Wednesday, February 27, 2013

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம்!


த்திய அரசு நேற்றைய தினம் தனது ரயில்வே பட்ஜெட்டை தாக்கல்செய்திருக்கிறது. நிறைய நல்ல திட்டங்கள் பரவலாக அமைந்திருக்கிறது பட்ஜெட்டில். அவற்றுள் குறிப்பிடத்தக்கனவாக, இணையதள முன்பதிவு வசதி மேம்படுத்தப்படுவது, ரயில்வே உணவு விடுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை, இலவச இணைய தள வசதி, 100 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை நவீனமயமாக்குதல், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரயில் இணைப்பு, வேலை காலியிடங்களை நிரப்புதல், அதிநவீன சொகுசு பெட்டி ஒன்று குறிப்பிட்ட ரயில்களில் இணைத்தல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5 ரயில்பெட்டி தொழிற்சாலை என அறிவிப்புக்கள் அட்டகாசமாக இருக்கின்றன.
 
(திருச்சி-கும்பகோணம் டீசல் மல்டிப்பிள் யூனிட்)

ஆனால், அதனிடையே அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களும் உள்ளன. லாலு பிரசாத் காலத்தில் 16,000 கோடி ரூபாய் உபரி காட்டிய ரயில்வே துறை இப்போது 24,200 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருப்பதாக ஒரு அணுகுண்டை வீசியதோடு, மறைமுக கட்டண உயர்வாக, முன்பதிவு கட்டணம், தத்கல் கட்டணம் ஆகியவையும், சரக்கு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த பொது நோக்கில் பார்க்கையில், இந்த பட்ஜெட் அப்படி ஒன்றும் பாதகமான பட்ஜெட் அல்ல என்றும், திட்டங்களின் அடிப்படையில் நாட்டின் வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட் என்றும் சொல்ல முடிகிறது. (நிதி நிலையை தவிர. அது ஒன்று தன் இன்னமும் என்னால் ஜீரணிக்கமுடியாமல் இருக்கிறது!)

நான் நம் தமிழகத்துக்காக என்ன இருக்கிறது என்பதை தான் அதிகம் கவனித்தேன். என்னை பொறுத்தவரை இது மிக மிக அருமையான தமிழக வளர்ச்சிக்கான பட்ஜெட் என அடித்து சொல்வேன்! அதை பற்றி இனி விரிவாக பேசலாம்! (நீளம் ஜாஸ்தியானால் மன்னிக்கவும்!)

புதிதாக விடப்பட்ட 67 எக்ஸ்பிரஸ் ரயில்களில் தமிழகம் பெறுவது 14 ரயில்கள். திருச்சியில் தொழில்நுட்ப பயிற்சி மையம். 8 ரயில்களின் தூரம் நீட்டிப்பு, 6 ரயில்களின் சேவை அதிகரிப்பு, 7 வழித்தடங்கள் இரட்டை பாதையாக்கம், புதிய ரயில்பாதைகள் என அசத்தலாக பெற்றிருக்கிறது தமிழகம்.

ஏற்கனவே நான் பலமுறை சொன்னதை போல, தமிழ்கம் பரவலாக ரயில்வே லைன்களால் பின்னலிடப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் ரயில்வே அடர்த்தி தமிழகத்தில் 31% ஆக உள்ளது. (கர்நாடகத்தில் 16%, கேரளா 9%) இப்போது மேலும் இந்த அடர்த்தியை அதிகரிக்கும் நோக்கில், குறுக்கு பாதைகள் இடப்படுகிறது. அவற்றுள் மிக முக்கியமானவைகளை மட்டும் பார்க்கலாம்.

ஆவடி – ஸ்ரீபெரும்புதூர் – கூடுவாஞ்சேரி : சென்னை-பெங்களூர் பாதையையும், சென்னை-திருச்சி பாதையையும் குறுக்குவெட்டாக இணைக்கவும், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் ஆகிய பகுதிகளை நேரடியாக அரக்கோணத்துடன் இணைக்கவும் இந்த புதிய வழித்தடம் உதவும். மேலும், ஒரகடத்தை மையமாக வைத்து பார்த்தால், பிற்காலத்தில் தாம்பரம்-ஒரகடம்-வாலாஜா-காஞ்சிபுரம் பாதைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரகடத்தில் அமைந்திருக்கும் பலப்பல தொழிற்சாலைகளுக்கு இந்த ரயில் பாதை ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை. வட இந்தியாவுக்கு நேரடியான சரக்கு ரயில் வசதி கிடைக்கும்.

முன்பு பயன்பாட்டில் இருந்து பின்னர் மூடப்பட்ட பேரளம்-காரைக்கால் பாதை மீண்டும் பயன்பாட்டுக்கு வர ஆய்வு: இதன் மூலம் காரைக்கால் செல்லும் ரயில்கள் திருவாரூர், நாகூர் என சுற்றவேண்டியதில்லை.

அரியலூர் – தஞ்சாவூர் பாதை: இது கார்டு லைன் என சொல்லப்படும் விருத்தாச்சலம்-திருச்சி பாதையை, மெயின் லைன் என சொல்லப்படும் கடலூர்-தஞ்சை பாதையுடன் குறுக்குவெட்டாக இணைகும். லப்பைக்குடிக்காடு, செந்துறை, ஜெயங்கொண்டசோழபுரம் போன்ற பகுதிகள் வளர்ச்சி அடையும் என நம்பலாம். மேலும், காரைக்கால் பகுதியிலிருந்து அரியலூர் வழியே நேரடி ரயில் (தஞ்சை, திருச்சி வராமல்) வசதிக்கும் வாய்ப்பு உள்ளது.

காரைக்குடி – திண்டுக்கல்; காரைக்குடி – மதுரை பாதைகள்: காரைக்குடி பகுதிக்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (ப.சிதம்பரம் அவர்கள் இதற்காக பெருமைப்பட்டுக்கொள்ளலாம்). இந்த இரண்டு புதிய பாதைகள் அமைவதன் மூலம் காரைக்குடி ஐந்து வழிகளை இணைக்கும் முக்கிய சந்திப்பாக மேம்படும். (ஏற்கனவே திருச்சி, மானாமதுரை, பட்டுக்கோட்டை தடங்களில் பாதைகள் உள்ளது) காரைக்குடி-திண்டுக்கல் பாதை மூலம் மேலூர், சிங்கம்புணர், நத்தம் போன்ற பகுதிகளும், ரயில் இணைப்பு பெறும்.

தருமபுரி – மொரப்பூர் இணைப்பு : சென்னை பெங்களூர் பாதை ஹோசூர் வழி செல்வதில்லை. ஆனால் ஹோசூர் வளர்ந்து வரும் ஒரு பெரும் தொழில் நகரம். சேலத்திலிருந்து ஹோசூர் வழியாக பெங்களூருக்கு ரயில் பாதை இருந்தாலும், சென்னையிலிருந்து நேரடியாக ஹோசூர் செல்ல முடியாது. அதனால், தருமபுரி-மொரப்பூர் இணைப்புப்பாதை மூலம், சென்னை-ஜோலார்பேட்டை-மொரப்பூர்-தருமபுரி-ஹோசூர் நேரடி ரயில் சேவை கிடைக்கும். இது தொழில்வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.

ஆற்காடு-வாலாஜாரோடு பாதை, பெங்களூர்-சத்தியமங்கலம் பாதை ஆகியன இன்ன பிற பாதைகள். இவை துண்டாக நிற்பதாக ஒரு தோணல் எனக்கு. பிற்காலத்தில் ஆற்காடு-செய்யார்-திருவண்ணாமலை மற்றும் சத்தி-புளியம்பட்டி-கோவை வழித்தடத்தில் பாதை அமைக்கும் திட்டம் இருக்கிறதோ என்னவோ, தெரியவில்லை!

நெல்லை-சங்கரன்கோவில் (வழி: பேட்டை, புதூர், செந்தாமரம், வீரசிகாமணி); ஆலூர்-நாகர்கோவில்-செட்டிக்குளம்; தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை பாதைகளும் இந்த ஆண்டில் பணிகள் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சேலம்-நாமக்கல்-கரூர் பாதை செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.

இவற்றையெல்லாம் பார்க்கையில் நிறைய குறுக்கு வெட்டு பின்னல் பாதைகள் நிறுவப்படுவது புரியும். இது தமிழ்கத்தின் அனைத்து பகுதிகளிலும் ரயில் சேவை கிடைக்க வழி செய்யும். சீரான பொருளாதார வாழ்வாதார வளர்ச்சிக்கும் அது உதவும்.

14 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், கோவை-மன்னார்குடி; கோவை-ராமேஸ்வரம்; சென்னை-பழநி; புதுச்சேரி-கன்னியாகுமரி; நாகர்கோவில்-பெங்களூரு ஆகியவை தான் புதிய ரயில் சேவைகள். இதில் நாகர்கோவில்-பெங்களூரு மிக நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் ரயில். பெங்களூரில் இருக்கும் தென் தமிழக மக்களுக்கு இது மிக பெரிய உதவியாக இருக்கும்.

கடலூர்-கும்பகோணம்-தஞ்சை/திருவாரூர் ரயில்பாதையை மீட்டர் கேஜ் பாதையிலிருந்து அகலப்பாதையாக மாற்றுவதற்காக நிறுத்தப்பட்ட ரயில்களில் சில மீண்டும் இயக்கப்படுகின்றன. அவை சென்னை-தஞ்சாவூர்; சென்னை-காரைக்குடி (பழைய கம்பன்?); சென்னை-வேளாங்கண்ணி லிங்க் (பழைய கம்பன் லிங்க்?) ஆகியன.

மங்களூர்-திருச்சி ரயிலை புதுச்சேரி வரை நீட்டித்திருக்கிறார்கள். இதன் மூலம் நீண்ட நாள் கோரிக்கையான கோவை-புதுவை நேரடி ரயில் வசதி கிடைக்கிறது. சென்னை-குருவாயூர் ரயிலின் ஒரு பகுதியை தூத்துக்குடிக்கு நீட்டித்து இருக்கிறார்கள். இதன் மூலம் தூத்துக்குடிக்கு ஒரு பகல் நேர ரயில் கிடைக்கிறது. சென்னை-திருச்சி பல்லவன் ரயில் இனி காரைக்குடி வரை இயக்கப்படும். இதன் மூலம் சென்னை-திருச்சி மார்க்கத்தில் எக்ஸ்க்ளூசிவ்வாக இருந்த ஒரே ரயிலும் பறிபோகிறது திருச்சிக்கு. (ஏற்கனவே இருந்த மலைக்கோட்டை ரயில் சென்னை-கும்பகோணம் ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது!)

பழநி-திருச்செந்தூர் இடையே புதிய (பாசஞ்சர்) ரயில் விடப்பட்டு இருக்கிறது. பழநி-சென்னை எக்ஸ்பிரஸ் திண்டுக்கல்-கரூர்-நாமக்கல்-சேலம்-ஜோலார் வழியாக இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. நாமக்கல், ராசிபுரம் பகுதிகள் சென்னைக்கு ரயில் இணைப்பை இதன் மூலம் பெறும். பின்னாளில் அரியலூர் முக்கிய சந்திப்பாக வளர்கையில் நாமக்கல்-அரியலூர் இணைப்பதன் மூலம் மத்திய தமிழகம் முழுமையாக ரயில்வசதி பெற்று விடும்.

மங்களூர் - கச்சேகுடா புதிய ரயில் கோவை பகுதியிலிருந்து ஹைதிராபாத்துக்கான மற்றுமொரு நேரடி ரயில் சேவையாக அமைகிறது. ஏற்கனவே இருக்கும் ‘சபரி’ போதாது என்பதை ரயில்வே உணர்ந்திருக்கிறது.

கோவை, திருப்பூர் பகுதிகளில் தொழில்நிமித்தமாக வந்து தங்கியிருக்கும் காவிரி டெல்டா மாவட்ட மக்களுக்கு, கோவை-மன்னார்குடி ரயில் உதவும். (நான் கோவை-நாகப்பட்டினம் ரயிலாக வரும் என எதிர்பார்த்திருந்தேன்!)

கோவை பகுதியில் நலிந்துவரும் தொழிற்சாலைகள் இனி பாலக்காடு நோக்கி இடம்பெயர நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கஞ்சிக்கோட்டில் (பாலக்காடு மாவட்டம்) புதிய ரயில் பெட்டி தொழிற்சாலை அமையப்போகிறது. கோவை எல்லையோர பகுதிகளில் சிறுதொழிற்சாலைகள் அமைய அது ஏதுவாகும். (தமிழக அரசு கோவையை தொழில்வளர்ச்சியில் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டது தனிக்கதை. அதை இன்னொரு சமயம் விரிவாக எழுதுகிறேன்!)

பொள்ளாச்சி-கோவை பாதையில் ஒரு பகுதியான பொள்ளாச்சி-கிணத்துக்கடவு பாதை இந்த ஆண்டு முழுமை அடையும் என்றும், கிணத்துக்கடவு-கோவை பகுதி அடுத்த ஆண்டு அமையும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு நீண்ட கால கோரிக்கை. மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகலப்பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருவதால், கோவை-பொள்ளாச்சி-உடுமலை-பழநி-திண்டுக்கல் பாதை மூடப்பட்டு இருக்கிறது. இந்த பாதை பணிகள் விரைவுபடுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் மேற்கு-தெற்கு தமிழக ரயில் இணைப்பு முழுமை பெறும்.

(நீலகிரி மலை இரயில்)

மலை ரயில்கள் நவீனமயமாக்கப்பட்டு ஸ்விசர்லாந்து, ஆஸ்டிரியா, ஆல்ப்ஸ் போன்ற ரயில்களின் தரத்துக்கு மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, பாரம்பரியமான நீலகிரி மலை ரயிலுக்கான விடிவுகாலம் ஆகும். (நான் ஒரு முறை அதில் பயணித்த ஞாபகம் மறக்கமுடியாதது. மெல்ல செல்லும் வண்ண ரதம் அது! இயற்கையோடு பயணிக்கும் அந்த வாய்ப்பை எப்போதும் தவறவிடாதீர்கள்!)

இப்படி பல விஷயங்கள் இருந்தாலும், முக்கியமான பாதைகளை மின்மயமாக்கல், இரட்டை பாதையாக்கப்படுதல், ஆகியவை குறித்த அறிவிப்புக்கள் இல்லாததும், கோவை-பெங்களூரு; கோவை-திருவனந்தபுரம்; சேலம்-புதுவை; பெங்களூரு-தஞ்சை(வழி மயிலாடுதுறை) போன்ற நீண்ட கால கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் வராததும் ஒரு வருத்தமே.

நாடு முழுக்க கவனிக்க வேண்டி இருப்பதால், அது பெரிய ஒரு குறையாக எடுத்துக்கொள்ளமுடியாது எனினும், அடுத்த பட்ஜெட்டிலாவது வரும் என எதிர்பார்க்க துவங்கலாம்.

பொது நோக்கில், தமிழகம் இந்த ரயில்வே பட்ஜெட் மூலம் அதிக நன்மைகளை பெற்றிருப்பதாக தான் உணர்கிறேன். 

தொடர்புடைய பிற பதிவுகள்:
1. Railway Budget 2013 - Expectations
2. Railway Budget 2013 - Expectations of TN
3. ரயில்வே - தமிழகத்தின் பார்வையில் - பாகம் 1
4. ரயில்வே - தமிழகத்தின் பார்வையில் - பாகம் 2
5. சேலம் கோட்ட ரயில்வே - தீரா பிரச்சனை
6. ரயில் பட்ஜெட் - தமிழகத்தை பொறுத்தவரை (2011)
7. தமிழகமும் ரயில்வே துறையும்




 

Tuesday, February 26, 2013

Montek and the Indian Economy




It was a very lazy day this Sunday. But while surfing the channels I stuck with an interesting debate on Headlines Today Channel, where the Economists, Students and Citizens are in debate with our Planning Commission Deputy Chairman Mr. Montek Singh Aluhwaliah.

I was thinking about him for a quite long time.. about his ideas, plans, implementations related to Economical growth / Economical Stability of India. Whenever I read his statements, I really impress at first and later realize the poor logic of his ideas. This is what happened this time too. Nothing changed

India is now undergoing a very very tough economical situation, but most of us are not aware of that. This is because of our Honorable Prime Minister Shri. Manmohan Singh and the Present Finance Minister Mr. P. Chidambaram are on the respective chair who never let the people know the toughest situation the nation passing now, and managing themselves with proper steps to keep the economy under control.
 
After Narasimha Rao & Manmohan Singh Combo; Manmohan Singh & Chidambaram Combo is the best pair of PM & FM. They done marvellous history on Indian Economy, without limelighting themself. They reduced the tax and brought several sector into tax regime, so that Government revenue increased. Controlled Government Spending and installed a check and balance mechanism to the Government Revenue. They also opened up the nation Globally, which now we are yielding its benefit by way of Rural development and Urbanisation equally throughout the nation.

You may be aware, that even during the worst of the worstest recession throughout the world, India was continuing its progressive economical growth with stability. That is because of these two people, who has the control and vision over Indian Economy.

Most of us won’t believe these facts, purely due to our own political wishes.

But this man, Montek always makes me surprise and ask myself, how he was placed at Planning Commission, whenever he announces something. Those may be funnier on first look but you can understand they are seriously cruel.

In the debate in "Headlines Today", he urged for improving Agriculture productivity. I applauded, but stopped immediately when he continued saying, Before taxing the Farmers, stop subsidizing them. Shocked. If you stop subsidy to agri sector and tax the farmers, how do you expect agricultural growth, when this nation always bargain the agri product prices? Agriculture is now surviving because of the Loans, Subsidy and tax benefits. Or otherwise, for the price guaranteed by the government, Agriculture business would have died a long back.  For example, Sugarcane’s Purchase Price by Government is around Rs. 1,000 per MT, whereas the production cost is about Rs. 2,200 per MT.  This is the case for all other crops. Paddy is too worst, and every Paddy farmer is pushed to the end of his life. Some suicided already, because of the losses.

Montek shows too happy that Rural Expenditure is growing, Government’s initiative to ease loan disbursement in Rural India is a hit and thus Rural Economy is growing and all.  I am not able to understand the logic behind this. For me, the situation what Mr. Montek is describing is something worryable. If Rural Expenditure is growing and Rural Loaning is also growing, it shows there is a decline of Rural Income. In simple words Spending grows because of Loans, or otherwise we can say, we are funding Loan for their spending. How it could be an impressive development of Rural India? I just cannot understand.

Montek wants the subsidies should go off. I too agree with this point but at certain extent. It cannot be applied to all the sectors. There are still some sectors (like Education, Medical, Agricultural, Transportation etc.,) which has to be subsidized by the government, to make it affordable by the common man. Because, India is not only a nation having people of richness, but there are people who cannot spend for a single food in three days time.

I fear Mr. Montek is seeing only people who are having appointed a person to put his shirt and not considering the people who are not having a Shirt at all.

This was confirmed, when he fixed the Below Poverty Line Limit. That was the funniest, foolish, ridiculous decision of any government.  When the question asked about this idiotic decision, Mr.Montek replied very cool, that the recommendation was given some five years back by Tendulkar committee and he implemented it as it is in condition (after five years!). Mr. Montek agreed that it is not practically acceptable now since the variation in Inflation and Statistical Expenditures are grown. Montek also clarified, Mr. Rangarajan Committee is now revisiting that policy and re working the issue. Its all ok, but don’t he never ever applied his mind when he implemented the ceiling to Below Poverty Line people? Who knows?
When the question on 'Aadhar Cards' came, his inability to answer properly is came to know to all. He says 'Aadhar Cards' are not  mandatorily necessary and the Number stores everything. It is the Home Ministry which insists for the Cards and Planning Commission has nothing to do with that.  Also when some one pointed out 'Aadhar Cards' are a duplication work, since Election ID, License, Passport, PAN etc., has the details of the citizen is there any need of Aadhar Card, he has no reasonable answer at all. It shows the money spent on Aadhar Card is utter waste and unwanted. What a Planning Sirji???

India’s current GDP is at 5.5% as against the average of 8% and target of 9.5%. So, the current situation is not bad and not so good. But, we have to make it stable and try to make it grow steadily. This challenge is taken care by Finance Minister and Prime Minister, and without any doubt, the results what we are getting is very positive.

But my fear is about the Planning Commission, which has no authority for implementing or directing but only able to find faults in everything. When they were asked for their opinion, they give rare of the rarest bad ideas, which makes people suffer a lot and get the government a hit on their back.

It is the high time, our Prime Minister to think about a better person for the post of Planning Commission who has the ability to control Indian Economy and having practical knowledge on Indian Economy & People Mentality. 

Monday, February 25, 2013

Railway Budget 2013 - Expectations


Its now budget time again. Tomorrow (26th February 2013) our Honorable Railway Minister will submit his budget for the financial year 2013-14. Everyone in the nation is eager to know, what that Budget gives us? I am not any exception.

I always expect more from the Railways to Tamilnadu, as we are the state which yields more revenue and highest occupancy rate for Railways. As said in my last year post, Tamilnadu is one of the important state having maximum urbanization throughout the state and evenly developed towns, thanks to our prominent leaders for the past thirty plus years.

If you read my last year’s expectations you may find very few expectations are filled up by the railways and all the major requirements are still awaiting clearances. Apart from them, I wish Tamilnadu will get better opportunities in this year budget, considering the latest developments in the state.

A long pending request of Salem – Namakkal – Karur railway line is now completed and test run has been done successfully. Now it is waiting for the Safety Commissioner’s Certification, and soon it acquire it, the traffic will be open. This route will make a remarkable impact on Tamilnadu for sure.

Namakkal, Rasipuram are the most Industrialised areas related to Automotive Body Building, Lorry Trailors, Poultry Farms and Agricultural Products. Now, they are mostly relying on Roadways for Transportation of the goods. If the railway line is opened, it will facilitate Goods transportation at ease.

Also the trains bound to Southern Tamilnadu will now have a lesser transit time, as it could pass through Salem – Namakkal – Karur – Dindigul – Madurai route avoiding Erode Junction. This will in turn facilitate Erode Junction with more trains towards Coimbatore and Kerala.

Broad guage Conversion on Dindigul – Pollachi – Coimbatore/Palghat route is now partially completed. Dindigul – Palani route is opened to Traffic. Palani – Pollachi Route works completed and waiting for Certification. From Pollachi, there are two routes. One heads to Coimbatore and the other to Palghat. I understood from my recent Kerala trip, Railways has taken Pollachi – Palghat route now and the works upto Muthalamada is completed.

Even though there is a huge demand from the people of Coimbatore to take Pollachi – Coimbatore route at first preference, the land acquisition issues and cases at various courts related to Land Compensation, makes difficult to take the work at present.

Apart from these, Madurai – Bodinayakkanur; Shencottah – Punalur; Thiruvarur – Thiruththuraippoondi – Karaikkudi; Thiruththuraippoondi – Agasthiyampalli are the Meter Guage routes which are being converted into Broad Guage.

Electrification upto Madurai Junction is completed and yet to start the Service in this route. That was one of the major expectation from Deep South Tamilnadu, as we are now having higher travelling time. Since there is no unity among the political leaders as well as People in Tamilnadu, there is no hard pressure for doubling the Villuppuram – Nagercoil route, despite the growing demand of trains.

A request for new Railway line Ariyalur – Thanjavur; Ariyalur – Chidambaram is in cards for a long time. This will connect the Main Line with Chord Line and also enable access from East Coast to West Coast directly. Coimbatore – Sathy – Chamrajnagar; Hosur – Jolarpet Link routes are also pending.

These are the fact sheet of Tamilnadu as of now.

Even though there are number of requests for New Trains in Tamilnadu, I don’t think the current budget will give us lot of New Fresh Trains. But, I am seeing an opportunity of resuming / restoring all the trains which were stopped due to Guage Conversion. These trains may be plying in these routes, which are now newly converted in Broad Guage Lines.

1.       Villuppuram – Cuddalore – Mayiladuturai – Thiruvarur

2.       Villuppuram – Thiruvannamalai – Vellore

3.       Palani – Dindigul

4.       Thiruvarur – Nagappattinam

The trains which were running in Meter Guage in these routes are not fully resumed after Guage Conversion. Hence, we can expect this budget may announce the resume of all the trains, as a fresh trains!

Coimbatore – Trivandrum; Coimbatore – Bangalore; Madurai – Coimbatore; Chennai – Trichy; Chennai – Pondy; Bangalore - Vellore – Thanjavur; Nagappattinam – Coimbatore; Rameswaram – Coimbatore; Palani – Chennai; Palani - Tiruchendur are the few train services which people are looking for a long time. These are too essential for the people migrated to Chennai, Bangalore & Coimbatore for jobs / Education.

Growing Road accidents makes a little fear inside us, and there is a request for EMU/DMU passengers in few routes, which are having higher Road Traffic. This includes Trichy – Karaikkudi; Trichy – Kumbakonam; Trichy – Madurai; Trichy – Erode; Madurai – Karaikkudi; Madurai – Tirunelveli; Erode – Coimbatore; Coimbatore – Palghat; Coimbatore – Mettuppalayam; Vellore – Villuppuram; Salem – Hosur; Chidambaram – Kumbakonam. These routes are always crowded with Buses and hence Railway can fetch a sure shot money on peak hours. Also, we have to note, most of these railway lines are lesser utilized routes with Expresses.
 


A double decker train will be introduced in Chennai – Bangalore route. This is a welcome move for executives. Similar train may be operate in Chennai – Coimbatore; Chennai – Trichy routes, which are always occupied by business people.

Railways recently hiked the fare to the tune of 600 crores and there are rumours that this budget too will have a lighter fare hike. I have no issues in fare hike as the current fares are too less. But the safety and cleanliness is too worst in Indian Railways. If Railways can provide cleanliness, punctuality, comfort and safety, paying more will not be an issue for any.

Speeding up of trains and differences in running times should be regularized. For example, Chennai – Alleppey which is an Ordinary Express trains cross Chennai – Coimbatore in 07:10 hrs where as Nilgiri Express which is a Super Fast Express takes 07:30 hrs to the same destination. Then what is the justification for “Super Fast” and collecting extra charge for it, is still puzzling. The categorization should be justified and hope speeding up of few trains is now on the cards tomorrow.

As far as Tamilnadu is concerned, Railways always giving its best and flooding with good connectivity and services everytime. Still the demand is growing and expectations grows more than demand.

12 hours more to know, how the Railways fulfill the demands of Tamilnadu. Hoping the best surprises this year!!!

Wednesday, February 20, 2013

காவிரி - மகிழ்ச்சியா??


மிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நேற்றைய தினம், மத்திய அரசு ‘காவிரி விவகாரத்தின் இறுதி தீர்ப்பை’ அரசிதழில் வெளியிட்டு விட்டது. இது எனது பிறந்தநாளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என முதல்வர் ஜெயலலிதா புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். உச்சநீதிமன்றத்துக்கு முதல்வர் நன்றி தெரிவிக்க, கலைஞரோ பிரதமருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். தமிழகமே மகிழ்ச்சியில் திளைக்கிறது. எல்லாம் சரி. உண்மையிலேயே இது இத்தனை மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் தானா?

காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பை அமல் செய்ய மறுத்து அடம்பிடித்த கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற நாம் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இதற்கிடையே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பும் வெளியானது. அது முழுமையாக தமிழகத்துக்கு சாதகமாகவே அமைந்திருந்தது.


(நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு படி நீர் பங்கீட்டு முறை)

எனினும், கர்நாடகம் அந்த இறுதி தீர்ப்பையும் மதிக்கவில்லை. இன்னும் ஒரு படி மேலே போய், காவிரி நடுவர் மன்றமே செல்லாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இவ்வாறாகவெல்லாம் கர்நாடகம் முரண்டு பிடித்துக்கொண்டிருந்த வேளையிலெல்லாம் நமக்கு உதவியாக இருந்தது, பிரதமர் தலைமையிலான காவிரி கண்காணிப்பு ஆணையமும், மத்திய அரசும் தான். அவர்கள் தலையிட்டு அழுத்தம் கொடுத்து கர்நாடகத்தை இதுவரை பணியவைத்துக்கொண்டிருந்தார்கள்.

இப்போது இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியானதால், காவிரி நடுவர் மன்றமும், காவிரி கண்காணிப்பு ஆணையமும் கலைக்கப்பட்டுவிடும். சட்டத்தை மதிக்கின்ற அரசாக கர்நாடகம் இருந்தால், நாம் கவலைப்பட தேவையில்லை. ஆனால் கர்நாடகத்தின் அணுகுமுறை பற்றி நன்கு தெரிந்தவர்கள் கவலைகொள்ளாமல் இருக்க முடியாது.

இனி, கர்நாடகம் அரசிதழில் வெளியான இறுதி தீர்ப்பை அமல் செய்யாவிட்டால், நாம் முன்பு போல மத்திய அரசையோ, பிரதமரையோ, காவிரி நடுவர் மன்றத்தையோ, காவிரி கண்காணிப்பு ஆணையத்தையோ உதவிக்கு அழைக்க முடியாது. நாம் இனி உச்சநீதிமன்றத்தில் வழக்கிட்டு தான் நியாயம் பெற முடியும். அது அவ்வளவு எளிதாகவோ, உடனடியான தீர்வாகவோ அமையுமா என்பது தெரியவில்லை.

மேலும், மத்திய அரசு, தனது அரசிதழில் நேற்று இறுதி தீர்ப்பை வெளியிட்டாலும், அதை இன்னமும் செயலாக்கத்துக்கு கொண்டு வரவில்லை. அதற்கு 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அதற்குள் எதுவும் மனமாற்றம் நடைபெறாமல் இருக்கவேண்டுமே என்கிற கவலையும் எனக்குள்ளது.

கர்நாடகம் சட்டத்துக்குட்பட்டு செயலாற்றி, இறுதி தீர்ப்பு படி தமிழகத்துக்கு முறையாக தண்ணீர் திறந்துவிட்டாலொழிய நாம் மகிழ்ச்சி கொள்ள எதுவும் இல்லை. மாறாக தனது இயல்பான இயல்புப்படி, மீண்டும் முரண்டு பிடித்தால் (கேட்க ஆளில்லை என்கிற கூடுதல் தைரியம் வேறு) தமிழகத்தின் நிலை கஷ்டம் தான்!

அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால், இன்றைய நிகழ்வு ஒரு பெரும் கொண்டாட்டத்துக்குரிய விஷயமாக இருக்கலாம். தமிழக விவசாயிகளுக்கும் நமக்கும் அப்படி இருப்பதாக தோன்றவில்லை.

பொறுத்திருந்து கவனிப்போம்.. என்ன தான் நடக்கிறதென்று!

Sunday, February 10, 2013

கம்யூனிசத்தின் தோல்வி?




"ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எங்கோ ஒரு மூலையில் ஒரு கம்யூனிஸ்ட் இருந்துகொண்டு தான் இருக்கிறான்" – இது மிக பிரபலமான மிக மிக உண்மையான ஒரு வாக்கியம்.

அப்படி இருந்தும், இந்தியா மாதிரியான ஒரு தொழில் தேசத்தில் கம்யூனிசம் தோல்வியடைந்தது ஏன் என்கிற கேள்வி எனக்குள் அவ்வப்போது எழுவதுண்டு.

முன்பெல்லாம், இத்தனை மாநிலங்கள் இருந்தும் கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா தவிர வேறு எந்த மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாதிருக்கையில், ஏன் இந்த மாநிலங்கள் மட்டும் தொடர்ச்சியாக கம்யூனிசத்தை ஆதரிக்கின்றன? மற்ற மாநிலங்கள் எல்லாம் ஏன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட்டுக்களை புறக்கணிக்கின்றன என்கிற விடை தெரியாத கேள்வி வந்து வந்து போகும் எனக்கு. தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதால் தான் கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்ட்டுக்கள் பிரபலமாக இருக்கிறார்கள் என்கிற பதிலை சொன்னவர்களிடத்திலெல்லாம், அதை விட அதிக தொழிலாளர்களை கொண்ட, தமிழகம், ஆந்திரம், ஹரியானா, டெல்லி, மராட்டிய மாநிலங்களில் ஏன் கம்யூனிஸ்டுக்கள் புறக்கணிக்கப்பட்டனர் என்கிற என் குதர்க்க விதண்டாவாத கேள்விகளை வீசி, அவர்கள் அதற்கு பதில் தெரியாமல் தடுமாறுவதை பார்த்து ரசித்த காலங்கள் இருந்தது. இப்போது, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநில ஆட்சி பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டு இருக்கும் கம்யூனிஸ்டுக்கள், மெல்ல தங்களில் பெரும் முடிவுரையை மொத்தமாகவும் வேகமாகவும் எழுதிக்கொண்டிருப்பதாக ஒரு உருவகம் எனக்கு ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.

கம்யூனிஸ்டு என்கிற சொல் எனக்கு அறிமுகமானது கோவையில் தான். 1987-88 ல் நான் சிவானந்தா காலனியில் குடியிருந்த காலத்தில் தினசரி டீக்காக காலையில் காயத்திரி டீ ஸ்டால் எனும் கடைக்கு செல்வது வழக்கம். (இப்போது அந்த கடை அங்கே இல்லை. வடகோவை மேம்பாலம் அருகில் செயல்படுவதாக சொன்னார்கள்). அதன் உரிமையாளரான திரு. விஸ்வநாதன் அவர்கள் ஒரு கம்யூனிஸ்ட் என அறியப்பட்டவர். அவர் தான் எனக்கு கம்யூனிச சித்தாந்தங்களை அறிமுகப்படுத்தியவர். அவரது கடையில் வாங்கப்படும் தீக்கதிர், தேசாபிமானி பத்திரிகைகளும் பிற துணை!

பின்னர் சென்னை வந்து தொழிலாளியாக வாழ்க்கை போராட்டத்தை முன்னெடுத்து செல்ல நேர்கையில், வாரயிறுதிகளில் நான் அதிகமாக தேடி நாடி ஓடி செல்லும் எழும்பூர் கன்னிமாரா நூலகத்தின் புத்தக அலமாரிகளில் தேடி தேடி படித்த சில நூல்கள் எனக்கு கம்யூனிசத்தின் மீதான மரியாதையை அதிகப்படுத்தின. ‘லால் சலாம்’ போன்ற படங்களும் அதன் பங்கை செவ்வனே செய்ததை மறுக்க முடியாது. அந்த காலகட்டத்தில், இந்தியா போன்ற நாட்டுக்கு கம்யூனிஸ்ட்டுக்களை விட மிக பொருத்தமான கட்சி வேறு இருக்கமுடியாது என எண்ணி இருக்கிறேன். இப்போதும் அந்த கருத்து முற்றாக ஒழிந்துவிடவில்லை. என் மனதின் எங்கோ ஒரு மூலையில் அது குற்றுயிரும் குலையுயிருமாக உயிர்த்திருந்தபடி தான் இருக்கிறது அந்த ஆசை.

நூல்களும், சினிமாக்களும் காட்டிய பெருமை மிகு கம்யூனிசத்தை நான் யதார்த்த வாழ்க்கையில் காணமுடியவில்லை. அதை தேடிய என் ஓட்டங்களில் தான் கம்யூனிசம் படு தோல்வி அடைந்து தன் இறுதி யாத்திரையில் இருப்பதை நான் உணர்ந்துகொண்டது.

கம்யூனிசத்தின் மிக அடிப்படையான கொள்கைகளுள் மிக சிலவற்றை எடுத்துக்கொண்டால் அவற்றுள் முக்கியமானவை, தொழிலாளர் நலம், சமூக சீர்திருத்தம், சமத்துவம், சம உரிமை போன்றவை கண்டிப்பாக இருக்கும். தலைமறைவாக வாழ்ந்து கஷ்டப்பட்டு உயிர்பயத்தோடு கம்யூனிசத்தை வளர்த்தவர்கள் இப்போது இல்லை.

பாட்டாளிகளுக்காக தொடங்கப்பட்ட ஒரு கட்சி, பாட்டாளிகளை பற்றி கவலைப்படுவதை மறந்து, முதலாளிகளால் நடத்தப்பட்டு வருவது தான் கம்யூனிசத்தின் தோல்விக்கான வரலாறு.

இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள் இருக்கும் அளவுக்கு மிக சிறப்பாக எந்த நாட்டிலும் இல்லை என சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும், இங்கே தொழிலாள தோழர்கள் அந்த சட்டத்தின் முழுமையான பலனை அனுபவிக்க முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் இந்த வேளையிலும் கூட அவர்களது துணைக்கு கம்யூனிசம் வரவில்லை என்பது ஒரு வருத்தமான உண்மை. எட்டு மணி நேர வேலைக்காக போராடிய ஒரு கட்சி, பதிமூன்று மணிநேரம் தொழிலாளர்களை வேலைவாங்கி பிழியும், பன்னாட்டு கம்பெனிகளிலும், மென்பொருள் நிறுவனங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களை பற்றி இன்னமும் கவலை கொள்ளவில்லை. கொத்தடிமை தொழிலாளர்கள், விவசாயத்திலும், செங்கல் சூளைகளிலும், பட்டாசு தொழிற்சாலைகளிலும் ஆதரவின்றி அடிமையாக இன்னமும் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மிகப்பெரிய தொழிற்சாலைகளில் கூட தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை பெற்று தர முடியாத ஒரு கையாலாகா தனத்தில் தான் இன்றைய கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கின்றன.

சமூக சீர்திருத்தத்தில் திராவிட இயக்கங்களுக்கெல்லாம் முன்னோடி கம்யூனிசம். இன்னும் சொல்லப்போனால், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் போன்றோர்களின் திராவிட கொள்கைகளும், அவர்கள் கொண்டு வந்த திட்டங்களும், சட்டங்களும் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்டவை தான். பகுத்தறிவு, சமூக சம உரிமை போன்றவற்றின் அடிப்படையில் இயங்கும் கம்யூனிசம் இப்போது அதன் அத்தகைய கொள்கைகளை எங்கே தொலைத்தன என்பது யாருக்கும் தெரியாது.

தமிழகத்தை பொறுத்தவரை, நல்லக்கண்ணு, நன்மாறன் போன்ற எளிய கம்யூனிஸ்டுக்களும், பாலபாரதி, பாண்டியன், மகேந்திரன், ரங்கராஜன், வரதராஜன் போன்ற வசதிமிகுந்த கம்யூனிஸ்டுக்களும் மட்டும் தான் கம்யூனிஸ்டுக்களின் முகம். தொழிற்சாலைகள் அதிகமிருக்கும், ஹோசூர், திருச்சி, மதுரை, சென்னை, நாமக்கல், கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் கம்யூனிஸ்டு கட்சிகளின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாகவும், உருப்படியானதாகவும், பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கத்துடனும் இல்லை என்கிற கசப்பான உண்மையை அப்பகுதி தொழிலாள தோழர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டதுண்டு.

அரசியல் கூட்டணி, அல்லது கூட்டணி அரசியல் என்கிற ஒற்றை சித்தாந்தத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, தனது கருத்துக்களையும், நடவடிக்கைகளையும், கொள்கைகளையும் உருமாற்றிக்கொண்ட ஒரு தேர்தல் அரசியல் கட்சியாக தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சி மாறிப்போனதன் சாட்சி தான் இன்றைய தமிழகத்தின் அவல நிலை.

தேசிய அளவிலும் கூட பிரகாஷ் காரத் போன்ற முதலாளித்துவ சிந்தனையாளர்களால் கம்யூனிசம் தனது உண்மை முகத்தை இழந்து நிற்பதை அறியாதவர்கள் இல்லை.

தேசம் முழுமையும் பரந்து விரிந்து ஓரளவு செல்வாக்குடன் திகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு கட்சி கம்யூனிஸ்டு கட்சி. மிக அதிக அளவிலான தன்னார்வ தொண்டர்களை கொண்ட கட்சியும் கூட. இந்தியா இன்றைக்கு இருக்கும் அத்தனை சிக்கலுக்கும் தன்னகத்தே தீர்வை கொண்டிருக்கும் கொள்கைகளை கொண்டது கம்யூனிச சித்தாந்தம். இப்படி இத்தனை பலம் இருந்தும் ஏன் உருப்படியான ஒரு நிலையை அந்த கட்சிகள் அடையவில்லை என்கிற கேள்வி எழாமல் இல்லை.

இந்திய கம்யூனிஸ்டு, கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா, மார்க்ஸிஸ்டு, லெனினிஸ்டு, மாவோயிஸ்டு, தீவிர கம்யூனிஸ்ட் என்றெல்லாம் பிரிந்து பிரிந்து சென்றதற்கு, அதிகார ஆசையும், தனித்துவ கோட்பாடும், பதவி மோகமும் போன்றவைகளே காரணம் என்பதும், மக்கள் நலனோ கொள்கை பிடிப்போ அல்ல என்பது நாடறிந்த உண்மை.

இப்போது முயன்றால் கூட, தேசிய அளவில் ஒத்த கருத்துக்களை கொண்ட இயக்கங்களை ஒன்றிணைத்து, வாரம் தோறும் நாடு முழுதும் கூட்டங்களை நடத்தி, மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கான செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி, இழந்த மக்களின் செல்வாக்கை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு ஒரு சிறப்பான மாற்றாக வந்துவிடக்கூடிய சக்தி கம்யூனிஸ்டுகளுக்கு இருந்தாலும், அப்படியான ஆக்கப்பூர்வ சிந்தனைகளோ, மக்கள் நலன் குறித்த புரிதலோ இல்லாத தலைவர்களின் கையில் சிக்குண்டு கிடக்கிற கட்சி என்கிற வருத்தம் பெரும்பாலான நடுநிலையாளர்களுக்கு இருப்பதை மறுக்க முடியாது.

இந்தியா இப்போது இருக்கும் சூழலில், கம்யூனிஸ்டுகளின் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தாலொழிய அடித்தட்டு மக்கள் மேம்பட முடியாது என நான் அவ்வப்போது சிந்திப்பதுண்டு. நல்லவேளையாக அப்படி சிந்திக்கும் தலைவர்கள் யாரும் கம்யூனிஸ்டு கட்சியில் இப்போது இல்லை.

குறைந்த பட்சம், இழந்த ஆட்சிக்கட்டிலையாவது கேரளத்திலும், மேற்கு வங்காளத்திலும் கைப்பற்றும் ஆசையும், திறனும், திட்டமிடுதலுமுடைய தலைவர்கள் கூட இல்லை என்பது அந்த கட்சியின் துரதிர்ஷ்டம் மட்டுமல்ல, அந்த மக்களின் துரதிர்ஷமும் கூட.

இப்போது நானும் எல்லோரையும் போல ஓரமாக ஒதுங்கி நின்று வருத்தத்துடன் வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டேன். எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு கட்சி, யாருக்கும் பயனில்லாமல் தன்னை தானே அழித்துக்கொண்டு வரும் வேதனையான காட்சியை.

Saturday, February 9, 2013

மீண்டும் பழைய பாதைக்கு போகிறதா திமுக?



திமுக தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன் சாரம்சம் மிக எளிமையானது. திமுக பேச்சாளரும் நடிகையுமான திருமதி. குஷ்பூ அவர்களையும் அவரது வீட்டையும் தாக்கிய திமுகவினரை கண்டித்து வெளியாகி இருக்கிறது அந்த அறிக்கை.

சமீபத்தில் கலைஞர் அவர்கள் சூசகமாக தனக்கு பின் திமுக தலைமை பதவிக்கு ஸ்டாலின் தான் வரக்கூடும் என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அழகிரி, ஸ்டாலின் குரூப்புகளுக்கிடையே நீண்டகாலமாக பனிப்போர் நடந்துகொண்டு தான் இருக்கு. அழகிரி அவர்கள் தனது எதிர்ப்பை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

திமுகவின் முக்கிய தலைவர்கள் அனைவருமே ஸ்டாலினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். ஸ்டாலின் மீது பொதுவாகவே எல்லோருக்கும் நல்ல அபிப்பிராயம் உண்டு. மென்மையானவர், மனிதாபிமானம் மிக்கவர், தொலைநோக்கு பார்வை கொண்டவர், அடிமட்ட தொண்டன் வரை மிக எளிமையாக பழகக்கூடியவர், எல்லோரையும் அனுசரித்து செல்லக்கூடியவர், 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து, கட்சியின் போராட்டங்களில் கலந்து சிறை சென்றவர்ன்னு அவரது ஆதரவு பட்டியல் மிக நீளமானது. அவர் திமுகவின் தலைவராக ஆவதில் பெரும்பாலான கட்சியினருக்கும், மிகப்பெரும்பாலான பொதுமக்களுக்கும் எந்த அதிருப்தியும் இல்லை என்பது தமிழகம் அறிந்த உண்மை. அதன் அடிப்படையிலே தான் கலைஞரும்  தனக்குப்பின் ஸ்டாலின் தான் திமுகவின் தலைவராகவும், திமுகவின் மக்கள் பணிகளை முன்னெடுத்து செல்லும் தளபதியாகவும் விளங்குவார் என மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

ஆனால் இதை இன்னொரு கோணத்திலிருந்தும் நாம் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளிலேயே உட்கட்சி ஜனநாயகம் மிக மிக சிறப்பாக இருக்கும் ஒரு கட்சி என்றால் அது திமுக மட்டும் தான். உட்கட்சி தேர்தல்களை ஒழுங்காக நடத்தி, எல்லோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளைக்கொண்டு இயங்கும் இயக்கம், பொதுக்குழு/செயற்குழு போன்ற கூட்டங்களில் வெளிப்படையாக கட்சியையும் கட்சியின் முடிவுகளையும் விமர்சனம் செய்ய அனுமதிக்கும் இயக்கம் என திமுகவின் பெருமை பலமானது. அப்படியிருக்கும் ஒரு கட்சியில் திமுகவின் அடுத்த தலைவர் இவர் தான் என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட நியமன முறைக்கு வருவது எனக்கு ஆரம்பத்தில் மிகுந்த அதிருப்தியாக தான் இருந்தது. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய தலைவரை, நியமனம் செய்வது என்பது எனக்கு ஒப்புமையான விஷயம் அல்ல. அதிலும், இன்றைய தேதியில் தமிழகத்துக்கு என இருக்கும் ஒரே ஆறுதல் இயக்கமான திமுகவில் இப்படியான உட்கட்சி குழப்பங்கள் வருவது தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் நன்மை தருவதாகாது.

இந்த அடிப்படையிலான இதே கருத்தை தான் சில வாரங்களுக்கு முன்பு திருமதி. குஷ்பு அவர்களும் சொல்லியிருந்தார். ஸ்டாலின் தான் தலைவர் என்பதை தேர்தல் தான் முடிவு செய்யவேண்டும் என்கிற ரீதியில் அவர் தெரிவித்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத ஸ்டாலின் ஆதரவாளர்கள் திருமதி. குஷ்பூ மீது தாக்குதல் நடத்துவது, அவரது வீட்டை தாக்குவது, அவரது குழந்தைகளிடம் கொலைமிரட்டல் விடுவது என இறங்கி திமிலோகப்பட்டது அனைவரும் அறிந்ததே!

இந்த சம்பவத்தை கண்டித்து தான் கலைஞர் அவர்கள் மிக மிக தாமதமாகவும், மென்மையாகவும் தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். அந்த அறிக்கையை படித்தாலே, அது பேரளவில் வெளியிடப்பட்ட அறிக்கை என்பது விளங்கிவிடும். ஒரு பேரியக்கத்தின் தலைவர், தனது இயக்கத்தின் மீதான மதிப்பு மக்கள் மத்தியில் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக வெளியிட்ட அறிக்கையாக தான் அது இருக்கிறது.

திருமதி. குஷ்பூ அவர்களை பொறுத்தவரை தனக்கு மனதில் பட்டதை வெளிப்படையாக யாருக்கும் அஞ்சாமல் தெளிவாக எடுத்து சொல்லக்கூடியவர். அதே போல தான், ஸ்டாலின் விஷயத்திலும் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். கருத்து தவறு எனில் விளக்கம் கேட்டிருக்கலாம், மறுப்பு தெரிவித்து இருக்கலாம். இப்படி பல வழிகள் இருக்க அவரையும் அவரது வீட்டையும் தாக்கி இருப்பது கட்சிக்கு கட்சியினரே ஏற்படுத்திக்கொள்ளும் கெட்டபெயர் எனபதை இந்த சம்பவத்தை கண்டிக்க முன்வராத மூத்த தலைவர்களும் உணர்ந்ததாக தெரியவில்லை.

ஆனால் எனது ஆச்சரியமே வேறு!

மிக மிக நடுநிலையானவர், கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பவர் என்றெல்லாம் போற்றப்படும் திரு ஸ்டாலின் அவர்க்ள், இந்த தாக்குதலுக்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்காதிருப்பது தான் ஆச்சரியம்! அடுத்த தலைவராக முடிசூடவிருக்கும் வேளையில் தன் மீதான எந்த விமர்சனமும் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கும் ஸ்டாலின் அவர்கள் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, தனக்கு மக்களிடமிருக்கும் மதிப்பையே குலைக்கக்கூடிய ஒரு நிகழ்வுக்கு எந்த கருத்தும் சொல்லாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.

தமிழக அரசியலில் வன்முறை, விமர்சனத்துக்கான தாக்குதல் போன்றவை புதிதல்ல. 1960களிலேயே தொடங்கிய விஷயம் தான் அது. காங்கிரஸ் & கம்யூனிஸ்ட் மோதல், காங்கிரஸ் & திமுக மோதல், திமுக & அதிமுக மோதல், பாமக & வி.சி மோதல் போன்றவை மிக பிரபலம்.

தன்னை விமர்சித்தவர்களை தாக்குதலுக்காளாக்கும் வழக்கத்தை முதன் முதலில் தொடங்கிவைத்த திமுக பின்னாளில் கொஞ்சம் பக்குவமடைந்து கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க தொடங்கியது. திமுகவை விமர்சித்து தாக்குதலுக்குள்ளானவர்களின் பட்டியல் மிக மிக நீளம். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் முதல் பத்திரிக்கையாளர் சோ வரை என சமூகத்தின் எல்லா நிலையிலிருந்தவர்களும் விமர்சித்ததற்காக தாக்கப்பட்டவர்களில் அடக்கம்.

திமுக பக்குவமடைந்த போது, அதிமுக விமர்சகர்களை தாக்கும் கலாச்சாரத்தை கையிலெடுத்துக்கொண்டது. பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அதிமுகவும் பாரபட்சமின்றி விமர்சகர்களை தாக்குதலுக்குள்ளாக்கி இருக்கிறது.

ஆனால், அதிமுகவில் உட்கட்சி விமர்சனமும் இல்லை, அதனால் அதனடிப்படையிலான தாக்குதலும் இல்லை என்பது ஒரு ஆறுதல். திமுகவின் நிலை அப்படியல்ல. கருத்து சுதந்திரத்துக்காக போராடும் முகத்தை கொண்டுள்ள அதே திமுகவில் தான் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் முகங்களும் உள்ளது. அதன் மிக சமீபத்திய உதாரணம் தான் திருமதி. குஷ்பூ மீதான தாக்குதலும், அதை கண்டிக்க மனமின்றி கண்டித்திருக்கும் இன்றைய அறிக்கையும்.

திமுக மீது இப்போது மக்களுக்குள்ள மரியாதையை காப்பாற்றிக்கொள்ள திமுக முன்வரவேண்டும். கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பது, அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது, கழகத்தில் அடிநாதமான கடமை கண்ணியம் கட்டுப்பாடு மிக்க தொண்டர்களை பக்குவப்படுத்துவது, போன்ற செயல்களின் மூலம் தான் அது முடியும். அப்படியல்லாமல், இது போன்ற விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமல் விமர்சித்தவர்களை தாக்குவதும், சம்மந்தப்பட்ட தலைவர்கள் அதை பார்த்து மௌனமாக இருப்பதும், சில நாட்கள் கழித்து பெயரளவில் ஒரு அறிக்கை வெளியிடுவதும், திமுக தனது வன்முறை தன்மையை எப்போதுமே மாற்றிக்கொள்ளாதோ என்கிற அச்சத்தை தான் தமிழக மக்கள் மனதில் விதைக்கும். இது திமுகவுக்கும், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் நல்லதல்ல என்பதை தற்போதைய தலைவர் கலைஞரும், வருங்கால தலைவராக எதிர்பார்க்கப்படும் ஸ்டாலினும் உணர்ந்தால் பரவாயில்லை!

உணர்வார்களா?

Printfriendly