Showing posts with label Travel. Show all posts
Showing posts with label Travel. Show all posts

Monday, July 20, 2015

குச்சனூர் பயண குறிப்புகள்

ங்க விசாக நட்சத்திரத்துக்கு இனிமேல் அமோகமான காலம் தான். ஆனா பாருங்க எல்லாமே கைக்கிட்டே வரும். ஆனா கைக்கு வராது. ஏதோ ஒரு மறைமுக தடை இருந்துட்டே இருக்கும். அந்த தடையை யார் வெச்சிருக்கா தெரியுமா? சாட்சாத் சனிபகவானே தான். அதுக்காக பயப்பட எல்லாம் தேவை இல்லை. எல்லாத்துக்கும் ஒரு பரிகாரம் இருக்குல்ல. நீங்க யாருக்காவது பாவம் செஞ்சிருந்தாலோ, நம்பிக்கை துரோகம் பண்ணி இருந்தாலோ அந்த சாபம் எல்லாம் தான் உங்களை சுத்துது. அது தவிர முன்னொருக்கான வழிபாடு செய்யாம விட்டது, அறிந்தும் அறியாமலும் உயிர்களை கொன்னது மாதிரியான நிறைய பாவங்கள் அப்பப்போ சேர்ந்திருக்கும். அதான் இம்புட்டு கஷ்டம். நேரே குச்சனூர் போய் தலை முழுகிட்டு, தோஷம் நீங்க சனீஸ்வரனை தொழுதுட்டு வாங்க. எல்லா தடையும் நீங்கி நீங்க நல்லா இருப்பீங்க

இப்படி தான் யாரோ ஒரு ஜோசிய சிகாமணி நம்ம குடும்பத்துல கொளுத்தி போட்டு இருக்காங்க. அவர் அந்த ஊர் காரரா இருப்பார் போல. இப்பல்லாம், கோவில்களுக்கு ஜோசியர்கள் தானே மார்க்கெட்டிங் மேனேஜர். இல்லைனா திருநள்ளாரை சொல்லாம குச்சனூரை சொல்லுவாரா? விடுங்க. அவர் சொன்னது கிட்டத்தட்ட விதி 110 இன் கீழ் சொல்லப்பட்ட விஷயத்துக்கு சமமானது என்பதால் எந்த விவாதமும் எதிர்ப்பும் இன்றி ஏகமனதாக தீர்மானம் நிறைவேறி பயணிக்க முடிவாயிருச்சு குடும்பம். ஏன் பேரை சொல்லி ஒரு இன்ப சுற்றுலா.

குச்சனூர் போகணும்னா கூடை மேல கூடை வேணும்னு வைரமுத்துவே சொல்லிருக்காரே என நான் சொன்னதை யாரும் காதில் போட்டுக்கலை. கூடை எதுவும் எடுக்காமலேயே தான் கிளம்பினோம்.

முதலில் தாராபுரம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி, பெரியகுளம், தேனி வழியா குச்சனூர் பயண திட்டம் வகுத்தோம். விடிகாலையில் அங்கே போய் சேருற மாதிரி டைமிங் செலக்ட் பண்ணிட்டு கிளம்பினோம். ஏன்னா குச்சனூர்ல தங்கறதுக்கெல்லாம் சொல்லிக்கற மாதிரி எந்த ஹோட்டலும் இல்லை. லாட்ஜ் கூட ரொம்ப சுமார் தான். தங்கறதா இருந்தா தேனியில் தங்கணும். ஆனா அந்த கோவிலுக்கு குளிக்காம போயி அங்கே தான் குளிக்கணுமாமே? அதனால் தங்கற ஐடியா சுத்தமா இல்லை. விடிகாலை சேர்ந்தா போதும். குளிச்சிட்டு தரிசனம் முடிச்சிட்டு கிளம்பிராலாம்னு, அதிக ஹால்ட் இல்லாத மோடி சுற்று பயணம் மாதிரி பிளான் பண்ணினோம்.

குச்சனூருக்கு சில வழிபாட்டு முறைகள் இருக்கு. அந்த கோவில் எதிரில் ஒரு நதி ஓடுது. அந்த நதியில் தான் குளிக்கணும். நதின்னா... ஒரு நாலடி அகலம் ரெண்டடி ஆழம், அவ்வளவு தான். (அதை வாய்க்கால்னெல்லாம் சொல்லி கொச்சை படுத்த கூடாது!) அந்த நதியில் குளிக்கும்போது நாம அணிஞ்சிருந்த அத்தனை உடைகளையும், அண்டர்லைன் “அத்தனை” உடைகளையும், ஆத்தோட அனுப்பிடணும். அதாவது, நம்மை அதுவரை பீடிச்சிட்டிருந்த தீயவைகளையும் சாப தோஷங்களையும் நதியில் விட்டு விடுவதன் சிம்பாலிக்கான குறியீடு அது. அதன்பின், புது துணி போட்டுட்டு திதி கொடுக்கணும். இது யாருக்காகன்னா, நம்ம முன்னோர்கள் மூதாதையர்களுக்கு ஒருவேளை நாம முறையா திதி கொடுக்காம விட்டிருந்தா, மறந்திருந்தா எல்லாத்துக்கும் ஒரே தவணையில் இங்கே கொடுத்துக்கலாம். (அதே தான், இன்கம் டேக்ஸின் சமாதான் ஸ்கீம் மாதிரி தான்.) அங்கேயே சோறு, எள், நெய் எல்லாம் போட்டு ஒரு பேப்பர் தட்டில் தருவாங்க.  நதியோரம் ஒரு விநாயகர் சிலை இருக்கு. அங்கே நாம நம் முன்னோர்களை நினைச்சு, நாம செய்த துரோகங்கள் பாவங்கள் எல்லாத்தையும் நினைச்சு (சுருக்கமா தான், எல்லாத்தையும் லிஸ்ட் போட்டுட்டு இருக்கக்கூடாது!) பிண்டம் உருட்டி படையல் வெக்கணும். பின்னர் விநாயகரை தொழுது வலம் வரணும்.

அடுத்ததா, காக வடிவில் ஓட்டில் செய்த சிற்பம் தருவாங்க. அதை நம்ம தலையை இடம் வலமா மூணு முறை சுத்தி அங்கே இருக்கும் காக பீடத்தில் வைச்சு உடைச்சிரணும். அதோட நம்ம பிடிச்ச சனி ஒழிஞ்சிருமாம். அதுக்கடுத்து, எள் முடிச்சிட்ட எண்ணெய் தீபம். அதை அங்கே ஏற்றி வெக்க ஒரு டேபிள் போட்டிருக்காங்க. அங்கே அதை ஏற்றியதும் நம் வாழ்க்கை பிரகாசிக்க தொடங்குமாம். இதை எல்லாம் முடிச்சிட்டு தான் சனீஸ்வர வழிபாடு. அது வழக்கமான வழிபாடு தான். அர்ச்சனை, தேங்கா பழம் உடைத்தல், தீபாராதனை. முடிஞ்சுது நாம வெளியே வந்திரலாம். அதுவரை தடைபட்ட காரியங்கள் கிரீன் சிக்னல் பார்த்த கார்கள் போல நம்மை தேடி ஓடி வந்திரும். அதை லட்சியமா கொண்டு தான் இந்த திடீர் பயணம்.

என்னதான் பக்காவா பிளான் பண்ணி புறப்பட்டாலும் ஒட்டன்சத்திரம் தாண்டும்போதே மணி 5:30 ஆயிருச்சு. அங்கிருந்து செம்பட்டி போற ரோடு, செம நாஸ்த்தி. குண்டும் குழியுமா 50 கிமீக்கு மேல காரை ஒட்டவே முடியலை. ஏன் மதுரை போற பஸ்செல்லாம் திண்டுக்கல்லை சுத்தி போகுதுன்னு அப்ப தான் புரிஞ்சுது. ஆனா செம்பட்டி ரோடு அழகானது. வலது புறம் கோடைக்கானல் மலை கூடவே வந்துச்சு. ரோட்டுக்கு ரெண்டு புறமும் வயல்கள்.. விவசாயம். பூக்கள் அதிகமா சாகுபடி பண்ணி இருக்காங்க. அது தவிர வாழை, கீரை, காய்கறிகள் அதிகம் பார்த்தேன். பாரம்பரியமான நெல் விவசாயத்தை நம்பி நஷ்டம் அடையாம பணப்பயிர்களா சாகுபடி பணம் சம்பாதிக்கும் அந்த புத்திசாலித்தனம் சந்தோஷம் தந்தது.

செம்பட்டி ஜங்க்ஷன்லருந்து ரைட் டேர்ன். அருமையான ஹைவே. இந்த ஹைவே திண்டுக்கல் – குமுளி – கோட்டையம் வரை போகுது. (அந்த ரூட்டில் கம்பம் – குமுளி – தொடுபுழா வரை பகல் நேரத்தில் பைக்கில் போகணும்னு ஒரு நீண்ட நாள் ஆசை பெண்டிங்க்லயே இருக்கு. நல்ல நண்பர் கிடைச்சா டிரிப் போட்டிரணும்).

ரம்மியமான விடியல் காலை, அமைதியான சாலை, மெல்லிய குளிர். பத்தலகுண்டு தாண்டினதும் ஒரு ரோட்டோர டீக்கடையில் நிறுத்தி டீ குடிச்சிட்டு கிளம்பினோம். அப்பவே மணி 7 ஆயிருச்சு. லேட் ஆகுதேன்னு எல்லோரும் பதறுனாங்க. அட அது ரொம்ப சின்ன கோவில்மா, அதிகம் யாரும் வரமாட்டாங்க, நீங்க தான் இந்த கோவிலுக்கு வரணும்னு அடம் பிடிக்கிறீங்க. போயிட்டு சீக்கிரமா திரும்பிடலாம். கூட்டமெல்லாம் இருக்காதுன்னு எல்லோரையும் சமாதானம் செஞ்சிட்டு வண்டியை எடுத்தேன்.

பெரியகுளம் வரைக்கும் ரோடு சூப்பரா இருந்துச்சு. அதுக்கு அப்புறம் ரோடு ரோடாவே இல்லை. குண்டும் குழியுமா ரொம்ப கேவலமா இருந்துச்சு. இத்தனைக்கும் இது விவிஐபி தொகுதி. முன்னாள் / எதிர்கால முதல்வர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களது தொகுதி. தேனி வரைக்குமே அப்படி தான் இருந்துச்சு ரோடு. தேனி தாண்டினப்பறம் தான் ஓரளவுக்கு சுமாரான ரோடு தென்பட்டுச்சு. பெரியகுளம் – தேனி போற வழியில் கடக்கிற ஊரை பத்தியெல்லாம் பிரஸ்தாபிச்சிட்டே போனேன். (வடுகப்படி – வைரமுத்து ஊரு, அல்லி நகரம் – பாரதிராஜா ஊரு). பல ஊர்களும் பாடல் பெற்ற திருத்தலங்கள். உபயம் எரியாக்காரரான வைரமுத்து. உசிலம்பட்டி, குச்சனூரு, கூடலூரு, பள்ளப்பட்டின்னு கிட்டத்தட்ட எல்லா ஊரையும் அவரது பாடல்களில் எங்கேயாவது நுழைச்சு வெச்சிருக்காரு. அதைஎல்லாம் சொல்லிட்டே தேனி கடந்து குச்சனூர் ரோட்டில் திரும்பினேன். தேனி தாண்டி சின்னமனூர் போற ரோடில் வரும் முதல் மிகப்பெரிய ரைட் டர்ன் மூணாறு போவது. அதில் தவறுதலா திரும்பிரக்கூடாது. இன்னும் 2 கிமீ தூரம் போனா இன்னொரு ரைட் வரும். அது தான் குச்சனூர் போறதுக்கான ரூட். தமிழக அரசின் இந்து சமய அறநிலய துறை சார்பா கோவிலுக்கு போகும் வழின்னு ஒரு பெரிய போர்டு வெச்சிருக்காங்க. அந்த ரூட்டில் திரும்பினா மிக அருமையான மாநில நெடுஞ்சாலை. அங்கிருந்து 13 கிமீ கோவில். அழகான சுற்றுப்புறம். கிராமங்களினூடேயான பயணம். நல்லா இருந்துச்சு.

குச்சனூர் கோவில் லைன் 

குச்சனூரை நெருங்கினதுமே பக்குன்னு ஆயிருச்சு. ஊருக்கு முன்னாலேயே வண்டியை தடுத்து ரூ.50 டோக்கன் போட்டு வாங்கினாங்க. அதுலருந்து ஒரு பத்தடி போயிருப்போம், காரை நிறுத்திட்டு நடந்து போக சொன்னாங்க. கார் நிறுத்த ஒரு பார்க்கிங் ஏரியா நல்லா சேறும் சகதியுமா இருந்துச்சு. அதுல காரை நிறுத்திட்டு அங்கே இருந்த போலீஸ்காரர் கிட்டே, கோவில் எவ்வளவு தூரம் சார், எப்படி போகணும்னு கேட்டேன். கோவில் ரொம்ப தூரம். இங்கே இருந்து ஆட்டோ பிடிச்சு போங்க. ரூ.30 தான்னாரு. ஆட்டோ அசோசியேஷனுக்கு மார்க்கெட்டிங் ரெப்பா இருப்பார் போல. ஏன் சொந்த காரை அங்கே நிறுத்திட்டு ஆட்டோ பிடிச்சு கோவிலுக்கு போனேன். கூட்டம்னா கூட்டம் சும்மா அள்ளுது. திக்கி திணறி நடந்து ஊர்ந்து நகர்ந்து எப்படி எல்லாம் கோவிலுக்கு போகமுடியுமோ அப்படி எல்லாம் போனோம்.

முதலில் ஆற்று குளியல். ஆற்றில் குளிச்சிட்டு வரும் பெண்கள் உடை மாற்ற ஆங்காங்கே நல்ல ரூம்கள் கட்டி வெச்சிருக்காங்க. (நாம அப்படியே மரத்தடியில் மாத்திக்க வேண்டியது தான்!).  ஆற்றுக்கு அந்தப்பக்கம் பச்சை பசேல்னு வயல்வெளி. நாத்து நட்டுக்கிட்டு இருந்தாங்க. ஆடி பட்டமாச்சே.

கும்பலோடு கும்பலா அவசரம் அவசரமா குளிச்சிட்டு, மத்த சாங்கியங்களை எல்லாம் முடிச்சிட்டு தரிசன லைனில் நின்னோம். அங்கே இருந்த கோவில்காரர்ட்ட லேசா பேச்சு கொடுத்தேன். “வழக்கமா கூட்டமே இருக்காது சார். சனிக்கிழமை மட்டும் தான் கூட்டம். இது ஆடிமாசம் வேறையா? அஞ்சு சனிக்கிழமையும் கூட்டம் ஜாஸ்த்தியா இருக்கும். நாளைக்கு வந்தீங்கன்னா கூட்டம் இருக்காது. இந்த கோவிலை வெச்சு தான் நிறைய பிஸினஸ் இங்கே. அதனால தான் 2 கிமீ முன்னாடியே வண்டிய நிறுத்தி உள்ளூர் ஆட்டோவுக்கு சவாரி கொடுக்கிறோம். இன்னொரு வகையில் இங்கே வாகன நெரிசலையும் அது தடுக்குமுல்லே”ன்னு ரொம்ப லாஜிக்கா பேசுனாரு.

ஆற்றில் குளியல் படித்துறை
மாவட்ட நிர்வாகம் எல்லா ஏற்பாடையும் சூப்பரா பண்ணி இருந்தாங்க. நிறைய போலீஸ், தடுப்பு தட்டிகள், புறக்காவல் நிலையம், சுகாதார துறை மூலமா மருத்துவ குழு, பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாமே அட்டகாசமா இருந்துச்சு. கோவில் ரொம்ப சின்ன கோவில் தான். ஆனா கீர்த்தி பெரிசாச்சே.

சிறப்பு தரிசனமெல்லாம் போகாம இலவச தரிசன லைன்லயே நின்னோம். லைன் வேக வேகமா போச்சு. தரிசனம் முடிஞ்சு அரை மணிநேரத்துலயே வெளியே வந்துட்டோம்.

அப்புறம் அப்படியே ஒரு நகர்வலம். நிறைய கடைகள். கிராமத்து ஸ்பெஷல் உணவுகள். பண்ட பாத்திரங்கள், விளையாட்டு பொருட்கள்னு நிறைய கடைகள். பரவாயில்லை, இந்த திருவிழா கூட ஒரு வகையில் நம்ம சிட்டியில் போடும் ஷாப்பிங் மேளா மாதிரி தான். ஒரே நாள், ஓஹோன்னு வியாபாரம்.

மீண்டும் ஆட்டோ பிடிச்சு கார்பார்க்கிங் வந்து காரை எடுத்து கிளம்பினோம்.

கார் பார்க்கிங் (!)

ஏற்கனவே டிவிட்டர்ல தேனியில் நல்ல ஹோட்டல் எதுன்னு கேட்டதுக்கு வந்த ரிபரன்ஸை மனசில் வெச்சிட்டே தேனி நோக்கி பயணிச்சோம். பசி வேற வயித்தை கிள்ளுது. பின்னே? மணி 11 ஆயிருச்சுல்ல?

தேனி – மதுரை ரூட்டில் அகிலா ஜூவெல்லரி அருகில் மாருதி ரெஸ்டாரண்ட். அது தான் டார்கெட். ஆனா மதுரை நோக்கி போகும்போது ரோட்டுக்கு வலதுபுறம் இருக்கு ரெஸ்டாரண்ட். யூ டர்ன் போடுறதுக்கு சோம்பேறித்தனம். அதனால் லெப்ட்ல ஒதுக்கு வண்டிய நிறுத்திட்டு ரோடை கிராஸ் பண்ணி தான் ஹோட்டலுக்கு போனோம். பரவாயில்லை, நல்ல அருமையான ஹோட்டல், சுவையான டிபன். நியாயமான விலை.

மீண்டும் ரிடர்ன் ஜர்னி. அதே யூ டர்ன் போட சோம்பேறித்தனப்பட்டுட்டு கொஞ்ச தூரம் மதுரை ரோட்டிலேயே பயணிச்சு பெரியகுளத்துக்கு திரும்பும் லெப்ட் ரோடில் திருப்பி பெரியகுளம் போனோம். மீண்டும் அதே ரூட், செம்பட்டி, ஒட்டன்சத்திரம், தாராபுரம்.


இந்த பயணத்தால் தோஷம் நீங்குதோ இல்லையோ சந்தோஷம் நிறைஞ்சிருச்சு. முழுக்க முழுக்க கிராமிய பகுதி வழியா ஒரு நாள் முழுக்க பயணம் பண்ற சுகமும் புத்துணர்ச்சியும் வார்த்தைகளில் சொல்லி மாளாது. சனீஸ்வரனுக்காக இல்லைன்னாலும், ஜஸ்ட் அந்த இயற்கை அழகை ரசிக்கவாவது ஒரு ட்ரிப் அடிங்க. பக்கத்துலே நிறைய அருவிகள் வேற இருக்கு. நாங்க அதுக்கெல்லாம் போகலை. எங்களுக்கு நேரமில்லை. உங்களுக்கு நேரமிருந்தா ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வாங்க. என்ஜாய்.

Wednesday, June 10, 2015

கேரளா – ஐஷர் பஸ்

மீபத்தில் சில நாட்களா கேரளாவில் சுற்றுப்பயணம்

திருவனந்தபுரத்தில் இருந்தப்ப கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் ஒரு நண்பர், “வாங்களேன், பாப்பனம்கோட்டில் இருக்கும் எங்க பாடி பீல்டிங் யூனிட்டை பார்த்துட்டு வரலாம்”னு கூப்பிட்டாரு. இதை எல்லாம் மிஸ் பண்ண முடியுமா என்ன?

கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு அஞ்சு எடங்கள்ல பாடி பீல்டிங் யூனிட் இருக்கு. பாப்பணம்கோடு (திருவனந்தபுரம்), மாவேலிக்கரை, ஆலுவா, கோழிக்கோடு, எடப்பல். இதில் பாப்பனம்கோடு யூனிட் தான் சென்டிரல் வர்க்ஷாப். பெரிய யூனிட்.

வழக்கமான பஸ் பாடி பீல்டிங் யூனிட் மாதிரி குப்பையா இல்லாம செம நீட்டா புரபஷணலா மெயிண்டேயின் பண்ணிட்டு இருக்காங்க. ஒரு பக்கா எம்.என்.சி கம்பெனிக்குள்ள நுழைஞ்ச மாதிரி ஒரு ஃபீல். ஏன்னே தெரியாம கன்றாவியா இருக்கும் நம்ம குரோம்பேட்டை எம்.டி.சி யூனிட், ஓரிக்கை எம்ஜிஆர் போக்குவரத்து கழக யூனிட் எல்லாம் ஞாபகத்துக்கு வந்துச்சு. பொள்ளாச்சி சேரன் யூனிட்டும், நாகர்கோவில் திருவள்ளுவர் யூனிட்டும் நல்லா இருக்கும். சரி நாம விஷயத்துக்கு வருவோம்.

KSRTC யின் ஐஷர் பஸ் (ஃபைல் ஃபோட்டோ)

பொதுவா அசோக் லேலண்ட் மற்றும் டாட்டா பஸ்களை தான் கேரள போக்குவரத்து கழகம் உபயோகிக்குது. ஆனா சமீப காலமா ஒரு புது வரவு, ஐஷர் பஸ்கள். இது ஒரு ஆச்சர்யம் எனக்கு. ஏற்கனவே நம்ம பல்லவன் போக்குவரத்து கழகத்துல ஃபோர்டு பஸ்கள் இயங்கிட்டு இருந்தது. ஆனா ஐஷர் பஸ்கள் நான் எதிர்பார்க்கவே இல்லை. வண்டி பார்க்க நல்லா இருந்தது. பிக் அப், புள்ளிங், ரன்னிங், ஸ்பீடு, ஸ்மூத்நெஸ், கம்ஃபர்ட், என எல்லா வகையிலும் நல்ல பேரு எடுத்திருக்காம். ஒரு தடவை பயணிச்சு பார்க்கணும். ஆனா டிசைனும் லிவரியும் அதே ஸ்டாண்டார்டு ஸ்டைல் தான்.
ஐஷர் கேண்டர் LCV

லேலண்ட் டாட்டா தவிர சொகுசு பஸ் செக்மெண்ட்ல வோல்வோ, ஸ்கானியா. கொரோனா, மெர்சிடிஸ் பென்ஸ் எல்லாம் பஸ்களா உபயோகிச்சிட்டு இருக்காங்க. ஆனா சராசரி சாதாரண பேருந்துகள் என்றாலே லேலாண்டும் டாட்டாவும் மட்டும் தான்னு இருந்த நிலையை மாற்ற வந்திருக்கு ஐஷர். ஏற்கனவே ஐஷர் சரக்கு வாகனங்களை பல வருஷமா இந்தியாவில் உற்பத்தி செஞ்சிட்டு இருக்காங்க. கேண்டர் மாடல் LCV மிக பிரபலம். கேண்டர் வந்த காலத்தில் அதன் கூடவே வந்த DCM TOYOTA, SWARAJ MAZDA, ALLWYN NISSAN எல்லாத்தையும் ஓரங்கட்டி இன்னைவரைக்கும் மார்க்கெட்டில் சக்கை போடு போட்டுட்டிருக்கு கேண்டர். அதன் ஹெவி வெர்ஷனின் மற்றொரு அவதாரம் தான் இந்த பஸ். இது லேலண்டுக்கும் டாட்டாவுக்கும் சரியான போட்டியா இருக்கும். இது தவிர சென்னையில் ஓரகடத்தில் இருக்கும் டைய்ம்லர் ஹீரோ கம்பெனியும் பஸ்களை கொண்டுவர போறதா சொல்லிட்டு இருக்காங்க. ஏற்கனவே அவங்க “பாரத் பென்ஸ்” எனும் பெயரில் லாரிகளை உற்பத்தி செஞ்சிட்டு இருக்காங்க. அதன் பஸ் வடிவம் விரைவில் வருதாம். இதெல்லாம் நமக்கான நல்ல செய்திகள் தான். லேலண்டும் டாட்டாவும் தன்னை காலத்துக்கு தகுந்த மாதிரி மாத்திக்கலைன்னா கஷ்டம்தான்.

SETC தமிழக அரசின் அல்டிரா டீலக்ஸ் பஸ் 

திருவனந்தபுரத்திலிருந்து நம்ம SETC ல திரும்ப ஊருக்கு வந்துட்டிருக்கும்போது மத்த மாநில பஸ்களை நம்ம பஸ்களுடன் ஒப்பிட்டுட்டே வந்துச்சு மனசு.

பயணிகளுக்கு சொகுசும், பாதுகாப்பும், நேர மிச்சமும் தரணும்ங்கறது தான் நம்ம பக்கத்து மாநிலங்களான கர்நாடகா & கேரளா போக்குவரத்து கழகங்களின் நோக்கம். அதன் அடிப்படையில் நல்ல சொகுசு பஸ்களா அவங்க இயக்கிட்டு இருக்காங்க.

கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் வோல்வோ பஸ்கள் மிக அருமையானது. அதில் பயணிச்ச ஒவ்வொரு முறையும் பிரமிப்பு தான். வண்டியை மெயிண்டேயின் செய்திருக்கும் விதம், பயணிகளுடன் அவர்கள் பழகும் பாங்கு எல்லாம் சூப்பர்.
KSRTC கேரளாவின் வோல்வோ சொகுசு பஸ் 

நம்ம பக்கத்து மாநிலமான புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் கூட ஜஸ்ட் 160 கி.மீ இருக்கும் சென்னைக்கு அட்டகாசமான வோல்வோ பஸ்களை இயக்கிட்டு இருக்கு. அதுவும் சிறப்பான பஸ் தான்.

PRTC புதுவை அரசு வோல்வோ சொகுசு பஸ் 


கர்நாடகா அரசு பஸ்களை பத்தி சொல்லவே வேணாம். அவ்வளவு சொகுசு பேருந்துகள் அவை.
KSRTC கர்நாடகாவின் ஐராவத் கிளப் கிளாஸ் பஸ் 

KSRTC கர்நாடகாவின் ஐராவத் சுபீரியா டைப் பஸ் 

KSRTC கர்நாடகாவின் கோரொனா "அம்பாரி" பஸ் 

KSRTC கர்நாடகாவின் மெர்சிடிஸ் பென்ஸ் பஸ் 

இந்த அளவுக்கெல்லாம் பேராசை இல்லாங்காட்டியும் கூட ஓரளவுக்கு நல்ல அரசு பெருந்துகளை நம்ம தமிழக அரசும் இயக்கிருக்கலாம்னு தோணுச்சு. நாம கொடுத்து வெச்சது அம்புட்டுதேன்!





Friday, May 29, 2015

மும்பை பயண குறிப்புகள் – பாகம் 2

முதல் பாகம் இங்கே இருக்கு.
***** 
பார்ட்மெண்ட் விட்டு கிளம்பும்போதே மணி ஆறுக்கு மேல ஆயிருச்சு. மெல்ல ரோட்டோரமா நடந்து 'பேலா நிவாஸ்' ஸ்டாப்புக்கு வந்தேன். வந்ததுமே பஸ் வந்திருச்சு. ரூட் நெம்பர் 415. அகர்க்கர் சவுக் – அந்தெரி ஈஸ்ட். அதிலும் எனக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம் அது மாடி பஸ் என்பது. சென்னையிலும் திருவனந்தபுரத்திலும் மாடி பஸ்ஸில் போயிருந்தாலும், மும்பை மாடி பஸ்களுக்குன்னு ஒரு தனி இடம் இருக்கு. நல்லா அகலமான பின்புற வாசல், வசதியான இருக்கைகள். பஸ்ஸில் அதிக கூட்டமில்லை. உள்ளே நுழைஞ்சதும் இடம் கிடைச்சது. கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன். திடீர்னு எனக்குள்ளிருந்த குழந்தைத்தனம் முழிச்சுக்கிச்சு. படியேறி மேல் மாடிக்கு போயி முன்புற கண்ணாடிக்கிட்டே ஒரு சீட்டை பிடிச்சு அதில் உட்கார்ந்து டாப் ஆங்கிளில் வேடிக்கை பார்க்க தொடங்கினேன். சில சமயங்களில் அறிவை கழட்டி வெச்சிட்டு குழந்தையா மாறிடுறது நல்லது தானே.


அந்தெரி வந்தப்ப மணி ஏழு தாண்டி இருந்தது. மக்கள் மக்கள் மக்கள். எங்கெங்கும் மக்கள் கூட்டம். மெல்ல நடந்து அந்தெரி ரயில் நிலையம் போனேன். அது ஏதோ ஷாப்பிங் மால் ரேஞ்சில் இருந்தது. நிறைய நடக்கவேண்டி இருந்தது ஸ்டேஷனின் மெயின் எரியாவை அடைய. 


அப்போ மணி ஏழு தான் ஆயிருந்தது. ஆனாலும் அந்தெரி பஸ் டிபோவில் நிறைய பஸ்கள் அன்றைய ஓட்டத்தை முடிச்சிட்டு செட்டில் ஆயிருந்தது. இது ஒரு ஆச்சரியம் எனக்கு. நம்மூர்ல பதினொரு மணி வரைக்கும் முழு சர்வீசும் ஓட்டி காசு பார்த்துட்டு தான் ஓய்வாங்க.



முதல் டார்கெட் கேட் வே ஆஃப் இந்தியா. அது மட்டும் தான் பார்க்க டைம் இருக்கும். அந்தெரியில் இருந்து ரொம்ப தூரம். கேட்வே ஆஃப் இந்தியா போகணும்னா அங்கே அதுக்கு பக்கத்துல ரெண்டு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. சர்ச் கேட், விடி (VT -விக்டோரியா டெர்மினஸ் என்பதன் சுருக்கம்). அந்த பெயரை இப்போ மாத்தி மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல் (Chatrapati Shivaji Terminal) ஆக்கிட்டாங்க. சுருக்கமா CST. ஆனா எல்லாரும் இன்னமும் விடின்னு சொல்றதே வழக்கமா இருக்கு. நாம சென்னையை இன்னமும் மெட்ராஸ்னு சொல்ற மாதிரி. (மெட்ராஸ்னு சொல்றதில் ஒரு தனி கிக்கு இருக்குல்ல?)
அந்தெரி ஸ்டேஷன் நடை மேடை 
மும்பை ரயில் பயணத்தை புரிஞ்சுக்கணும்னா அதுக்கு லேசா மும்பை ரயில் அமைப்பை முதலில் புரிஞ்சுக்கணும். தென்னிந்தியாவில் எப்படி தென்னக ரயில்வே இருக்கோ அது மாதிரி மும்பைக்கு சேவை செய்யுறது மத்திய ரயில்வே & மேற்கு ரயில்வே. இரண்டு ரயில்வேயும் தனித்தனியா ரயில்கள் இயக்குறாங்க. இதை வெஸ்டர்ன் லைன் சென்ட்ரல் லைன்னு சொல்லுவாங்க. இது தவிர ஹார்பர் லைன் (பனுவேல்/அந்தெரி – CST) தனியா இருக்கு. கேட்வே ஆஃப் இந்தியா போறதுக்கு சர்ச் கேட் போறதும் விடி போறதும் தூரம்னு பார்த்தா ஒண்ணு தான். ஆனா சர்ச் கேட்டுக்கு அந்தெரில இருந்து அதிக ரயில்கள் இருக்கு (வெஸ்டர்ன் லைன்). அதனால் அந்த லைன்லயே போனேன்.

பிளாட்ஃபார்ம் போனதுமே ரயில் வந்திருச்சு. ஒண்ணும் பிரமாதமில்லே. நம்ம சென்னையில் ஓடும் அதே மின்சார ரயில் தான். நிறம் மட்டும் தான் மாற்றம். கூட்டமே இல்லை. ஆனா சென்னை ரயில்களை விட மும்பை மின்சார ரயில்கள் செம வேகம். அடுத்தடுத்து ரயில்கள். பக்கத்து பக்கத்து லைன்களில் ஒரே நேரத்தில் நாலு அஞ்சு ரயில்கள் பயணிக்கிறதை எல்லாம் அதிசயமா பார்த்துட்டே பயணிச்சேன். சென்னையில் அதிகபட்சம் ரெண்டு ரயில்கள் தான் பக்கம் பக்கமா ஒரே திசையில் போகும். அதுவும் அபூர்வமா எப்பாயாச்சும்.

எட்டு மணி சுமாருக்கு சர்ச் கேட் வந்தது ரயில். ஸ்டேஷன்லருந்து வெளியே வந்து டாக்சி தேடினேன். கேட்வே ஆஃப் இந்தியா எரியால ஆட்டோக்களுக்கு அனுமதியே இல்லை. ஒன்லி டாக்சி. ஸ்டேஷன் பக்கத்திலேயே வரிசையா நின்னிட்டிருந்தது டாக்சிகள். சாண்டிரோ, ஆல்டோ, வேகன் ஆர், ஆம்னி, அம்பின்னு நிறைய கார் இருந்தாலும் ஒரே ஒரு கார் என்னை ரொம்ப ஈர்த்தது. நான் முதல் முதல் கார் வாங்கணும்னு ஆசைப்பட்ட என் பால்யத்தில் எனது டிரீம் கார் அது தான். “பிரீமியர் பத்மினி”. அது ஃபியட் காரா இருந்தப்பவே அது மேல ஒரு கிரேஸ். அதிலும் நம்ம சூப்பர் ஸ்டார் அதே கார் வெச்சிருந்ததை பார்த்ததிலிருந்து அந்த கார் மேல ஒரு மரியாதை. அதன் மெல்லிசான பெரிய ஸ்டியரிங் எனக்கு ரொம்ப பிடிக்கும்.


நேரா அந்த காரில் போய் ஏறிகிட்டேன். சர்ச் கேட்லருந்து கேட்வே ஆஃப் இந்தியா சுமார் மூணு கிமீ இருக்கும். ஆனா டாக்சி சார்ஜ் வெறும் 30 ரூபா தான். எனக்கு இது ஆச்சரியமா இருந்துச்சு. சென்னைல எப்படியும் 80-100 வாங்கிருப்பாங்க. பொறுமையா லாவகமா காரை ஒட்டிட்டு போனார் டிரைவர். லேசா கொஞ்சநேரம் பேச்சு கொடுத்தேன். எப்படி கட்டுபடியாகுதான்னு கேட்டா சந்தோஷமா சிரிக்கிறாரு. ரேட் குறைவு தான் ஆனா ஓட்டம் அதிகம். அதனால் பிரச்சனையில்லைன்னாரு. பத்து நிமிஷம் கூட ஆகலை. கேட்வே ஆஃப் இந்தியா வந்திருச்சு.


பல வரலாறுகளை சுமந்த படி நின்னிட்டிருந்தது கேட் வே ஆஃப் இந்தியா. மெல்லிய பிங்க் நிற ஒளியில் பார்க்கவே ரம்மியமா இருந்துச்சு. ஒரு ஓரமா விவேகானந்தர் கையை கட்டிட்டு சிலையா வர்ற போற மக்களை கவனிச்சிட்டிருந்தாரு. ஒரு சுத்து கேட்வே ஆஃப் இந்தியாவை சுத்தி வந்து நல்லா ரசிச்சு பார்த்து ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். கடல் காத்தும், கடலில் நிறுத்தப்பட்டிருந்த லாஞ்ச்சுகளும் சில போலீஸ் ரோந்து படகுகளுமா அந்த இடம் ஒரு தினுசான உணர்வை தந்தது. அங்கே வரும் பயணிகள் உட்கார்ந்து ரசிக்க நல்ல இருக்கைகள் திண்ணைகள் அமைச்சிருந்தாங்க. கொஞ்ச நேரம் இருந்து அணு அணுவா அந்த கட்டிட கன்ஷ்டிரக்ஷனை ரசிச்சு பார்த்துட்டு கிளம்பினேன். கேட்வேக்குள்ளே ஒரு பெட்டகம் இருந்தது. அது என்னான்னு இனி வரைக்கும் தெரியலை.


1911 இல் கட்ட தொடங்கி 1924 இல் திறக்கப்பட்டாலும், அதென்னவோ ரொம்ப பழைய கட்டிடம் மாதிரியான ஒரு உணர்வு வந்துடுது. நூறு வருஷம் கூட ஆகலைன்றதை நம்பவே முடியலை. ரோமன் கட்டிட கலையை அடிப்படையா வெச்சு கட்டிருக்காங்க. லைட்டா ஆங்காங்கே முகலாய சாயலும் இருக்கு. உட்புற கூரைகள் தான் பிரமிக்க வெச்சுது. அற்புதமான மெல்லிய வேலைப்பாடுகள். பெரும்பாலும் கருங்கற்கள்.


ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும் ராணியும் வந்ததை முன்னிட்டு இது கட்டப்பட்டாலும் அப்படி ஒண்ணும் பிரமாதமான கட்டிடக்கலையா அது எனக்கு படலை. பிரமாண்டமான கட்டிடம், இரண்டு கூடம் அவ்வளவு தான். தமிழக கோவில்களை பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ ரொம்ப சிறப்பான வேலைப்பாடுன்னு எல்லாம் என்னால் சொல்ல முடியலை. ஆனா சில நுணுக்கமான மெல்லிய அலங்கார வேலைப்பாடுகள் சுவற்றில் ஆங்காங்கே இருந்துச்சு. அது இந்து மத ஸ்கிரிப்ட் ரீதியில் இருந்ததா ஞாபகம்.  அப்படியாக ரோமன், மோகலாய, இந்துமத விஷயங்கள் கலந்த ஒரு கலவையா அது எனக்கு தெரிஞ்சுது.

தூரத்தில் நரிமன் பில்டிங்கும் எதிரில் தாஜ் ஹோட்டலும் இருந்துச்சு. ஆனா நேரம் ஜாஸ்தி ஆயிட்டதால் உடனே கிளம்பினேன். மீண்டும் டாக்சி. ஆனா இந்த முறை சர்ச் கேட்டுக்கு பதிலா விடி.



விடி ஸ்டேஷன் சும்மா சொல்லக்கூடாது. சும்மா தக தகன்னு தங்கமா மின்னுது. அவ்வளவு லைட் செட்டிங். ஸ்டேஷன் முன்புறம் நிறைய பேர் படுத்து தூங்கிட்டு இருந்தாங்க. காலை ரயிலுக்கான பயணிகளா இருக்கலாம். வீடற்ற மும்பைவாசிகளாவும் இருக்கலாம். பரபரப்பா இருந்த ரயில் நிலையத்தை மெல்ல சுத்தி பார்த்தேன்.

மும்பை தாக்குதல் நடந்தப்பறம் தீவீர பாதுகாப்பு ஏற்பாடுகள், நிறைய கெடுபிடிகள். ஆனாலும் ஸ்டேஷனை சுத்தி பார்ப்பதற்கு எந்த தடையும் இல்லை. மிக பிரமாண்டமான ரயில் நிலையம். விக்டோரியா மகாராணியின் பொன்விழாவுக்காக 1887 இல் கட்டப்பட்ட ரயில் நிலையம் இது. அதனால் தான் பாம்பே விக்டோரியா டெர்மினஸ் என பேரு. 1996 இல் தான் இந்த ஸ்டேஷனுக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என பேரு மாத்தூனாங்க.  உலக பாரம்பரிய கட்டிடமா இது தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் நிறைய சுகாதார பணியாளர்கள் முழு நேரமும் சுத்தப்படுத்திக்கிட்டே இருக்காங்க. பிரமாதமான மெயிண்டெனன்ஸ்.


இந்த ரயில் நிலையத்தில் 18 பிளாட்ஃபார்ம் இருக்கு. அதில் 7 பிளாட்ஃபார்ம் உள்ளூர் மின்சார ரயிலுக்கு. நேரே அங்கே போனேன். இப்ப நான் போக வேண்டிய இடம், குர்லா.

என் பழைய கம்பெனியின் மேனேஜர் இப்போ இங்கே இருக்கார். அவரை பார்க்க தான் இந்த திடீர் பயணம். போன் பண்ணி எப்படி வரணும்னு கேட்டேன். குர்லா இறங்கி ஆட்டோ பிடிச்சு கோகினூர் ஹாஸ்பிடல் வந்திருன்னாரு.

ஆட்டோ பிடிச்சு ஹாஸ்பிடல் போயி அவர் வீடு அடைஞ்சு கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சிட்டு டின்னரும் முடிஞ்சப்பறம் மீண்டும் அந்தெரி நோக்கி பயணம். இரவு 11:30 ஆயிருச்சு. ஏற்கனவே ரயில் பயணம் தந்த அலுப்பு வேறு. தூக்கம் தள்ளிட்டு வந்தது. சாயங்காலமே அபார்ட்மெண்ட் கெஸ்ட் ஹவுசுக்கு போன் பண்ணி நைட் வார லேட்டாகும்னு சொல்லி இருந்தேன். ஆனாலும் நமக்காக அவங்க வெயிட் பண்ணிட்டு இருப்பாங்களேன்னு ஒரு கில்ட்டிநெஸ். குர்லாவிலிருந்து அந்தெரிக்கு டிரெயின் இருக்கு. பஸ்ஸும் இருக்கு. ஆனாலும் அர்ஜென்சிய மனசில் வெச்சு ஆட்டோ பிடிச்சேன்.

ஆச்சரியமான விஷயம் என்னன்னா, வரமாட்டேன்னு சொல்றது, பேரம் பேசுறது எல்லாம் அங்கே இல்லை. ஜஸ்ட் கூப்பிட்டதும் வந்துட்டாங்க, 100 ரூபான்னு சொன்னாங்க. நியாயமா பட்டதும் போலாம்னேன். 25 நிமிஷத்தில் ஏதேதோ சந்து பொந்துக்குள்ளே எல்லாம் புகுந்து வெளியேறி ஷார்ட் கட்டில் கொண்டுவந்து அபார்ட்மெண்டில் விட்டுட்டாரு.

மறுநாள் காலை, மும்பையில் இருக்கும் எங்க ஹெட் ஆஃபிசுக்கு போகணும். அங்கிருந்து தான் கான்பரன்ஸ் நடக்கும் ஹோட்டலுக்கு எல்லோரும் பயணம்.

இந்த கெஸ்ட் ஹவுஸில் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த சில கொலீக்ஸும் தங்கி இருந்தாங்க. அவங்களோடு சின்னதா ஒரு அறிமுக படலம், அரட்டை, நள்ளிரவு டீ எல்லாம் முடிஞ்சு உறங்க போயிட்டேன்.

அந்த இரவு பிணம் போல ஒரு உறக்கம்.

பிப் 26 இனிதே விடிஞ்சது அந்தெரியில்

காலை நேரமே எழுந்ததால் நண்பர்களையும் எழுப்பி விட்டுட்டு "வாங்க ஒரு வாக்கிங் போகலாம்"னு கிளம்பிட்டேன். எங்கே போறதுன்னு தெரியலை. பட் ஒருமணி நேரம் அந்தெரி ஏரியா முழுக்க ரவுண்டடிச்சோம். பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் நிறைஞ்ச இடம். பக்கா கமர்ஷியல் ஏரியா. ரவுண்டப் முடிஞ்சு ரூமுக்கு வந்து ஃபிரெஷ் ஆகி ஹெட் ஆபீஸ் போயி ரிஜிஸ்டிரேஷன் முடிச்சு பயணத்துக்கு தயாரானபோது நாங்க மொத்தம் 30 பேருக்கு மேல் இருந்தோம். யாரையும் இதுவரை நான் சந்திச்சதேயில்லை. எல்லோரோடும் ஒரு அறிமுக படலம் அண்ட் அரட்டை அங்கேயும்.

கான்பரன்ஸ் நடப்பது லோனாவாலாவில் இருக்கும் பரியாஸ் ரிசார்ட்டில். சுமார் 80 கிமீ தூரம். ஆனாலும் 2 மணிநேரத்துக்கு மேல் பயணம். மலைப்பகுதி. நாங்க எல்லாவரும் பயணிக்க பஸ் ஏற்பாடாகி இருந்தது. மும்பை புறநகரின் அழகை எல்லாம் ரசிச்சபடி ஹெட் ஆபீஸில் இருந்து லோனாவாலா நோக்கிய பயணம் பத்து மணிக்கு தொடங்கியது.

கோவாண்டி ஏரியா எக்ஸாக்டா நம்ம பூந்தமல்லி நாசரேத் பேட்டையை ஞாபகப்படுத்திச்சு. பாந்திரா சீ லிங்க் வழியா மெயின்லேண்ட் அடைஞ்சு புனே எக்ஸ்பிரஸ்வேயில் பறக்க தொடங்கிச்சு.


மெயின் லேண்டுக்கும் மும்பைக்கும் இடைப்பட்ட கடல்பகுதி வழியா மின்சார கம்பிகள் வருது. அதுக்காக கடலில் மின் டவர்கள் நிர்மாணிச்சிருக்காங்க. அது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. எப்படி கடலுக்குள் பில்லர் போட்டிருப்பாங்க அதுவும் 30, 40 வருசத்துக்கு முன்னேன்னு யோசிச்சிட்டே பயணிச்சேன்.

மலைகள் குகைகள் என கலவையான பாதையில் பயணிச்ச பஸ் பன்னெண்டு மணி சுமாருக்கு ரிசார்ட்டை அடைஞ்சுது.

லோனாவாலா, பரபரப்பிலிருந்து ஒதுங்கிய ஒரு சிறிய மலை கிராமம். கோடை வாசஸ்தலம்னெல்லாம் சொல்ல முடியாது, ஆனா அழகிய சிற்றூர். மும்பையில் இருக்கும் பெரிய தொழிலதிபர்கள், திரை துறை பிரபலங்கள் பலரும் இங்கே ஓய்வுக்காக வருவார்கள். சிலர் சொந்தமாக வீடும் கட்டி வைத்திருக்கிறார்கள். அப்படியான ஒரு அழகிய பகுதியில், மலை சரிவில் கட்டப்பட்டிருந்தது, பரியாஸ் ரிசார்ட்.

வந்து இறங்கியதும் அற்புதமான லஞ்ச். முடிஞ்சதும் நேரே ரூம், ஒரு மணிநேரம் ரெஸ்டு அறிவிச்சாங்க. தூக்கமெல்லாம் வரலை. பால்கனியிலிருந்து அந்த ஊரின் அழகை ரசிச்சிட்டிருந்ததிலேயே நேரம் போயிருச்சு.

இனி தான் முறைப்படி கான்பரன்ஸ் ஆரம்பம்.  அது அடுத்த பகுதியில்

Thursday, May 28, 2015

மும்பை பயண குறிப்புகள் – பாகம் 1

மும்பைல ஒரு கான்ஃபரன்ஸ். பிப் 26,27,28. நீங்க கலந்துக்கறீங்க. புறப்படு பீம்னு டோலாக்பூர் மஹாராஜா சொல்றமாதிரி என் மேனேஜர் சொன்னப்பவே அதுக்கான பயணக்திட்டஙகளை எடுக்க ஆரம்பிச்சாச்சு.

வழக்கமா போற ஸ்பைஸ் ஜெட் வேண்டாம்னு ஜெட் ஏர்வேஸ்ல பார்த்தா ரேட்டு ரொம்ப ஓவரா போயிட்டிருந்துது. கொச்சி – மும்பை கோ ஏர்ல செம்ம சீப்பா ஒரு ஆஃபர் இருந்துச்சு. ஜஸ்ட் 2089. அதுக்கே பிளான் பண்ணி டிராவல் புரபோசலை ஆபீஸ்ல கொடுத்ததும், “யப்பா, இது இயர் எண்டு, காஸ்ட் ரிடக்ஷன் டார்கெட் அச்சீவ் ஆகலை, அதனால் ஏர் டிராவல் கிடையாது, டிரெயின்ல புக் பண்ணி தர்றேன், போறியா?”ன்னு கேட்டாங்க. நான் அப்செட் ஆவேன்னு எதிர்பார்த்தாரோ என்னவோ, நான் “ரொம்ப சந்தோஷம் சார்.. ஒரே ஒரு ரிக்வெஸ்ட்.. கொங்கன் ரயில்வே ரூட்ல டிக்கெட் போடுங்க சார்”னு சொன்னதும் ஒரு மாதிரியா பார்த்தாரு.

பிப் 23 நேத்ராவதி எக்ஸ்பிரஸ், ஏசி 3 டயர், எர்ணாகுளம் – லோகமானியா திலக் டெர்மினல் (அதாங்க நம்ம குர்லா). ரூ. 1,635. டிக்கெட் ரெடின்னு கூப்பிட்டு சொன்னாங்க. அவர்ட்ட சிரிச்சிட்டே சொன்னேன், “சார் டிக்கெட் 1,635, அது தவிர 28 மணிநேர பயணம், ஒரு நாள் ஆபீஸ் வேலை முடக்கம். என் சாப்பாட்டு செலவு எல்லாம் பார்த்தா, கோ ஏர் செம சீப் சார்”ன்னேன். “என்னப்பா பண்றது கம்பெனி பாலிசி அப்படி”ன்னாரு சிரிச்சிட்டே. நல்லது தான். ரொம்ப ஆவலோடு எதிர்பார்த்த கொங்கன் ரயில் பயணம் அப்படியாக இனிதே துவங்கியது.

மதியம் ரெண்டு மணி டிரெயினுக்கு பன்னெண்டு மணிக்கெல்லாம் எர்ணாகுளம் ஜங்ஷன் வந்து காத்திருந்தேன். அருமையான ஸ்டேஷன் அது. கொஞ்சூண்டு லேட்டா வந்துச்சு ரயில். வழக்கமான அதே பழைய பெட்டிகள் தான். சுத்தமா சுத்தமே இல்லாத த்ரீ டயர் கோச். (இதை தேர்டு ஏசின்னு சொல்றவங்களை கொமட்டிலேயே குத்தணும். தேர்டு கிளாசை ஒழிச்சு பல மாமாங்கம் ஆச்சு). அஞ்சு நிமிஷம் தான் நிக்கணும் எர்னாகுளத்தில். ஆனா இருபது நிமிஷம் நின்னுச்சு. சரியா 14:30க்கு கிளம்பிச்சு.


வழியெல்லாம் பச்சை பசுமை, கடல், நதி, மலை, மழை... நிஜமாவே சொல்றேன், கேரளாவில் பகல் நேர ரயில் பயணங்கள் அதிலும் மழைக்கால பயணங்கள், நம்ம ஆன்மாவை முழுசா சுத்திகரிச்சிரும். அனுபவிச்சு பார்த்தா தான் அந்த சுகம் புரியும். எத்தனை பெரிய கவலை இருந்தாலும் மறந்து மனசு லேசாயிரும்.

ராத்திரி டின்னருக்கு என்ன வேணும்னு சாயங்காலமே வந்து கேட்டுட்டு போனாங்க. ரயிலில் பேண்ட்டரி இருக்கு. அது தவிர IRCTC மீல்ஸ் ஆன் வீல்ஸ் ஸ்கீமும் இருக்கு. வெஜ்.மீல்ஸ் ஆர்டர் செஞ்சுட்டு மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன்.

ஏசி கோச் பயணங்களை நான் அதிகம் விரும்பறதில்லை, அதிலும் நீண்ட தூர பயணங்கள். அதுக்கெல்லாம் ஸ்லீப்பர் கிளாஸ் தான் பெஸ்ட்டு. ஜன்னலோரம் உக்காந்து சற்றே வளைஞ்ச ஜன்னல் கம்பிகளில் கன்னம் பதிச்சு சிலுசிலுன்னு அடிக்கும் காத்தையும் சாரலையும் அனுபவிச்சபடி பயணிக்கிற அந்த சுகமும், ரயில் பெட்டியின் தடக் தடக் தாலாட்டு சத்தமும் எல்லாம் ஏசி கோச்சில் கிடைக்கறதில்லை. ஆனா கம்பெனி என்னை கவுரவமா நடத்துதாம். அதனால ஏசி கோச். வேற வழியில்லை. கோச்சை விட்டு வெளியேறி, கதவாண்டை போய் படியில் உக்காந்தபடி வேடிக்கையை தொடர்ந்தேன். கோழிக்கோடு வரைக்கும் தான். அப்புறம் இருட்டிடிச்சு. அதுல என்னத்தை வேடிக்கை பார்க்கிறது? எழுந்து உள்ளாற வந்துட்டேன்.

ஒன்பது மணி சுமாருக்கு கண்ணூர் (கண்ணனூருன்னும் சொல்லலாம்). இரவு டின்னர் வந்துச்சு. சூடா இருந்தது. முன்னேல்லாம் ரயில் உணவுகள் படு கேவலமா இருக்கும். இப்ப சில வருஷமா நல்ல முன்னேற்றம். சூடாவும் சுவையாவும் நியாயமான விலையிலும் கிடைக்குது.

மீல்ஸ் ஆன் வீல்ஸ் - டின்னர் பாக்கெட்
இந்த மீல்ஸ் ஆன் வீல்ஸ் உண்மையிலேயே நல்ல திட்டம். யார் யாருக்கு என்னென்ன உணவுன்ற லிஸ்டை முன்கூட்டியே நம்மகிட்டே வந்து வாங்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி உணவை பேக் செய்து டயத்துக்கு சூடா கொண்டுவந்து தந்திடுறாங்க. பேண்டிரி இல்லாத ரயிலில் கூட  இதே மாதிரி ஆர்டர் வாங்கி இரவு எந்த ரயில் நிலையத்தில் டின்னர் டைமுக்கு ரயில் நிக்குமோ, அந்த ரயில்நிலைய கேண்டீனுக்கு தகவல் சொல்லி, பாக்கெட்ஸ் ரெடி செஞ்சு கரெக்டா அந்த டைமுக்கு டெலிவெரி கொடுத்துடறாங்க. இதே மாதிரி ஒரு திட்டத்தை சில தனி நபர்கள் நம்ம நெல்லை எக்ஸ்பிரசில் செஞ்சிட்டு இருந்ததை சில வருசத்துக்கு முன்னே பார்த்திருக்கேன். அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட் பயணிகளுக்காக. அவங்களும் நெல்லைல எறிக்குவாங்க, ஆர்டர் எடுத்துக்குவாங்க, அந்த தகவலை போன்ல பாஸ் செஞ்சு விருதுநகர் வரும்போது பக்காவா டெலிவெரி கொடுத்துருவாங்க. எல்லாம் முடிஞ்சு திருமங்கலத்துல ஏறங்கிருவாங்க. நான் கூட அந்த பிஸினஸ் பண்ணலாமான்னு யோசிச்சிருக்கேன். இப்ப இருக்கான்னு தெரியலை. ஆனா ரொம்ப நல்ல லாபகரமான ஐடியா.

இரவு 11:45 மணி சுமாருக்கு மங்களூரை கடந்தது ரயில். நான் முழிச்சிருந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு. மங்களூர் தாண்டி 200 கிமீ கடந்து முருதேஷ்வர்ல கடலோரமா ஒரு பிரமாண்டமான சிவன் சிலை இருக்கு. அந்த கோவில் கடலில் உட்புறமா ஒரு சின்ன தீவில் கட்டி இருக்காங்க. சிலை மிக மிக மிக பிரமாண்டம். பக்கத்துலயே இருபது மாடி கோபுரம் கட்டி அதில் லிஃப்ட்டெல்லாம் வெச்சு பக்தர்கள் அதில் மேலேறி போயி சிவனின் முகத்தை பார்க்கமுடியும். அவ்வளவு உயரம். சிவன் உட்கார்ந்திருக்கிற மாதிரி சிலை. பல கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து பார்த்தாலும் கடலில் அவர் உட்கார்ந்திருப்பது அவ்வளவு தத்ரூபமா தெரியும். அதிலும் இரவில் அந்த சிலையை பார்ப்பது சாக்ஷாத் அவரே உட்கார்ந்திருக்கும் உணர்வை தரும். அதனால் அதை பார்க்கணும்னு ஒரு ஆசை. ரயிலிலிருந்து பார்த்தால் தெரியும்னு சிலரும், இல்லை இல்லை ரயில் பாதை ரொம்ப தூரத்தில் இருக்கு, அதனால் தெரியாதுன்னு சிலரும் சொன்னாங்க. வெயிட் பண்ணி பார்த்துரலாம்னு தான் முழிச்சிருந்தேன்.

முருதேஷ்வர் சிவன் சிலை.
(பக்கத்துல இருக்க கோவிலை கவனிங்க, சிலையின் பிரமாண்டம் புரியும்)

முருதேஷ்வர் 02:50 க்கு தான் போகும். இடையில தூங்கிட்டேன்னா? அதனால் 02:30 க்கு அலாரம் வெச்சுட்டு முழிச்சிட்டிருந்தேன். அப்பப்பா கொஞ்சம் கண்ணயர்தல் பின் முழித்தல்னு ஒரு மாதிரியா போச்சு.

02:30 க்கு அலாரம் அடிச்சாபோது செம தூக்கம். திடுக்குனு எழுந்து முகம் கழுவி ஃபிரெஷ் ஆகிட்டேன். அப்போ ரயில் பத்கல் (Bhatkal) ரயில் நிலையத்தில் நின்னிட்டு இருந்துச்சு. அட அவ்வளவு லேட்டா சுலோவா வந்தும் கரெக்ட் டயமுக்கு வந்திருச்சேன்னு ஆச்சரியம். இறங்கி நல்ல சூடா ஒரு டீயை வாங்கி குடிச்சிட்டு மீண்டும் ரயிலேறவும் ரயில் புறப்படவும் சரியா இருந்துச்சு. இன்னும் கால் மணி நேரம் தான். முருதேஷ்வர் வந்திரும். இப்ப திடீர்னு ஒரு கன்பீசன். முருதேஷ்வருக்கு முன்னாடியே சிலை வந்திருமா, முருதேஷ்வர் கடந்தா? எதுக்கும் இருக்கட்டும்னு பத்கல் தாண்டினதுமே இருட்டை வெறிச்சு வெறிச்சு உத்து உத்து பாத்துட்டே வந்தேன். முருதேஷ்வர் ஸ்டேஷனும் வந்துச்சு. ரெண்டு நிமிஷம் நின்னு கிளம்பிருச்சு. ஆனா அந்த சிலை தெரியவேயில்லை. கடல் காத்து மட்டும் சிலுசிலுன்னு அடிச்சிட்டே இருந்துச்சு. சிலை தெரியலையா அல்லது நான் கவனிக்கலையான்னு புரியாமலேயே வந்து படுத்துட்டேன். என்னமோ இனம் தெரியாத ஒரு ஏமாற்றம், எதுக்குன்னே தெரியலை

சாய்... சாய்.... சத்தம் கேட்டு எழுந்தப்ப மணி 10:30. டிரெயின் நின்னிட்டு இருந்துச்சு. போன்ல எந்த இடம்னு பார்த்தா ராஜாபூர்னு காட்டிச்சு. இங்கே ஸ்டாப்பிங்கே இல்லையென்னு கோச்சை விட்டு வெளியே வந்து கீழே இறங்கி நின்னேன். கொங்கன் ரயில்வே சிங்கிள் டிராக் என்பதால் எதிரே வரும் ரயில்களுக்காக பாசிங்குக்கு நிக்கும். அப்படி ஒரு பாசிங்குக்காக அப்போ அங்கே ஒரு சின்ன ஹால்ட். ரம்மியமான இடம். சின்ன கிராமம். மரங்கள் அடர்ந்த ஊர். கொஞ்ச நேரம் ஊரை ரசிச்சிட்டு இருந்தா, வண்டி கிளம்பிருச்சு. மீண்டும் பயணம். இரவு அசந்து தூங்கியதில் கோவாவை விட்டுட்டேன். பரவாயில்லை. இன்னொரு தபா பார்த்துக்கலாம்.

குகையிலிருந்து வெளியேறும் ரயில் 

கொங்கன் ரயில்வேயில் நிறைய குகைகள், உயர்ந்த பாலங்கள். மலைகளை உடைச்சு ரயில்பாதை போட்டிருப்பதால், மலைசரிவிலிருந்து பாறைகள் உருண்டு வரும் அபாயம் இருக்கு. அதனால் ரயில்பாதையின் ரெண்டு பக்க மலைப்பாறையிலும் கம்பி வேலி அடிச்சு பாதுக்காத்து இருக்காங்க. அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்க்கும்போது தான் எத்தனை பயங்கரமான ஆபத்து அதுன்னு புரியுது. அதேமாதிரி மிக மிக உயரமான பாலங்கள். ஒற்றை பில்லர்ல நிக்குது. அதிலும் வளைந்து செல்லும் பாலங்களில் வேகம் குறைக்காமல் பறக்கும் ரயிலின் படிக்கட்டில் நின்றபடி அந்த பயணத்தை அனுபவிப்பது செம்ம திரில். குகைகள் மிக நேர்த்தியா இருக்கு. வெளிச்சம் காற்று இரண்டையும் செயற்கையா உள்ளே ஏற்பாடு செஞ்சிருக்காங்க. மின்சார விளக்குகளும் இருக்கு. ஆங்காங்கே ரயில்பாதை ஓரம் ஆட்கள் நிற்பதற்கு இடம், குடிநீர் வசதி எல்லாம் செஞ்சிருக்காங்க. ஒருவேளை குகைக்குள் ரயில் மக்கராகி நின்னுடுச்சின்னா, உதவி வரும் வரைக்கும் மக்களுக்கு தற்காலிக ஏற்பாடு வேணுமில்லே, அதுக்காக. ச்சே.. என்னா பிளானிங்.. செம

குகைக்குள் இரயில் 
நான் ரொம்ப எதிர்பார்த்த அந்த அபூர்வ காட்சி ரத்னகிரி கிட்டே பார்த்தேன். இந்தியாவில் இருக்கும் ஒரே RO-RO சர்வீஸ் (Roll On-Roll Off Service). இந்த சர்வீஸ் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா பார்த்ததில்லை. இது தான் முதல்தடவை பார்க்கிறேன். ரயில்மீது லாரிகளை ஏத்திட்டு போறது. இதன்மூலம் லாரி டிரைவர்களுக்கு செம்ம லாபம். மகாராஷ்டிரா மாநிலம் கோலாடிலிருந்து (Kolad) கர்நாடக மாநிலம் மங்களூர் வரை இந்த சர்வீஸ் இருக்கு. இந்த தூரத்தை ரோடு மூலமா ஒரு லாரி கடக்கறதா இருந்தா, ரொம்ப லேட் ஆகும். மலைப்பாங்கான காட்டு பகுதின்றதால் ரிஸ்கும் ஜாஸ்தி. மேலும் வாரத்துக்கு ரெண்டு டிரிப் தான் அடிக்கமுடியும். செலவும் ஜாஸ்தி. ஆனா இந்த RO-RO சர்வீஸ் உபயோகிச்சா, வாரத்துக்கு மூணு டிரிப் அடிக்கலாம், டிரைவர்களுக்கு நிறைய ரெஸ்ட் கிடைக்கும் (பத்து மணிநேரம் நிம்மதியா தூங்கிக்கலாம்), அதை விட இந்த சர்வீசுக்கு ஒரு 16 டன் டாரஸ் லாரிக்கு வெறும் 7,000 ரூபா தான் கட்டணம். அப்படி எல்லா வகையிலும் லாரிக்காரங்களுக்கு நன்மை.

அஞ்சு ரயில்கள் இந்த சர்வீசில் இயங்குது. அப்படியும் பத்தாம ஆறாவது ரயில் இயக்கறது பத்தி யோசிச்சிட்டு இருக்கு கொங்கன் ரயில்வே நிர்வாகம். கூட்ஸ் ரயிலின் மீது லோடட் லாரிகளை அப்படியே ஏத்தி அதை கோலாடு – மங்களூர், மங்களூர் – கோலாடு டிரிப் அடிக்குது இந்த சர்வீஸ். தினமும் மங்களூர்ல 50 லாரி, கோலாடுல 100 லாரி வெயிட்டிங்க்ல இருக்கிற அளவுக்கு இந்த சர்வீசுக்கு டிமாண்டு.

RO-RO சர்வீஸ் ரயில்  
என் ரயில் ரத்னகிரி வரும்போது மணி 11:30. அப்போ எங்க ரயிலுக்கு வழி விட இந்த RO-RO சர்வீஸ் ரயில் ஷண்டிங் லைன்ல நின்னுட்டிருந்துச்சு. எப்படியும் ஒரு 70 லாரி இருக்கும். ஃபுல் லோடடு. டிரைவர்கள் லாரிக்குள் உக்காந்து பேசிட்டும், விளையாடிட்டும் இருந்தாங்க. ரயில் லாரியை சுமந்து போயிட்டிருக்கு. ஆச்சரியமா பார்த்தேன். இது மாதிரி ஏன் எல்லா ரூட்டிலும் விடக்கூடாதுன்னு தோணிச்சு. நல்ல வருமானம் அரசுக்கு. லாரிக்காரங்களுக்கும் லாபம். சுற்று சூழல் பாதிப்பும் குறையும்.

காலை உணவுக்கு பூரி, மதிய லஞ்சுக்கு மீண்டும் வெஜ் மீல்சுனு என் வயித்துப்பாட்டை மீல்ஸ் ஆன் வீல்ஸ் டீம் பாத்துக்கிச்சு. எதுக்கும் காசு வாங்கலை. கடைசியா இறங்கும்போது மொத்தமா பில் தர்றோம் அப்ப கொடுத்தா போதும்னு அன்பா சொன்னாங்க. ஆச்சரியமா இருந்துச்சு. தமிழ்நாடு எக்ஸ்பிரசில் காசை கையில் கொடுத்தா தான் ஆர்டரே எடுப்பாங்க.
பனுவேல் ரயில் நிலையம் 
சாயங்காலம் நாலரை சுமாருக்கு பனுவேல் (Panvel) வந்துச்சு. மும்பை நகரத்துக்கான முதல் அத்தாட்சி. நிறைய நிறைய வானுயர்ந்த கட்டிடங்கள் உருவாகிட்டு இருக்கு. மெல்ல மெல்ல நகரம் கண்ணில் பட தொடங்கிச்சு. அடுக்கடுக்கா வீடுகள், மலை மலையா குப்பைகள், சுகாதாரமில்லாத சுற்றுப்புறம், அடிக்கடி எங்களை கடந்து செல்லும் மின்சார ரயில், அந்த ரயில் முழுக்க சாரி சாரியா மக்கள்னு ஒரு பரபரப்பான மிக பெரிய வணிக நகரத்துக்கான குறியீடுகள் தெரிய ஆரம்பிச்சிச்சு.

காட்கோபார் மெட்ரோ ரயில் நிலையம் 
குர்லாவுக்கு 6:30 க்கு தான் இந்த ரயில் போகும். ஆனா எனக்கு ஜாகை அந்தெரில இருக்கு. நான் எதுக்கு குர்லா வரைக்கும் போகணும்னு எனக்குள்ளேயே ஒரு கேள்வி. நல்லவேளையா காட்கோபார் ரயில் நிலையத்துகிட்டே என் ரயில் ரொம்ப சுலோவா இன்ச் பை இன்ச்சா நகர்ந்திட்டிருந்த ஒரு நல்ல தருணத்தில் ரன்னிங்ல இறங்கிட்டேன். காட்கோபார் ஸ்டேஷன்ல இருந்து அந்தெரிக்கு மெட்ரோ இருக்கே..

மும்பை மெட்ரோ
காட்கோபார் ஸ்டேஷனுக்குள்ளேயே பக்கத்திலிருக்கும் மெட்ரோ ஸ்டேஷனுக்கு ஒரு வழி போகுது. அதில் நடந்து மெட்ரோ ஸ்டேஷன் போய் டிக்கெட் வாங்கி ஏர்போர்ட் போலிருக்கும் ஸ்டேஷனின் முதல் தளம் போனேன். அங்கே தான் பிளாட்ஃபார்ம். அழகான ரயில். நம்ம பெங்களூருவின் “நம்ம மெட்ரோ” ரயிலின் அதே குடும்பத்தை சேர்ந்த டிசைன். முழுக்க முழுக்க ரிலையன்ஸ் நாமகரணம், எங்கெங்கும். பிளாட்ஃபார்மில் செகியூரிட்டிகள் அவ்வளவு ஹாண்ட்ஸம்மா இருந்தாங்க.

மெட்ரோ ரயில் உட்புறம் 
ரயில் மெல்ல ஊர்ந்து அந்தெரி வந்தது. நான் இறங்கி விசாரிச்சப்பறம் தான் தெரிஞ்சது நான் எக்ஸ்பிரஸ்ஹைவே ஸ்டேஷன்ல எறங்கிருக்கணும்னு. அப்புறம் என்ன. ஒரு ஆட்டோ பிடிச்சு அபார்ட்மெண்ட் போய் சேர்ந்தேன். இன்னும் நிறைய டைம் இருக்கே. நைட்டு சும்மா தானே இருக்க போறோம். ஒரு நைட் ரவுண்டப் அடிக்கலாமான்னு தோணிச்சு. ஜஸ்ட் அப்படியே கேட்வே ஆஃப் இந்தியாவரைக்கும்?? பிளான் முடிவாச்சு.

வெயிட் அதை அடுத்த பதிவில் சொல்றேன். இப்ப கொஞ்சம் ரெஸ்ட்.



Printfriendly