Saturday, December 22, 2018

GST யும் தோசை மாஸ்டரும்

ஊரில் ஒரு மெஸ் இருந்துச்சு.

தோசை, ரோஸ்ட், ஆனியன் ரவால்லாம் அங்கே செம ஃபேமசு. ரொம்ப காலமா ஒரே மாஸ்டர் தான். டேஸ்டில் அப்பப்ப சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் அவரோட தோசைக்கு மவுசு அதிகம்.

சில மாசம் முன்னெ புதுசா ஒரு பையன் வேலைக்கு சேர்ந்தான். மாஸ்டர் தோசை சுடுற லட்சணத்தை நக்கலடிச்சுகிட்டே இருந்தான். இதெல்லாம் என்ன தோசை நான் சுடுவேன் பாரு தோசைன்னு அவனோட புது புது ஐடியாக்களா அப்பப்ப சொல்லீட்டே இருப்பான். நான் தோசை சுட்டா இப்போ இருக்கிற கூட்டத்தைவிட இன்னும் கூட்டம் கூடும். முதலாளிக்கு லாபமோ லாபம்னு அடிச்சு விட்டுட்டே இருந்தான்.

முதலில் கண்டுக்காம இருந்த மொதலாளி மெல்ல மெல்ல அவனோட பேச்சுல ஈர்க்கப்பட்டு ஒரு நாள் கூப்பிட்டு அவனோட ஐடியாக்களை கேட்டாரு.

அவன் போன பெரிய பெரிய ஹோட்டல்கள்ள விதவிதமான தோசைகளை பார்த்த விவரம் பத்தியெல்லாம் அவன் சொன்னபோது மொதலாளிக்கும் ஆசை வந்திருச்சு.

அப்புறம் என்ன?

தோசை மாஸ்டரை பாத்திரம் கழுவ அனுப்பீட்டு, பையனை தோசை மாஸ்டர் ஆக்கீட்டாரு!

புது டைப் தோசை சுடுறதை பார்க்க பழைய மாஸ்டரும் மொதலாளியும் மற்ற வேலக்காரவுங்களும் கூட வந்துட்டாங்க. எல்லாம் ஒரு ஆர்வம் தான்.

பாரம்பர்யமான அந்த இரும்பு தோசைக் கல்லுல எண்ணெய் கூட காட்டாம மாவை ஊத்தும்போதே எல்லாரும் திட்டுனாங்க. ஏண்டா இப்படி பண்றேன்னு. இன்னும் என்ன பழைய ஸ்டைல் வேண்டி கிடக்கு, நீங்கல்லாம் எப்போ மாடர்ன் ஆவுறது? இது தான் இப்போ ஃபேஷன். நான் தானே தோசை மாஸ்டர். நீங்க புத்தி சொல்றத விட்டுட்டு ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாருங்கன்னு கிண்டலா சொல்லிட்டு தோசை சுட ஆரம்பிச்சாப்ல!

தோசை ஒட்டிக்கிச்சு. எப்படி எடுத்தாலும் வரலை. எல்லாரையும் பார்த்தான். யாரும் ஒண்ணும் சொல்லாம அமைதியா இருந்தாங்க. சட்டுகத்தை வெச்சு எல்லா சைடிலிருந்தும் குத்தி நெம்பி சுரண்டி தோசையை பீஸ் பீசா எடுத்துட்டான். மொத தடவை சுடும்போது இப்படித்தான் இருக்கும்னு சப்பைக்கட்டு வேறெ. அடேய் இது பலவருஷமா நல்லாருந்த கல்லுடா. நேத்து வரைக்கும் நல்லா தோசை வந்துச்சேன்னு கேட்ட முதலாளியை தனக்கு எதிரா சதி செய்யுறாரு, தனக்கு கெட்டபேரு வரவைக்கிறாருன்னு எரிஞ்சு விழுந்ததும் மொதலாளியும் அமைதி ஆயிட்டாரு.

முதலாளிக்கே இந்த கதின்னா நமக்கு எதுக்கு இந்த வம்புன்னு அமைதியான மத்தவங்களை, தன் திறமையை பார்த்து அதை ஆதரிக்கிறாங்கன்ற மமதையோட, இன்னும் பலமா சொரண்ட, தோசைக்கல்லு ஒண்ணுக்கும் உதவாத லெவலுக்கு உருப்படாம போச்சு.

கடுப்பான முதலாளி கன்னா பின்னான்னு திட்ட ஆரம்பிச்சதும், நான் ஒண்ணும் பண்ணலை. பழைய மாஸ்டர் தான் கல்லை கெடுத்து வெச்சிருக்கார்.  அவரும் இதோ இப்போ அமைதியா நின்னுட்டிருந்தாங்களே இவங்களும் தான் காரணம்னு அழ ஆரம்பிச்சிட்டான்!

சொல்லுங்க. இப்போ முதலாளி அவனை என்ன பண்ணணும்?

பி.கு:
கல்லு - எகனாமி
தோசை - GST
முதலாளி - வாக்காளர்
தோசை மாஸ்டர் - காங்
பையன் - பாஜகன்னெல்லாம் நீங்களா கற்பனை பண்ணிகிட்டா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல!

No comments:

Post a Comment

Printfriendly