Sunday, April 29, 2018

100% கிராமங்களுக்கும் மின் இணைப்பு

100% கிராமங்களுக்கு மின் இணைப்பை வழங்கியதற்காக மோடிஜியை பாராட்டி வாழ்த்தி பல பதிவுகளை காண்கிறேன்.

இதுபோன்ற பதிவுகளை எழுதி மகிழ்வோர் இன்னும் கொஞ்சம் தெளிவாகவே விஷயத்தை விளக்கி இருக்கலாம.

இதுவரையும் தென்னகத்தில் மின் இணைப்பு அதிகமாகவும் வடக்கு வடகிழக்கு மாநிலங்களில் குறைவாகவும் இருந்தது

தமிழகத்தை பொறுத்தவரை 95% மின் இணைப்பு பத்து ஆண்டுகளுக்கு முன்பே எட்டப்பட்டு விட்டது. கடந்த 2011 முதல் ஜெ ஆட்சியில் தான் அது தடைபட்டது.

ஒவ்வொரு குடிசைக்கும் ஒரு மின் விளக்கு இலவசம் என 1970 களிலேயே திட்டம் கொண்டுவந்து அதற்காகவே மின் இணைப்பை எல்லா கிராமங்களுக்கும் விரிவு படுத்தியது தமிழக அரசு என்பது வரலாறு.

இதுதவிர விவசாயத்துக்காக இலவச மின்சாரம் வழங்கிய முன்னோடி மாநிலமும் தமிழகம் தான். அதுவும் தமிழகத்தின் பொற்காலம் என போற்றப்படும் அதே 1970 களில் தான். அந்த இலவச மின்சாரம் ஒவ்வொரு கிராமத்துக்கும் வயல் வரப்புகளுக்கும் கிடைப்பதற்காக தாலூகா தோறும் சப் ஸ்டேஷன்களையும் மின் வினியோக கட்டமைப்புக்களையும் செய்து கொடுத்தது தமிழக அரசு.

தமிழக திட்டங்களை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டுவரும் மத்திய அரசு, கிராமங்களுக்கான மின் இணைப்பு திட்டத்தையும் 1980 களில் தொடங்கியது. அது திட்டமிட்ட இலக்கான 2020 க்கு முன்பாகவே இப்போது முடிக்கப்பட்டு இருக்கிறது (கவனிக்க: வடக்கு வடகிழக்கு மாநிலங்களில்)

இந்த விவரம் எதுவுமே தெரியாமல் சிலர், திராவிட இயக்கங்கள் வேஸ்ட் என்றும், மோடி வந்து ஜஸ்ட் மூணே வருடத்தில் இத்தனையையும் சாதித்தார் எனவும் தவறான பொருள் படும் வகையில் பல பதிவுகள் புரிந்துகொள்ள படக்கூடும்.

அதற்கான விளக்கமாகவே இப்பதிவு

🙏

No comments:

Post a Comment

Printfriendly