Wednesday, May 26, 2021

தமிழக அரசும் தடுப்பூசி முகாம்களும்

சத்தமே இல்லாம தமிழகத்தில் தடுப்பூசி போடும் முகாம்கள் தமிழக அரசின் சார்பில் பெரிய அளவில் நடந்துகொண்டு இருக்கிறது.

பெரிய நகரங்களில் நடமாடும் மினி கிளினிக் மூலமும், பிற மாவட்டங்களில் PHC மூலமும் பல்லாயிரக்கணக்கான ஊசிகள்  போடப்படுகிறது
தமிழக சுகாதாரத்துறை கட்டமைப்பு நம் எல்லோருக்கும் அறிந்த ஒன்றே. நகரங்கள் மட்டும் அல்லாமல் கிராமங்கள், மலை பகுதி மக்கள் வாழிடங்கள், தொலை தூர குடியிருப்புக்கள் என அனைத்து இடங்களிலும் கூடுமானவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப் பட்டு உள்ளன.

மத்திய அரசின் தடுப்பூசி தகவல்கள் பதிவேற்றப்படும் CoWin இணைய தளம் அல்லாமல் தமிழக அரசு தனக்கு என தனியான ஒரு தகவல் தளத்தை உருவாக்கி அதில் தடுப்பூசி குறித்த தகவலைக் குறித்து வருகிறது.

தமிழக அரசின் முகாம்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள CoWin தளத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் அட்டை எடுத்து சென்று நேரடியாக போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போட்டு கொண்டதற்கு சான்றாக தமிழக அரசு தற்காலிகமாக ஒரு அட்டை தருகிறார்கள். பின்னர் சான்றிதழ் வழங்கப்படும்.

CoWin தளத்தை மட்டுமே பார்த்து தமிழக அரசு மீது குறை சொல்வோர் விரைவில் ஒரு பெரும் சாதனை செய்தியைப் பற்றி அறிவார்கள் என நம்புகிறேன். எந்த வித விளம்பரங்களும் இல்லாமல் தமிழக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் ஒரு பெரிய இயக்கம் மாநிலம் முழுவதிலும் சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை கொண்ட பெரிய தொழிற்சாலைகளில் தனி தனியாக முகாம் போட்டு எல்லா தொழிலாளர்களுக்கும் அந்தந்த தொழிற்சாலைகளில் தடுப்பூசி முகாம்கள் நடந்து கொண்டு இருக்கிறது. 
இது போக பள்ளிகள் கல்லூரிகளில் வேறு தனியாக முகாம்கள் நடக்கிறது இருக்கு.

அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் கூட முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

PHC, Mobile Clinics இன்னொரு புறம் மக்களுக்கு இலவசமாக ஊசிகள் போட்டுக் கொண்டு இருக்கு

வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள எனது நண்பர்கள் உறவினர்கள் மூலம் அறிந்த தகவலின் படி கிராமங்கள் மலை கிராமங்கள் தொலை தூர பகுதி மக்களுக்கு கூட நடமாடும் வாகனம் மூலம் சென்று ஊசி போட்டு வருகிறது தமிழக அரசு

ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் ஊசி போதுமான அளவு இல்லை, குறைவு தான் என்றாலும் அத்தனையும் உபயோகிக்கிறது தமிழக அரசு. 
சராசரியாக ஒவ்வொரு PHC யிலும் 200 பேருக்கு ஒரு நாளில் தடுப்பூசி போடப்படுகிறது. சில மையங்களில் ஒரு நாளைக்கு 500 ஊசிகள் எல்லாம் போடப்பட்டு இருக்கிறது.

கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளில் 14000 ஊசிகள் இலவசமாக போடப்படுகிறது
ஆனைமலை சேத்துமடை என உட்பகுதி கிராமங்கள், நஞ்சுண்டாபுரம் பீளமேடு என நகர பகுதிகள் என எல்லா இடங்களிலும் முகாம்கள் உள்ளன.

இங்கே கள நிலவரம் தெரியாமல் இணைய தகவல்களை மட்டுமே பார்த்து தமிழக அரசை திமுகவை குறை சொல்லி கொண்டு இருக்கும் பலருக்கு விரைவில் இந்த தகவல்கள் எல்லாம் தெரிய வரும் போது மிக பெரிய ஆச்சர்யமாக அவர்களுக்கு இருக்கக்கூடும்

திமுக அரசு எப்போதும் போல விளம்பரம் இல்லாமல் மக்கள் பணி செய்வதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து கொண்டு இருக்கிறது

ஒரு சந்தோஷமான சாதனை செய்தி on the way மக்களே.. 

1 comment:

Printfriendly