Saturday, December 31, 2011

திமுகவின் குடும்ப அரசியல்!



இணைய தளங்களிலும் அரசியல் அரங்கத்திலும் மிக நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் திமுகவின் குடும்ப அரசியல் என்பது. திமுக என்றாலே வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்கிற ஒரு கருத்து பரவலாக நிலவி வருகிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை!

வாரிசு முறை என்பது உலகம் முழுதும் அனைத்து துறைகளும் இருக்கக்கூடிய ஒன்று தான். இந்தியாவும் தமிழகமும் அதில் விதி விலக்கல்ல. தொழில்துறை, விஞ்ஞானம், மருத்துவம் என பல துறைகளிலும் வழி வழியாக வாரிசு முறை கொண்டு வரப்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

நாட்டின் பல மாநிலங்களிலும் பல கட்சிகளிலும் நீண்டகாலமாக நிலவி வரக்கூடியது தான் குடும்ப அரசியல்  / வாரிசு அரசியல் என்பது. இதில் விதி விலக்கான கட்சிகளே இல்லை. தமிழகத்தை எடுத்ஹ்டுக்கொண்டால், திமுக பெரும் இயக்கமாக இருப்பதால் அது முன்னிலைப்படுத்தப்படுகிறது.  அதை சற்று விரிவாக பார்க்கலாம்!


குடும்ப கட்சியா கட்சி குடும்பமா?

திமுக என்பது குடும்பத்தை கட்சியாக கொண்டது என்கிற கருத்து ஊடக துறையினராலும் பிற அரசியல் இயக்கங்களாலும், அரசியல் அறியாத பல எழுத்தாளர்களாலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் எனது பார்வையில் திமுக கட்சியை குடும்பமாக கொண்டது எனவே கருதுகிறேன்.

கழகம் 1949 ல் துவங்கப்பட்டு பல்வேறு கடினமான காலகட்டங்களையும் கடந்து வந்ததும், தமிழகத்துக்கும் தமிழ் சமூகத்துக்கும் திமுக ஆற்றிய சேவைகள், அதற்கான போராட்டங்கள், கைதுகள் என பலவும் எல்லோரும் அறிந்த ஒன்றே. எனவே அதை பற்றி எல்லாம் விவாதிக்காமல் குடும்ப அரசியல் என்கிற ஒன்றை மட்டும் இப்போது விவாதிப்பது தகும் என கருதுகிறேன்.




திமுகவில் இப்போது முதன்மை குடும்பத்தின் வாரிசுகளாக ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, தயாநிதி ஆகியோர் உள்ளனர். ஆனால் இவர்கள் எல்லோருக்குமே சமீபத்தில் தான் பொறுப்புக்களும் பதவிகளும் கொடுக்கப்பட்டன.

ஸ்டாலினை பொறுத்த வரை கட்சியில்
30 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராக இருந்து பல போராட்டங்களில் பங்குகொண்டு சிறை தண்டனைகளை அனுபவித்து படிப்படியாக கிளைக்கழகம், இளைஞ்சர் அணி, எம்.எல்.ஏ, மேயர், அமைச்சர், துணை முதல்வர், கட்சியின் பொருளாளர், துணை பொதுசெயலாளர் என முன்னேறியவர். ஸ்டாலினை பொறுத்தவரை அவருக்கு தாமதாமாக தான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என மாற்று கட்சியினரும் கருத்து தெரிவித்தது உண்டு.

சரி! அப்படியானால் கட்சிக்காக உழைத்தவர்களை கண்டுகொள்ளவில்லையா கழகம்?

குடும்ப வாரிசுகளுக்கு பதவிகளும் பொறுப்புக்களும் கொடுப்பதற்கு முன்பாக பல காலமாகவே கழகத்துக்காக பாடுபட்டவர்களை உரிய முறையில் கவுரவித்து வந்திருக்கிறது திமுக.

மிக சில உதாரணங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், தங்கபாண்டியனின் பிள்ளைகள்.  பரிதி இளம் வழுதி இளம்பரிதியின் மகன். பழக்கடை ஜெயராமனின் மகன் தான் ஜெ. அன்பழகன். கீதா ஜீவன் கருப்பசாமி பாண்டியனின் மருமகள்.   பூங்கோதை அருணா, ஆலடி அருணாவின் மகள். ஐ.பி.செந்தில் திண்டுக்கல் பெரியசாமியின் பிள்ளை.  வானூர் ஏ.ஜி சம்பத் அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அ.கோவிந்தசாமியின் மகன். இப்படி எல்லா மாவட்டங்களிலும் பலப்பல கழக மறவர்களின் வாரிசுகளுக்கு எல்லாம் உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும், பதவியும் கொடுத்து அழகு பார்த்ததற்கு பின்னர் தான் முதன்மை குடும்பத்தில் இருந்து ஒருவருக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

மொத்த கழகமும் குடும்பம், கழக உறுப்பினர்கள் எல்லோருமே குடும்பத்தினர் என்கிற பார்வை இருந்ததால் தான் இத்தனை முக்கிய பிரமுகர்கள், கொள்கை பிடிப்போடு திமுகவில் இருந்து வருகின்றனர் என்பதை எல்லா கட்சியினருமே ஒப்புக்கொண்டுள்ளார்கள்.


உட்கட்சி ஜனநாயகம்!

திமுகவில் உள்ள இன்னொரு சிறப்பு அம்சம், உட்கட்சி ஜனநாயகம்.

இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் எந்த கட்சியோடு ஒப்பிட்டு பார்த்தாலும், முறையாக தேர்தல் நடத்தி சீராக பல ஆண்டுகளாக இயங்கி வருகிற ஒரு இயக்கம் திமுக.  மேலும் தமிழகத்தில் எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகமாக இருப்பதும் திமுகவில் தான்.


 இன்றைய தேதியில் பார்த்தால் கூட, பொன்முடி, துரை முருகன், ஆற்காட்டார், அன்பழகன், வீரபாண்டியார், மூக்கையா, கருப்பசாமி பாண்டியன், சாத்தூரார் என முக்கிய மூத்த தலைவர்களும், பிராந்திய அளவில் மாவட்ட அளவில் முக்கிய பிரமுகர்களும் உரிய முக்கியத்துவத்தொடும் பிரபல்யத்தொடும் இருப்பதை எல்லோரும் அறிவர்.

இவர்கள் சுயமாக தங்கள் கருத்துக்களை வெளியிடவோ, பொதுக்கூட்டங்களில் சுந்தந்திரமாக கருத்து சொல்வதற்கோ எந்த தடையும் விதிக்கப்பட்டு இருக்க வில்லை. மாற்று கட்சியில் இருந்து வந்து இணைந்தவர்களுக்கும் அதே முக்கியத்துவமும் மரியாதையும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது!

ஒரு ஒப்பீட்டுக்காக தமிழகத்தின் பிற கட்சிகளை எடுத்துக்கொள்வதானால், பெரும்பாலான காட்சிகளில் இரண்டாம் கட்ட செயல் தலைவர்கள் என்பதே இல்லை.

மதிமுக, பாமக, நாம் தமிழர், இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், சமத்துவ மக்கள் கட்சி, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் போன்ற எந்த கட்சியாக இருந்தாலும், தலைவர், தலைவர் குடும்பம் தவிர வேறு யாரையும் பிரபலமாக ஆக்க விடுவதில்லை. எல்லோருமே அடக்கி வைக்கப்பட்டவர்கலாகவே இருந்து வருவதை நான் கண்கூடாக கண்டு வருகிறோம்.


அதிமுகவை பொறுத்தவரை இரண்டாம் கட்ட தலைவர்கள் மிக சிலர் இருந்தாலும், அவர்களால் சுயமாக செயல்பட முடிவதுமில்லை, அவர்கள் முக்கியத்துவபடுத்த படுவதும் இல்லை. அப்படி ஒரு வேலை முக்கியத்துவத்தை நோக்கி முன்னேருகையிலேல்லாம் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். பல பல உதாரணங்கள் இருந்தாலும், திருநாவுக்கரசர், எஸ்.டி.எஸ், சாத்தூரார், முத்துசாமி என குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள் சிலர்.

பொதுவான நோக்கில் பார்க்கையில், திமுக தனது கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுப்பதோடு, உரிய பதவிகளில் அமர்த்தி அழகு பார்க்கிறது, இரண்டாம் நிலை செயல்வீரர்களாக அவர்களை மேம்படுத்துகிறது, உட்கட்சி ஜனநாயகத்தை காப்பாற்றி வருகிறது என்பதை அரசியல் அறிந்த விமர்சகர்கள் யாவரும் அறிவர்.

ஏன் இப்போது இந்த பதிவு?

இன்றைக்கு இணைய தளங்களிலும் பிற ஊடகங்களிலும் திமுகவை குறித்து ஒரு தவறான சித்தரிப்பு இருந்து வருகிறது. காரணம் அரசியல் வரலாறு முழுமையாக அறியாத, அறிய முயலாத பல பல எழுத்தாளர்கள் பெருகி விட்டதும், அப்படியான எழுத்தாளர்களின் சொற்கள் வேதவாக்காக கருதப்பட்டு வருவதும், அதில் சில முக்கிய எழுத்தாளர்களின் கருத்துக்கள் பிரபல ஊடகங்களில் வெளியாவதும், உண்மையின் உண்மை நிலையை உண்மையாக உரைத்தாமல் போய்விடுகிறது.  எனவே உண்மையில் எது தான் உண்மை என சீர்தூக்கி பார்க்க விரும்பும் மிக சிலருக்கான பதிவாகவே இதை பதிந்து அமைகிறேன்.

3 comments:

  1. ஒரு சிறந்த பதிவு !
    அண்ணாவுக்கு பிறகு திமுகவை...
    மன்னிக்கவும்.... அது அண்ணா திமுக என்றாகிவிட்டதே காலத்தின் கொடுமை !

    ReplyDelete
  2. உங்கள் கருத்துகளோடு உடன்படுகிறேன்...>>அரசியல் வரலாறு முழுமையாக அறியாத, அறிய முயலாத பல பல எழுத்தாளர்கள் பெருகி விட்டதும், அப்படியான எழுத்தாளர்களின் சொற்கள் வேதவாக்காக கருதப்பட்டு வருவதும்<<<...இதிலும் உண்மை! typing error உள்ளது, தவிற்கவும்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு..வாழ்த்துக்கள்...கீதா ஜீவன் தூத்துக்குடி பெரியசாமியின் மகள்..கருப்பசாமிபாண்டியனின் மருமகள் அல்ல..

    jokin

    ReplyDelete

Printfriendly