Tuesday, December 22, 2009

தூங்கா நகர் மதுரை!

மதுரை!

இந்த நகரத்தை பார்க்கனும்னு எனக்குள்ளே ரொம்ப காலமா ஒரு வேட்கையே இருந்தது... ஆனால் முதல் முதல் நான் மதுரைக்கு போனது அவ்வளவு சுவாரசியமான விஷயமாக அமையலை!  வேலை விஷயமா எங்க கம்பெனியில் இருந்து போன அன்னைக்கு அதே நாள் சாயந்தரமே திரும்பி தொலைக்க வேண்டி இருந்ததால் மதுரையை ஓர விழியால் பார்த்துகிட்டே பயணிச்சது தான் மிச்சம்!


(மதுரை மீனாக்ஷி கோவிலின் தெற்கு வாசல்)

மதுரைன்னு ஒரு கவிதையே வைரமுத்து "பெய்யேன பெய்யும் மழையில்" எழுதி இருந்தாரு.. பாண்டியர் குதிரை குளம்படியும்னு அட்டகாசமான கவிதை... அப்படியே எனக்கு மனப்பாடம்!  கவிதைய படிச்சு முடிச்சதும் அந்த ஊரை ஒரு தடவையாவது பாத்துப்புடனும்னு ஒரு வெறியே வந்துச்சு!

அழகர் திருவிழா, இளங்கோவடிகளின் சிலப்பதிகார கதை, பாண்டியர் வரலாறு இதெல்லாம் படிச்சபோதும் அதே வெறி வந்து கொஞ்சம் கொஞ்சமா உக்காந்துட்டு இருந்தது உள் மனசுக்குள்ளே!

பின்னே ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது!

அப்போ நான் மதுரை போயி இறங்கினப்போ நாடு நிசி ஒரு மணி!  விடியறவரைக்கும் என்ன பண்றது எங்கே தங்கறதுன்ன்னு யோசனையோடவே மதுரைக்கு பயணிச்ச  எனக்கு மதுரை நகரம் தந்தது ஒரு தவுசன் வால்ட் ஆச்சரியம்....

சிம்மக்கல்லு பக்கத்தில் பரபரப்பா இயங்கிட்டு இருக்கு மார்க்கெட்டு, சலூனில் ஒருத்தர் அந்த நேரத்திலும் ஷேவிங் பண்ணிட்டு இருந்தாரு! (அவங்களுக்கு அப்போ தான் கொஞ்சம் ஒய்வு கிடைக்குமாம்!) டீ டிபன் எல்லாம் எந்நேரத்திலும் கிடைக்குது... ஒன்னும் குறைச்சல் இல்லை... பகல் மாதிரி தான்!

மதுரை காரவிங்க பேசுற அந்த இழுவையான மண் மனம் மாறாத ஸ்லாங் இருக்கே.. அதுக்கே கொடுக்கலாம்! அம்புட்டு அழகு!  வெள்ளந்தியா பேசுறாங்களா வெவகாரமா பேசுராங்கலான்னே புரிஞ்சுக்கமுடியாத அளவுக்கு ஒரு குழப்பமான சிநேகம் கலந்த பேச்சு!  அதிலேயும் அவங்க பேச்சுக்கு இடை இடையே அள்ளி தெளிக்கிற சில சொற்கள் இருக்கே... டைமிங் ரைமிங்! அதெல்லாம் ஒரு கலை! எம்புட்டு டிரை பண்ணினாலும் நம்ம நாக்குக்கு அது சிக்க மாட்டேங்குது!

மதுரை, விடிஞ்சாலும், விடியலைன்னாலும் ஒரே மாதிரியான பரபரப்பு தேன்! அடிதடி பரபரப்பு வன்முறை அது இதுன்னு ஒரு யுத்தக்களம் மாதிரி கற்பனை பண்ணி வெச்சிருந்த நகரத்தை பரம சாதுவா பாத்தப்போ சந்தேகமா இருந்தது!  அந்த மதுரை தானா இது??


(பெரியார் அருகில் இருக்கும் சர்ச்!)

முதலில் ஒரு பிரண்டை பாக்கறதுக்காக பெரியார் ஜங்க்ஷன் போனேன்... அங்கிட்டு ஒரு சர்ச் இருந்தது.. பாக்கும் போதே பளிச்சுன்னு இழுத்தது!  அதுக்கப்புறம் தான் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்!  பிரம்மாண்டமான கோவில்! அருமையான கலை நயம் மிக்க வேலைப்பாடுடைய கோபுரங்கள்!  மீனாக்ஷி கோபுரமும், ஆண்டாள் கோபுரமும் தான் நம்ம தமிழ்நாட்டிலேயே அழகாம்!  அப்புடியா??

மதுரை நாயக்கர் மஹால், காந்தி மியூசியம், வைகை ஆறுன்னு சில இடங்கள் தான் இருக்கு சுற்றுலா தலமா... மத்தபடிக்கு எல்லாமே ஆன்மீக தளங்கள் தான்!

மதுரையில் வெறுப்பேத்தின விஷயம் அந்த நெரிசலான போக்குவரத்து.. எதோ இப்பத்தைக்கு பைபாஸ் போட்டு இருக்கிறதால சிட்டி கொஞ்சம் சிரமம் இல்லாம இருக்கு... ஆனா நான் போனபோதெல்லாம் செம டென்ஷன் டிராபிக்.

பெரிசா எந்த தொழிற்சாலையும் நகரத்துக்குள்ளே இல்லை.. மதுரா கோட்ஸ், டிவிஎஸ் நிறுவனங்கள் தான் அங்கே பெரிய கம்பெனிகள்... மேலூர் போற வழியில் தான் நிறைய கம்பெனிங்க இருக்கு!  அதனால் கிட்டத்தட்ட மொத்த மதுரைக்காரவுங்களும் அங்கிட்டு தான் போறாயிங்க!

ஒரு ஏர்போர்ட்டு  இருக்கு...ஊருக்கு ஒதுக்குப்புறமா!  அங்கிட்டு போறதுக்கு கொடுக்கிற ஆட்டோ சார்ஜு இருந்தா மேட்ராசுக்கே பஸ்ஸில் போயிராலமப்புன்னு தெளிவு படுத்தினாங்க..!  அந்த பக்கமா ஒரே ஒரு பஸ்சு தான்  போகுதாம்...  அதுசரி!  காரில் வர்றவுங்க மட்டும் தானே பிளேனிலும் வருவாயிங்க... அவிங்களுக்கு என்னாத்துக்கு பஸ்சுன்னு நினைச்சாங்களோ என்னவோ!

மதுரை சின்ன ஊரு தாம்!  அங்கிட்டு திருநகர், இங்கிட்டு விசுவநாதபுரம், அப்படிக்கா நாகமலை,  இம்புட்டு தான்... ஆனா அந்த ஊருக்குள்ளே குறுக்கும் நெடுக்குமா எதனை சந்து எந்தனை வீதி... அத்தனையும் நிறைஞ்சு கிடக்குது கடைங்க கடைங்க கடைங்கன்னு!

பழமை மாறாத கட்டிடங்களுக்கிடையே இப்போ புதுசு புதுசா கண்ணாடி மாளிகைகளும் வர ஆரம்பிச்சு இருக்கு! 


(மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பூக்கள் விற்பனை)


எந்நேரமும் எங்கிட்டு போனம்னாலும் மதுரையில் இருந்து வண்டி கிடைக்கும்.. ரயிலானாலும் சரி,பஸ்சு ஆனாலும் சரி! 

மணக்க மணக்க இட்லியும் டிபனும் இருபத்து நாலு மணி நேரமும் கிடைக்குது...

மல்லி பூவு தான் பேமசு.. ஆனால் ரோஜா பூவும் அதிகமா விக்குதாம்!  ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பூ வியாபாரம் பண்றவிங்க  சொன்னாயிங்க!  இன்னமும் தாவணி, பாவாடி சட்டை பிள்ளைகளை மதுரையில் பாக்கலாம்...  அம்புட்டு கலாச்சாரம்!

புகழ்பெற்ற கல்லூரிகள் இருக்குன்னு சொல்றாங்க... ஆனால் யாரு பேசுனாலும் படிக்காதவிங்க பேசுறாப்புலேயே தோணுது!  அங்கத்த பேச்சு அப்படியாம்!

தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் குடுக்காம இருக்கிறது! எதிர்கால தேவைகளை அனுசரிச்சு அதுக்கேத்த படிப்புக்களை முன்னெடுத்து செல்லாம இருக்கிறது! வருங்கால தொழிலுக்கு ஏத்தமாதிரி தங்களை மாத்திகாம மாணவர்கள் இருக்கிறது! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணாம இருக்கிறது! அடிப்படை வசதிகள் பத்தி யோசிக்காமையே இருக்கிறதுன்னு, மதுரை இன்னமும் ஒரு வளர்ந்த கிராமம்ங்கற தோற்றத்தை தான் ஏற்படுத்துது! 






4 comments:

  1. ம்ம் - மதுரையைப் பற்றிய ஒரு விவரமான அறிமுகம் - முதல் பார்வையின் அடிப்படையில் - அருமை அருமை

    நல்வாழ்த்துக்ள் சதீஷ்

    ReplyDelete
  2. நல்லா எழுதியிருக்கீங்க சதீஷ்குமார்.

    ReplyDelete
  3. நன்றி சீனா!

    முதல் பார்வை எப்போதுமே பிரமிப்பானது தான்!
    அதை அப்படியே இங்கே இறக்கி வைக்க நினைத்தேன்!

    ReplyDelete
  4. நன்றி சரவணன்!

    இன்னமும் சிறப்பாக எழுதி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.. இப்போது மறுமுறை படித்து பார்க்கையில்! அடுத்தடுத்த பதிவுகளில் திருத்தி கொள்ள முயல்கிறேன்!

    ReplyDelete

Printfriendly