Wednesday, March 2, 2016

Budget 2016-17

The Budget for the year 2016-17 was presented by our Honourable Finance Minister Shri Arun Jaetli ji amid higher expectations from every nook and corner of the country. If we see whether he fulfilled their expectations and dreams, yes he fulfilled to certain section of people and ignored the aspireness of other section of people.

In a general view I appreciate this budget for its vision on development, futuristic anticipation, visionary of improving infrastructure etc., But it is not at all enough for a 'developing' country like India, and when it is passing a crucial era of transforming itself from 'developing' to 'developed'. To convert the word developing into developed is not an easy task and it requires step by step improvements from the grass root level.

This budget focussed on the development, organisation, re-organisation, beutifying the branches of the tree but not looking into its root, believing that branches are the only responsible for the fruit.

Arun Jaetli (Photo: The HINDU)

Lets speak up openly and look into the 'few' things of the budget.

Starting with a positive note, Budget allocations are really amazing and sounds good, for the National Highways, Mega projects, Railways, Steel Power and Gas Industrial development. Tax incentives for corporate organisations will boost higher economy.

I am so happy on the allocation of funds given to certain areas like, Rs. 55000 Cr for Road Development apart from the Rs. 90,000 Crore alloted to PMGSY which exclusively concentrates on connecting remote rural villages to its nearest towns. Rs. 38,500 Crores for MGNREGA really improves rural employment. I had a fear initially as the BJP opposes this scheme, whether they will discontinue it, but luckily they continues it. Health & Education gets Rs. 1,51,581 Crore however it is so insufficient for us, Defence allocation gets 4% increase compared to last year, Rs. 2,21,246 Crores for Infrastructure Developments and so on.

Looking at the funds allocations it is OK.. but what I really concern about is some amendments and procedural changes. I feel this is the area we have to discuss in short.

100% FDI allowed for Food and Food products which highly gives a slap on Agricultural sector.

Disclosure scheme for bringing black money out and legalizing it by paying 40% as tax to govt will be a disaster. The hard work of Finance Intelligence team and Income Tax department officials goes in vain, as every one can disclose a minimum amount as black and pay tax for that minimum amount. Balance 60% of the 'declared minimum amount' and the entire 'undeclared' amounts become legally white and government assures there won't be any enquiry or assessment in future. This helps the corporate culprits enjoy the black money without the fear of facing legal enquiries.

Long pending Cases of taxation now allowed to settle down by paying 25% of the dispute amount. Moreover, surprisingly government decides 'not to fight' on the cases having dispute amount less than Rs. 5 lakhs, and withdraw all such pending cases. This is another disaster to the economy when we highly really relying on the tax income.

Reduction of Gas cylinders from 12 to 10 is a yorker from FM to the common man.

Diabetes is a concern the government says, and when I am expecting a massive health mission like what we successfully did for Polio & AIDS, government comes with a proposal of opening Dialysis centres and Medical shops. Some thing opening up for private sector for their business, you know?

There are big big dreams about creating large corporate companies, Infrastructures, Highways, Airports, Green field ports, Bullet Trains, Metros... dreams are MEGA in nature but ultimately there is nothing remarkable in the announcements for the rural people and  common man specifically the salaried.

Even though the promises and dreams are so big, when we see the implementation rate of the last year budget is only 37% on the announcements, the fate of the current budget's implementation is doubtful, unless we see them taking off in this fiscal.

The government wants to display India as a highly modernised country to the world, hiding the real factual issues prevailing therein. Portraiting Tajmahal as India is a better idea, but not only Taj Mahal, Taravi is also a part of India. Without developing Taravi, providing basic needs to Taravi, Tajmahal has no moral value. Here TajMahal stands for Corporate development and Taravi stands for common man, as you understood.

My core area of play is in the ground of Indirect Taxation and let me explain my views on it.

I highly expected about the changes in taxation area ahead of GST as the government was often says they are implementing GST soon. But there is no symptoms of GST implementation in near future. If the government really keen on implementing GST, it should have reduced the number of taxes in par with GST. But this government is adding the complicity of the taxation and imposing new new taxes in this budget. What I expected is subsuming and consolidation of taxes, whereas the government now expands the tax complication.

As expected in my previous post Service Tax was expanded to cover many new areas. One of them is the Service tax on the Services provided by the Government or the Local authorities to the business unit. This may include Electricity, Road, Water, drainage etc., For the first time, Government 'services' are coming under tax liability and I guess its impact on business will be huge.

This government was seriously concerned about the decline in Exports, they say, so I expected some sops for exports. Nothing found in the budget. The Drawback rates, MEIS incentives were unchanged. Then what is the real meaning of 'seriously concerned' and sufficient steps taken to improve exports??

Some procedural changes I liked the most. For example, Credit for Capital goods less than Rs. 10000 per piece can be availed fully, Capital equipments can be moved to Job worker directly and avail credit, Reduction in No. of Returns to be filed for Excise & Service Tax, Common Ware house with Input Credit facility for business having multiple place of business, Removing complicity of Service Tax availment for Exempt and non-exempted goods manufacturing are good for making business with ease.

As suggested in my previous post, government has taken initiatives to withdraw the service charges for Debit/Credit card transactions to bring all financial transactions of an individual in books. A separate Notification was released on this issue.

Rationalisation of Interest and Penalty rates, extending time limit for availing Service Tax Credit, Extending time limit for applying Rebates are also good move.

But on the other hand, there are some disappointments also from the expectations of the business circle, such as no clarity on the amount of CESS lying accumulated prior to 28th Feb 2015, whether it can be utilized or not, Procedural difficulties in Service tax to be reduced, Applicability of Service Tax in many areas are not clarified etc.,

LTU was having the facility of mobilizing its CENVAT & Service Tax credit within their group which increased the group's cash flow, but this facility was stopped in July 2015. The expectation that this budget will re-enable it was gone in vain. Actually the purpose of LTU itself was defeated.

There is no specific incentive schemes or improvements for EOU / SEZ units. Procedural hardness of doing SEZ business was not sorted out, and hence many SEZ projects are lying vacant. Some are withdrawn.


Overall seeing, this budget is good for corporates and corrupts but highly affect the life and cost of common man and salaried. Bigger dreams and sweety promises were in the Budget but there is no action plan or proposed procedure to increase the economy not found.

GDP for this year is reduced to 7% as against 8%, and that says it all.

We are now facing an economic recession but this budget which is having only expenditures in majority and not investments or revenue generation plans, will make the economic recession into an economic disaster.

Let us see what is the course of action in future.

Reference:

1. Budget 2016-17 - Official text of Finance Minister's speech
2. Budget highlights and Key features released by Finance Ministry
3. Finance Bill 2016-17
4. Changes related to Service Tax




Sunday, February 21, 2016

Budget 2016 - My forecast

Its time for Budget again.
This budget is so important to India ahead of GST implementation. Already last year budget has subsumed CESS from Service Tax and Central Excise and increased the tax rate to 14% & 12.5% to be in line with GST tax rate.
Since the GST tax rate is expected to be 17-19% I hope this Budget will further raise the tax rate this year, may be around 16% for both the taxes.


I also expect some subsidies, exemptions may be called off to experience the real GST regime. However these changes if implemented, will certainly dent our economy unless GST is rolled out. This is because of CST credit disallowable now but Tax rates are increased which directly impact the end user with increased cost.
The reduced rate for necessities will be around 12% as against the present 2% against C Form. If this hike is implemented this year, then the manufacturing sector will suffer a lot. But If the GST is rolled out, then the tax rate will not be a problem as the eligible purchase can have the facility of set off by the way of Input tax credit.


So, according to me, the major impact will be, if the tax rates are increased ahead of GST and the GST was not implemented this year, then the Industries will get a great dent in their growth, or even suffer a lot and shut down business.


As a tentative I assume, GST roll out may be either by Oct 2016 or April 2017, as the possibility of roll out by April 2016 is ruled out.


Service tax will get fee few more services in to its fold to expand the taxation area, and probability of C Forms discontinue is also expected.


Many incentive schemes, exemptions, discounts may be revised or called off in this budget for the smooth sailing into the GST regime.


As for as Income tax is concerned, MAT will have a major role in this year's budget. Individuals exemption limit may be increased little, say 2.25 lacs.


As a part of curbing unaccounted transactions, the charges towards Debit/Credit cards may be withdrawn.


Lets discuss these dreams with the actual facts post-budget once again.


Tuesday, February 16, 2016

அத்திக்கடவு அவிநாசி குடிநீர் திட்டம் – வரலாறு

மீபகாலமாக மீடியாவில் வந்துகொண்டிருக்கும் செய்தி திருப்பூரில் அத்திக்கடவு அவிநாசி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி நடைபெற்று வரும் உண்ணாவிரதம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை போன்றவை தான்.

பல்வேறு கட்சிகளும் இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என கோரிக்கை விடுப்பதும், தமிழக அரசு இன்றைய இடைக்கால நிதி நிலை அறிக்கையில் கூட இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்து இருப்பதும், இந்த திட்டத்தின் தேர்தல் கால முக்கியத்துவத்தை நமக்கு சொல்கின்றன. 

அது என்ன திட்டம்?

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி நதி மேட்டுப்பாளையம் அன்னூர் வழியாக பவானியை அடைந்து காவிரியில் கலக்கிறது. நீலகிரி மலைவாசஸ்தலம் ஆகையால் நல்ல நீர் வளம். ஆண்டில் பல மாதங்கள் பவானியில் நீர் இருக்கும்.

மேல் பவானி அணையிலிருந்து இறங்கி வரும் பவானி நதி அத்திக்கடவு கடந்து பில்லூர் டேமுக்கு வருகிறது. அங்கிருந்து மேட்டுப்பாளையம் சிறுமுகை வழியாக பயணித்து சத்தியமங்கலம் அருகில் உள்ள பவானி சாகர் அணைக்கு வருகிறது. அங்கிருந்து கோபிச்செட்டிபாளயம் வழியாக பவானி நகரில் காவிரியுடன் கலக்கிறது. இது தான் பவானியின் பயண குறிப்பு.

இன்னொரு புறம், கோவை கிழக்கு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் வறண்ட பகுதிகளாக இருக்கின்றன. கோவை நகருக்கு கேரளாவிலிருந்து சிறுவாணி நதி மூலம் குடிநீர் சப்ளை இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. எனவே கோவைக்கு கூடுதலாக ஒரு குடிநீர் திட்டம் தேவையாக இருந்தது.

திருப்பூரை பொறுத்தவரை நொய்யல் நதி இருந்தாலும் அது நம்ம கூவம் போல பாழ்பட்டு கிடக்கிறது (உபயம் சாய பட்டறைகளின் கழிவுகள்). இது இப்போதைய நிலை. ஆனாலும் நொய்யல் முன்பிருந்தே குடிநீர் ஆதாரத்துக்கான நதியாக இருக்கவில்லை. ஆக, திருப்பூர் பகுதிக்கும் நீர் ஆதாரத்தை அதிகரிப்பதற்காக ஒரு நீர் திட்டம் தேவையாக இருந்தது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு அப்போதைய காங்கிரஸ் ரசு 1957 ஆம் ஆண்டில் ஒரு திட்டத்தை உருவாக்கியது. அதாவது நான் முன்பே சொன்ன பவானி நதியில் இருந்து ஒரு கால்வாய் வெட்டி அதை திருப்பூர் நோக்கி கொண்டு வருவது.

தெளிவாக சொல்வதானால், பில்லூர் அணையில் இருந்து பவானி சாகர் செல்லும் வழியில் தனியாக ஒரு கால்வாயை வெட்டி நீரை திருப்பி விட்டு நேராக அன்னூர் கொண்டு வருவது. அங்கிருந்து அந்த கால்வாயை ரெண்டாக பிரித்து ஒன்றை கருமத்தம்பட்டி, அவிநாசி வழியாக  திருப்பூருக்கும் இன்னொன்றை புளியம்பட்டி, நம்பியூர் வழியாக பெருந்துறைக்கும் கொண்டு போவது.

Thanks: The HINDU


இதன் பலன்கள்??

133.4 கி.மீ பயணிக்கும் இந்த கால்வாய் நீரால் அந்த பகுதியிலுள்ள நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

48 ஏரிகள், 213 குளங்களை இந்த கால்வாய் வழியாக வரும் பவானி நீர் நிறைக்கும்.

இதன் மூலம் 25000 ஏக்கர் பாசன நிலம் பயன்பெறும்.

நன்றாக கவனிக்கவும்..

இந்த நீரை அப்படியே குடிநீருக்காக அனுப்ப போவது இல்லை. திட்டப்படி 20 நாட்களுக்கு தினசரி 750 கன அடி நீர் இந்த வழியாக அனுப்பப்படும். மொத்தம் 12 டி.எம்.சி தண்ணீர். இந்த நீர் அந்த வழியே பயணிப்பதாலும் சிறு குளங்களை நிரப்புவதாலும் அந்த பகுதியிலுள்ள நிலத்தடி நீர் மட்டம் உயரச்செய்து அதன் மூலம் கிணற்று நீர் பாசனத்தை அதிகாரிக்கும். அதனால் தான் இந்த திட்டத்தை Athikadavu-Avinashi Ground Water Recharging Scheme என பெயரிட்டனர்.

1957 முதல் 1967 வரை அவினாசி சட்டமன்ற உறுபினராக இருந்த திரு.மாரப்பகவுண்டர் அவர்கள் தான், அன்றைய முதல்வர் திரு. காமராஜரிடம் அவினாசி திட்டத்தை வலியுறுத்தி எற்றுக்கொள்ள வைத்தவர். 1957 இல் வந்த ஐடியா மெல்ல மெல்ல விரிவாகி அதன் முதற்கட்ட பணிகள் எல்லாம் முடிவடைந்ததும் 1972 இல் அப்போதைய திமுக அரசால் கொள்கை ரீதியாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் பின் எமெர்ஜென்சி அது இது என முன்னெடுக்க முடியாமல் முடங்கியது. பின்னர் 1977 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஒன்றும் நகரவேயில்லை.

1989 இல் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் விட்ட இடத்திலிருந்து தொடங்க முயற்சித்தனர். ஆனால் 1991 இல் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் அதிமுக ஆட்சி ஜெ. தலைமையில் வந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் முடங்கியது.

பின்னர், 1996-2001 திமுக ஆட்சியில் இந்த திட்டத்தின் முதல் காரணியான கோவைக்கு குடிநீர் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக செயல்பாட்டுக்கு வந்தது. பவானி அத்திக்கடவு திட்டம் என்கிற அந்த திட்டம் தான் இன்றும் கோவைக்கான குடிநீர் ஆதாரம். மூன்று வாரங்களுக்கு ஒருமுறை என்றிருந்த கோவை குடிநீர் சப்ளை இப்போது வாரா வாரம் என ஆனதற்கு இந்த அத்திக்கடவு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததே காரணம்.

2001-2006 அதிமுக ஆட்சியில் மீண்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.

திரும்ப 2006-2011 திமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கான அனுமதி கோரி மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய சுற்று சூழல் துறையின் அனுமதியும், நீர் வள ஆதார அமைச்சகத்தின் அனுமதியும் கேட்கப்பட்டது. திட்டத்தின் அனைத்து நடவடிக்கையும் அந்த அனுமதிக்காக காத்திருக்க தொடங்கியது.

அதே வேளையில் இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக கோவையின் கூடுதல் குடிநீர் தேவையை ஈடுகட்டும் திட்டத்துக்கு என அத்திக்கடவு பேஸ் II திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பணி முழுமையாக முடிவடைந்து சரவணம்பட்டி அருகில் பிரதான சென்டிரல் வாட்டர் டேங்க்  கட்டப்பட்டு, கோவை நகர் முழுமையும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு திட்டம் முழு செயல்பாட்டுக்கு வரும் வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2011 இல் அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது.

கோவை மக்களுக்கு குடிநீருக்கு இருந்த கஷ்டத்தை உணர்ந்த கோவைக்காரரான அப்போதைய அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணி “ஏற்கனவே அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாம் கட்டம் முடிவடைந்துவிட்டதால் விரைவில் திறக்கப்படும்” என கேஷுவலாக பேட்டி கொடுத்து வைக்க, என்ன காரணத்தாலோ இரண்டொரு நாளில் அவரது பதவி பறி போனது. 


மேலும், கோவை நகரின் பல பகுதிகளுக்கு ஏற்கனவே இருந்த அத்திக்கடவு குடிநீர் விநியோகம் முடக்கி வைக்கப்பட்டது. அதை எதிர்த்து ஆங்காங்கே பொதுமக்கள் ரோட்டில் இறங்கி அதிமுக அரசுக்கு எதிராக போராட தொடங்கினார்கள். 

அதோடு இந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. 

இனி வரும் தேர்தலில் திமுக வென்றால் தான் அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல்பாட்டுக்கு வந்து கோவைக்கு தினசரி குடிநீர் விநியோகம் கிடைக்கும் என்கிற நிலை தான் இப்போது. கடந்த ஐந்து ஆண்டுகாலமாக மக்கள் பணத்தில் கட்டப்பட்ட அந்த திட்டம் மொத்தமாக முடங்கி வீணாக கிடக்கிறது.

இதற்கிடையில், மத்திய அரசுக்கு அனுப்பப்பட கருத்துருவில் சில திருத்தங்கள் விளக்கங்கள் கேட்டு 2012 இல் தமிழக அரசுக்கு கடிதம் வந்திருந்தது. அதற்கான திருத்திய கருத்துருவை இன்று வரை மாண்புமிகு அம்மா தலைமையிலான தமிழக அரசு அனுப்பாததால் திட்டம் கிடப்பில் கிடக்கிறது.

உலக வங்கி, நபார்டு, ஜப்பான் வங்கி ஆகியவை இந்த திட்டத்துக்காக நிதி உதவி அளிக்க தயாராக இருப்பதாக 2006-2011 திமுக ஆட்சியிலேயே அறிவித்திருப்பதால், ரூ. 1862 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதில் எந்த சிக்கலும் இல்லை.

சுமார் 1400 ஏக்கர் நிலமும், 20 ஏக்கர் வனப்பகுதியும் கையகப்படுத்தவேண்டி இருந்தாலும், அதற்கான எந்த முயற்சியையும் இப்போதைய தமிழக அரசு மேற்கொண்டதாக தெரியவில்லை.

கடந்த 2015 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்த திரு. ஆர். ஒத்திசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு போட்டு, திருத்திய கருத்துருவை தமிழக அரசு அனுப்ப வேண்டும் எனவும், திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கில், நீதிபதிகள் திரு எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோரை கொண்ட பெஞ்ச், தமிழக பொதுப்பணி துறைக்கு கடந்த மார்ச் 22 ஆம் தேதி போட்ட உத்தரவில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் கேட்டு இருந்தார்கள். அதிலும் எந்த முன்னேற்றமும் இன்று வரை இல்லை.

இந்த நிலையில் தான் திட்டத்தின் மூல கருவான அவிநாசிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை தொடங்க வேண்டும் என திருப்பூரில் போராட்டம் தொடங்கி இருக்கிறது. (எப்படியும் திமுக வந்து கோவைக்கு குடிநீர் தர திட்டத்தை தொடங்குவார்கள், அதோடு இதையும் கேட்டு பெறலாம் என நினைத்தார்களோ என்னவோ, தேர்தல் சமயமாக பார்த்து போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்)

போராட்டத்தின் தீவிரத்தை அறிந்த தமிழக அரசு, இன்றைய தினம், திட்டம் தொடங்க ஆவன செய்யப்படும் என்றொரு ஒற்றை வரி வாக்குறுதியை தந்ததுமே, அவர்கள் இந்த திட்டத்தை முடக்கியதை எல்லாம் மறந்து, அம்மா புகழ் பாடி பாராட்டி கொண்டாடும் இணைய மனிதர்கள் தான் ஆச்சரிய படுத்துகிறார்கள்’.

இது வழக்கமானது தானே?

Reference:




Thursday, February 11, 2016

ஸ்டாலின் குறித்த ஜெ. பேச்சு – அருஞ்சொற்பொருள்

நேத்து சென்னையில் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமண விழாவை ஜெ. நடத்தி வெச்சு பேசிருக்கார்.. (அட நேர்ல தாங்க.. இதையெல்லாமா வீடியோ கான்பரன்ஸ்ல செய்வாங்க?)

அந்த பேச்சு தான் பல டிவிஸ்டுகளை சுமந்துட்டு இருக்கு.

ஒரு PhD ஆய்வு கட்டுரை எழுதுற அளவுக்கு அந்த பேச்சு இருக்கு. பேச்சை எழுதி கொடுத்த பிரகஸ்பதி நிறைய மறைமுக குத்துக்களை வெச்சு எழுதிருக்கார். (அவருக்கு யார் மேல என்ன கோபமோ?) அந்த பேச்சில் ரெண்டு குட்டி கதைகள் இருக்கு. அதில் ஒன்று தான் அப்பா மகன் பத்தின கதை. அது தமிழக அரசியலை லைட்டா ஷேக் பண்ற அளவுக்கு சக்தி வாய்ந்ததுன்னு நினைக்கிறேன்.

கதை இங்கே இந்த லிங்க்கில் இருக்கு.. படிச்சிட்டு வாங்க... தொடர்ந்து பேசுவோம்.



"நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல" என ஜெ. கடைசியில் சொல்லி இருந்தாலும், இந்த கதை டைரக்டா திமுகவையும் கலைஞர், ஸ்டாலின், நெஞ்சுக்கு நீதி புத்தகத்தையும் தான் குறிக்குதுன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்குமே.

இப்போ அந்த கதையில் உள்ள சில முக்கியமான விஷயங்களை கவனிக்கலாமா?

1.   இந்த கதையின் மிக முக்கிய வரியாக நான் நினைப்பது “அரசியல் பணி என்பது ஆபத்தானது. இதில் தந்தை, தனையன் என்றெல்லாம் உறவுகளுக்கு இடமில்லை. வலிமை உள்ளவரே வெல்ல முடியும். எனவே உனது அரசியல் பாடத்தை நீயேதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்” தான்.

சொந்த மகனே ஆனாலும் தன் முயற்சியில் தானே தான் வளரணும்னு தான் அந்த அப்பா நினைச்சிருக்கார். தன்னுடைய மகன்றதுக்காக எந்த சலுகையும் காட்டலை, உதவியும் செயலை என்பதை தெள்ள தெளிவா புரிய வெச்சிருக்காங்க ஜெ.

இதன் மூலம் திமுகவில் குடும்ப அரசியல்னு பேசிட்டு இருக்கிறவங்க மூக்கையெல்லாம் பலமா உடைச்சதொட, திமுக ஒரு சிறந்த ஜனநாயக கட்சி என்பதையும் எல்லோருக்கும் உறைக்கிற மாதிரி உணர்த்தி இருக்கார் ஜெ.

2.   ஸ்டாலின் போதிய அளவுக்கு பதவி உயர்வு அடையலையே என்கிற ஆதங்கம் ஜெ.வுக்கு இவ்வளவு ஆழமா இருந்திருக்கும்னு ஸ்டாலினே கூட நினைச்சு பார்த்திருக்கமாட்டார்னு  தோணுது.

3.   அதிமுகவில் அடுத்த தலைமைக்கு டி.டி.வி தினகரனை முன்னிலைப்படுத்த முயற்சி நடப்பதா செய்தி வரும்போது ஜெ.வின் இந்த பேச்சு இன்னும் முக்கியத்துவம் அடையுது. அந்த கட்சியை பார்.. சொந்த மகனுக்கே சலுகை காட்டலை.. புரிஞ்சு நடந்துக்கிடுங்கன்னு இண்டைரக்டா சுட்டி காட்டி இருப்பதா நாம நினைக்கலாம்.

4.   நெஞ்சை திறந்து எழுதிய புத்தகமான நெஞ்சுக்கு நீதியை எல்லோரும் படிச்சு புரிஞ்சுக்கணும்னு ஜெ. சொல்வது புரிகிறது. ஆனால் அப்படி எல்லோரும் அதை படிச்சால் அதிமுகவுக்கு தான் சிக்கல். அந்த புத்தகத்தின் ஐந்து பாகங்களையும் முழுசா படிச்ச எந்த தமிழனும் தான் இருக்கிற கட்சியில் இருந்து விலகி திமுகவில இணைஞ்சிரலாமான்னு தான் முதலில் யோசிப்பான். அந்த அளவுக்கு தமிழகத்தின் வரலாறு, அரசியல், சமூக அமைப்பு, அந்த தளைகளில் இருந்து மக்களை எப்படி மீட்டெடுத்தோம், என்னென்ன திட்டங்கள் என்னென்ன காரணங்கங்களுக்காக தொடங்கப்பட்டன, அப்போதைய தமிழக மக்களின் நிலை என்ன, அதை இப்போதிருக்கும் நிலைக்கு எப்படி படிப்படியாக முன்னேற்றினோம் என்பதை எல்லாம் விரிவாக எழுதி இருக்கிறார். அந்த சமையத்தில் ஏற்பட்ட பல அரசியல் சதுரங்க நிகழ்வுகளையும் அதன் பின்னணிகளையும் சுவையாகவும் சுவாரசியமாகவும் சொல்லி இருக்கிறார்.

புத்தகத்தில் ஜெ. சொன்ன மாதிரி கலைஞரின் தில்லுமுல்லுக்களை தேடினா ஏமாற்றம் தான் மிஞ்சும். (தன் தவறுகளை தானே எப்படி எழுதுவார்?)

எப்படியோ நெஞ்சுக்கு நீதி இன்னொரு ரெண்டு எடிசன் பதிப்பிக்கப்பட்டு இந்த வருஷம் சென்னை புத்தக கண்காட்சியிலேயே சக்க போடு போடும் என்பதும் அதை வாங்கும் பெரும்பாலானோர் அதிமுகவினர் என்பதும், அவர்கள் முகவின் தில்லுமுல்லுகளை தேடி தேடி கடைசியில் முகவின் அபிமானியாகவே மாற வாய்ப்பு இருக்கிறது என்பதும் எனது இதர அவதானிப்புக்கள்.

5.   மக்கள் நல கூட்டணி, தேமுதிக, பாமக என பலரும் அதிமுகவை கடுமையாக எதிர்ப்பதாக காட்டிக்கொண்டாலும், ஜெ. அவர்களை எல்லாம் சீரியஸா எடுத்துக்கவில்லை என்பது புரிகிறது.  தமிழக மக்களால் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு ஒதுங்கி கிடக்கும் ஒரு கட்சியான, அதிலும் அதிகார பூர்வ எதிர்கட்சி கூட அல்லாமல் ஜஸ்ட் ஒரு மூன்றாம் இடத்தில் இருக்கும் ஒரு சாதாரண அரசியல் கட்சியான திமுகவை கண்டு தான் அவர் ஆடி போயிருக்கிறார் என்பது பட்டவர்த்தனமாக புரிகிறது.

“எனக்கு நண்பனா இருக்க எந்த தகுதியும் தேவை இல்லை. ஆனா எதிரியா இருக்க தகுதி வேணும்” என்கிற சினிமா வசனத்தை தான் ஜெ. இதர கட்சிகளுக்கு மறைமுக செய்தியா சொல்லி இருக்கிறார்னு நான் நினைக்கிறேன்.

6.   தமிழகம் முழுவதும் நடந்த “நமக்கு நாமே” பயணம் திமுகவில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கோ இல்லையோ, தமிழக மக்கள் மனநிலையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கு என்பதை ஜெ. நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்கார். அதனால் தான் “ஐயோ பாவம் அந்த ஆடு இப்படி நனையுதே”ன்னு பரிதாபப்பட்டு பேசி இருக்கார். இப்போதைக்கு மகன் தந்தைக்காற்றும் உதவி என்பது, ஜெ. விரித்த வலையில் வீழாமல் கட்சியின் கட்டுப்பாட்டை காப்பது மட்டும் தான் என்பது ஸ்டாலினுக்கு தெரியாததா என்ன?

இனி இதை திமுக எப்படி கையாள போகுது என்பதில் இருக்கிறது, தமிழக அரசியலின் அடுத்த கட்டம்.

இந்த தேர்தல் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே என்பதை நேற்றைய பேச்சின் மூலம் தெளிவாக சொல்லி விட்டார். அதிலும், கலைஞர் அல்லாமல் ஸ்டாலின் தலைமையில் இந்த தேர்தல் இருக்கவேண்டும் என்பதையும் மறைமுகமாக சொல்லி விட்டார். அவர் அவருக்கு வசதியான வியூகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதை புரிந்து கொள்ளும் திறன் திமுகவுக்கு உள்ளது. தக்கன தக்கபடி தக்கசமையத்தில் திமுக கைக்கொள்ளும் என்பது புரிந்தாலும், அது என்ன மாதிரியான நடவடிக்கை என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்குது.



Saturday, January 23, 2016

ஜெ. வழக்கு – இப்போதைய ஆப்ஷன்ஸ் – பாகம் 3

டந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெ.வை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தபின் பல பல சம்பவங்கள் நடந்தேறி விட்டன.

கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. உச்சநீதிமன்றம் இரு நீதிபதிகளை கொண்ட பெஞ்சை நியமித்தது. நவம்பர் 23 ஆம் தேதி நடந்த விசாரணையில் ஜெ. விடுதலைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் விசாரணையை மீண்டும் விரிவாக நடத்த முடிவு செய்து வழக்கை ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. டிசம்பர் 2 ஆம் தேதி தலைமை நீதிபதி தாத்து ஓய்வு பெற்று புதிய தலைமை நீதிபதியாக திரு தாக்கூர் பதவி ஏற்று கொண்டிருக்கிறார். விசாரணை நடக்க இருந்த ஜனவரி 8 ஆம் தேதிக்கு முந்தைய நாள் அதாவது ஜனவரி 7 ஆம் தேதி, என்ன காரணத்தாலோ ஜெ. வழக்கு விசாரணை நீதிபதிகளில் ஒருவரை அதிரடியாக மாற்றம் செய்தது.

ஜனவரி 8 ஆம் தேதி விசாரணை நடக்குமா நடக்காதா என்கிற சந்தேகம் கடைசி நிமிடம் வரை நீடித்தாலும், குறிப்பிட்டபடி கோர்ட் ஹால் 11 இல் விசாரணை நடந்தது. அதில் வழக்கை பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்றிலிருந்து தொடர்ந்து தினசரி விசாரணை நடைபெறும் என்றும், அதற்குள்ளாக அனைத்து தரப்பினரும் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் கர்நாடக அரசு, ஜெயலலிதா, திமுக என அனைவரும் ஆஃபிடவிட் தாக்கல் செய்துவிட்டனர். 

விடுதலை தீர்ப்பு பிழையானது என கர்நாடக அரசும், தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என ஜெயலலிதாவும், தீர்ப்பில் முக்கியமான 25 அம்சங்களை கருத்தில் கொள்ளவில்லை என திமுகவும் பதில் மனுவில் சொல்லி இருக்கிறார்கள்.



இனி நாம ஜாலியாக யூகிக்கலாமா?

ஜெயலலிதா தாக்கல் செய்திருக்கும் பதிலில் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்பதை சொல்லி இருப்பதோடு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லி இருக்கிறார். அதாவது கர்நாடக அரசுக்கோ, திமுகவுக்கோ இந்த வழக்கில் அப்பீல் செய்ய எந்த அதிகாரமும் இல்லை என்பது தான் அது. ஒரு வகையில் இது தான் உண்மையும் கூட.

ஜெயலலிதா மீது புகார் கொடுத்தவர் சுப்ரமணியம் சுவாமி. அதன் அடிப்படையில் வழக்கு தொடுத்தது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார். வழக்கு நேர்மையாக நடக்காததால், உச்சநீதிமன்றம் தலையிட்டு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியது. கர்நாடகம் பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கை நடத்தியது. கர்நாடகம் வழக்கை நடத்தினாலும் அது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தான் நடத்தியது என்பதை கவனிக்கவும்.

கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன் இந்த வழக்கு முடிஞ்சு போச்சு. அந்த தீர்ப்பை ஏற்று கொள்வதா எதிர்த்து அப்பீல் செய்யணுமா என்பதை முடிவு செய்யவேண்டியது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தான். அவர்கள் அப்பீல் செய்ய எந்த முடிவும் எடுக்காத நிலையில், கர்நாடக அரசு தானாக முன்வந்து அப்பீல் செய்திருக்கிறது. இது தான் இங்கே பிரச்சனை.

உதாரணமாக நீங்கள் ஒரு வழக்கை தொடுக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். நீங்கள் தொடுத்த வழக்கில் நீங்கள் தோற்றுவிட்டீர்கள். மேற்கொண்டு அதை வளர்க்க நீங்கள் விரும்பவில்லை. ஆனால் உங்கள் வக்கீல் உங்களை கேட்காமல் வழக்கை நடத்த தொடங்கினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

இது தான் இப்போதைய நிலை.

ஜெயலலிதா சொல்ல வருவது என்னவென்றால், அப்பீல் செய்யவேண்டியது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தான். அவர்களை தவிர வேறு யார் அப்பீல் செய்தாலும் அதை ஏற்று கொள்ள கூடாது என்பது தான். உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் கர்நாடகத்தின் பணி முடிஞ்சிருச்சு. புகார் கொடுத்த சுவாமியின் புகாரை விசாரித்து தமிழக போலீஸ் வழக்கு நடத்த ஆரம்பித்தவுடன் சுவாமியின் அப்பீல் அதிகாரமும் முடிஞ்சுபோச்சு. திமுக ஜஸ்ட் துணை புகார்தாரர் தான். அதனால் அவர்களுக்கு எந்த வித தார்மீக அதிகாரமும் இல்லை. இப்போதைக்கு ஜெயலலிதா விடுதலையால் பாதிக்கப்பட்டது யார் என பார்த்தால் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் மட்டும் தான். ஏனென்றால் அவர்களால் நடத்தப்பட்ட வழக்கு தான் தோற்று போயிருக்கு. அதை அப்படியே ஏற்று கொள்வதா அல்லது எதிர்த்து போராடுவதா என்பதை தமிழக போலீஸ் மட்டும் தான் முடிவு செய்ய முடியும். எனவே ஜெயலலிதா சொல்லி இருக்கும் இந்த பாயிண்ட் கொஞ்சம் சக்தி வாய்ந்ததாக நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

ஒருவேளை பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கும் விசாரணையின் அடிநாதமாக இந்த பிரச்சனை இருக்குமானால், உச்ச நீதிமன்றம், அப்பீல் செய்ய தகுதி உடையவர்கள் யார் என விசாரிப்பதிலும், கர்நாடக அரசுக்கு அப்பீல் செய்ய தகுதி உள்ளதா என ஆராய்வதிலுமே காலத்தை கடத்தி கொண்டிருக்கும். சொத்து குவித்த விவரம், ஆவணங்கள், குன்ஃகா & குமாரசாமி ஆகியோரின் தீர்புகள் குறித்த ஆய்வுகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அப்படி ஒரு சூழலை நோக்கி விசாரணை நகருமானால் இந்த அப்பீல் நிற்காது.  ஜஸ்ட் லைக் தட் “அப்பீல் விசாரணைக்கு உகந்ததல்ல” என சொல்லி தள்ளுபடி ஆகிவிடக்கூடும்.  தமிழக போலீஸ் தான் அடுத்து அப்பீல் செய்ய முடியும். அப்படி அப்பீல் செய்ய முதல்வர் என்கிற முறையில் ஜெயலலிதாவின் ஒப்புதல் வேண்டும். ஜெயலலிதாவை சிறைக்கு தள்ள ஜெயலலிதாவே எப்படி ஒப்புதல் கொடுப்பார்?

இன்னொரு ஆங்கிள் இருக்கு.

தாக்கூர் மிக நேர்மையானவர் என சொல்லப்படுபவர். சமீபத்தில் கூட அவர் ஊழலை மிக கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். இந்த ஜெ.சொத்து குவிப்பு வழக்கில் கூட நீதிபதி ஒருவரை அதிரடியாக மாற்றி இருக்கிறார். மாற்றப்பட்ட அகர்வால் தான் நவ 23 ஆம் தேதி விசாரணையில், ஜெ.வுக்கு ஆதரவாக கருத்து சொல்லி விடுதலைக்கு தடை விதிக்க மறுத்தவர். அவரை நீக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், அப்பீலுக்கான தகுதி என்பதை கருத்தில் கொள்ளாமல் வழக்கின் தன்மை என்பதை கவனித்து பார்க்குமேயானால் என்ன நடக்கும்?

வழக்கை நடத்த நியமிக்கப்படும் அமைப்பு அந்த வழக்கின் இறுதி முடிவு வரை தொடரலாம்னு ஒரு தீர்ப்பு இருக்கிறது. அதன் அடிப்படையில் கர்நாடக அரசு ஜெ. சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு வரை தொடர்ந்து வாதாடலாம்னு உச்ச நீதிமன்றம் முடிவு செய்யக்கூடும். அந்த அடிப்படையில் கர்நாடகத்தின் அப்பீலை ஏற்று விசாரிக்கலாம்.

குமாரசாமி கொடுத்திருக்கும் தீர்ப்பு அப்பட்டமான பிழை என்பதால், நேரடியாக அதை ரத்து செய்யலாம். அப்படி அந்த தீர்ப்பு ரத்தானால் ரத்தான நொடியில் இருந்து ஜெ. முதல்வராக தொடர முடியாது. மீண்டும் சிறை. (ஆனால் ஒரு வசதி. கர்நாடக சிறையில் இருக்க வேண்டியதில்லை. தமிழக போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக சிறைகளில் இருக்கலாம்.)

ஜெ.வின் குற்றம் உறுதி செய்யப்பட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். குன்ஃகா விதித்த அபராத தொகை 100 கோடியும் செலுத்தவேண்டும்.

ஒருவேளை தற்போதைய சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஜெ. மீது மென்மையான நடவடிக்கை எடுத்தால் போதுமென உச்ச நீதிமன்றம் முடிவெடுத்தால், அதே நேரம் சட்டத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையும் ஏற்பட கூடாது என உச்ச நீதிமன்றம் முடிவெடுத்தால்...

தினசரி விசாரணையை உச்ச நீதிமன்றமே நடத்தி தீர்ப்பு வழங்கலாம் அல்லது மீண்டும், கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கே வழக்கை திருப்பி அனுப்பி ஒரு தனி பெஞ்ச் அமைத்து விசாரிக்க சொல்லலாம்.

உச்சநீதிமன்றமே விரிவாக விசாரித்து குறைந்த பட்ச தண்டனை விதிக்கலாம். (இரண்டு வருஷத்துக்கு கூடுதலாக தண்டனை கிடைத்தால் தான் தேர்தலில் நிற்க முடியாது. 18 மாத தண்டனை கொடுத்தால் போதும். ஜெ.வுக்கும் பிரச்சனை இல்லை. உச்சநீதிமன்றம் சட்டப்படி செயல்பட்டதாகவும் சொல்லி கொள்ளலாம். இரண்டு வருசத்துக்கு குறைவான தண்டனை என்றால் சிறைக்கும் செல்ல வேண்டியதில்லை. ஜாமீனிலேயே காலம் கழிக்கலாம். முதல்வராகவும் தொடரலாம்)

கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் வழக்கு மாற்றப்பட்டால், மீண்டும் முதலிலிருந்து விசாரணை தொடங்கும். அந்த வழக்கு முடிய ஒரு வருடத்துக்கு மேல் ஆக கூடும். அப்படியானாலும் வரும் மே மாத தேர்தலில் ஜெ. போட்டியிடவோ முதல்வராக தொடராவோ எந்த தடையும் இல்லை.


இப்போதைக்கு உச்ச நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்பது அண்ணன் ஓ.பி.எஸ்ஸின் ஜாதகத்தை பொறுத்து இருக்கிறது.

*************

தொடர்புடைய பதிவுகள்:

Tuesday, January 12, 2016

ஜல்லிக்கட்டு – இருக்கா இல்லையா?

மிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்து மத்திய அரசு 2011 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அரசாணை வெளியிட்டதில் தொடங்கியது இந்த அரசியல் விளையாட்டு.

2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் அரசாணையை அங்கீகரித்து தீர்ப்பு சொன்னது.

அதன் பின் இத்தனை நாள் மெத்தனமாக இருந்துவிட்டு இப்போது ஜல்லிக்கட்டை நடத்தியே ஆகணும்னு எல்லாரும் ஒத்தை காலில் நிக்க ஆரம்பிச்சிருக்கிறதுக்கு தேர்தல் மட்டுமே காரணம் என நான் சொல்லமாட்டேன்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் ஒட்டும் உறவுமான ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்தவேண்டும் என்கிற ஆவலும் வேட்கையும் ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் எப்போதும் இருப்பது தான். ஆனால் நீதிமன்ற தடையை விலக்குவதற்கான எந்த நடவடிக்கையையும் அரசும் மக்களும் எடுக்காமல், மத்திய அரசின் மூலமாக ஒரு அரசாணையை பெறுவதற்காக மட்டுமே போராடியதன் வெற்றி தான் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி மத்திய அரசு ஜல்லிக்கட்டை அனுமதித்து வெளியிட்ட அரசாணை.

அந்த அரசாணை வெளியிட்டது சரியா? அது சட்டப்படி செல்லுமா? உச்சநீதிமன்ற தடையை மத்திய அரசின் அரசாணையால் தகர்க்கமுடியுமா என்கிற தர்க்கரீதியான ஆய்வுகள் எதையும் செய்யாமல், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை போற்றி புகழ்வதிலும் கொண்டாடுவதிலுமே நாம் காலத்தை கடத்திக்கொண்டிருந்ததால், அந்த மத்திய அரசின் அரசாணைக்கு எதிராக PETA உச்சநீதிமன்றம் சென்று இன்று தடையானை வாங்கிவிட்டது.


ஜல்லிக்கட்டை முன்பு தடை செய்து உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திருமதி பானுமதி அவர்கள் தான் இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிப்பதாக இருந்தது. நல்லவேளையாக அவரே தானாக முன்வந்து இந்த வழக்கில் இருந்து விலகிக்கொண்டதால் நீதிபதிகள் தீபக் மிஸ்ராவும் என்.வி. ராமனாவும் வழக்கை விசாரித்திருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு என்பது மனித விழாவில் மிருக விளையாட்டு என்பதால் அதை விலங்குகளின் வழக்கத்துக்கு மாறான கொடூரம் என குறிப்பிட்டு, தடையை நீடித்திருக்கிறார்கள். அதாவது புதிதாக தடை விதிக்கவில்லை. ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு விதித்த தடையையும், அதை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் 2014 ஆண்டின் உத்தரவையும் மீண்டும் தொடர செய்திருக்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதானால், 2011 ஆம் ஆண்டின் அரசாணையையும், 2014 ஆம் ஆண்டின் தீர்ப்பையும் மீறி இப்போது ஜனவரி 7 ல் மத்திய அரசு வெளியிட்ட அரசாணை செல்லாது என்று சொல்லி இருக்கிறார்கள். சட்ட ரீதியில் இது சரியே!

ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது எனது நிலைப்பாடாக இருந்தாலும் அதை சட்ட ரீதியில் போராடி, நீதிமன்றத்தில் வழக்காடி, இந்த விளையாட்டின் தாத்பரியங்களை விளக்கி, பாரம்பரியமிக்க இந்த விளையாட்டை சட்டப்பூர்வமாக நடத்த அனுமதி பெற்று நடத்தி இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். மாறாக சட்ட ரீதியான முயற்சிகள் எதுவும் செய்யாமல் குறுக்கு வழியில் அரசாணை வெளியிடவைத்து சிறுமைப்பட்டிருக்கவேண்டாம் என்கிற வருத்தமும் இருக்கிறது.

தடையாணை கேட்டு PETA உச்ச நீதிமன்றத்துக்கு ஓடிய வேகத்தில் பாதியாவது கடந்த ஒரு வருஷத்தில் நமக்கு இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. இருந்திருந்தால் சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்தில் வாதாடி முறையான அனுமதி பெற்றிருக்க முடியும். அதை விட்டுவிட்டு அவரையும் இவரையும் கெஞ்சி ஒரு அரசாணை வாங்கி நீதிமன்றத்தால் அது செல்லாது என பட்டவர்த்தனமாக வாங்கி கட்டி கொண்டிருக்கவேண்டாம் நாம்.

அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்ய இன்னும் நிறைய அவகாசம் இருந்தாலும், பொங்கல் நெருங்கும் இந்த நேரத்தின் அவசரம் கருதி இப்போதேனும் சுதாரித்து உச்ச நீதிமன்றத்தை அவசரமாக அணுகி, தகுந்த வழக்கறிஞ்சரை வைத்து விளக்கி வாதாடி இந்த பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே எனது ஆவல். அதற்கு தக்கதாக உத்வேகத்தை நமது அரசுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக!



சபரிமலை – பெண்களுக்கும் வழிபாட்டுரிமை

பரி மலையில் பெண்களை ஏன் தரிசனத்துக்கு அனுமதிக்கக்கூடாதுன்னு உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்கு. இதை நான் வரவேற்கிறேன்.

2006 ஆம் வருஷம் தொடரப்பட்ட ஒரு வழக்கில் தான் இந்த முன்னேற்றம்.



பெண்களுக்கும் வழிபாட்டு உரிமையை தரவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. 1965 ஆம் ஆண்டு கேரளா அரசு இயற்றிய தடை ஆணையை எதிர்த்து தான் இந்த வழக்கு நடந்துட்டு இருக்கு. இதில் நீதிபதிகள் கேட்ட கேள்விகள் அனைத்தும் மிக மிக லாஜிக்கானவை.

1500 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் அந்த கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதற்கு ஆதாரம் உள்ளதா? பெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பதால் என்ன பிரச்சனை வந்துவிடும் என்றெல்லாம் கேட்டிருக்கிறது நீதிமன்றம்.

என்னை பொறுத்தவரை....

இடையில் நுழைக்கப்பட்ட சம்பிரதாயங்களை பெரிதுபடுத்த தேவை இல்லை. பெண்களுக்கும் வழிபாட்டு உரிமை கொடுக்கப்படவேண்டும் என்று தான் சொல்வேன்.

41 நாட்கள் விரதம் இருந்து தான் கோவிலுக்கு வரமுடியும். ஆனால் 41 நாட்களுக்கு இடையில் பெண்களுக்கு மாதவிலக்கு வரக்கூடும் என்பதால் அவர்களால் முறையாக முழுமையாக விரதத்தை கடைபிடிக்க முடியாது. அதனால் தான் அனுமதிப்பதில்லை என தேவசுவம் போர்டு கோர்ட்டில் தெரிவித்து இருக்கிறது. மலைக்கு செல்லும் எல்லோரும் 41 நாட்கள் விரதம் இருந்து செல்வதில்லை. மூன்று நாள் விரதம் இருந்து கூட பலரும் கோவிலுக்கு வருகிறார்கள். அதை தேவசுவம் போர்டும் ஏற்று கொண்டிருக்கிறது. அதே விதிவிலக்கை பெண்களுக்கும் அளிக்கலாம்.

ஐயப்பன் பிரம்மச்சாரி கடவுள் என்பதால் பெண்களை அனுமதிக்கமுடியாது என சொல்வோருக்கு அனுமன் கோவிலில் வழிபட பெண்களுக்கு தடை இல்லை என்பதே சிறந்த பதில்.



மிகுந்த கூட்ட நெரிசலில் பெண்களை பாதுகாப்பது கஷ்டம் என சொல்வதை ஒரு வகையில் ஏற்று கொள்ளலாம். அப்படியானால், அந்த சீசன் காலம் தவிர பிற மாதங்களில் நடை திறக்கும் நாட்களில் பெண்களை வழிபட அனுமதிக்கலாமே?

முன்பெல்லாம் அது காட்டுவழியாக இருந்ததால் பெண்களை பயணிக்கவேண்டாம் என சொன்னார்கள். மேலும் பெருவழிப்பாதை மிக நீண்ட தூரம் என்பதால் பெண்களால் நடக்க முடியாது என்பதும் ஒரு காரணமாக இருந்தது. இப்போது மிக பாதுகாப்பான வழித்தடம் உருவாக்கப்பட்டு பாம்பா வரை வாகனங்கள் செல்லவும் அங்கிருந்து சிறுவழி மூலம் சீக்கிரமாக கோவிலை அடையவும் ஏற்பாடு செய்தபின் அந்த காரணமும் அடிபட்டு போய்விட்டது.

பெண்கள் என்கிற காரணத்துக்காக வழிபாட்டு உரிமையை மறுப்பதை என்னால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வரும் ஜனவரி 18 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி இருக்கிறது நீதிமன்றம். பெண்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு ஏதேனும் ஏற்கதக்க நியாயமான காரணங்கள் இருந்தால் தேவசுவம் போர்டு அதனை சமர்ப்பிக்கலாம். அப்படி லாஜிக்கான காரணங்கள் எதுவும் இல்லை எனில் பெண்களுக்கும் வழிபாட்டு உரிமையை வழங்க நீதிமன்றம் முன்னெடுப்பு செய்யவேண்டும் என்பதே எனது ஆவல்.

Printfriendly