Showing posts with label Bank. Show all posts
Showing posts with label Bank. Show all posts

Saturday, August 22, 2015

வராக்கடன் – இந்தியாவின் பெருநோய்

ன்னைக்கு காலையில் பேப்பரில் என்னை பகீர்னு அதிர்ச்சியாக்கிய செய்திகளில் முக்கியமானது “இந்திய பொதுத்துறை வங்க்கிகளின் வராக்கடன் தொகை 2.67 லட்சம் கோடி” என்பது.

2014-15 ஆண்டுக்கான அறிக்கை படி பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 2.67 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன். இது முந்தைய ஆண்டான 2013-14 இல் 2.16 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது பாஜக அரசின் ஓராண்டு ஆட்சியில் வராக்காடன் மட்டும் 51 ஆயிரம் கோடி.



பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசின் நிதி நிலையை உயர்த்தவும் ஏழை மக்களுக்கான நல திட்டங்கள் வழங்குவதற்கு வசதி செய்யவும் பொதுமக்கள் தங்களின் கேஸ் மானியத்தை விட்டுக்கொடுக்குமாறு உருக்கமான வேண்டுகோளை அனைத்து மீடியாக்களிலும் வெளியிட்டார். அவரது அற்புதமான பேச்சு மற்றும் அதன் நியாயமான காரணங்கள் ஆகியவற்றால் இதுவரை சுமார் 6.50 லட்சம் பேருக்கு மேல் தங்கள் மானியத்தை விட்டு கொடுத்து இருக்கிறார்கள்.

பிரதமரின் பேச்சுக்கு பொதுமக்கள் காட்டிய அளப்பரிய மரியாதை ஆச்சரியப்பட வைத்தது. நாடு இருக்கும் இக்கட்டான நிலையை சொல்லி அதற்கு உதவுமாறு அவர் கொடுத்த கோரிக்கை மெகா ஹிட் அடித்தது.

இன்றைய செய்திக்கு வருவோம்

இந்த வாரா கடன் என்பது தொழிற்சாலைகள், நிறுவனங்கள் எல்லாவரும் வங்க்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் விட்டதால் ஏற்பட்ட நிலுவை தொகை. மார்ச் 31, 2015 நிலவரப்படி அந்த தொகை ரூ.2.67 லட்சம் கோடி. இந்த அளவுக்கு நிலுவை வராக்கடன் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என நேற்று மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லி கண்டிப்பு காட்டி இருக்கிறார். ஏற்கனவே ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. ரகுராம் ராஜனும் வங்கிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன், அவர்கள் சொல்லும் வராக்கடன் முழுமையான தகவல் அல்ல, அது மறைக்கப்படுகிறது என்றும் சொல்லி இருக்கிறார். (அதன் படி பார்த்தால் தொகை இன்னும் கூடலாம்).



இந்த வராக்கடன் என்பது நியாயமாக பார்த்தால் அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை தொகை தான். இதில் கால அவகாசம் கொடுக்க எந்த காரணமும் இல்லை. சட்டப்படி அதை வசூலித்து அரசிடம் சேர்த்திருக்கவேண்டிய கடமை வங்கிகளுக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை அப்படி எதையும் வங்கிகள் செய்ததாக தெரியவில்லை. இந்த 2.67 லட்சம் கோடியில் சுமார் 1.82 லட்சம் கோடி பெரிய கார்ப்பொரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் நிலுவை தொகை. அவர்களால் அதை செலுத்தமுடியாத நிலை எல்லாம் இப்போது இல்லை. நல்ல முறையில் இயங்கி கொண்டிருக்கும் பல பெரிய நிறுவனங்கள் கூட வேண்டுமென்றே அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை கடன் பாக்கியை செலுத்தாமல் வைத்திருக்கிறது. அவர்கள் சொத்துக்களை முடக்கி, விற்று கடனை சரிக்கட்டக்கூடிய அதிகாரம் இருந்தும் வங்கிகள் மெத்தனமாக இருக்கின்றன. 2014-15 ஆம் ஆண்டில் ரூ. 41,236 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்தது  வங்கிகள். அது போக தான் இந்த 2.67 லட்சம் கோடி.

தன்னுடைய மேலான நேரத்தை ஒதுக்கி பொதுமக்களிடமிருந்து சுமார் 250 ரூபாய் மானியத்தை நாட்டு நலனுக்காக விட்டுக்கொடுக்க சொல்லி கெஞ்சும் பாரத பிரதமர், இதுவரை கார்ப்பொரேட் நிறுவனங்களிடம் அவர்கள் செலுத்தவேண்டிய நிலுவை தொகையை செலுத்துமாறு கோரிக்கை கூட விடுக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியம் தான்.

அமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோரின் கவலைகளை பிரதமர் உணர்ந்திருக்கிறாரா என்பது கூட தெரியவில்லை. அவரது அபரிமிதமான செல்வாக்கை பயன்படுத்தி கார்ப்பொரெட்டுகளுக்கு கோரிக்கை விடுத்து நிலுவையை வசூல் செய்தால் இந்தியா பொருளாதாரம் சட்டென தழைக்கும், ரூபாயின் மதிப்பும் உயரும். பொதுமக்களிடம் 250 ரூபாய்க்கு கெஞ்சிக்கொண்டிருப்பதை விட, நாடு நாடாக சென்று முதலீட்டுக்கு கையேந்திக்கொண்டிருப்பதை விட, நிலுவை கடன் தொகை, நிலுவை வரி பாக்கிகளை வசூல் செய்ய உறுதியான நடவடிக்கை எடுத்தாலே போதும், இந்தியாவின் பொருளாதாரத்தை சீரமைக்க.

செய்வாரா பிரதமர்?

References:





Thursday, August 29, 2013

இந்திய பொருளாதார நெருக்கடி – பாகம் 3


ந்த தொடரின் பாகம்-1 & பாகம்-2 ஆகியவற்றை நீங்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என்பதால் நாம நேரா விஷயத்துக்கே போயிரலாம். இந்த பாகத்தில் நாம் விவாதிக்க போறது ‘அந்நிய முதலீடு’ பத்தி தான்.

என் முதல் பாகத்தை படிச்ச பலரும் ‘அந்நிய செலாவணி’ என்பதை ‘அந்நிய முதலீடு’ என்பதுடன் போட்டு கன்பீசன் ஆகி சகட்டு மேனிக்கு விமர்சிச்சதால, முதலில் அது ரெண்டுக்குமான வித்தியாசத்தை பார்த்திரலாம்.

அந்நிய செலாவணி (Foreign Reserve) என்பது நம்மிடம் இருக்கும் டாலர் கையிருப்பு. இந்த அந்நிய செலாவணி எந்த அளவுக்கு நம்ம கிட்டே கையிருப்பு இருக்குதோ அதன் அடிப்படையில் தான் உலக நிதி நிறுவனங்கள் நம்ம நாட்டின் கடன் நம்பகத்தன்மையை (Credit Credibility) வரையறை செய்யும். இப்படியான நிதி நிறுவனங்களின் வரையறை அடிப்படையில் தான் நம் நாட்டுக்கு மற்ற நாடுகள் முதலீடு செய்யும். ஆக, நம்ம கிரெடிட் ரேட்டிங்கை நல்லபடியா வெச்சிக்க நாம முயற்சி செய்யணும்.

சரி, அதை எப்படி செய்யறது?

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்கள், சேவைகள் (Export of Goods & Services) எல்லாத்துக்கும் நாம டாலரில் பணம் வாங்குறோம். இன்னொரு பக்கம் நமக்கு தேவையான பொருட்கள், சேவைகளை இறக்குமதி (Import of Goods & Services) செய்யுறோம். அதுக்கு நாம டாலரில் பணம் கட்டுறோம். ஏற்றுமதியை விட இறக்குமதி குறைவா இருந்தா நமக்கு டாலர் கையிருப்பு வரும். அதன் மூலம் அந்நிய செலாவணி அதிகரிக்கும். ஆனா இப்போதைய நிலையில் ஏற்றுமதியை விட 32% அதிகமா இருக்கு இறக்குமதி.


அதனால, நமக்கு வர்ற டாலர்களை விட நாம கொடுக்க வேண்டிய டாலர் அதிகமா இருக்கு. வேறே வழியில்லாம நாம நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து கொடுக்க வேண்டியதா இருக்கு. இந்த வகையில் அந்நிய செலாவணி குறையுது.

அந்நிய செலாவணி கையிருப்பு டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பை நிர்ணயிக்குது என்பதால் ரூபாயின் மதிப்பு அதிரடியா குறைஞ்சிருச்சு.

‘அந்நிய முதலீடு’ங்கறது வெளிநாட்டு நிறுவனங்கள் நம்ம நாட்டில் செய்யும் முதலீடு. ஏன் வெளிநாடு முதலீடு செய்யணும்? இந்தியாவில் பெரிய அளவில் வளர்ச்சி பணிகளுக்கு வாய்ப்பு இருக்கு. இன்னமும் சாலை, அடிப்படை வசதிகள் இல்லாத ஊர்கள் அனேகம். ஒழுங்காக வரி கட்ட கூட யோசிக்கும், வரி ஏய்க்கும், நாணயமற்ற மக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்திய நாட்டில் அரசாங்கத்தால் மட்டுமே அவ்வளவு வளர்ச்சி பணிக்கான நிதியையும் திரட்டிட முடியலை. நம்மகிட்டே அந்த அளவுக்கு நிதி கையிருப்பும் இல்லை. கடனா வாங்கினாலும் அதை திருப்பி கொடுக்க ஆகும் காலம் எவ்வளவுன்னு சொல்ல முடியாது. உதாரணமா, 100 கி.மீக்கு ஒரு ரோடு போட நாம 425 கோடி ரூபாய் கடன் வாங்குறோம்னு வெச்சுக்கிட்டா, அந்த 100 கி.மீ ரோடு மூலம் அந்த 425 கோடி ரூபாய் வசூலாக எத்தனை வருஷம் ஆகும்னு யாருக்கும் தெரியாது. ரிட்டர்ன் ஆஃப் இன்வெஸ்ட்மெண்ட் (RoI – Return of Investment) அந்த அளவுக்கு கியாரண்டியா இல்லை.

நம்ம கிட்டே பணமும் இல்லை. நமக்கு நிறைய வளர்ச்சியும் தேவை. நம்மால் கடனும் வாங்க முடியாது. அப்போ என்ன செய்யணும்? யார் கிட்டே பணம் இருக்கோ அவ்ங்களை அந்த பணத்தை நம்ம கிட்டே முதலீடு செய்ய வெக்கணும். அந்த முதலீட்டிலிருந்து அவங்க வருவாயை எடுத்துக்குவாங்க. நாம வளர்ச்சியை எடுத்துக்குவோம். நம்ம கிட்டே முதலீடு செய்ய நினைக்கிறவன் என்ன செய்வான்? நீங்க ஒரு தொழில் தொடங்கணும்னு நினைச்சாலோ, வீடு வாங்கணும்னு நினைச்சாலோ, ஷேர் வாங்கணும்னு நினைச்சாலோ என்ன செய்வீங்க? எங்கே முதலீடு செஞ்சா நமக்கு லாபமா இருக்கும்? நல்ல விலையேற்றம் இருக்கும்? இதெல்லாம் யோசிப்பீங்க இல்லே? கடந்த கால ஹிஸ்டரி, எதிர்கால கணிப்புக்கள் எல்லாத்தையும் யோசிச்சு தானே முதலீடு செய்வோம்? (ஸ்பிளண்டர் பைக் வாங்கு மாப்பிள்ளே. நல்ல ரீசேல் வேல்யூ இருக்கும் – மாதிரி).

இதே டைப்பில் தான் இந்தியாவில் முதலீடு செய்யுறதா, இலங்கையிலா, பாகிஸ்தானிலா, பர்மாவிலான்னு யோசிச்சிட்டு இருக்கிற வெளிநாட்டு நிறுவனங்கள இந்தியாவில் தான் முதலீடு செய்யணும்னு முடிவெடுக்க வெக்கிறதே சர்வதேச நிதி நிறுவனங்கள் கொடுக்கிற கிரெடிட் ரேட்டிங்கும், முதலீட்டுக்கு கிடைக்கக்கூடிய ரிட்டர்ன்ஸும் தான். அது நம்பிக்கையா இருக்கிற பட்சத்தில் நம்ம நாட்டில் முதலீடு செய்வாங்க.

ஏன் வெளிநாட்டு முதலீட்டையே எதிர்பார்க்கணும்? இந்தியாவில் முதலீடு செய்யற அளவுக்கு ஆள் இல்லையா? அரசாங்கத்துக்கிட்டே பணம் இல்லைன்னா என்ன? தனியாரை முதலீடு செய்ய சொல்லலாம் இல்லே?

இப்ப ஒரு நகரத்தில் பைப்பாஸ் ரோடு போடணும்னு வெச்சுக்கோங்க. கிட்டத்தட்ட 40 கிமீ நீளம். சும்ம ஜம்முன்னு நாலு வழி சாலை. சர்வதேச தரத்தில் போடணும்னு வெச்சுக்கோங்க. மொத்த பட்ஜெட் சுமார் 200 கோடின்னு உதாரணத்துக்கு எடுத்துக்கலாம். அரசாங்கத்துக்கிட்டே 70 கோடி தான் இருக்குன்னா ஒரு தனியாரை கூப்பிட்டு நீ பாக்கி 130 கோடி போட்டு ரோட்டை போடு. அந்த பணத்தை சுங்கவரியா 30 வருஷத்துக்கு வசூல் பண்ணி எடுத்துக்கோன்னு சொல்லுவாங்க. இதை தான் BOOT (Build Own Operate Transfer) System னு சொல்லுவாங்க. அவங்களே நிர்மாணிச்சு, குறிப்பிட்ட காலம் வரை சொந்தமாக்கி, அதுக்கான சுங்கம் வசூலிச்சு, பின் அரசாங்கத்துக்கிட்டே திருப்பி கொடுக்கிறது. இந்த மாதிரி நிறைய சாலைகள் நம்ம தமிழ்நாட்டிலேயே இருக்கு. PPP (Public Private Partnership) Project மூலமா பல சாலைகள் போட்டிருக்கோம்.

சரி சின்ன புராஜக்ட்களுக்கு இது ஓகே. மிகப்பெரிய புராஜெக்டுகளுக்கு நிதி உதவி செய்யுற அளவுக்கு இந்திய நிறுவனங்கள் கிட்டே பணம் இருக்கா? இல்லை. அதனால் தான் வெளிநாட்டு நிறுவனங்களை நாடுறோம். அவங்க பெரிய அளவில் முதலீடு செஞ்சு வருமானம் பார்க்கிறாங்க. நமக்கு வளர்ச்சியும் கிடைக்குது. இப்படி வெளிநாட்டிலிருந்து நமக்கு வருகிற முதலீடுகளும் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகப்படுத்தறதோட, இந்தியாவின் கடன் தரத்தையும் உயர்த்துது.

நேரடியா முழுமையான முதலீடு செய்யுற முறை மட்டுமல்லாம கூட்டு தொழில் மூலமா முதலீடு செய்யுற முறையும் இந்த அந்நிய முதலீட்டில் இருக்கு. ஹீரோ-ஹோண்டா, கவாசாகி-பஜாஜ், எஸ்கார்ட்ஸ்-யமாஹா, டிசிஎம்-டொயோட்டா, கிர்லோஸ்கர்-டொயோட்டா, டிவிஎஸ்-சுசுகி, மாருதி-சுசுகி மாதிரியான நிறுவனங்கள் இந்திய-வெளிநாட்டு நிறுவனங்களின் கூட்டு நிறுவனங்களா வாகன துறையில் இயங்கியவை. 49% & 51% பங்கு அடிப்படையில். இதன் மூலம் என்ன ஆச்சு, வெறும் ராஜ்தூத், ஜாவா, என்பீல்டு மட்டுமே இருந்த இருசக்கர வாகனதுறையில் நவீன வாகனங்கள் வர தொடங்கிச்சு. விலையும் குறைவாச்சு. பல்லாயிரக்கணக்கானவங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைச்சுது. வாழ்க்கை தரம் உயர்ந்தது.

தொலைபேசி, சாலை, வாகனம், விமான போக்குவரத்து, பெரும் தொழிற்சாலைன்னு பல பல துறைகளில் அந்நிய முதலீடு வந்து குவியறதால இந்தியாவில் இந்திய அரசாங்கமோ, இந்திய தனியார் நிறுவனங்களோ மட்டுமே சேர்ந்து செய்தால் கிடைக்கக்கூடிய வளர்ச்சியை விட மிக மிக அதிகமான வளர்ச்சியும் மேம்பாடும் கிடைச்சுது. இப்படி போட்ட முதலீட்டுக்கு நல்ல ரிட்டர்ன்ஸ் கிடைச்சதால் நிறைய நிறுவனங்கள் போட்டி போட்டு இந்தியாவில் முதலீடு செய்துச்சு.

ஆக, அந்நிய செலாவணிங்கறது வேறே. அந்நிய முதலீடுங்கறது வேறேன்னு இப்போ புரிஞ்சிருக்கும். அதே சமயம் அந்நிய முதலீடு ஒரு வகையில் மறைமுகமா அந்நிய செலாவணிக்கு உதவுதுன்னும் தெரிஞ்சிருக்கும்.

இந்த அந்நிய செலாவணி தான் இப்போ நம்ம பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கியம். அந்த அந்நிய செலாவணியை உயர்த்துறதுக்கான பல காரணிகளில் அந்நிய முதலீடும் ஒண்ணு. அம்புட்டு தான்!

பங்கு வர்த்தகம், முன்பேர வர்த்தகம், கரன்சி வர்த்தகம், கம்மாடிட்டி வர்த்தகம் மாதிரியான செயல்களால் பொய்யாக உருவகப்படுத்தப்படும் அபரிமிதமான விலை உயர்வும் கூட டாலர் மதிப்பு உயர காரணம். கண்ணிலேயே பார்க்காத ஒரு பொருளை மாய உலகமான இண்டெர்நெட்டில் ‘வாங்கி’ கையிருப்பு வெச்சுகிட்டு விலையை உயர்த்தி ‘விற்று’ லாபம் பார்க்கிற இந்த முன்பேர இணைய வர்த்தக முறையை தடை செய்யணும்னு பலரும் பலகாலமா போராடிட்டு வர்றாங்க. இந்த முறையால தான் இயல்பான விலையை விட அதிகமான விலையை வெங்காயம் முதல் தங்கம் வரை எல்லாத்துக்கும் ஏற்றி கிடக்குது.

உற்பத்தி துறை கிட்டத்தட்ட மொத்தமா முடங்கி கிடக்கிறதால், உள்நாட்டு உற்பத்தி அளவு குறைஞ்சு ஏற்றுமதியும் மந்தமாயிருச்சு. அதனால் நமக்கு வரக்கூடிய டாலர் வரத்தும் குறைஞ்சிருச்சு. இப்போ உடனடியா தொழில்துறையை முடுக்கிவிட்டு ஏற்றுமதியை ஒரே மாசத்தில் அதிகரிக்க முடியாதுங்கறது அரசாங்கத்துக்கு நல்லாவே தெரியும். நீங்களும் நானும் ஒழுங்கா வேலை செய்யாததுக்கு அரசாங்கத்தை குற்றம் சொல்லி என்ன ஆகப்போகுது? அதனால தான் அரசாங்கம் மாற்று ஏற்பாடுகளை சிந்திக்குது.

 

நேற்று (28.08.2013) மதியம் பிரஸ் மீட் நடத்துன நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட அதை தான் சொன்னாரு. நம்ம மார்க்கெட் குளோஸ்டு மார்க்கெட்டா இருந்து பிரயோசனம் இல்லை. இன்னும் கூடுதலா ஓப்பன் மார்க்கெட்டா மாறணும். அப்ப தான் பொருளாதாரம் உறுதியாகும்னு சொன்னாரு. அதாவது வெளிநாட்டு முதலீட்டுக்கு இன்னும் அதிக அளவில் பிற துறைகளை கொண்டு வரணும். முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தணும். கவர்ச்சிகரமான ரிட்டர்ன்ஸுக்கு உத்தரவாதம் கொடுக்கணும். இதையெல்லாம் செஞ்சா அந்நிய முதலீடு அதிகரிக்கும், அதன் பலனா டாலர் வரத்து அதிகரிக்கும், அது நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும்.

நேற்று ப.சிதம்பரம் சொன்ன பத்து திட்டங்களில் இந்த திட்டம் முக்கியமானது. (மற்றொரு முக்கிய திட்டம், தொழில்துறையை மேம்படுத்தவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் பல சலுகைகள் கொடுக்கப்போறதா சொல்லி இருக்கார்.) அரசாங்கம் சரியான திசையில் தான் பயணிக்க தொடங்கி இருக்கு. ஆனா ரொம்ப தாமதமா பயணத்தை தொடங்கி இருக்கு.

அந்நிய செலாவணியை அதிகரிக்கிறது மட்டும் தான் இப்போதைக்கு இந்திய அரசின் உடனடி நோக்கம். அதுக்காக தான் அந்நிய முதலீட்டை அதிகரிக்கிறாங்க. இப்போ இந்த ரெண்டுக்குமுள்ள வித்தியாசம் ஓரளவு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

இந்திய பொருளாதாரத்தை இப்போ இருக்கிற நிலையிலிருந்து சீராக்க வெறும் அந்நிய செலாவணி, அந்நிய முதலீடு மட்டும் போதுமா என்ன? பத்தவே பத்தாது. பொருளாதார சீர்திருத்தம்ங்கறது நீண்ட கால பெரும் திட்டம். ஆனா எந்த சீர்திருத்தத்தையும் ஏற்றுக்கொள்கிற நிலையில் இந்திய மக்களும், சில கட்சிகளும் இப்போது இல்லை. இது வரை நாம பார்த்தது எல்லாமே பொருளாதார ரீதியான பார்வை. ஆனால், அரசியல் ரீதியான பார்வையும், நிர்வாக ரீதியான பார்வையும் சிலது இருக்கு. அந்த பிரச்சனைகளையும் சரி செஞ்சா தான் மொத்த பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். அது என்னென்னன்னு அப்புறம் பார்க்கலாம்!

 

Tuesday, August 27, 2013

இந்திய பொருளாதார நெருக்கடி – பாகம் 2

முதல் பாகத்தை படிச்சவங்களுக்கு முன்னுரை தேவையில்லை. படிக்காதவங்க ஒரு நடை இங்கே படிச்சிட்டே வந்திருங்க.

இப்போ நாம ஸ்டிரெயிட்டா விஷயத்துக்கு போயிரலாம்.

2ஜி வழக்கை பொறுத்தவரைக்கும் அது ஒரு ஊகமான கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்ததுன்றது எல்லோருக்குமே தெரியும். அதாவது 2ஜி அலைக்கற்றையின் மதிப்பை மதிப்பிட நம்ம கிட்டே எந்த டெக்னாலஜியோ, முன்மாதிரியோ இல்லை. 3ஜி அலைக்கற்றையை ஏலம் விட்டப்போ கிடைச்ச தொகையை அடிப்படையா வெச்சு புரோ-ரேட்டா பேசிசில்  (Pro-rata basis) 2ஜி விலையை கணக்கிட்டிருக்காங்க ஆடிட்டருங்க. ஆனா அந்த முறை சரியா வராதுங்கறது எந்த ஒரு சாதாரண அக்கவுண்டண்டுக்கும் தெரியும்.

3ஜி டெக்னாலஜி வந்ததுமே 2ஜி அவுட்-டேட்டட் டெக்னாலஜி ஆயிருச்சு. அதனால் அதன் மதிப்பு குறைய தான் செய்யும். மேலும், ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட 2ஜி அலைக்கற்றைகள் போக மிச்சம் மீதி இருந்த அலைக்கற்றைகளை தான் ஒதுக்கீடு செஞ்சாங்க. ஆக, கிடைச்ச ஒவ்வொரு ரூபாயும் அரசுக்கான கூடுதல் லாபம் தான். ஆடிட்டருங்க கூட அரசுக்கு நஷ்டம்னு எங்கேயும் சொல்லலை. இன்னும் கூடுதல் லாபம் கிடைச்சிருக்கும்னு தான் சொல்லி இருக்காங்க. அதுவும் எப்படி, இத்தனை பேர் ஏலத்தில் கலந்துகிட்டு, இத்தனை ரூபாய்க்கு அது ஏலம் போயிருந்தா இத்தனை லட்சம் கோடி கிடைச்சிருக்கும்னு தான் அறிக்கையே இருக்கு. மொத்தமாவே அது ஒரு ஊகமான கணக்கீடு தான். (கடைசியில் அது இப்போ 30,000 கோடின்னு வந்து நிக்குது. அதுவும் கூட தவறான கணக்கு. அந்த அளவுக்கு இருக்காதுன்னு விவாதம் நடந்துட்டு தான் இருக்கு)

இந்தியாவில் ஆடிட்டிங், தணிக்கை அறிக்கை பத்தின ஒரு பேசிக் விஷயத்தை சிம்பிளா சொல்றேன். அது உங்க புரிதலுக்கு உதவியா இருக்கும்.

உதாரணத்துக்கு, நீங்க ஒரு கம்பெனி வெச்சிருக்கீங்கன்னு எடுத்துக்குவோம். அதில் ஒரு நாளைக்கு 100 மோட்டார் (Motor) உற்பத்தி பண்றீங்கன்னு வெச்சுக்குவோம். அப்படீன்னா மாசத்துக்கு 3000 மோட்டார். சரியா? இதை ஆடிட் செய்ய ஒரு குழு வருது. அவங்க சாம்பிளிங் (Sampling) படி ஒரு நாள் உற்பத்தியான 100 மோட்டாரிலிருந்து 14 மோட்டார்களை ஆடிட்டிங்குக்கு எடுத்துக்குவாங்க. அதில் 4 மோட்டார் தரமில்லைன்னு கண்டுபிடிக்கிறாங்கன்னு வெச்சுக்கோங்க, அவங்க அறிக்கை என்னவா இருக்கும் தெரியுமா? “சோதனைக்கு எடுத்த மோட்டார்களில் 25% தரமற்றவையாக இருந்தன. இந்த வகையில் நாளொன்றுக்கு 25 மோட்டார்களும், மாதத்துக்கு 750 மோட்டார்களும் தரமற்றவையாக இருக்க ‘வாய்ப்பு இருக்கிறது” ன்னு அறிக்கை கொடுப்பாங்க. அப்படி தான் அறிக்கை கொடுக்கணும்னு சட்டம் (IGAPP – Indian General Accounting Practice and Procedures) சொல்லுது. ஆனா நிஜத்தில் அந்த மாச உற்பத்தியான 3000 மோட்டார்களில் அந்த 4 மட்டுமே தரமற்றவையாக இருக்கவும் மற்ற 2996 மோட்டார்கள் தரமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. அதை 100% முழுமையான ஆடிட்டிங்குக்கு உட்படுத்தி பார்த்தா தான் தெரியும். பெரும்பாலான ஆடிட்டிங் குழுக்கள் இப்படியான சாம்பிளிங் படி தான் அறிக்கை தருது. என் ஸ்டேட்மெண்ட் இது தான். இது சரியா தப்பான்னு நீங்க யாரை வேணும்னாலும் வெச்சு செக் பண்ணிக்கோங்க டைப்பில். யாரும் அதை ரீ-செக் செய்யமாட்டாங்கன்னு 200% நம்பிக்கை. 2ஜியிலும் அப்படி தான் நடந்தது. (இது அக்பர் பீர்பால் கிட்டே செம்மறி ஆட்டின் உடலில் எத்தனை ரோமங்கள் இருக்குன்னு கேட்ட கேள்விக்கு பீர்பால் சொன்ன அந்த அல்டிமேட் பதில் மாதிரி தோணுதில்லே?)

இப்போ நாம இந்த வங்கிகளின் வாராக்கடன் மேட்டருக்கு வருவோம்.

வாராக்கடன் 1.76 லட்சம் கோடின்னு கணக்கிட்ட ஆடிட்டருங்க, கணக்கிட்ட விதம் பற்றி தனியா ஒரு அனெக்சர் (Annexure) கொடுத்திருக்காங்க. அதன் படி ஒரு விசித்திரமான மெத்தடை அவங்க கையாண்டிருக்கிறதை புரிஞ்சுக்க முடியுது.

ஒரு உதாரணம் சொல்றேன். நீங்க ஒரு வங்கியில் 3 கடன்கள் வாங்கி இருக்கீங்கன்னு வெச்சுக்குவோம். 3ம் 1 லட்சம்னு வெச்சுக்குவோம். மொத்தம் 3 லட்சம் கடன். மாசம் ஒவ்வொரு கடனுக்கும் 2000/- கட்டணும். அப்படீன்னா மாசத்துக்கு 6000/-. நீங்க 2 கடனுக்கு கரெக்டா டியூ கட்டிட்டே வர்றீங்க, ஆனா 3வது கடனுக்கு மட்டும் ஒழுங்கா டியூ கட்டலைன்னா, நியாயமா அந்த 3வது கடன் தொகையான 1 லட்சம் (அதில் உள்ள, கட்டவேண்டிய, பாக்கி தொகை) தான் வாரா கடன். ஆனா ஆடிட்டிங் மேனுவல் படி பார்த்தா, உங்களது அனைத்து கடன்களும் வாரா கடன் தான். அதாவது நீங்க ஒழுங்கா டியூ கட்டிட்டு வர்ற அந்த 2 கடன் கணக்கும் கூட வாரா கடன்ல தான் சேர்த்திருவாங்க. இது ஒரு பக்கம் அப்படியே எடுத்து வெச்சுக்கோங்க. இன்னொரு விஷயம் கவனிங்க.

இந்த ‘வாரா கடன்’ என்பதற்கு என்ன அளவுகோல் வெச்சிருக்காங்க தெரியுமா? 90 நாட்களுக்கு மேல் ஒரு கணக்கில் எந்த பண பரிமாற்றமும் இல்லை என்றால் அது வாரா கடனாம். இதுக்கும் உதாரணம் வெச்சிருக்கேன்.

நீங்க கடைசியா உங்க கடனுக்கான டியூவை ஜூன் மாசம் கட்டியிருக்கீங்கன்னா, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூணு மாசத்தில் ஒரு நாள் கூட, ஒரு ரூபாய் கூட நீங்க அந்த கணக்கில் கட்டாம இருந்தா அது வாரா கடன். அந்த வகையில் அந்த கடன் தொகையும், உங்க பேர்ல இருக்கிற மற்ற பிற (ஒழுங்கா கட்டப்பட்டுட்டு வர்ற) கடன்களும் எல்லாமே வாரா கடன் லிஸ்ட்ல வந்திரும். ஒருவேளை உங்களுக்கு அக்டோபர் மாசம் கொஞ்சம் லம்பா அமௌண்டு கிடைச்சு மொத்த பாக்கியையும் நீங்க செட்டில் பண்ணிடுறீங்கன்னு வெச்சுக்குவோம், அப்போ என்ன ஆகும்? ஒண்ணும் ஆகாது. நீங்க செலுத்த வேண்டிய பாக்கி தொகை ஜீரோ ஆயிரும். ஆனாலும் உங்க கடன் கணக்குகள் எல்லாமே வாரா கடன்ல தான் இருக்கும். ஏன்னா, அதில் தான் ஜூன் முதல் செப்டெம்பர் வரை தொடர்ச்சியா 90 நாட்கள் பண பரிமாற்றம் நடக்கலையே? அதுக்கு பின்னாடி எல்லாத்தையும் சேர்த்து கட்டிட்டாலும் அது வாரா கடன் தான். (இந்த மாதிரியான கடன்களை வாரா கடன்னு (NPA – Non Performing Asset) கணக்கு வெக்காம தாமதமாக செயல்படும் கடன்னு (SPA – Slow Performing Asset) கணக்கு வெக்கணும்னு ஒரு விவாதம் இப்பவும் நிபுணர்களால் நடத்தப்பட்டுட்டு இருக்கு! என்னை கேட்டால், அது தான் நியாயமும் கூட.)

இந்த ரெண்டு ரீதியில் தான் (அதாவது ஒழுங்கா கட்டப்படும் கடன்களும், தாமதமா கட்டப்படுற கடன்களும்) இந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் வாரா கடன் லிஸ்டில் வந்திருக்கு. இப்போ சொல்லுங்க. இது உண்மையாவே 1.76 லட்சம் கோடியா இருக்க வாய்ப்பு இருக்கான்னு? நிச்சயமா இருக்காது.

‘வாரா கடன்’ங்கறது மிக மிக சொற்பமான அமௌண்டா தான் இருக்கக்கூடும். மற்றவை எல்லாம் தாமதமாக செயல்படும் கடன் அல்லது, ஒரே நபரின் பிற ஒழுங்காக செயல்படும் கடன் தான்.

சரி, 1.76 லட்சம் கோடி வாரா கடன்னே வெச்சுக்குவோம். இதனால் வங்கிகளுக்கு என்ன நஷ்டம்? நஷ்டம் எல்லாம் ஒண்ணும் இல்லை. ஆனா வரவேண்டிய லாபம் குறைஞ்சிருச்சு.

உதாரணமா நம்ம ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை எடுத்துக்கலாம். 2013-14 நிதியாண்டுக்கான முதல் காலாண்டு அறிக்கை (Q1 Results for FY 2013-14) சமீபத்தில் வெளியாகி இருக்கு. அதில் இந்த வாரா கடன் எல்லாம் கழிச்சப்பறமும் (Bad debts write off) கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு லாபம் 14% குறைஞ்சிருக்குன்னு சொல்லி இருக்காங்க.. சரி அப்படி எவ்வளவு லாபம்னு நினைக்கிறீங்க?

இது ஒரு பொது துறை வங்கி. சேவை மனப்பான்மையோடு, லாப நோக்கின்றி செயல்படும் வங்கி. இவங்க கணக்கு சொல்றது இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு மட்டும். அதாவது வெறும் 90 நாட்களுக்கான கணக்கு. இதில் வாரா கடன் வேறே எக்கச்சக்கமா இருந்ததுன்னு சொல்றாங்க. அப்படின்னா எவ்வளவு லாபம் வந்திருக்கும்? ஒரு 10 கோடி? 20 கோடி? இல்லைங்க இல்லை. நல்லா தம் கட்டி மூச்சை இழுத்து பிடிச்சுக்கோங்க. 3,241.08 கோடி ‘நிகர’ லாபம். (நிகர லாபம் – Nett Profit – அப்படின்னா, எல்லா செலவும், வரியும், ஒதுக்கீடும் எல்லாம் போக மொத்தமா கைல நிக்கிற தொகை). ஜஸ்ட் 90 நாளைக்கு. வெறும் பொது சேவையும், மக்கள் நலனும் மட்டுமே முன்வெச்சு இயங்குற ஸ்டேட் பாங்க் நிலையே இப்படின்னா, ICICI, HDFC, KVB மாதிரியான தனியார் வங்கிகளை பத்தி நீங்களும் ஆடிட்டர் மாதிரியே குத்துமதிப்பா ஒரு கணக்கு போட்டு பார்த்துக்கோங்க.

இப்போ நான் முன்னே சொன்ன விஷயத்தை யோசிச்சு பாருங்க, ஒரு மிகப்பெரிய முரண்பாடு புரியும். அதாவது ஒழுங்கா கட்டுற கடனுக்கான பணம் வங்கிக்கு வந்திருச்சு. ஆனா, அவருடைய மற்றொரு கடன் வாரா கடனா இருக்கிறதால இந்த கடனும் வாராகடன் லிஸ்டில் இருக்கு. சுருக்கமா ஒரு கடனுக்கான தொகை லாபத்திலும், வாரா கடனிலும் என ரெண்டு இடத்திலும் இருக்கு. இந்த முரண்பாட்டை தான் நிறைய பேர் விவாதிச்சிட்டு இருக்காங்க. (நியாயமா இதை பத்தி விவாதிக்க வேண்டிய அரசாங்கம் வழக்கம்போல சைலண்டா தான் இருக்கு). அப்படி பார்த்தா 3,241.08 கோடி லாபம்ங்கறதும் தப்பு. 1.76 லட்சம் கோடி வாரா கடன்னு சொல்றதும் தப்பு.

இந்த லட்சணத்தில் தான் இருக்கு, இந்திய தணிக்கை துறை. குத்துமதிப்பா குன்சா அடிச்சு விடுறதிலயும், அப்படி அடிச்சு விட்ட தொகையை நியாயப்படுத்த சுற்றி வளைச்சு கணக்கு சொல்றதிலயும் அவ்ங்க ஜகஜ்ஜால கில்லாடிங்க. (எனக்கென்னமோ, முதல் பாகத்தில் சொன்ன மாதிரி, யூகமான, குத்துமதிப்பான ஆதாரமற்ற கணக்கீடுகளுக்கெல்லாம் ஒரு ஐடண்டிடிக்காக ‘ரூ.1.76 லட்சம் கோடி’ ங்கறதை வெச்சுக்கறாங்களோன்னு ஒரு டவுட்டு).

இணையத்தில் சமீப காலமா, அந்நிய முதலீடுக்கு எதிரா ஒரு மௌன மருகல் சப்தம் கேட்டுட்டே இருக்கு. உண்மையில் இந்த அந்நிய முதலீடுங்கறது இந்திய பொருளாதாரத்துக்கு நல்லதா, கெட்டதா? அது என்னென்ன மாதிரியான விளைவுகளை நமக்கு தரும்? ஏன் யார் எது பத்தி பேசினாலும், யாரோ ஒருத்தர் வந்து சம்மந்தமேயில்லாம அந்நிய முதலீடு பத்தி அதில் வம்பிழுக்கிறாங்க? அந்த அளவுக்கு அதில் என்ன இருக்கு? இதையெல்லாம் அடுத்த பதிவில் விரிவா பார்க்கலாம்!

Printfriendly