Friday, August 30, 2019

வங்கிகள் இணைப்பு சரியா?

இன்றைய தினம் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்கள் நடத்திய ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்

அதாவது இப்போது இருக்கும் 27 பொதுத்துறை வங்கிகளில் சில வங்கிகளை இணைப்பதன் மூலம் 12 வங்கிகளாக குறைக்க அரசு முடிவு எடுத்து இருக்கிறது என்பது தான் அந்த முடிவு

எந்தெந்த வங்கிகள் எப்படி இணைக்கப்படுகிறது என்பதை இந்த படம் விளக்கும்



இந்த முடிவு சரியா?

என்னை பொறுத்த வரையில் இது ஒரு வரவேற்கத்தக்க முடிவு தான்.

அரசு துறை வங்கிகள் 12 என்பதே கூட அதிகம் தான். அதன் ஒரு படியாகக் கூட 27 வங்கிகள் என்கிற நிலையில் இருந்து 12 ஆக குறைக்க அரசு முடிவு எடுத்து இருக்கலாம்.

நிர்வாக செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், வங்கிகள் லாபமாக செயல்பட இது போன்ற இணைப்புக்கள் அவசியம் ஆகின்றன. தெளிவான கட்டுப்பாடுகளை கண்காணிக்கவும் இந்த இணைப்பு உதவும்

இதனால் ஆட்குறைப்பு இருக்குமா?

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளால், வங்கிக்கு சென்று செய்ய வேண்டிய பணிகள் வெகுவாக குறைந்து விட்டது என்பதை நாம் அறிவோம்.

உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு பல்கலை கழகத்தில் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தால், வங்கிக்கு சென்று டிடி எடுப்பது வழக்கம்.

அதற்கு கேஷியர், அதற்கான அப்ரூவர், டிடி பிரிண்ட் எடுப்பவர், அதை கையெழுத்து இட்டு அப்ரூவல் கொடுப்பவர் என குறைந்தது 3 அலுவலர்கள் தேவையாக இருந்தது.

இப்போது நாமே நாம் இருக்கும் இடத்தில் இருந்தே இணையம் வழி இந்த கட்டணத்தை செலுத்த முடியும். அந்த 3 அலுவலர் அவசியம் இல்லாமல் போய்விட்டது.

டிடி மட்டும் அல்ல, வைப்பு நிதி, சேமிப்பு கணக்கு, காப்பீடு என அனைத்து வகையான வங்கி பரிவர்த்தனைகள் இப்போது அவரவர்களே செய்து கொள்ளும் அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது.

கிட்டத்தட்ட 60% வங்கி பரிமாற்றங்கள் வங்கிக்கு வெளியே நிகழ்வதால், வங்கி ஊழியர் எண்ணிக்கை என்பது அளவுக்கு அதிகமாகவே உள்ளது

இந்த வங்கிகள் இணைப்பு காரணமாக ஊழியர்கள் ஒருங கிணைக்க வழி பிறக்கும்.

ஒவ்வொரு வங்கி கிளையிலும் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை குறையாது, ஆனால் உயர் அதிகாரிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.

ஒரே நகரில் இருக்கும் வெவ்வேறு வங்கி கிளைகள் ஒவ்வொரு தலைமை அலுவலகம், அதிகாரிகளின கீழ் இயங்கிய நிலை மாறி அத்தனை வங்கி கிளைகளும் சில அதிகாரிகளின கண்காணிப்பில் வரும். எனவே உயர் பதவிகளில் ஆட்கள் குறைய வாய்ப்பு உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டில் இப்போது 27 வங்கி உயர் அதிகாரிகள் இருக்கும் நிலை மாறி இனி 12 அதிகாரிகள் போதும். இதுவே தான் அவர்களின் கீழே பணியாற்றும் அதிகாரிகளுக்கும்.

அதுவும் அரசு ஆட்குறைப்பு செய்யும் என நான் நினைக்கவில்லை. அதற்கு பதிலாக காலியாகும் பதவிகளுக்கு, அதாவது ஓய்வு பெற்று செல்வோர், ராஜினாமா செய்வோர் ஆகிய பதவிகளுக்கு, புதிய ஆட்களை தேர்வு செய்வது குறையலாம். இருக்கும் அலுவலர்க ளை வெவ்வேறு பதவிகளுக்கு மாற்றி இயஙக முடியும்.

இது வங்கி நிர்வாகத்தின் செலவுகளை குறைப்ப தோடு, தெளிவான கண்காணிப்பு செய்யவும் உதவும்

வங்கி இணைப்பால் மக்களுக்கு என்ன பயன்?

நகர மக்களுக்கு பெரிய அளவில் பயன் இல்லை. ஆனால் கிராமப்புற மக்களுக்கு பல வகைகளில் இது உதவும்.

ஒரே ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன்.

ஒரு வங்கியில் கண்க்கு வைத்து இருப்பவர்கள் வேறொரு வங்கி ATM மூலம் பணம் எடுக்க இப்போது கட்டுப்பாடுகள் இருக்கிறது. இப்போது இணைக்கப்பட்ட வங்கிகளில் எடுக்க கட்டுப்பாடு இருக்காது.

சிற்சில ஊர்களில் 2 அல்லது 3 ATM மட்டுமே இருக்கும் நிலையில் அவை வெவ்வேறு வங்கி ATM ஆக இருந்தால் வரும் சிரமங களை எல்லோரும அறிவீர்கள். நமது வங்கியில் பணம் இல்லாத நிலையில் வேறு ATM மூலம் ₹200 பணம் எடுக்க ₹50 கட்டணம் கொடுக்க மனம் இல்லாமல் கொடுக்க வழி இல்லாமல் தவித்த நிலை நான் அனுபவித்து இருக்கிறேன்.

வங்கி கடன், கணக்குகள் என பலவற்றை இப்போது அந்தந்த வங்கிகள் கொஞ்சம் அதிகமாகவே தீர்மானிக்க முடியும்

மொத்த வங்கி பரிமாற்ற அளவு அதிகரிப்பதால், சில சலுகைகளை, சேமிப்புக்கு வட்டி உயர்வை வங்கிகளால் தாராளமாக கொடுக்க முடியும்

இது போல பல நல்ல விஷயங்கள் இந்த இணைப்பு மூலம் கிடைக்க வாய்ப்பு உள்ளது

இந்த இனைப்பால் பொருளாதாரத்துக்கு என்ன பலன்?

இப்போது இந்தியா ஒரு பொருளாதார மந்த நிலையில் இருந்து பொருளாதார சிக்கலை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில், ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தம், செலவு குறைப்பு ஆகியவை தேவை படுகிறது. தொலைபேசி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், என பலவும் ஒன்றோடு ஒன்று இணைந்து கொண்டு இருப்பதும் அதனால் தான். அதை போலவே வங்கிகளும் இணைக்கப்படுகின்றன.

இது வங்கி கடனை அதிகமாக வெளியிட்டு, மக்கள் செலவிடும் சக்தியை அதிகரிக்கும். அது பொருட்களின் விற்பனையை கூட்டி அதன் பயனாக உற்பத்தி துறைக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும்.

கொஞ்சம் நீண்ட கால திட்டம் தான். ஆனால் இதை விட இதை செய்ய நல்ல தருணம் வேறு இல்லை.

பொறுத்து இருந்து பார்ப்போம்.





1 comment:

  1. நீங்கள் இந்த இணைப்பால் விளையும் நன்மைகளை மட்டுமே எழுதியுள்ளீர்கள். இதன் பின்னணியில் இருக்கும் பாஜகவின் திட்டங்களை கூறவில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் என்னுடைய பதிவில் எழுதவுள்ளேன்.

    ReplyDelete

Printfriendly