Wednesday, March 12, 2025

நவோதையா பள்ளிகள் - தமிழ்நாட்டுக்கு தேவையா?

நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டுக்கு அவசியமற்றது என்பது எதனால்?

ஜவஹர்லால் நேரு நவோதயா பள்ளிகள் முழுக்க முழுக்க மத்திய அரசால் நடத்தப்படுவது. 

பள்ளிகள் செல்ல பல கிலோமீட்டர் செல்ல வேண்டி இருக்கும் மாநிலங்களில் மாணவர்கள் பள்ளியில் சேராமல் இருப்பது அதிகரித்து வந்ததால்.. அதற்கு தீர்வாக பள்ளியிலேயே தங்கி படிக்கும் வகையிலான உண்டு உறைவிட பள்ளியாக (ஹாஸ்டல் வசதியுடன்) நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுகிறது.

மாவட்டத்துக்கு ஒரு பள்ளி, அதில் அந்த மாவட்ட மாணவர்கள் மட்டுமே சேர முடியும். 

நவோதயா பள்ளிகள் 6 - 12 ஆம் வகுப்பு வரையே உள்ளன. ஐந்தாம் வகுப்பு வரை அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தான் நவோதயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் இருந்து சேர்த்து கொள்ளப் படுவார்கள். அதற்காக ஒரு நுழைவு தேர்வு உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றால் தான் பள்ளியில் சேர்க்க முடியும்.

9-12 வகுப்பு மாணவர்கள் "வித்யாலயா விகாஸ் நிதியாக" மாதம் ₹600/- செலுத்த வேண்டும்.

அதிகமாக பள்ளிக்கூட வசதி இல்லாத மாநிலங்களில் நவோதயா பள்ளிகள் நல்ல பலனை கொடுக்கின்றன 

ஆனால்...

ஊருக்கு ஊர் துவக்கப் பள்ளிகள், நடுநிலை பள்ளிகள், ஐந்து கிமீ தொலைவுக்குள் மேல்நிலை பள்ளிகள் என எக்கச்சக்கமாக பள்ளிகள் கட்டி வைத்து இருக்கும் தமிழ்நாட்டில் அப்படி உண்டு உறைவிடமாக தங்கி படிக்க வேண்டிய அவசியம் இல்லையே. தினசரி வீட்டில் இருந்து பள்ளிக்கு போய் வர கூடிய எல்லா வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளது.

இலவச புத்தகம், இலவச சீருடை, இலவச உணவு, இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், இலவச லேப்டாப் என மாணவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் தமிழ்நாடு அரசு கொடுக்கிறது.

அதை விட முக்கியம்.. மாணவர்கள் மாதக் கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை. கல்வி முற்றிலும் இலவசம்.

மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். மற்ற எல்லாவற்றையும் தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ளும்.

இவ்வளவு வசதிகள் தமிழ்நாடு அரசு கொடுக்கும் போது, மாதக் கட்டணம் செலுத்தி நவோதயா பள்ளிகளில் தங்கி படிக்க வேண்டிய அவசியம் இல்லையே?

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.

🙏🙏🙏

நவோதையா பள்ளிகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள:

https://navodaya.gov.in/nvs/en/Academic/school-administration/facilities-in-jnvs/students/

No comments:

Post a Comment

Printfriendly