Sunday, September 2, 2018

தமிழக அணைகள் - காமராஜரா கலைஞரா?

தமிழக அணைகள் பற்றிய துரைமுருகனின் பேட்டி ரெண்டு நாளாக சுற்றிக்கொண்டு இருக்கிறது.

காமராஜர் தான் அணைகள் கட்டி தமிழகத்தை காப்பாற்றியவர் என்கிற 'கட்டமைக்கப்பட்ட பொதுக்கருத்துக்கு' எதிரானதாக துரைமுருகனின் பேட்டி இப்போது பார்க்கப்படுகிறது.

உண்மையில் நாம் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

காமராஜர் காலம் என்பது சுதந்திரம் கிடைத்தவுடனான காலம். நாம் எல்லாவற்றையும் புதிதாக ஏற்படுத்த வேண்டி இருந்தது. பிரதமர் நேருவின் தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றான எல்லா நதிகளிலும் அணைகள் கட்டி நீர் சேமிப்பை செய்யவேண்டும் என்பதில் அனைத்து மாநில முதல்வர்களும் செயல்படுத்தினார்கள். அவர்களுள் காமராஜரும் ஒருவர்.

இரண்டாவதாக, அப்போது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக காமராஜர் இருந்தார். இப்போதைய தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரள மாநிலங்கள் அனைத்துக்கும் அவர் தான் முதல்வர். ஒருங்கிணைந்த சென்னை மாகாணம் என்பது இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது. சுருக்கமாக சொல்வதானால் 'திராவிட நாடு'.

அதனால் இந்த பரப்பு முழுமையும் அணைகள் கட்டவேண்டிய பொறுப்பு மாநில முதல்வரான காமராஜர் அவர்களின் அடிப்படை கடமையானது.

இதை வைத்து பார்க்கையில்..

மாநில பிரிவினைக்கு பின்னர், 1967 க்கும் பின்னர், விடுபட்டிருந்த இடங்களை எல்லாம் கண்டு பிடித்து, இங்கெல்லாம் அணைகள் இருந்தால் தான் தமிழகம் செழிக்கும் என திட்டமிட்டு மாவட்டங்கள் தோறும் அணைகள் கட்டியதெல்லாம் திமுகவின் சாதனைகள் தான் என்பது தெளிவாக புரியும்.

அடிப்படை கட்டமைப்புக்களை ஏற்படுத்தியவர் நேரு. அதில் மாநில தேவைகளை நிறைவேற்றியது திராவிட இயக்கங்கள்.

இந்த அடிப்படையில் மீண்டும் துரைமுருகன் அவர்களது பேட்டியை பாருங்கள். உங்களுக்கே மலைப்பாக இருக்கும்.

1 comment:

  1. kamarajar irunda periodla karunanithi cm irundirundha ivalavo anai build,panni irupara,infrastucture poora kamarajar kondu vandhadu,intha erumai karunanithi mgr ,jeyalalitha 3 perukkum nadu munneranum endru ideava kidayathu ,3 perum theepasenga,nee oru muttapaya

    ReplyDelete

Printfriendly