Sunday, March 28, 2021

சூயஸ் கால்வாய் முடக்கம்

கடல் வாணிபம் கொஞ்ச காலம் முடங்கி போகும் அளவுக்கு ஆகி உள்ளது இப்போதைய #SuezCrisis காரணமாக

சுருக்கமா அதைப் பார்ப்போம்

அரபி கடல் - செங்கடல் - மத்திய தரைக் கடல் மூலமா இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு பயணிக்க குறுக்கு வழி இந்த #SuezCanal 


இப்போது #Evergreen நிறுவனம் இயக்கும் #Evergiven எனும் கன்டெய்னர் கப்பல் அந்த கனாலில் சிக்கி கொண்டு உள்ளது..

25 பேர் கொண்ட இந்திய மாலுமிகளால் இயக்கப்பட்ட கப்பல் அது. 

நேராக பயணிக்க வேண்டிய கப்பல் தடுமாறி கரையில் தட்டி நின்று விட்டது 

கிட்டத்தட்ட 20,000 கண்டெய்னர் சுமந்து வரும் பிரம்மாண்டமான கப்பல் அது

அது #Suez கால்வாயை கிட்டத்தட்ட குறுக்காக மறித்து நிற்பதால் சுமார் 300 கும் அதிகமான கப்பல்கள் அந்த கால்வாயில் பின்னோக்கி இயக்கவும் முடியாமல் முன்னோக்கி செல்லவும் முடியாமல் ஜாம் ஆகி நிற்கின்றன. 

இந்த கப்பலை சரியான திசைக்கு திருப்பி இயங்க செய்யும் நடவடிக்கைகள் சில நாட்களாக நடைபெற்று வந்தாலும் இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை

இரு பக்கமும் கரைகளை சேதப்படுத்தாமல் மீட்கும் சவாலான செயல் அது. கரை கொஞ்சம் உடைந்தாலும் அந்த நாட்டுக்குள் கடல் நீர் புகுந்து விடும் 

இந்த பிரச்சனை காரணமாக கடல் வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. உலகின் மொத்த கடல் வாணிபத்தில் 15% இந்த கால்வாய் வழியாக நடைபெறுகிறது

தெற்கு ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கிய கடல் வழி தடம் இது

இப்போது கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றி செல்கின்றன 

இதனால் கால விரையம், எரிபொருள் விரயம், பொருள் விரையம், கட்டண உயர்வு, அதனால் பொருட்களின் உயர்வு என பாதிப்புக்கள் ஒரு புறம்

தாமதமான பொருள் வரவு காரணமாக உற்பத்தி தாமதம் ஆவது, குறித்த நேரத்தில் பொருட்களை விற்க முடியாதது என வணிக பாதிப்புகள் மறு புறம்

அதிகம் இந்த பிரச்சனையால்  பாதிப்பது இந்தியா 

இந்திய தொழிற்சாலைகளுக்கு ஐரோப்பாவில் இருந்து வர வேண்டிய பொருட்களும், இந்தியாவில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களும் முடங்கி கிடக்கின்றன

முடங்கிய கப்பல்களில் எரிபொருள் உணவு பற்றாக்குறை என்பது அந்த கப்பல்களில் காத்துகிடப்போருக்கு மற்றொரு பாதிப்பு 

#Suez கால்வாயில் இப்போது சுமார் 300+ கப்பல்கள் நின்று கொண்டு இருக்கின்றன

அதில் உள்ளவர்களுக்கு எந்த உதவியும் யாரும் செய்ய முடியாத நிலை. 

எத்தனை நாள் அங்கே இருக்க வேண்டி இருக்கும் என்பது இன்னும் தெளிவு இல்லை

அது வரை உணவு கையிருப்பு & எரிபொருள் உள்ளதா என்று தெரியவில்லை 

இவை எல்லாம் சேர்ந்து அடுத்த சில மாதங்களுக்கு இந்திய தொழில் துறைக்கும், இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதிக்கு மிக பெரிய சவால் இருக்க கூடும்

இப்போது மாற்று வழியில் பயணிப்போம் என நினைத்தால் அதற்கான கூடுதல் செலவு ஏற்றுமதி செய்யும் பொருளின் விலையில் சேர்க்க வேண்டி இருக்கும். 

அப்படி விலையை ஏற்ற வாய்ப்பில்லாத நிலையில் அந்த கூடுதல் செலவு பொருளாதார இழப்பாக பெரும் சுமையாக தொழிற்சாலைகளுக்கு அழுத்தம் கொடுக்கும்

#SuezCrisis தீரும் வரை தீர்ந்து எல்லா கப்பல்களும் இயல்பாக சென்றுவரும்வரை இந்திய தொழில் துறைக்கு ஏற்படும் இழப்புகள் பல்லாயிரம் கோடிகள் ஆகும்

விரைவில் இது சரியாக வேண்டும்

இனி அவ்வழி இயங்கும் கப்பல்களில் தேர்ந்த மாலுமிகள் நியமித்து எந்த பிரச்சனையும் இல்லாமல் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்

இப்போதைய #SuezCrisis கடல் சார் வாணிபத்தில் மிகப் பெரிய பாடமாக அமைந்து உள்ளது நமக்கு.

Printfriendly