Sunday, May 10, 2020

கொரோனா தரும் மாற்றங்கள் - தொழில்துறை

கொரோனா வைரஸ் இந்தியாவை தாக்கத் தொடங்கி சுமார் 100 நாட்களுக்கு மேல் ஆகிருச்சு. இன்னமும் மருந்து கண்டுபிடிக்க முடியல. தடுப்பு மருந்தும் இல்லை. சிகிச்சை முறையும் வரையறுக்கப்படவில்லை

இந்த சூழலில் கிட்டத்தட்ட 50 நாளாக வீட்டுக்குள்ளேயே முடங்கியது இந்தியா.. தொழிலில்லை, வர்த்தகம் இல்லை, போக்குவரத்து இல்லை

இனியும் இப்படியே தொடர முடியாத சூழலில், நடப்பது நடக்கட்டும் என மெல்ல மெல்ல எல்லாவற்றையும் அனுமதிக்க தொடங்கி விட்டன அரசுகள்

இனி வரும் காலம் நமக்கு எப்படி இருக்கும்?

அதிக பயணங்கள் இருக்காது, முக கவசம் காஸ்டியூமில் ஒன்றாக மாறும், சேமிக்க தொடஙகுவோம், நெருங்கிய உறவினர்கள் கூட வீட்டுக்கு வந்தால் தயஙகுவோம் இப்படி பல பல யூகங்கள் பறந்து கொண்டே இருக்கின்றன

நாம் தொழில் துறையை பார்ப்போம்.

என்ன ஆகும் தொழில்துறை?

அலுவலகங்கள்

அலுவலகங்கள் எனும் அமைப்பு மெல்ல மெல்ல குறைந்து விர்ச்சுவல் ஆபீஸ் (Virtual Office) முறை அதிகமாகும்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள அலுவலகங்களில் பணி செய்வோர் பிற மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி உள்ளவர்களே. 

இந்த கரோனா காரணமாக Work From Home (WFH) மூலம் இரண்டு மாதங்கள் சிக்கலின்றி இயங்கி காட்டியதால், நிறுவனங்கள் இப்போது நிறைய சிந்திக்க தொடங்கி உள்ளன.

TCS போன்ற நிறுவனங்கள் 75% பேரை WFH முறைக்கு மாற்ற திட்டமிடுவதாக சொல்கிறார்கள்

ஐடி துறை மட்டுமல்லாமல், மார்கெட்டிங், கார்ப்பரேட் ஆபீஸ், செர்வீஸ், பேக் ஆபீஸ் போன்றவையும் இனி ஒரு அலுவலக செட் அப்பில் இருந்து வேலை செய்ய அவசியம் இல்லை என்று உணர்ந்து உள்ளன

WFH எனதற்கு அடுத்த நிலையாக WFN (Work From Native) என்ற புது கான்செப்ட் நோக்கி பயணிக்கிறது கார்ப்பரேட் துறை

இது அவர்களுக்கு நல்லதோர் லாபத்தை தரும்..

எனது நண்பர் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். அப்பா அம்மா அங்கே ஊரில். இவரும் மனைவியும் குழந்தையும் சென்னையில். அலுவலகத்தில் மார்கெடிங் மேனேஜர். ₹60 ஆயிரம் சம்பளம். வீட்டு வாடகை, போக்குவரத்து, பெட்ரோல் என ₹20 ஆயிரம் போக அவருக்கு என்று ₹40 ஆயிரம் தான் நெட்டாக செலவுக்கு.

கொரோனா காரணமாக ஊருக்கு போய் அங்கிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார். சென்னையில் இருந்து என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ அத்தனையும் அங்கிருந்தே செய்கிறார். 

குடும்பத்துடன் சொந்த ஊரில் சொந்த வீட்டில் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார். ₹15 ஆயிரம் சம்பளம் குறைத்தால் கூட கவலை இல்லை எனும் அளவுக்கு இந்த WFN அவருக்கு ஒரு பக்குவத்தை கொடுத்து உள்ளது.

சென்னை வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, பரபரப்பு, தெரியாத நகரில் தனிமையில் பகலை நக்ர்த்தும் மனைவி எனும் மனச் சங்கடம் என எந்த டென்சனும் இல்லாமல், ரிலாக்ஸாக இருக்கிறார்.

BSNL மூலம் ஊரில் பிராட்பேண்ட் கனெக்‌ஷனுக்கு ₹600 செலவு. அவ்வளவு தான். Zoom, Microsoft Teams என தினசரி சந்திப்புக்கள், வேலை, ரிப்போர்டிங் என எல்லாமும் நடந்து வருகிறது

கம்பெனியை பொறுத்தவரை, சென்னை நகரில் அதிக வாடகையில் ஒரு பெரிய அலுவலகம் இனி தேவை இல்லை. எல்லோரையும் அவரவர் ஊரில் இருந்தே வேலை செய்ய சொல்லலாம். பயணங்கள் கூட அங்கிருந்தே சென்று வரட்டும். ஆன்லைனில் ரீ இம்பர்ஸ் ஆகிடும். சந்திக்க வேண்டும் எனில் இரு மாதத்துக்கு ஒரு முறை ஒரு ஓட்டல் ஹால் எடுத்து மீட்டிங் போட்டால் போதும். Overhead Expenses மொத்தமாக குறையும்.

இதை எல்லா நிறுவனங்களும் யோசிக்க தொடங்கி இருக்கின்றன. அவை நடைமுறைக்கு வந்தால் சென்னை போன்ற பெரு நகரின் ரியல் எஸ்டேட் வீழும், வாடகைக் கட்டிடங்கள் குறையும், நகர நெரிசல் குறையும்

இன்னொரு புறம் கிராம பொருளாதாரம் உயரும். உயர் வருவாய் மக்கள் கிராமங்களில் வாழ்கையில் அவர்களுக்கான பெரு வசதிகள் அங்கே ஏற்படும். நகர கிராம சம நிலை தொடங்கும்.


உற்பத்தி துறை

தமிழகத்தில் உற்பத்தி தொழிற்சாலை அதிகம். இதில் பிற மாநிலத்தில் இருந்து பல தொழிலாளர்கள் வந்து தங்கி பணி செய்து வருகின்றனர். அவற்றில் பலர் இப்போது அவர்களது சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டார்கள். 

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து எப்போது தொடங்கும் என தெரியல. அப்படியே வந்தாலும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டி இருக்கும். 

இச்சூழலில், உற்பத்தி துறை எதிர்பார்த்த அளவுக்கு எட்ட செப்டம்பர் மாதம் கூட ஆகலாம்

ஆனால் உற்பத்தி துறைக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வந்து தான் ஆக வேண்டும். அதே நேரம் சப்போர்ட் சர்வீஸ் எனப்படும் துணை நிர்வாக அமைப்பில் உள்ளவர்கள் தொழிற்சாலைக்கு வராமலேயே வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய முடியும். 

ஏற்கனவே சொன்னது போல அலுவலகம் எனும் அமைப்பு இல்லாது Virtual Office முறை வழக்கத்துக்கு வரும் போது, உற்பத்தி துறையிலும் இந்த முறை சாத்தியமாகும்.

நேரடி பணியாளர்கள் தவிர பிறர் வீடுகளிலேயே இருக்கையில் தொழில்துறை தனது Over Head Expenses குறைத்து லாபத்தை அதிகரிக்கும்

வியாபாரம்

இப்போது கொரொனா காரணமாக குறைந்த நேரம் மட்டுமே கடைகள் திறக்கப்படுகிறது. 

ஆரம்பத்தில் இது கவலையாக தெரிந்தாலும், மக்கள் சட்டென அதற்கு தங்களை ஆற்றுப்படுத்தி கொண்டு விட்டார்கள்

மதியம் 1 மணி வரை தான் கடைகள் இருக்கும் எனில் அந்த சமயத்துக்கு சென்று வாங்க பிளான் செய்து பழகி கொண்டார்கள்

காலை 5 மணிக்கு கடை தொடங்கி இரவு 11 மணி வரை கடையிலேயே இருந்து குடும்பத்தினருடனான பொழுதுகளை இழந்த வியாபாரிகள் இப்போது 1 மணி வரை வியாபாரமும் அதன் பின் குடும்பத்தினருடனான பொழுதுகளும் என வாழ பழகி கொண்டார்கள்.

இவை இப்படியே தொடர்ந்தாலும் நல்லதே எனும் அளவுக்கு சிக்கல் இன்றி போகிறது வாழ்க்கை. வியாபாரம் குறையாது. காரணம் தேவை உள்ளவர்கள் வாங்கி கொண்டே தான் இருக்க போகிறார்கள். நேர கட்டுப்பாடு எல்லோருக்கும் ஒரே மாதிரி இருந்தால் போதும். 

சரக்கு போக்குவரத்து

இது தான் சிக்கலான துறை. நோயின் தாக்கம் முற்றிலும் நீங்கும் வரையில் சரக்கு போக்குவரத்து மூலம் வரும் பொருட்கள், ஆட்கள், டிரைவர், லோடுமேன் போன்றவர்கள் சந்தேகத்துக்கு உரியவர்கள் ஆகிவிடுவார்கள். அவர்களை செக் செய்து Screening செய்து சரக்குகளை disinfection செய்வது என எல்லாமும் சந்தேகம் கொண்டவையே
ஏதேனும் ஒரு ஊரில் யாரோ ஒருவருக்கு infection இருந்தாலும் அவர் மூலமாக மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கும் நோய் தொற்று ஆகையால், சரக்கு வாகனம் வரும் ஊர்கள், டிரைவர்கள் வழியில் நிறுத்தும் இடங்கள், உணவகங்கள் என எல்லாவற்றையும் எப்படி கண்காணிப்பது என்பது ஒரு பெரிய சவால் தான்.

மேலும் நோய் தொற்று அறிகுறி தெரியவே ஒரு வாரம் ஆகும் எனும் நிலையில் ஒவ்வொரு நாளும் எத்தனை வண்டி வந்தது அதில் எந்த வண்டியில் யார் மூலமாக தொற்று வந்தது என்பதை கண்டு பிடிப்பதும் கஷ்டம்.

சரக்கு போக்குவரத்தை நிறுத்தினால் மொத்த பொருளாதாரமும் வீழ்ந்து விடும். தொழிற்சாலை இயக்கமும் நடக்காது.

மிக மிக delicate position என்பது இந்த ஒரு துறை தான்

பார்ப்போம்.. அரசு என்னென்ன நடவடிக்கைகள் அறிவிக்கிறது என.. அதை வைத்து அடுத்து என்ன ஆகும் என விவாதிப்போம்

No comments:

Post a Comment

Printfriendly