Tuesday, May 25, 2021

சமூக வலைதளங்களும் அரசின் கட்டுப்பாடும்

கடந்த பிப் மாதம் மத்திய அரசு, இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது (பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே)

அதன் படி இந்தியாவில் இயங்கும் சமூக வலை தள நிறுவனங்கள் சில விதிகளை கடை பிடிக்க வேண்டும்

1. குறை தீர்ப்பு குழு அமைத்தல்

2. மாதா மாதம், பெறப்பட்ட குறைகளின் எண்ணிக்கை, அதில் தீர்க்கப்பட்ட குரைகளின் நிலை ஆகியவற்றை அரசுக்கு அனுப்புவது
இதனுடன் இன்னொரு விதியாக

3. பயனர்கள் பதிவுகளை முன்னதாக தணிக்கை செய்து சட்டப்படி ஏற்புடைய சரியான பதிவுகளை மட்டுமே வெளியிட வேண்டும்
4. வெளியான பதிவுகளின் மீது அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படும் எனில் அதற்கான பொறுப்பு சமூக வலைதள நிறுவனங்களை தான் சேரும்

5. பயனர் தவறுக்கு நிறுவனங்களே பொறுப்பு
இந்த விதிகள் எல்லாம் மே 26 ஆம் தேதி அமலுக்கு வரும்

அரசின் இந்த விதிமுறை ஏற்காத நிறுவனங்கள் செயல்பட முடியாது

இது பேச்சுரிமை / கருத்து உரிமையை கட்டுப்படுத்தும் செயல் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்
WhatsApp நிறுவனம் பயனர்களின் பதிவை கட்டுப்படுத்த முடியாது என அறிவித்து உள்ளது

Facebook நிறுவனம் குறை தீர்க்கும் குழு விதியை ஏற்பதாக சொல்லி உள்ளது.

Twitter முடிவு தெரியவில்லை

இந்நிலையில் மே 26 காலை முதல் சமூக வலை தளங்கள் இயங்காதோ என்கிற அச்சம் பயனர்களிடம் இப்போது உள்ளது

என்னை பொறுத்த வரை.. இயங்க தடை விதிக்கப்படாது என்றே நினைக்கிறேன்

மேலும் கால அவகாசம் கொடுக்க வாய்ப்பு உள்ளது

அல்லது பயனர்களை tracking செய்யும் அமைப்பை வைக்க சொல்லக் கூடும்

பயனர்களை track செய்வது என்பது.. எல்லா பயனாளர்களையும் validate செய்வது.. (Aadhaar, PAN, License போன்றவை மூலம்)

இப்போதே Twitter தனது users verification செய்ய ஆவணங்களை கேட்கிறது. இதே போல அனைத்து பயனர்களுக்கும் கொண்டு வரலாம்.

தவறான பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க இது உதவும்

இதன் மூலம் fake ID, ananymous tweets ஆகியவை கட்டுப்படுத்தப்படும்

பயனாளர்கள் தவறான அல்லது சட்ட விரோத கருத்துக்கள் வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவரை கண்டு பிடிக்கவும் இந்த ஆவணங்கள் & validation உதவும்

இப்படியான practical rules விதிக்க தான் வாய்ப்பு உள்ளது

எது எப்படி ஆகினும் சமூக வலை தளங்களை இயங்காமல் செய்வது என்பது இயலாத காரியம்

சில கட்டுப்பாடுகளுடன் அவை தொடர்ந்து இயங்கும் என்றே நான் நம்புகிறேன்

அத்தகைய கட்டுப்பாடுகள் சமூக வலைதள பதிவுகளை சரியான வழியில் கொண்டு செல்லவும் உதவக்கூடும்.

பார்ப்போம்.. என்ன நடக்கிறது என்று 

No comments:

Post a Comment

Printfriendly