Thursday, December 31, 2009

புத்தாண்டு சிந்தனைகள்


வழக்கமா எப்பவும் செய்யுற அதே விஷயங்களை கொஞ்சம் வித்தியாசமா செய்யனும்ன்கறது இந்த புது வருஷத்து தீர்மானங்களுள் ஒன்னு!

ஒவ்வொரு வருஷமும் தீர்மானங்கள் எடுக்கறதும், அதை ஒத்திவெக்கறதும், பின்னர் கைவிடுறதும் ரெகுலர் மேட்டர் ஆயிருச்சு!

அப்பா இந்தவருஷத்துக்கான தீர்மானம் இதுன்னு சொல்லிட்டு ரெண்டே நாளில் அதை மறந்து வழக்கமான வேலைகளில் வழக்கமான முறையில் ஈடுபடறது தானே நம்ம பொழப்பே??

சரி, இந்த வருஷத்துக்கு என்ன தீர்மானம் பண்றதுன்னு நேத்து முழுக்க யோசிச்சு பாத்து, மேலே சொன்னபடி, எப்பவும் செய்யறதையே கொஞ்சம் வித்தியாசமா இன்னும் கொஞ்சம் பெட்டரா செய்யலாம்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்!  அது தானே ஈசி?

Learning from the Past and Continuous Improvement தான் வாழ்க்கை! ஆனால் டிசம்பர் 31 ஆம் தேதி உக்காந்துட்டு இந்த வருஷம் என்ன எல்லாம் தப்புக்கள் பண்ணினோம், அந்த தப்புக்களை அடுத்த வருஷம் எப்படி தவிர்க்கறது, அப்படி தப்புக்கள் வராம எப்படி தற்காத்துக்கறதுன்னு யோசிச்சிகிட்டு இருக்க முடியுமா என்ன?  எந்த ஹோட்டல்லே  இன்னைக்கு என்ன பார்ட்டி, ஸ்பெஷல் கெஸ்ட் யாரு, பீஸ் என்னன்னு அலைஞ்சு திரியறதுக்கே நேரம் பத்தமாட்டேங்குது!

இப்போ புதுசா கொலம்பஸ் மாதிரி ரூட்டு தேடி அலையணும்!  காமராஜர் சாலை ஈசி ஆர் சாலை ரெண்டிலேயும் வாகன போக்குவரத்துக்கு இன்னைக்கு ராத்திரி தடா!  கால்நடையா(!) போயிக்கவேண்டியது தான்.

அந்த கஷ்டத்தை விடுங்க... நாம புத்தாண்டை பத்தி புலம்பலாம்!

ஒருபக்கம் நம்ம பிரண்டு ஒருத்தரு, இன்னும் ரெண்டு வருஷத்திலே உலகமே அழியப்போகுதாம் மச்சான், அதனால் எவ்வளவு என்ஜாய் பண்ணணுமோ பண்ணிக்கோன்னு சூதானமா அடுவைசு கொடுத்துட்டு பறந்துட்டாரு!  ஆனா புதுசு புதுசா வர்ற முதலீடுகளையும் வளர்ச்சி திட்டங்களையும் பாத்தா உலகம் அழியும்ங்கற நம்பிக்கை சுத்தமா எனக்கு இல்லை.  அதனால் நிதானமாவே யோசிப்போம்!

2009 எனக்கு ரொம்ப மறக்கமுடியாத வருஷம்!  எதையெல்லாம் நல்லா பண்ணனும்னு நெனச்சேனோ அதையெல்லாம் அக்ஷரம் பிசகாம சொதப்பி தொலைச்சேன்.  நிறைய பயணங்கள், நிறைய செலவுகள், நிறைய குழப்பங்கள், நிறைய நஷ்டங்கள், நிறைய சங்கடங்கள்ன்னு நெகடிவ் விஷயங்கள் அதிகமா இருந்தது.

இதுக்கு, சனி சரியா உக்காரலை, ராகு ராங்கா நிக்கிறாரு, கேது எது சொன்னாலும் கேக்கவே மாட்டேங்குறாருன்னு ஏகப்பட்ட அலப்பறை வேற.  அதுக்கு பரிகாரம் பண்ணினா அவங்க எல்லாம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்கன்னு வேற சொன்னாங்க!  இப்படி பரிகாரம் பண்ணியே தப்பை திருத்திக்கலாம்னா நிறைய பரிகாரம் பண்ணலாமேன்னு தோணிச்சு!

இந்த அஜால் குஜால் வேலையெல்லாம் தூக்கி தூரப்போட்டுட்டு, ஒழுங்கா எதை எப்படி செய்யணுமோ அதை அப்படி தெளிவா திருத்தமா செஞ்சு பாத்தா என்னன்னு ஒரு யோசனை. 

2010 இல் அதை அமல்ப்படுத்திட்டு அதன் சாதக பாதகங்கள் பத்தி அடுத்த வருஷம் இதே நாள் இதே நேரம் புலம்பி வெக்கறேன்.

நல்லபடியா புத்தாண்டு வந்து எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்ய வேண்டும்! என்ஜாய்!  

2 comments:

  1. happy New Year Sathish.. I like your writings.. you do exactly the same thing what i wanted to do some time back ... Keep writing... I think few of people who reads your postings also felt same like me.. Keep it up All the best ..

    Cheers
    Senthil
    Singapore

    ReplyDelete
  2. நமக்கு மானமே கிடையாது, அப்புறம் எங்க தீர்மானம்??

    கிட்டத்தட்ட ஒரு ஐந்து வருடமாய் எந்த தீர்மானமும் எடுத்துக்கறதில்லைன்னு தீர்மானம் பண்ணி, அதைத் தீர்மானமாய் ஐந்து வருடமாய் நிறைவேற்றிட்டு வரேன்

    ReplyDelete

Printfriendly