ஒரு வழியா நீதிபதி குமாரசாமி தன் கடமையை
முடிச்சிட்டாரேன்னு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா தீர்ப்பு வந்தப்பறம் தான்
ரொம்ப பிசியா இருக்க வேண்டியதாச்சு. அந்த அளவுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க
தீர்ப்பை கொடுத்திருக்காரு.
தீர்ப்பை பத்தி நிறைய அரசியல் நோக்கர்கள், சட்ட வல்லுனர்கள் எல்லாம் விரிவா அக்கு வேறு ஆணிவேறுனு அலசி ஆராய்ஞ்சு எழுதிட்டதால் நான் எழுத அவசியம் இல்லைன்னு நினைச்சிட்டிருக்கும்போது என் நண்பர் ஒருவர், நிறைய தகவல்கள் படிச்சேன்.. ரொம்ப கொழப்பமா இருக்கு. எல்லாத்தையும் தொகுத்து சிம்பிளா ரெண்டே பாராவில் சொல்லுங்கஜின்னு கோரிக்கை மனு கொடுத்தாரு. ரெண்டு பாராவிலா? பார்ப்போம்
ஒட்டுமொத்தமாக எல்லா குற்றச்சாட்டிலிருந்தும் விடுதலை – இதை நோக்கி தான் இந்த தீர்ப்பு (download here) கட்டமைக்கப்பட்டு இருக்கு. அதை நியாயப்படுத்த நிறைய சிக்கல்களை நீதிபதி குமாரசாமி அவர்கள் கடக்க வேண்டி இருக்கு. அது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல.
நீதிபதி குன்ஹா தன்னுடைய தீர்ப்பை விரிவா 1136 பக்கத்துல சொல்லிட்டாதால அதை வரிக்கு வரி உடைச்சிட்டிருக்கிறது வீண் வேலைன்னு குமாரசாமி அவர்களுக்கு தெரியாதா என்ன? அதனால் சுருக்கமா ஒரு வழி செஞ்சாரு. அதாவது மறு மதிப்பீடு.
மறு மதிப்பீட்டுக்காக 4 ஆடிட்டர்களை வெச்சுக்கிட்டாரு. (அந்த ஆடிட்டர்களை யாரு ஏற்பாடு செஞ்சு கொடுத்தாங்க? யார் அந்த ஆடிட்டர்கள்? சட்டப்படி அரசின் கம்ட்றோளர் & ஆடிட்டர் ஜெனரல் ஆபீஸ்லருந்து தான ஆடிட்டர்களை ஏற்பாடு செய்யணும்? மறு மதிப்பீட்டுக்கு எஞ்சினியர்கள் தேவையில்லையா?னுல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணாம மேல படிங்க!)
அந்த ஆடிட்டர்களின் மறு மதிப்பீட்டில் ஆச்சரியமான ரிசல்ட் வந்துச்சு. அதாவது எல்லா சொத்து மதிப்பும் குறைஞ்சுது. எல்லா வருமானமும் அதிகரிச்சுது. அப்படியாக சொத்துக்கும் வருமானத்துக்கும் இடையிலான வித்தியாசம் 8.12% ஆச்சு. அதனால் ஒட்டுமொத்த விடுதலை. குன்ஹா சொன்ன மத்த எல்லா விஷயங்களையும் தூக்கி அக்கடான்னு எறிஞ்சிட்டு இந்த ஒரே பாயிண்டில் விடுதலை செஞ்சுட்டாரேன்னு எனக்கு கூட சந்தோஷமா இருந்துச்சு.
மறுநாளே மொத்த மீடியாவும் தீர்ப்பை கிழி கிழின்னு கிழிக்குது. கூட்டுனது தப்புன்னு.
முதலில் எப்படி இந்த வித்தியாசம் குறைஞ்சுது?
சொத்துக்களின் மதிப்பை குறைச்சதுக்கு
அவர் சொன்ன காரணம், பொதுப்பணி துறை மதிப்பீடு தவறு. எஞ்சினியர்களின் வேலுவேஷனை எடுத்துக்க
முடியாது. முறைகேடு பணத்திலிருந்து தான் ரினோவேஷன் பண்ணினாங்கன்னு சொன்னாலும் எந்த
முறைகேட்டில் எவ்வளவு பணத்தை எடுத்து எந்த கட்டிடத்தில் எந்த போர்ஷனை ரினாவேட்
பண்ணினாங்கன்னு தெளிவா நிரூபிக்கலை அது இதுன்னு பட்டாசு கிளப்பிருக்காரு. எப்படியோ
சொத்து மதிப்பை ஒரு வழியா 37 கோடிக்கு கொண்டு வந்துட்டாரு. இப்ப பிரச்சனை வருமானத்தை
அந்த அளவுக்கு ஏத்தணும். அட்லீஸ்ட் 37 கோடியில் 10% போனா 33.30 கோடியாவது வருமானம்
காட்டினா தான் விடுவிக்க முடியும். இருப்பதோ 9 கோடி வருமானம். நான் என்ன
செய்வேன்னெல்லாம் மலைச்சு நிக்காம விறுவிறுன்னு கணக்கு போட்டிருக்காரு.
ஜெ. வாங்கிய கடனை எல்லாம் வருமானமா காட்டி இருக்கார். கடன் எந்த அக்கவுண்டிங் ஸ்டாண்டார்டு படியும் வருமானமா வராது. ஏன்னா அது திருப்பி தரவேண்டிய ஒன்று. ஜெ. வாங்கிய கடன்கள் பல வகை. வங்கிகள், தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து கடன்கள் வாங்கி இருக்கார். அவற்றை எல்லாம் பக்கம் 851 இல் பட்டியலிட்டுட்டு அதிலிருந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை மட்டும் வருமானமாக கணக்கில் எடுத்திருக்கார். அதன் படி அந்த கடன்களை எல்லாம் பக்கம் 852 இல் பட்டியலிட்டு அதன் கூட்டுத்தொகை என 24,17,31,274 ரூபாய்னு சொல்லிருக்கார். அதில் செலுத்திய கடன் போக நிலுவை தொகையான 18,17,46,000 வருமான கணக்கில் எடுத்துக்கிட்டார். இதனுடன் திராட்சை தோட்டம் ரூ.46,71,600, அன்பளிப்பு (!) ரூ. 1.5 கோடி, சசி எண்டர்பிரைசஸ் வருமானம் 25 லட்சம், நமது எம்ஜிஆர் வருமானம் 4 கோடி, சூப்பர் டூப்பர் டிவி வருமானம் 1 கோடி, வாடகை வருமானம் 3,22,000, இதர வருமானங்கள் 9,34,26,054 எல்லாம் சேர்த்து மொத்த வருமானம் 34,76,65,654 ன்னு ஒரு வழியா கொண்டு வந்து சேர்த்துட்டாரு.
ஆக சொத்துக்கும் வருமானத்துக்கும் இடையிலான வித்தியாசம் (37,59,02,466 – 34,76,65,654) ரூ 2,82,36,812 ன்னு சொல்லி இது ரொம்ப கம்மிதானேன்னு நியாயஞ்சொல்லி விடுதலை செஞ்சிட்டாரு.
அதுவும் எப்படி?
இப்ப அதில் தான் சிக்கலே. அவர் கொடுத்திருக்கும் வங்கி கணக்கு பட்டியலை கூட்டினால் மொத்தம் 10,67,31,274 தான் வருது. அதாவது குமாரசாமி சொல்லி இருக்கும் 24,17,31,274 க்கு பதிலா 10,67,31,274 தான் சரியான கடன் தொகை. கரெக்டா மிச்ச சொச்சம் இல்லாம சுகுர்ரா 13.50 கோடி வித்தியாசம். அதாவது இந்தியன் வங்கியிலிருந்து ஜெயா பப்ளிகேஷனுக்கு வாங்கின 1.5 கோ ியை 15 கோடின்னு கணக்கு செஞ்சிருக்கணும். அதான் சிக்கல்.
இப்ப திருத்திய மதிப்பீடு படி மொத்த வருமானம் 21,26,65,654 தான். இதன் படி சொத்து மதிப்புக்கும் வருமானத்துக்குமிடையிலான வித்தியாசம் (37,59,02,466 – 21,26,65,654) ரூ 16,32,36,812. இது வருமானத்தில் 76.76%. ஆக விடுதலை தவறு.
இதை திருத்தனும்னா, கடன் 1.5 கோடி தான்னு சொன்னா விடுதலை தீர்ப்பு தவறாகிடும். மாறா 15 கோடி கடன்னு காட்டினா அதுக்கான வங்கி ஆவணங்களை கொடுக்கணும். ரெண்டுமே நடக்காத காரியம். இப்போதைக்கு தீர்ப்பை திருத்தறது தான் ஒரே வழி.
இதான் எல்லோரும் சொல்லுவது.
ஆனா சில நண்பர்கள் பக்கம் 851 இல் சொல்லி இருக்கும் கடன்களையும் சேர்த்தினால் 26 கோடி வருது. அதில் நீதிபதி 24 கோடி தான் கணக்கில் எடுத்திருக்காருன்னு வாதாடுறாங்க. ஆனா நீதிபதி தெளிவாவே 851 ஆம் பக்கத்தில் உள்ள கடன்களை நான் கணக்கில் எடுக்கலைன்னு சொல்லிருக்காரு. மேலும் அந்த கடன்கள் பற்றி சொல்லும்போது “The following are loans availed from Accused and firms and companies” னு தான் சொல்லிருக்காரு. அதாவது குற்றவாளிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்கள். குற்றவாளிகள் வாங்கிய கடன் அல்ல. “loans availed by Accused” அல்ல. அதனால் அதை எல்லாம் அவர் கணக்கில் எடுத்துக்கலை.
திராட்சை தோட்ட வருமானம், நமது எம்ஜிஆர் வருமானம் எல்லாத்தையும் கணக்கிலெடுத்த நீதிபதி, அன்பளிப்பையும் வருமானம்னு கணக்கிலெடுத்திருக்கார். அரசு உயர் பதவியில் இருக்கும்போது ரூ. 5000 க்கு அதிகமா வரும் அன்பளிப்புக்களை சட்டப்படி அரசு கருவூலத்தில் கொடுத்திருக்கணும். ஆனா அதை செய்யாத குற்றத்தையும் மன்னிச்சு, அதை வருமானமாகவும் கணக்கில் எடுத்து அமவுண்டை டேலி செஞ்சிருக்காரு. விடுங்க, கடனையே வருமானம்னு சொல்லிட்டாராமா.. இது என்ன பிரமாதம்?
நமது எம்ஜிஆர் சந்தா வருமானமான 14 கோடி 1995-2000 கால கட்டத்தில் வசூலானதுன்னு நீதிபதியே தீர்ப்பில் சொல்லி இருக்காரு. ஆனா அதை 1991-1996 கால செலவுக்கு / சொத்து வாங்கலுக்கு அட்ஜஸ்ட் செய்திருக்காரு. இது எப்படி இருக்குன்னா, 14 வயசுல எனக்கு படிக்க முடியலை. குடும்ப கஷ்டம். வறுமை. ஸ்கூல் போக வழி இல்லை. அதனால் 21 வயசில் நான் வேலைக்கு போயி சம்பாதிச்சு அந்த பணத்தை வெச்சு தான் 14 வயசுல படிச்சேன்னு சொல்ற மாதிரி இருக்கு. அதாவது 1995-2000 கால கட்டத்தில் சந்தா தொகை வசூலிச்சு அதில் கிடைச்ச 4 கோடி லாபத்தை வெச்சு 1991-1996 ளில் சொத்து வாங்கிருக்காங்க. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமாப்பா.. இப்ப நீதித்துறையிலும்.
கூட்டு சதி எதுவும் இல்லைன்னு சொல்ற நீதிபதி அவருடைய தீர்ப்பில் பல இடங்களில் கூட்டு சதி நடந்ததை பத்தி மறைமுகமா சொல்றாரு. உதாரணத்துக்கு ஒண்ணே ஒண்ணு, சிம்பிளா.
பரணி பீச் ரிசார்ட்டுக்கு A1 (ஜெ) ரூ. 41,35,000 கடன் கொடுக்கிறாங்க. பரணி பீச் ரிசார்ட்டில் A2 (சசிகலா) ஒரு பங்கு தாரர். பரணி பீச் ரிசார்ட் பின்னர் A3 (இளவரசி) & A4 (சுதாகரன்) ஆகியோருக்கு தலா 22 லட்சம் கடன் தர்றாங்க. அந்த 44 லட்சத்தை வெச்சு ஊட்டியில் கொடநாடு எஸ்டேட்டை இளவரசியும் சுதாகரனும் வாங்குறாங்க. கொடநாடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கொடநாடு எஸ்டேட் ஜெ.வுக்கு சொந்தமானதுன்னு ஏற்கனவே சொல்லிருக்காங்க. அதாவது, இந்த காட்சியை சுருக்கமா இப்படி ஜெ பணத்தை சசிகலாவிடம் கொடுத்து அதை இளவரசி & சுதாகரன் ஆகியோரிடம் கொடுத்து ஜெ பெயரில் சொத்து வாங்கி இருக்காங்க. ஆனா இவர்களுக்குள் கூட்டு சதி இல்லைன்னும், இண்டர் கம்பெனி பண பரிமாற்றங்கள் நிரூபிக்கப்படலைன்னும் நீதிபதி சொல்லி இருக்காரு.
அல்லறை சில்லறை ஓட்டைகளை எல்லாம் டிஸ்கவுண்டில் விட்டாலும், வங்கி கடன் தொகை அடிப்படையில் தான் விடுதலையே செஞ்சிருக்கார் என்பதால் அந்த தொகையே தவறுன்னு ஆயிட்டதால் விடுதலையே செல்லாது.
சரி, இப்ப என்ன ஆகும்?
குமாரசாமி நேர்மையானவர்னு பெயர் எடுத்தவர். வரும் ஆகஸ்டில் ரிடயார்டு
ஆகப்போறவர். தன்னுடைய பெயரை கெடுத்துக்காம அவரே ‘தானா முன்வந்து’ தீர்ப்பை திருத்தலாம்
கர்நாடக உயர்நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ, நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கையை நிலை நிறுத்த தன்னிச்சையா இந்த வழக்கை எடுத்து விடுதலையை ரத்து செய்யலாம்
இது எதுவும் நடக்கலைன்னா கர்நாடக அரசு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 362 படி மறு சீராய்வு மனு தாக்கல் செய்து தீர்ப்பை திருத்தலாம். அல்லது உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம்
கர்நாடக அரசு எந்த முயற்சியும் எடுக்காத பட்சத்தில் புகார் தாரரான சுப்பிரமணியம் சுவாமியோ அவரும் முயற்சி எடுக்காத நிலையில் திமுக / தேமுதிக அப்பீல் செய்ய முடியும். எதுவானாலும் ஜூலை 15 க்குள் செய்யணும். அவ்வளவு தான்.
ஆனால் இது ஒரு கிளியர் வின்னிங் கேஸ். அதனால் கர்நாடக அரசு அப்பீல் செய்யணும்னு ஆச்சார்யா சொல்லிருக்கார்.
ஆனா காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி ஐடியால இருக்கோ அல்லது அதிமுக இந்த அப்பீலை முடக்க காங்கிரசுடன் கூட்டணி வைக்க போகுதோ எதுவும் தெரியாது. பாஜக அதிமுக கூட்டணி ஜஸ்ட் யூகம் தான். பாஜகவை நம்பி அதிமுக இல்லை. ஆனா அதிமுகவை நம்பி பாஜக இருக்கு. அதனால் பாஜகவை புறக்கணிச்சிட்டு காங்கிரசுடன் கூட்டணி வைக்க அதிமுகவுக்கு எந்த சங்கடமும் இருக்காது. அதனால் அப்பீல் முடிவு இந்த கூட்டணி முடிவை அடிப்படையா வெச்சு தான் இருக்கும். ஆனா EVKS இளங்கோவன் கூட்டணி கிடையாதுன்றதுலயும் அப்பீல் செய்து தண்டனை கொடுத்தே ஆகணும்னு சொல்வதிலும் உறுதியா இருக்காரு. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.
நாடு முழுக்க பரபரப்பா பேசப்படும் ஒரு தீர்ப்பா ஆயிருச்சு இது. அடிப்படையிலேயே தவறான விவரங்களை வெச்சு விடுதலைன்றது பட்டவர்த்தனமா வெளிச்சத்துக்கு வந்திருக்கு. எல்லா மீடியாவிலயும் நீதித்துறையை கிழிச்சு எடுக்கிறாங்க. நீதித்துறை மீதான மரியாதையையும் மாண்பையும் காக்கும் கடமை உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கு. அதனால் அவர்களே முன்வந்து உரிய நடவடிக்கை எடுத்தால் ஒழிய நீதித்துறை மீதான நம்பிக்கையை நிலை நிறுத்த முடியாது.
இனி என்ன தான் அதிமுக தெம்பா இருந்தாலும், மக்களுக்கு அவர் எப்படி வெளியே வந்தார் எனும் முழு விவரமும் தெரிஞ்சுட்டதால் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றி வரும் தேர்தலில் இருக்காதுனு நம்பலாம்.
******
தொடர்புடைய பதிவுகள்:
தீர்ப்பை பத்தி நிறைய அரசியல் நோக்கர்கள், சட்ட வல்லுனர்கள் எல்லாம் விரிவா அக்கு வேறு ஆணிவேறுனு அலசி ஆராய்ஞ்சு எழுதிட்டதால் நான் எழுத அவசியம் இல்லைன்னு நினைச்சிட்டிருக்கும்போது என் நண்பர் ஒருவர், நிறைய தகவல்கள் படிச்சேன்.. ரொம்ப கொழப்பமா இருக்கு. எல்லாத்தையும் தொகுத்து சிம்பிளா ரெண்டே பாராவில் சொல்லுங்கஜின்னு கோரிக்கை மனு கொடுத்தாரு. ரெண்டு பாராவிலா? பார்ப்போம்
ஒட்டுமொத்தமாக எல்லா குற்றச்சாட்டிலிருந்தும் விடுதலை – இதை நோக்கி தான் இந்த தீர்ப்பு (download here) கட்டமைக்கப்பட்டு இருக்கு. அதை நியாயப்படுத்த நிறைய சிக்கல்களை நீதிபதி குமாரசாமி அவர்கள் கடக்க வேண்டி இருக்கு. அது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல.
நீதிபதி குன்ஹா தன்னுடைய தீர்ப்பை விரிவா 1136 பக்கத்துல சொல்லிட்டாதால அதை வரிக்கு வரி உடைச்சிட்டிருக்கிறது வீண் வேலைன்னு குமாரசாமி அவர்களுக்கு தெரியாதா என்ன? அதனால் சுருக்கமா ஒரு வழி செஞ்சாரு. அதாவது மறு மதிப்பீடு.
மறு மதிப்பீட்டுக்காக 4 ஆடிட்டர்களை வெச்சுக்கிட்டாரு. (அந்த ஆடிட்டர்களை யாரு ஏற்பாடு செஞ்சு கொடுத்தாங்க? யார் அந்த ஆடிட்டர்கள்? சட்டப்படி அரசின் கம்ட்றோளர் & ஆடிட்டர் ஜெனரல் ஆபீஸ்லருந்து தான ஆடிட்டர்களை ஏற்பாடு செய்யணும்? மறு மதிப்பீட்டுக்கு எஞ்சினியர்கள் தேவையில்லையா?னுல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணாம மேல படிங்க!)
அந்த ஆடிட்டர்களின் மறு மதிப்பீட்டில் ஆச்சரியமான ரிசல்ட் வந்துச்சு. அதாவது எல்லா சொத்து மதிப்பும் குறைஞ்சுது. எல்லா வருமானமும் அதிகரிச்சுது. அப்படியாக சொத்துக்கும் வருமானத்துக்கும் இடையிலான வித்தியாசம் 8.12% ஆச்சு. அதனால் ஒட்டுமொத்த விடுதலை. குன்ஹா சொன்ன மத்த எல்லா விஷயங்களையும் தூக்கி அக்கடான்னு எறிஞ்சிட்டு இந்த ஒரே பாயிண்டில் விடுதலை செஞ்சுட்டாரேன்னு எனக்கு கூட சந்தோஷமா இருந்துச்சு.
மறுநாளே மொத்த மீடியாவும் தீர்ப்பை கிழி கிழின்னு கிழிக்குது. கூட்டுனது தப்புன்னு.
முதலில் எப்படி இந்த வித்தியாசம் குறைஞ்சுது?
ஜெ. வாங்கிய கடனை எல்லாம் வருமானமா காட்டி இருக்கார். கடன் எந்த அக்கவுண்டிங் ஸ்டாண்டார்டு படியும் வருமானமா வராது. ஏன்னா அது திருப்பி தரவேண்டிய ஒன்று. ஜெ. வாங்கிய கடன்கள் பல வகை. வங்கிகள், தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து கடன்கள் வாங்கி இருக்கார். அவற்றை எல்லாம் பக்கம் 851 இல் பட்டியலிட்டுட்டு அதிலிருந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை மட்டும் வருமானமாக கணக்கில் எடுத்திருக்கார். அதன் படி அந்த கடன்களை எல்லாம் பக்கம் 852 இல் பட்டியலிட்டு அதன் கூட்டுத்தொகை என 24,17,31,274 ரூபாய்னு சொல்லிருக்கார். அதில் செலுத்திய கடன் போக நிலுவை தொகையான 18,17,46,000 வருமான கணக்கில் எடுத்துக்கிட்டார். இதனுடன் திராட்சை தோட்டம் ரூ.46,71,600, அன்பளிப்பு (!) ரூ. 1.5 கோடி, சசி எண்டர்பிரைசஸ் வருமானம் 25 லட்சம், நமது எம்ஜிஆர் வருமானம் 4 கோடி, சூப்பர் டூப்பர் டிவி வருமானம் 1 கோடி, வாடகை வருமானம் 3,22,000, இதர வருமானங்கள் 9,34,26,054 எல்லாம் சேர்த்து மொத்த வருமானம் 34,76,65,654 ன்னு ஒரு வழியா கொண்டு வந்து சேர்த்துட்டாரு.
ஆக சொத்துக்கும் வருமானத்துக்கும் இடையிலான வித்தியாசம் (37,59,02,466 – 34,76,65,654) ரூ 2,82,36,812 ன்னு சொல்லி இது ரொம்ப கம்மிதானேன்னு நியாயஞ்சொல்லி விடுதலை செஞ்சிட்டாரு.
அதுவும் எப்படி?
1977 ஆம் வருஷம் கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி
& மத்திய பிரதேச அரசு
இடையிலான வழக்கில் ஒரு தீர்ப்பு. அதன்படி, வருமானத்துக்கு அதிகமான சொத்து என்பது மொத்த வருமானத்தில் 10%
க்குள் இருந்தால் அது குற்றமில்லை. அதாவது எனக்கு வருசத்துக்கு 5 லட்சம் சம்பளம்னா, நான் 50 ஆயிரம் வரை முறைகேடா
சொத்து சேர்த்துக்கலாம்!
ஆனா 1988 ஆம் வருஷம் மத்திய அரசு பினாமி
பரிவரத்தனைகள் தடை சட்டம் 1988, ஊழல் எதிர்ப்பு & தடை சட்டம் 1988 னு ரெண்டு சட்டங்களை போட்டு ஊழல் வழக்குகளை
மிக கடுமை ஆக்கிட்டாங்க. அந்த சட்டங்கள் அடிப்படையில் 1990-2014 வரை நிறைய தீர்ப்புகளை
நீதிமன்றங்கள் தந்திருக்கு. அதன்படி, அரசு ஊழியர் ஒருவர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினா கூட கைது
தான். நீங்க கூட நிறைய செய்திகள் பார்த்திருப்பீங்க. லஞ்சம் வாங்கிய மின் வாரிய என்ஜீனியர்
கைதுன்னு நேத்து கூட செய்தி இருந்துது.
ஆனா இந்த லேட்டஸ்ட் உத்தரவுகள் எதையும்
கண்டுக்காம, 1977 ஆம் வருஷ தீர்ப்பை அடிப்படையா வெச்சு 10% க்குள் தான் முறைகேடு இருக்குனு
விடுதலை செஞ்சிருக்காரு.
இப்ப அதில் தான் சிக்கலே. அவர் கொடுத்திருக்கும் வங்கி கணக்கு பட்டியலை கூட்டினால் மொத்தம் 10,67,31,274 தான் வருது. அதாவது குமாரசாமி சொல்லி இருக்கும் 24,17,31,274 க்கு பதிலா 10,67,31,274 தான் சரியான கடன் தொகை. கரெக்டா மிச்ச சொச்சம் இல்லாம சுகுர்ரா 13.50 கோடி வித்தியாசம். அதாவது இந்தியன் வங்கியிலிருந்து ஜெயா பப்ளிகேஷனுக்கு வாங்கின 1.5 கோ ியை 15 கோடின்னு கணக்கு செஞ்சிருக்கணும். அதான் சிக்கல்.
இப்ப திருத்திய மதிப்பீடு படி மொத்த வருமானம் 21,26,65,654 தான். இதன் படி சொத்து மதிப்புக்கும் வருமானத்துக்குமிடையிலான வித்தியாசம் (37,59,02,466 – 21,26,65,654) ரூ 16,32,36,812. இது வருமானத்தில் 76.76%. ஆக விடுதலை தவறு.
இதான் எல்லோரும் சொல்லுவது.
ஆனா சில நண்பர்கள் பக்கம் 851 இல் சொல்லி இருக்கும் கடன்களையும் சேர்த்தினால் 26 கோடி வருது. அதில் நீதிபதி 24 கோடி தான் கணக்கில் எடுத்திருக்காருன்னு வாதாடுறாங்க. ஆனா நீதிபதி தெளிவாவே 851 ஆம் பக்கத்தில் உள்ள கடன்களை நான் கணக்கில் எடுக்கலைன்னு சொல்லிருக்காரு. மேலும் அந்த கடன்கள் பற்றி சொல்லும்போது “The following are loans availed from Accused and firms and companies” னு தான் சொல்லிருக்காரு. அதாவது குற்றவாளிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்கள். குற்றவாளிகள் வாங்கிய கடன் அல்ல. “loans availed by Accused” அல்ல. அதனால் அதை எல்லாம் அவர் கணக்கில் எடுத்துக்கலை.
திராட்சை தோட்ட வருமானம், நமது எம்ஜிஆர் வருமானம் எல்லாத்தையும் கணக்கிலெடுத்த நீதிபதி, அன்பளிப்பையும் வருமானம்னு கணக்கிலெடுத்திருக்கார். அரசு உயர் பதவியில் இருக்கும்போது ரூ. 5000 க்கு அதிகமா வரும் அன்பளிப்புக்களை சட்டப்படி அரசு கருவூலத்தில் கொடுத்திருக்கணும். ஆனா அதை செய்யாத குற்றத்தையும் மன்னிச்சு, அதை வருமானமாகவும் கணக்கில் எடுத்து அமவுண்டை டேலி செஞ்சிருக்காரு. விடுங்க, கடனையே வருமானம்னு சொல்லிட்டாராமா.. இது என்ன பிரமாதம்?
நமது எம்ஜிஆர் சந்தா வருமானமான 14 கோடி 1995-2000 கால கட்டத்தில் வசூலானதுன்னு நீதிபதியே தீர்ப்பில் சொல்லி இருக்காரு. ஆனா அதை 1991-1996 கால செலவுக்கு / சொத்து வாங்கலுக்கு அட்ஜஸ்ட் செய்திருக்காரு. இது எப்படி இருக்குன்னா, 14 வயசுல எனக்கு படிக்க முடியலை. குடும்ப கஷ்டம். வறுமை. ஸ்கூல் போக வழி இல்லை. அதனால் 21 வயசில் நான் வேலைக்கு போயி சம்பாதிச்சு அந்த பணத்தை வெச்சு தான் 14 வயசுல படிச்சேன்னு சொல்ற மாதிரி இருக்கு. அதாவது 1995-2000 கால கட்டத்தில் சந்தா தொகை வசூலிச்சு அதில் கிடைச்ச 4 கோடி லாபத்தை வெச்சு 1991-1996 ளில் சொத்து வாங்கிருக்காங்க. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமாப்பா.. இப்ப நீதித்துறையிலும்.
கூட்டு சதி எதுவும் இல்லைன்னு சொல்ற நீதிபதி அவருடைய தீர்ப்பில் பல இடங்களில் கூட்டு சதி நடந்ததை பத்தி மறைமுகமா சொல்றாரு. உதாரணத்துக்கு ஒண்ணே ஒண்ணு, சிம்பிளா.
பரணி பீச் ரிசார்ட்டுக்கு A1 (ஜெ) ரூ. 41,35,000 கடன் கொடுக்கிறாங்க. பரணி பீச் ரிசார்ட்டில் A2 (சசிகலா) ஒரு பங்கு தாரர். பரணி பீச் ரிசார்ட் பின்னர் A3 (இளவரசி) & A4 (சுதாகரன்) ஆகியோருக்கு தலா 22 லட்சம் கடன் தர்றாங்க. அந்த 44 லட்சத்தை வெச்சு ஊட்டியில் கொடநாடு எஸ்டேட்டை இளவரசியும் சுதாகரனும் வாங்குறாங்க. கொடநாடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கொடநாடு எஸ்டேட் ஜெ.வுக்கு சொந்தமானதுன்னு ஏற்கனவே சொல்லிருக்காங்க. அதாவது, இந்த காட்சியை சுருக்கமா இப்படி ஜெ பணத்தை சசிகலாவிடம் கொடுத்து அதை இளவரசி & சுதாகரன் ஆகியோரிடம் கொடுத்து ஜெ பெயரில் சொத்து வாங்கி இருக்காங்க. ஆனா இவர்களுக்குள் கூட்டு சதி இல்லைன்னும், இண்டர் கம்பெனி பண பரிமாற்றங்கள் நிரூபிக்கப்படலைன்னும் நீதிபதி சொல்லி இருக்காரு.
அல்லறை சில்லறை ஓட்டைகளை எல்லாம் டிஸ்கவுண்டில் விட்டாலும், வங்கி கடன் தொகை அடிப்படையில் தான் விடுதலையே செஞ்சிருக்கார் என்பதால் அந்த தொகையே தவறுன்னு ஆயிட்டதால் விடுதலையே செல்லாது.
சரி, இப்ப என்ன ஆகும்?
கர்நாடக உயர்நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ, நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கையை நிலை நிறுத்த தன்னிச்சையா இந்த வழக்கை எடுத்து விடுதலையை ரத்து செய்யலாம்
இது எதுவும் நடக்கலைன்னா கர்நாடக அரசு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 362 படி மறு சீராய்வு மனு தாக்கல் செய்து தீர்ப்பை திருத்தலாம். அல்லது உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம்
கர்நாடக அரசு எந்த முயற்சியும் எடுக்காத பட்சத்தில் புகார் தாரரான சுப்பிரமணியம் சுவாமியோ அவரும் முயற்சி எடுக்காத நிலையில் திமுக / தேமுதிக அப்பீல் செய்ய முடியும். எதுவானாலும் ஜூலை 15 க்குள் செய்யணும். அவ்வளவு தான்.
ஆனால் இது ஒரு கிளியர் வின்னிங் கேஸ். அதனால் கர்நாடக அரசு அப்பீல் செய்யணும்னு ஆச்சார்யா சொல்லிருக்கார்.
ஆனா காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி ஐடியால இருக்கோ அல்லது அதிமுக இந்த அப்பீலை முடக்க காங்கிரசுடன் கூட்டணி வைக்க போகுதோ எதுவும் தெரியாது. பாஜக அதிமுக கூட்டணி ஜஸ்ட் யூகம் தான். பாஜகவை நம்பி அதிமுக இல்லை. ஆனா அதிமுகவை நம்பி பாஜக இருக்கு. அதனால் பாஜகவை புறக்கணிச்சிட்டு காங்கிரசுடன் கூட்டணி வைக்க அதிமுகவுக்கு எந்த சங்கடமும் இருக்காது. அதனால் அப்பீல் முடிவு இந்த கூட்டணி முடிவை அடிப்படையா வெச்சு தான் இருக்கும். ஆனா EVKS இளங்கோவன் கூட்டணி கிடையாதுன்றதுலயும் அப்பீல் செய்து தண்டனை கொடுத்தே ஆகணும்னு சொல்வதிலும் உறுதியா இருக்காரு. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.
நாடு முழுக்க பரபரப்பா பேசப்படும் ஒரு தீர்ப்பா ஆயிருச்சு இது. அடிப்படையிலேயே தவறான விவரங்களை வெச்சு விடுதலைன்றது பட்டவர்த்தனமா வெளிச்சத்துக்கு வந்திருக்கு. எல்லா மீடியாவிலயும் நீதித்துறையை கிழிச்சு எடுக்கிறாங்க. நீதித்துறை மீதான மரியாதையையும் மாண்பையும் காக்கும் கடமை உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கு. அதனால் அவர்களே முன்வந்து உரிய நடவடிக்கை எடுத்தால் ஒழிய நீதித்துறை மீதான நம்பிக்கையை நிலை நிறுத்த முடியாது.
இனி என்ன தான் அதிமுக தெம்பா இருந்தாலும், மக்களுக்கு அவர் எப்படி வெளியே வந்தார் எனும் முழு விவரமும் தெரிஞ்சுட்டதால் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றி வரும் தேர்தலில் இருக்காதுனு நம்பலாம்.
******
தொடர்புடைய பதிவுகள்:




