Tuesday, September 29, 2020

TCS on Goods - புதிய வரி

TCS on Goods (பொருட்கள் விற்பனைக்கான தொகை வசூலுக்கு வருமான வரி) அக்டோபர் 1 முதல் இந்தியாவில  அமல் ஆகிறது.

இந்த புதிய சட்டம் சமீபத்தில் நிதி அமைச்சக அறிவிக்கை மூலம் புதிய சரத்தாக 206C (1H) எனும் பிரிவை கொண்டு வந்து அமல் செய்யப்படுகிறது


வரும் அக்டோபர் 1 முதல் நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கு வாங்கும் தொகையில் இருந்து TCS பிடிக்க வேண்டும்

அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்

உங்க கிட்ட பொருள் வாங்கும் கஸ்டமர்.. போன வருஷம் உங்க கிட்டே இருந்து ₹50 லட்சத்துக்கு அதிகமா பொருட்கள் வாங்கி இருந்தாலோ, இந்த வருஷம் எப்ரல் மாதத்தில் இருந்து உங்களிடம் வாங்கிய பொருட்களின் மதிப்பு ₹50 லட்சத்தை தாண்டினாலோ நீங்கள் அவரிடமிருந்து இந்த TCS பிடிச்சு அரசுக்கு கட்டணும்

எல்லா விதமான பொருட்களுக்கும் இது பொருந்தும்

பொருட்களின் விற்பனைக்கு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் தொகையில் 0.075% பிடிக்கணும். இது மார்ச் 2021 வரை தான். அதன் பின் 0.1% பிடிக்கணும். இது உங்களிடம் பொருள் வாங்குபவர் தனது PAN/Aadhaar எண்ணை உங்களிடம் கொடுத்தால் தான்.

உங்களிடம் பொருள் வாங்குபவர் தனது PAN / Aadhaar எண்ணை உங்களுக்கு தரலை என்றால் 1% TCS பிடிச்சு அரசுக்கு கட்ட வேண்டும்

நீங்கள் கொடுக்கும் பில்லிலேயே இந்த TCS 0.075% சேர்த்து அவரிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். விற்பனை செய்பவருக்கு எந்த நஷ்டமும் இல்லை.

பொருளை வாங்குபவரும் இந்த TCS ஐ தனது IT ரிட்டர்ன்ஸ் மூலம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். அவருக்கும் நஷ்டம் இல்லை.. (வருமான வரி தாக்கல் செய்தால்)

இதில் வழக்கம் போல சில குழப்பங்கள் இருக்கின்றன.

குழப்பம் 1: TCS மொத்த விற்பனை விலையில் கணக்கு செய்யணுமா? வரிக்கு முந்தய பொருளின் விலைக்கு மட்டும் கணக்கு செய்யணுமா? பொதுவாக வரிக்கு முந்தய விலைக்கு தான் வருமான வரி வசூலிப்பது வழக்கம். ஆனால் இந்த புதிய வரிக்கான notification இல் மொத்த வருவாய் என சொல்லி இருப்பதால் இந்த குழப்பம்.

குழப்பம் 2: விற்பனை செய்யும் போதே பிடிக்கணுமா? விற்பனை தொகை வசூல் ஆகும்போது பிடிக்கனுமா? TDS என்பது பணம் கொடுக்கும்போது பிடிக்கும் வரி. அதுபோல TCS என்பது பொருள் கொடுக்கும்போது கூடுதலாக எடுத்துக்கொள்ளும் வரி. ஆனால் இந்த புதிய வறிக்கான Notofication இல், பணம் பெறும்போது கூடுதலாக வசூல் செய்ய வேண்டிய வரி என சொல்லப்பட்டு உள்ளதால் ஒரு குழப்பம். பில்லில் சேர்க்காமல் எப்படி பணம் பெறும்போது வரி வசூல் செய்வது? 

இதை அரசு இன்று வரை தெளிவு படுத்தல. (நாளை மறுநாள் அமலாகுது)

பொதுவான கருத்தாக முழு பில் தொகைக்கும் பிடிக்கலாம்.. பில்லிலெயே சேர்த்து வசூலிக்கலாம் என்றும் பலரும் முடிவு செய்து இருக்காங்க

இதில் நமக்கு என்ன பாதிப்பு?

நாம் ₹50 லட்சத்துக்கு பொருள் வாங்குவதாக இருந்தால் PAN/Aadhaar கொடுத்தால் குறைந்த TCS பிடித்தம்.

இந்த ₹50 லட்சம் கணக்கும் ஒரே முறையில் செய்யணும் என்று இல்லை. ஒரு வருஷத்தில் பலமுறை கொஞ்சம் கொஞ்சமா பொருள் வாங்கினாலும் எப்போது அதன் மொத்த தொகை ₹50 லட்சத்தை தாண்டுதோ அப்போ முதல் TCS பிடிக்கணும்.

இதில் யாரெல்லாம் வருவார்கள் என யோசித்தால், மளிகை கடை, ஹார்டுவேர், மருந்து கடை, வியாபாரிகள், சிறு குறு தொழில் செய்வோர் என பலரும
 ஒரு மொத்த வியாபாரியிடம் இருந்து ஒரு வருஷத்தில் பல முறை கொள்முதல் செய்த பொருட்களின் மதிப்பு ₹50 லட்சத்தை தாண்டினால் இந்த வரி செலுத்த வேண்டி வரும். 

இப்போது பல மளிகை கடையினரும
 வருமான வரி செலுத்துவது இல்லை. இனி இந்த 0.075% தொகையை திரும்ப பெற வேண்டும் என்றால் அவர்களும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

இவை தவிர அனைத்து வகையான பொருட்களுக்கும் இது பொருந்தும் என்பதால் மின்னணு பொருட்கள், சூப்பர்மார்கெட், என எல்லோருக்கும் இந்த வரி அமலுக்கு வரும்.

விற்பனை செய்பவர் தனது எல்லா வாடிக்கையாளரின் விவரத்தையும் தொடர்ந்து கவனிச்சிட்டே வரணும்.

மொத்த விற்பனையாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர் போன்றோர் அவர்களிடம் பொருட்கள் வாங்கி போறவங்க கணக்கை தனியா கவனிச்சிட்டு வரணும். எப்போ ₹50 லட்சம் தான்டுதோ அப்போ TCS பிடிக்கணும்

அதே போல நமக்கு பல கடைகள் இருந்தால் (வசந்த் அண்ட் கோ மாதிரி) ஒரே வாடிக்கையாளர் வெவ்வேறு கடையில் வாங்கினாலும்..அதன் மொத்த விற்பனை தொகை ₹50 லட்சத்தை தாண்டினால் TCS பிடிக்கணும். இதை கண்காணிப்பத
 மிக கடினமான செயல்.

அதனால் வாடிக்கையாளர் database ரெடி செய்து எல்லா கடைகளின் விற்பனையை தொடர்ச்சியாக கவனிச்சு முடிவு எடுக்கணும்

இன்னும் 2 நாள் தான் இருக்கு என்பதால் நிறைய பேர் இன்னும் தங்கள் Accounting System ரெடி செய்திருக்க மாட்டார்கள். புதிய வரி வசூலிப்பதற்கான modifications செய்யாமல் பலரும் தவிக்கிறார்கள்.

இதனை செய்து தரவேண்டிய நிறுவனங்கள் லாக் டவுன் காரணமாக பயணிக்க முடியாமல் இந்த configuration செய்ய முடியாமல்.. என எல்லாம் அப்படி அப்படியே நின்று கொண்டு இருக்கு.

அரசு உரிய விளக்கங்கள
 கொடுக்குமா?

கால அவகாசத்தை நீட்டிக்குமா என எல்லோரும
 எதிர்பார்க்கிறார்கள்

கால அவகாசம் நீட்டிக்கப் பட்டால் நல்லது

1 comment:

Printfriendly