Wednesday, April 8, 2020

தொழிற்சாலை அனுமதி குழப்பம்

மிழக அரசு 24.03.2020 இல் வெளியிட்ட lockdown அறிவிப்பில் துறை வாரியாக சில விதிவிலக்குகள் கொடுத்து இருந்தது

அதில் தொழிற்சாலை தொடர்பானது இது


இந்த விதி விலக்கு பட்டியலில் வரிசை எண் iii, தொடர்ச்சியான செயல்பாடு உடைய நிறுவனங்கள் என பொதுவாக சொல்லப்பட்டு அவைகளுக்கு அப்போதே Lockdown இல் இருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட்டு இருந்தது

ஆனால் இவை என்னென்ன தொழில்கள் என்கிற தெளிவான வரையறை இல்லை.

எனவே பல தொழிற்சாலைகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது உற்பத்தி தொடர்ச்சியான இயக்கம் தேவையான நிறுவனம் என சொல்லி தொழிற்சாலை இயக்க அனுமதி கோரினர்

மாவட்ட ஆட்சியர்கள் எந்தெந்த தொழிற்சாலைகளை அனுமதிக்கலாம் என்பதை வரையறை செய்யவே நேற்று இந்த விளக்க Circular வெளியிட்டது 

இது புதிய அனுமதி அல்ல.. ஏற்கனவே கொடுத்து இருக்கும் அனுமதி எந்தெந்த தொழில்களுக்கு பொருந்தும் என்பதற்கான விளக்கம் மட்டுமே

தமிழக மீடியா இதை புதிய அனுமதி என கருதி செய்தி வெளியிட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

முதன்மை செயலாளர் தலையிட்டு அந்த விளக்க அறிவிப்பை ரத்து செய்து உள்ளார்

Circular குறிப்பிட்ட தொழிற்சாலைகள் மட்டுமே இயங்க அனுமதி கொடுக்கலாம் என்று கட்டுப்பாடு கொடுத்த நிலையில், இதை ரத்து செய்தது மூலம், தொடர்ச்சியான செயல்பாடு உள்ள அனைத்து தொழிற்சாலையும் இயங்க வழி ஏற்பட்டு உள்ளது.

Media பரபரப்பு ஏற்படுத்தியது நேர்ந்த குழப்பம் இது


அரசு இப்போதேனும் தெளிவாக விளக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டு, எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கொடுக்கலாம், இது வரை இந்த Circular அடிப்படையில் அல்லது மற்ற வகையில் கொடுக்கப்பட்ட அனுமதியை பரிசீலித்து அதன் மீது முடிவு எடுக்கலாம்.

இது தொழில் துறையின் குழப்பத்தை தீர்க்கும்.

No comments:

Post a Comment

Printfriendly