து இருப்பது பெரியாரின் தோல்வி என்கிற வாதததை முன் வைக்கிறார்கள்.


பாலகுமாரன் சொல்லி இருக்கும்
இந்த விஷயம் உண்மை தான்.

முன்பு குறிப்பிட்டவர்கள் மட்டுமே ஆலய வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பெரியார் நடத்திய போராட்டங்கள், திராவிட இயக்கங்கள் ஆட்சி ஆகியவை அனைவரையும் கோவிலுக்கு செல்ல வழிவகை செய்தது.

அதனால், கூட்டமும் வருமானமும் அதிகரித்தது.

மேலும் இந்த பதிவில் பாலகுமாரன் வேளாங்கண்ணி, நாகூர் எல்லாம் போய் வந்ததாக சொல்லி உள்ளார்.

இந்த மத நல்லிணக்கம் பெரியார் கொண்டு வந்தது. திராவிட கட்சிகள் தந்தது.

அதற்கு முன்பு பாலகுமாரன் போன்றோர் இப்படி சர்ச் தர்கா எல்லாம் போய்விட்டு வருவது எளிதல்ல.. பல எதிர்ப்புகள் இருந்தன.


பேருந்துகள் தேசிய உடமை ஆக்கப்பட்டு கடைக்கோடி கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்து கொடுத்தது திமுக அரசு.

அதுவரை கிராமங்களில் அதிகம் பயணிகாத மக்களும் மெல்ல வெளி வந்து தொழில் கல்வி என வளர தொடங்கினார்கள்

அதுவரை பார்க்க நினைத்த ஆலயங்களுக்கு பயணிக்க ஆரம்பித்தார்கள்..


பல புகழ்பெற்ற ஆலயங்கள் ஒரு கால பூஜைக்கு கூட வழியின்றி இருந்த நிலையில், ஒரு கால பூஜை அனைத்து ஆலயங்களிலும் நடைபெற திமுக அரசு நிதி உதவி அளித்தது.

குடமுழுக்கு நடைபெறாது இருந்த ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டது குடமுழுக்கு செய்யப்பட்டது

அனைவரும் வழிபாடு செய்ய வழி செய்யப்பட்டது

இவைகள் எல்லாம், மக்களுக்கு வெவ்வேறு ஆலயங்களுக்கு சென்று வழிபட ஊக்கம் தந்தது.

திருவில்லிபுத்தூர் கோபுரத்தை அரசு முத்திரையாக அறிவித்த அடுத்த இரண்டு ஆண்டுகள் அந்த கோபுரத்தை பார்ப்பதற்கென்றே அந்த கோவிலுக்கு சென்றவர்கள் பலர்.

இதுபோன்ற மறைமுக ஊக்குவித்தல் திராவிடம் கொடுத்த வளர்ச்சி

ஆலயங்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்து கால பூஜைகள் தவறாமல் நடைபெற வழி செய்தது

ஒடாதிருந்த தேர் திருவிழாக்களை மீண்டும் முன்னெடுத்து ஓட்டி காட்டியது என மக்கள் வழிபாட்டுக்கு உரிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது திராவிடம்

இவை தான் இன்றைய கூட்டத்துக்கு வருவாய்க்கு காரணம்.

எனவே, பாலகுமாரன் அவரத பதிவில் சொல்ல வந்தது, இப்போதைய மக்கள் இத்தனை அதிகமாக ஆலையம் சென்று வழிபட வேண்டிய உரிமைகளையும் அதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தது பெரியார் கட்சி (திராவிட இயக்கம்) என்பதை தான் என விளங்கி கொள்ள முடிகிறது.



Printfriendly